“நா பேசவேணாமா? பேசினவ எங்கையில சிக்கட்டும், வெளக்குமாத்து கொண்ட. புடிச்சு சிண்டுமுடிய ஆஞ்சுப்பிடறேன்…” என பெருமூச்சு விட்டு கோபத்தில் இங்கே கொதித்துக்கொண்டு இருந்தார்.
“சரிங்கத்தை, கோவப்படாதீங்க. முதல்ல அவங்களாம் வரட்டும். நீங்க எதுவும் கேட்டு இன்னும் சங்கடப்படுத்த வேண்டாம். அப்பறமா நிதானமா பேசிப்போம். சாப்பிட வரும் போது கேட்க வேண்டாம். இன்னும் சங்கடப்படுவாங்க…”
மகேஷ்வரி சொல்ல இன்னுமே நாயகிக்கு அத்தனை கோபம், எதற்கு இவர்கள் இருவரும் ஒதுங்க வேண்டும் என்று.
இருவரும் பேசிக்கொண்டு நிற்க சொக்கநாதபாண்டியனுடன் மதுராவும், அவர்களுடன் துர்கா, காந்திமதி, ஜகா மூவரும் சேர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தனர்.
“இந்தா வந்துட்டாங்கல்ல…” என மகேஷ் சொல்ல,
“நடந்து வாராக? கோவிலுக்கு போனாகளா இல்லியா?…” என பார்த்தார் நாயகி.
“இருக்கட்டும் த்தை, நீங்க இப்ப எதுவும் கேட்காதீங்க. சங்கடப்படுவாங்க…” என்றவர்,