அழுது முகம் வீங்கிப்போய் இருந்தாலும் பார்வையில் மரணத்தை தொட்டுவிட்டு வந்த அச்சம்.
“யார் நீங்க? உங்க பேர் என்ன?…” என மதுரா அந்த பெண்ணை கேட்க,
“அதை தெரிஞ்சுக்க அவசியமில்லை மதினி. ஏற்கனவே நான் நோ சொல்லியாச்சு. இவங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்கறாங்களாம். மார்னிங் தான் என்கிட்ட பேச கோர்ட்டுக்கு வந்துச்சு….”
“திட்டி அனுப்பிட்டேங்களோ?….” என்று மதுரா முறைக்க,
“வேற என்னத்த செய்யங்கேம்? புடிக்கல, வேணாமின்னா விட்டு தொலைக்கனுமில்ல. கட்டாயப்படுத்தி என்னத்த வரும்? இப்ப இப்பிடி பண்ணி வெச்சி இதோட தோஸ்த்து எனக்கு கால் பண்ணிச்சேன்னு இங்க வந்தா அந்த ராங்கி அதுக்கு மேல பேசற….” என கொந்தளித்தான்.
“ஓகே ஓகே, விடுங்க….” என்ற மதுரா,
“லவ் பண்ணி ரிஜெக்ட்டாகிட்டா வாழ்க்கையே முடிஞ்சதுன்னு அர்த்தமாம்மா? சூசைட் பண்ணிட்டா எல்லாம் சரியாகிடுமா?…” என கேட்டாள் மதுரா அந்த பெண்ணிடம்.
“அக்கா….” என அவள் ஆரம்பிக்க,
“கால் மீ மதுரா. இல்லைன்னா மேம்ன்னு கூப்பிடலாம். உன்னோட இந்த மோட்டிவ் கால் என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியும்….” மதுரா சட்டென்று அவள் ஆரம்பிக்க இருந்த உறவு வலையை வெட்டி எறிந்தாள்.
“நீ பண்ணினதுக்கு பேர் பக்கா ப்ளாக்மெய்ல். உனக்கு இதுல ஏதாச்சும் ஆச்சுன்னா கில்ட்டா கூட பீல் பண்ணமாட்டேன். ஏனா இதுக்கு எந்த வகையிலையும் நான் காரணமில்லை. முழுக்க முழுக்க உன்னோட முடிவு மட்டுமே…” என்றான்.
“உங்களுக்காக தான் ஜகா…”
“ஹேய் சத்தியமா அடிச்சிடுவேன் பார்த்துக்க. என்ன படிச்ச நீ? உன்னோட பேரண்ட்ஸ் பத்தி யோசிக்கலை. என்னோட மறுப்பு கூட தாங்கிக்க முடியாத நீ ஸ்ட்ராங் பர்சனாலிட்டி இல்லை. உன்னை நான் எப்படி? வாய்ப்பே இல்லை…” என சொல்லியவன்,
“இங்காரு, இவ மறுக்கா பால்டாயிலே குடிச்சாலும் எங்கிட்ட போன போட்டு கூப்பிட வந்த ஒனக்கு காதிருக்காது பார்த்துக்க….” என அப்பெண்ணின் தோழிக்கும் எச்சரிக்கை விடுத்தான் ஜகா.
“ஓகே, விடுங்க. இனிமே புரிஞ்சுக்கும்….” என்ற மதுரா,
“இங்க பாரும்மா, பிறப்பும், இறப்பும் உன்னோட கையில இல்லை. அதுவும் சில்லியா ஒரு விஷயத்துக்கு உயிரை விடற அளவுக்கு முட்டாளா இருக்கற நீ எங்க ஜகாவுக்கு செட்டாக மாட்ட. காதல் எல்லாம் வலுக்காட்டாயமா வரவைக்க முடியாது. புரியுதா?…” என்றாள்.
“நல்லா சொல்லுங்க மதினி. செவில்ல ரெண்டு விடுங்க. படிச்சோமா ப்ராக்டிஸ் பண்ணினோமா, வேலையை பார்த்தோமான்னு இல்லாம ஒரு லவ்வுக்காக சாக போறாளாம்….” என்று கீழுதட்டை ஆத்திரம் தீருமட்டும் கடித்து தன்னை அடக்க முயன்றான்.
“இந்தா பிள்ளை, இப்பவாச்சும் முழிச்சுக்கோ. நீ நினைச்சு இந்த உலகத்துக்கு வரலை. அது மாதிரி தான் சாவும் நீ நினைச்சா வந்திருமா?…” என உள்ளே நுழைந்த வைதேகி சொல்ல அந்த பெண் தேம்பி தேம்பி அழுதாள்.
“நான் தான் சொன்னேன்ல. பாரு உன்னோட லவ்க்கெல்லாம் வொர்த்தே இல்லாத ஒருத்தனுக்காக சாக போற நீ…” என மீண்டும் வைதேகி சொல்ல,
“அடிங்கொப்பத்தா, யாருகிட்ட. இன்னைக்கு ஒன்னிய….” என ஜகா மதுராவை தாண்டிக்கொண்டு வைதேகியிடம் செல்ல முயல,
“என்ன?…” என்றாள் வைதேகி நின்ற இடத்திலிருந்து அசையாமல் திமிராய், தெனாவெட்டாய்.
“ஜகா, நாம கிளம்பலாம்….” என மதுரா அவனை அழைத்துக்கொண்டு வெளியே வர பாண்டியனும் மதுராவிற்கு அழைத்துவிட்டான்.
“எங்க போன மதுரா?….” என்றவனிடம்,
“உங்க பின்னாடி தான் இருக்கோம். திரும்பி பாருங்க….” என எடுத்ததும் சொல்லி ஜகாவை முறைத்தாள் மதுரா.
“எதுக்கு இவ்வளோ கோவம் வருது ஜகா? இதுல பொண்ணு செட்டாகலைன்னு வேற புலம்பல். இப்படி இருந்தா ஏழுகழுதை என்ன? எம்பது கழுதை வயசானாலும்…” என்றவள் அவனின் பார்வையில் இன்னும் சிரித்துவிட ஜகாவின் முகத்தில் புன்னகை.
“என்ன லந்தா? நடத்துங்க, நடத்துங்க. எனக்குன்னு ஒருத்தி சிட்டா பறந்து வருவா. இது கெழவி மேல சத்தியம்….”
“ஆஹா, ஜகா….” மதுரா வயிற்றை பிடித்தபடி சிரிக்க,
“கலியாணத்த முடிச்சி நேத்திக்கடனா கெழவிக்கு காதுல அலகு குத்துதேம். அந்த காத்து பெருசுதேம். கடப்பாரையை சொருக வேண்டிதாம்….” என்றான்.
“அலகு குத்திப்பாங்களா பாட்டி?…”
“அழகுன்னு எவனையாச்சும் புடிச்சு குத்திவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடும் கேடி கெழவி…” என சிரித்தவன்,
“அதனால மெல்ல லந்த கூட்டவும் மதினி…” என்றான் காலரை தூக்கிவிட்டு கெத்து காண்பித்து.
“பின்ன? எப்பவாச்சும் தான் வகையா சிக்குவீங்க. அது இன்னைக்கு….” என்றவள்,
“சரி, அந்த பொண்ணுக்கிட்ட கொஞ்சம் புத்தி சொல்ற மாதிரி பேசியிருக்கலாம்..”
மதுராவும் புன்னகையை இதழ்களுக்குள் அடக்கிக்கொண்டவள் வயிற்றில் மேல் கையை வைத்து நின்றிருந்தாள்.
“தெரிஞ்சவகளா? பாக்கனுமின்னா இருந்து பாத்துட்டு வா. நாங்க பொறப்படுதோம்….” என்றவன்,
“ஆமா இங்க ஒனக்கு என்ன சோலி?…” என கேட்டான் பாண்டியன்.
ஜகாவும், மதுராவும் திருதிருவென்று விழித்தனர். பாண்டியனிடம் சொன்னால் என்ன பேசுவானோ என்று நின்றிருக்க,
“ஹலோ எக்ஸ்க்யூஸ்மீ…” என்று வந்தாள் வைதேகி.
“எஸ்….” என திரும்பிய ஜகா,
“ராங்கி….” என்றுவிட்டான் அவனறியாமலே.
“ஓய், என்னா?…” என பட்டென்று பற்றவைத்த நெருப்பாய் வைதேகி பற்றிவிட்டாள் ஜகாவின் அழைப்பில்.
“வைதேகி…” என மதுரா கையை பிடிக்க,
“டாக்டர், என்ன இது? இப்படித்தான் இங்க வரவங்களை மரியாதை இல்லாம நடத்துவீங்களா?…” பாண்டியனின் முகத்தில் அப்பட்டமான அதிருப்தி.
வைதேகியுமே அவனின் அதட்டலில் தன்னை நிதானித்தவள் நெரிந்த புருவங்களுடன் ஜகாவை முறைப்பதையும் நிறுத்தவில்லை.
“ஜகா, என்னடா இது? என்ன பேச்சு? தப்பு…” என்றான் தம்பியையும் கண்டித்து.
வைதேகிக்கு இத்தனை நாட்கள் பார்த்த பாண்டியனையும், இன்று ஒற்றை நொடியில் பார்வையால் எரித்து நின்ற பாண்டியனையும் வேறுபடுத்தி பார்க்கும் முன் சிறு நடுக்கம்.
‘ஹப்பா என்ன ஒரு கோபம்?’ என்று நினைத்தவள் மதுராவையும் பார்த்துவிட்டு,
“இங்க பாருங்க மேம், அங்க நான் பேசினதுக்கு ரீசன் மெண்டலி அந்த பொண்ணை கொஞ்சம் டைவர்ட் பண்ணத்தான். மத்தபடி இவங்களை மட்டம் தட்டனும்ன்னு இல்லை. ஜஸ்ட் ஒரு சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட். அதை சொல்ல தான் வந்தேன்…” என்று சொல்லிவிட்டு,
“அதுக்காக மரியாதை இல்லாம பேச வேண்டாம்ன்னு உங்க ப்ரதர் இன் லாக்கு டீச் பண்ணுங்க. அவர் எப்படி பேசறாரோ அதுக்கேத்த மாதிரி தான் நானும் பதில் குடுப்பேன்…” என்றாள்.