“என் புருஷன்னு சொல்ல எனக்கும் பெருமை தான். ஆனா இந்த பொசஸிவ் பர்ஸ்ட் ஆரம்பிக்கிறதே என் புருஷன்னு சொல்ற அந்த உரிமையில தான்…” என்றவள்,
“இதே நான் உங்க மகன்னு சொல்லும் போது அவங்க முகத்துல எவ்வளோ சந்தோஷம். அவங்க இல்லாமலா நீங்க வந்துட்டீங்க? அதான் அப்படி. அவங்க மகன்றது எப்படி மாற்றமில்லாததோ, அது மாதிரி தான் நீங்க என் புருஷன்றதும். இதை சொல்லி தான் உரிமையை தக்க வைக்கனும்னு இல்லை…” என கண் சிமிட்டினாள் மதுரா.
சொக்கநாதபாண்டியன் முகம் முழுவதும் ஒருவித உணர்ச்சி அலைகள். எத்தனை யோசிக்கிறாள் இவள் என்று.
“அந்த பேச்சு நமக்குள்ள. அப்ப என்னன்னு நா சொல்லுவேனாம்?….” என்றான் அவன்.
“ஆனா நான் என்னோட அம்மாப்பாட்ட சொன்னேனே?…”
“உனக்கு சொல்ல தோணுச்சு. எனக்கு தோணலப்பா. வேணுமின்னு இல்லை, சொன்னா அவக என்னத்துக்குன்னு இப்ப பேசினதத்தேன் சொல்லுவாக. சங்கட்டம். உன்கிட்டயும் பேசுவாக, அது ஒனக்கும் சங்கட்டம். அதேம்…”
“இப்ப அதை விட பேசி சங்கடமாகிருச்சே. எங்கப்பா கடனை அடைக்க என் பொண்ணு கஷ்டப்பட்டு வேலை பார்க்கான்னு சொன்னது எவ்வளவு வருத்தியிருக்கும் அவங்களுக்கு. கல்யாணமும் பண்ணி கூட்டிட்டு போய்ட்டு வேலையும் பார்க்கான்னு சொன்ன மாதிரி…. (Klonopin) ”
“ஒங்கப்பாவ அத்தோட விட்டேமின்னு சந்தோசப்படுப்பா…” பாண்டியன் இப்போதும் அந்த கோபத்தை மறைக்காமல் பேச,
“உங்களை யார் விட சொன்னா? நான் ஒன்னும் சொல்லலையே? அது மாமனார், மருமகனுக்கு நடுவுல உள்ளது. எனக்கென்ன?…” என சொல்லியவள்,
“ஆனா இங்க இந்த வீடும் எனக்கு ரொம்ப முக்கியம். இங்க தான் என்னோட சந்தோஷம் இருக்கு. சொல்ல போனா இதுவும் சுயநலம் தான். என்னோட சுயநலம், இங்க எல்லாம் நார்மலா இருந்தா தான் இந்த சந்தோஷமும் கிடைக்கும்….” என்றாள்.
“அதுக்குன்னு அப்பிடியே எல்லாமே சந்தோசமா மட்டுமே போவாதுல மதுரா. சின்ன சின்ன ஒரசல் இருக்கத்தான செய்யும்?….”
“உரசல்ன்னா? இப்பிடியா?…” என அவனின் தோளோடு மேல் உரசி காண்பிக்க,
“செம்ம ஸ்ட்ராங்….” என்றாள் அவனின் வலிமையான கையை லேசாய் கிள்ளி வைத்து.
“இங்கின என்ன கொறவுன்னு சொல்லு. என்னால ஆவறதை பாக்குதேம்….” பாண்டியன் கேட்க,
“வேலையை பாருங்க சொக்கரே. வந்துட்டார் சென்னையை மதுரைக்குள்ள கொண்டு வரேன்னுட்டு….”என அசால்ட்டாக சொல்லியவள்,
“அதது அந்தந்த இயல்போட இருந்தா தான் அழகு. அப்படி இருக்கவும் பிடிக்கும். அதே நேரம் இப்படி இருக்கறதும் பிடிக்கும். பிடிச்சு வாழ்ந்தா எதுவுமே குறையா தெரியாது. எனக்கும் அப்படித்தான்…” என்றவள் புன்னகையில் நிஜமாய் தன் புன்னகையை உரசி காண்பித்தவன்,
“ஒரு எமோஷனும் இல்லை. காய்ச்சலுக்கு ஹீட்னால கண் எரிஞ்சு நீர் வருது. அவ்வளோ தான்….” என்றாள் அவனின் மீசையை திருகி.
“ஆத்தா மேல வருத்தமில்லியே ஒனக்கு….” என பாண்டியன் மீண்டும் அதிலேயே நிற்க,
“அவங்க என்ன செய்வாங்க? என்ன செய்யன்னு தெரியாம பரிதவிச்சு போய்ட்டாங்க. இந்த வயசான காலத்துலயும் அழற மாதிரி ஒரு சூழ்நிலை. இந்த இடத்துல புருஷன்னு ஒருத்தர் இல்லையேன்னு நினைக்கிற மாதிரி ஆகிடுச்சு. அந்த ஃபீல் வர நானும் ஒரு காரணமாகிட்டேன்….” என்றவள்,
“அட அதான் முடிஞ்சிருச்சே. விடுங்கத்தா….” என அதட்டினார் காந்திமதி.
பிரச்சனைகள் அத்துடன் பேச்சுக்களுடன் முடிந்து போக இலகுவான திசைக்கு சூழ்நிலை திரும்பியது.
மகேஷ்வரி மேலும் ஒருமாதம் அலங்காநல்லூரில் தான் இருந்தார். இருமுறை எழில்மணி வந்து பார்த்துவிட்டு சென்றார்.
வடிவு வீட்டிற்கு வந்த பொழுதில் எழில்மணி பேசாமல் சங்கடத்துடன் முகத்தை திருப்பி செல்லத்தான் முடிந்தது. அவரிடம் மன்னிப்பு கூட கேட்க முடியவில்லை.
அவரின் குணம் அது என யாரும் பெரிதாய் கண்டுகொள்ளாததே அவருக்கும் பெரிய தண்டனையாக இருந்தது.
யாரேனும் பேசி, சண்டையிட்டிருந்தாலோ, கோபமாக முகம் திருப்பி இருந்தாலோ கூட இத்தனை குத்தியிருக்காதோ என்னவோ.
அவர்களின் மன்னிப்பும், மறந்ததை போன்ற நடவடிக்கையுமே அவரை உள்ளுக்குள் கிழித்தது.
காந்திமதி அப்படி ஒருவர் இருப்பதாகவே பார்ப்பதில்லை. எழில்மணி வந்திருந்தால் பாண்டியன் வீட்டிற்கே வரமாட்டான்.
வந்தாலும் வாசலுடன் மதுராவை பார்த்து பேசிவிட்டு சென்றுவிடுவது என்றிருந்தான்.
மதுரா வழக்கம் போல இங்கிருந்தே வேலைகளை பார்த்தாலும் மகேஷ்வரியின் உடல்நல குறைவின் பின் கூடுதலாக நான்கு ஆட்களை அங்கே நிறுவனத்திற்கென்று நியமித்திருந்தனர்.
இதனால் மகேஷ்வரி மதுராவின் வேலைப்பளு குறைந்ததென்றால் மிகையில்லை.
பாண்டியன் சொல்லி ஜகாவின் மூலமே அந்த ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆட்களின் நம்பகத்தன்மை பார்த்து தான் சேர்க்கவும் செய்தனர்.
அதன் பின்னர் எழில்மணி எந்தவித குளறுபடியும் செய்யவில்லை. மகள் சொல்லும் முன்னரே அவரே பாண்டியனுக்கு மாதாமாதம் சேரும் தொகையை முதலிலேயே பிரித்து அனுப்பி வைத்துவிட்டார்.
“மது அமௌண்ட் ரிசீவ் பண்ணியாச்சான்னு பார்த்துக்கோம்மா. மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிரு….” என்று சொல்லிவிட்டார்.
பேச்சில் சில சில மாற்றங்கள். செயலில் கூட இருந்தது. ஆனாலும் அவரை நம்ப முடியவில்லை.
ஷேர்சில் போட்ட பணம் நினைத்த அளவிற்கான லாபத்தை ஈட்டி தரவில்லை. அதே நேரம் பெரிய நஷ்டமும் இல்லை.
அதை அப்படியே கடனுக்கான தொகையில் வைத்துவிட்டார் எழில்மணி. இப்படியே இருந்தால் போதும் என நிம்மதியானது மகேஷ்வரிக்கு.
அதே நேரம் அத்தனை கவனமாகவும் இருந்தார்கள் எழில்மணியின் மகளும், மனைவியும்.
“அவேன் நெசமாவே மாறிட்டானா?…” என நாயகி தான் அவ்வப்போது தாடையில் கை வைத்து கவலை நிலையில் நிற்பார்.
“மாறினா மட்டும் என்ன? செய்யறதெல்லாம் செஞ்சு ஆடிட்டாரே? அவங்கட்ட பேசினதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டாம். ஆனா பேசலாம்ல. நடந்து போச்சு. மறந்திடுவோம்னு எதாச்சும் சொன்னாரா?…” என மகேஷ்வரி பல்லை கடித்தால்,
“செரி விடு. இந்தமட்டுக்கும் நிக்கிதியானே? நாயி வால நிமித்த முடியுமா? அப்பிடித்தேம்…” என பெருமூச்சு விட்டார்.
எப்போதும் என்ன கிறுக்குத்தனம் செய்வாரோ என மகேஷ்வரி பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியது தான் தன் தலையெழுத்தோ என நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
“இதெல்லாம் நீங்க மேரேஜ் பண்ணினப்ப யோசிக்க வேண்டியது. காலம் கடந்து யோசிச்சு நோ யூஸ்….” என்றாள் மதுரா.
மகேஷ்வரியும் சென்னை கிளம்பி மாதம் ஒன்றாகி இருந்தது. இடையில் ஒருமுறை மதுரா மட்டும் சென்னைக்கு சென்று வந்தாள் காந்திமதியை துணைக்கு வைத்துகொண்டு.
பாண்டியன் அங்கே வரமுடியாதென்று சொல்லிவிட்டான். அதுவே எழில்மணியை வருத்தியது.