“உங்களுக்கென்ன, என் கஷ்டம் எனக்கு தான்…” என்று சொல்லி,
“இன்னைக்கு நீங்களும் விரதம் தான். என் கிட்ட வாங்க பேசிக்கறேன்…” என கூற,
“கிட்ட வந்தப்பறம் நீயெங்க பேச?…” என்றான் கழுத்தை தேய்த்துக்கொண்டு வேறு யாரும் அருகில் வருகிறார்களா என பார்த்தபடி.
“ஆணவம் ஆணவம்…” என முறைத்தவள்,
“உங்களுக்கு காபி…” என கேட்டு அவன் தலையசைத்ததும் வேறு கப்பை எடுத்து அவனுக்கு பிடிக்க போக மதுராவின் கப்பை கையில் வாங்கிக்கொண்டவன் குடிக்க ஆரம்பித்திருந்தான்.
“அது என் காபி…”
“பொண்டாட்டி எச்சிலை புருஷனும் சாப்பிடலாம். போப்பா…” என சொல்ல மகேஷ்வரி, எழில்மணி இருவரும் சாப்பிட்டு கை கழுவ வந்தனர்.
“இருந்தாலும் இல்லைன்னாலும் என்ன செய்ய போறீங்க சொக்கரே?…” என்ற கண் சிமிட்டுதலில் தலையசைத்து புன்னகைத்தவன் சிரிப்பு வழக்கம் போல மீசைக்குள் மிளிர்ந்தது.
“சத்தமா சிரிக்கிறதை விட இந்த ஸ்மைல் என்னை ரொம்பவே அட்ராக்ட் பண்ணுது மிஸ்டர்.சொக். இனிமே இப்படி சிரிக்கவேண்டாம். அப்பறம் உங்களை மட்டும் தான் பார்த்துட்டே இருக்க போறேன்…” அத்தனை வெளிப்படையாக அவள் சொல்ல பாண்டியனின் விழிகள் விரிந்தது.
“என்னப்பா?…” என்றவனிடம்,
“அப்படித்தான்ப்பா. என்னப்பா செய்ய?…” என கிண்டல் பேசினாள் மதுரா.
இருவரும் பேசிக்கொண்டிருக்க எழில்மணி பாண்டியனை தேடி வந்துவிட்டு மீண்டும் திரும்பி சென்றதை கவனித்தவன்,
“ஒங்கப்பா ஒன்னிய தேடி வந்தாகளா, என்னியவா?…” என்றான்.
“இருங்க கூப்பிட்டு கேட்கறேன்…” மதுரா சொல்லவும்,
“வேணா, நீயி இரு. நா போயி பார்த்துட்டு மத்தியானம் என்னனு கவெனிச்சிட்டு வாரேம்…” என எழுந்து செல்ல மகேஷ்வரி வந்துவிட்டார் அங்கே.
“என்ன மது? எல்லாம் ஓகே தானே?…” என புன்னகையுடன் கேட்க,
“சாப்பாட்டை தவிர எல்லாம் ஓகே ம்மா…” என்றவள்,
“காலையில அதுவும் அஞ்சு மணிக்கே இளநீர் தராங்க…” என சொல்லவும் மகேஷ்வரி சிரித்துவிட்டார்.
“இன்னும் கேளுங்க. கொஞ்ச நேரம் தூங்கி எந்திச்சு வந்தா இனிப்பா ஒரு கஞ்சி. பேர் கூட வெந்தயக்கஞ்சியாம். டேஸ்ட்டி தான். ஆனா முழுசா குடிக்க முடியவே இல்லை…”
“உடம்புக்கு நல்லதுடா…” மகேஸ்வரி சொல்லிவிட்டு,
“இங்க வந்தும் கூட நீ சரியா சாப்பிடலையே. என்னாச்சு மது? எதுவும் ஸ்டமக் ப்ராப்ளமா?…”
“டெபனட்லி, ஸ்டமக் ப்ராப்ளமே தான். வீட்ல சின்னதா ஒரு இஷ்யூ. பாட்டியை, அத்தையை யாரோ விலகி இருக்க சொல்லி பேசியிருக்காங்க. அவங்களும் கிட்சன்ல போய் நிக்கறாங்க. பயங்கர டென்ஷன் எனக்கு…” என்றவள்,
“ம்மா கேட்கறீங்களா?…”
“ஆமா மது. சொல்லு…” என்றார். நடந்ததை சொல்லியவள்,
“எவ்வளோ ஈஸியா பேசறாங்க. இன்னைக்கு இவங்க பேசிட்டு போயிடுவாங்க. கூடவே இருந்து பார்க்கறது யாராம்? பேசறவங்க இருப்பாங்களா? அதுவும் பாட்டி அழுதுட்டாங்க. எனக்கு மனசே சரியில்லை…” என்ற பொழுதே கண்கள் கலங்கிவிட்டது.
“மது பிரேவ் கேர்ள் இல்லையா? என்ன இது?…” மகேஷ்வரி இன்னும் நெருங்கி அமர்ந்தார்.
“இருக்கலாம். சில விஷயங்கள் நம்ம தைரியத்தையும் அசைச்சு பார்க்கும். அப்படியான நேரம் இது. அம்மாவை விட யாரால பிள்ளைங்க நல்லா இருக்கனும்னு நினைக்க முடியும்? எப்படி ஒதுக்க மனசு வருது? இதே அவங்க பசங்களுக்குன்னு வரும் போது அவங்களுக்கும் அது வலி தானே?…”
மதுராவின் குரல் அத்தனை கலங்கி போயிருக்க அவளை இந்த விஷயம் வெகுவாய் பாதித்திருந்தது புரிந்தது.
“ஓகே மது. ரிலாக்ஸ்…” என்று அவளின் கையை தட்டி கொடுக்க,
“ஏன் லேட்டுன்னு சொல்லலையே. அங்க இருந்தவங்களாம் இங்க வர கிளம்பவும் எங்களை இருக்க சொன்னாங்க. சம்பிரதாயமாமே? உளுந்தம்பருப்பு செஞ்சு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட குடுத்தாங்க கொஞ்சம். போதாததுக்கு நெஞ்செலும்பு சூப் வேற….”
“சாப்பிட்டியா?…” என மதுராவின் பாவனையில் கேட்டு மகேஸ்வரி சிரித்துவிட்டார்.
“சூப் குடிக்கலை. அவங்க குடிச்சாங்க. எனக்கு அங்கயே மயக்கம் வந்திருச்சு. போதும்டான்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள ஒருவழியாகிட்டேன். கிளம்பவும் வழில இருக்கற மூணு கோவிலுக்கு போய் விடலை விடனுமாம். போய் சாமி கும்பிட்டு தேங்காய் உடைச்சிட்டு வந்தோம்…” என்றாள்.
“மலைப்பா இருக்கா?…” மகேஷ்வரி மகளிடம் கேட்க,
“ஆமா தான். ஆனா நல்லா இருக்கு. எனக்கு புடிச்சிருக்கு…” என சொல்லும் பொழுதே அங்கே ஒருவருடன் பேசியபடி வந்தான் பாண்டியன்.
“மதுரா இவங்க ஜகாவோட காலேஜ் புரபசர்…” என அறிமுகம் செய்ய,
“ஹலோ ஸார்…” என்றாள் மதுரா.
“ஹலோ மேடம்…” என அவரும் முகமன் பேசி முடிக்க,
“அனுப்பிட்டு வரேன்…” என்று அவருடன் சென்றான் அவன்.
மதுராவின் முகம் பாண்டியனை பார்த்ததும் விகசிப்பதை கவனித்த மகேஷ்வரிக்கு மனதெல்லாம் அத்தனை குளிர்ந்து போனது.
அவர்கள் குடும்பத்துடன் எவ்வளவு அழகாய் பொருந்திவிட்டாள் தன் மகள் என பார்த்து பூரித்து போனார்.
அந்த சற்று நேரத்திலேயே அங்கிருந்தவர்களில் அத்தனை பேர் வந்து விசாரித்துவிட்டனர் மதுராவை.
அவ்வப்போது ஏதாவது வேண்டுமா என கேட்பதும், கேலியாய் பாண்டியனை எங்கே என விசாரிப்பதும், அதற்கு மதுரா இன்முகமாக பதில் சொல்வதும் என பார்க்கவே அழகாய் இருந்தது.
“நான் உங்க பொண்ணும்மா. எப்பவும் உங்களுக்கு பொண்ணு தானே? தேடாம எப்படி இருப்பேன்?…” என சிரித்துக்கொண்டே கூறினாலும் தாயை பிரிந்து இருக்க போகும் வருத்தம் அவளை வாட்டியது.
“மது, அம்மா எங்க போயிடுவேன். உன்னோடவே தான் இருக்க போறேன். நீ சொன்னியே அம்மாவை விட பிள்ளைங்களை யார் பார்த்துக்க முடியும்ன்னு. ஆனா நிறைய நேரம் எனக்கு அம்மாவா நீ இருந்திருக்க. என்னை பார்த்திருக்க. இப்ப பெரிய குடும்பத்துக்குள்ள போயிருக்க…” என்றவர்,
“அவங்களாம் பெரிய மனுஷங்க. ஆனா மனசளவுல சின்ன பிள்ளைங்க மாதிரி. நீதான் பார்த்துக்கனும். உன்னை கொண்டாடற அவங்களை எப்பவும் அப்படியே வச்சுக்கோ. என் பொண்ணால யாரையும் கஷ்டப்படுத்த முடியாது. ஆனா சூழ்நிலை எப்படி இருக்கும்ன்னு நாம சொல்ல முடியாதில்லையா?…” என்றார்.
“உங்கப்பா சொன்ன மாதிரி தான். மூத்த மருமகன்னு சொன்னா நிறைய ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கும். வோன்ட் லூஸ். புரியுதா மது?…” என்றவர்,
“என்ன உங்கப்பா தான் கொஞ்சம் புலம்பிட்டு இருக்கார். தனியா கிளம்ப போறோம்ன்னு…” என சொல்ல மகேஷ்வரி விழிகளில் நீர் துளிர்த்து விட்டது.
“ம்மா…”
“ப்ச், நத்திங் டா. உனக்கு பிடிச்ச வாழ்க்கை. பிடிச்ச குடும்பம். சந்தோஷமா இருப்ப. உன்னை சந்தோஷமா பார்த்துப்பாங்க. எனக்கு அது போதும். நினைச்சா நானே வந்திட போறேன்…” என சொல்லி புன்னகைத்தார்.
மதுராவும் மகேஷ்வரியும் சில நிமிடங்கள் அமைதியாய் இருக்க முகத்தில் புன்னகை இருந்தாலும் ஒருவித தவிப்பு ஆட்கொண்டது.