“இங்க தான் இருக்கேன், கூடத்தான இருக்கேன். இந்த டயலாக் எனக்கு வேண்டாம். எப்ப வருவீங்கன்னு சொல்லுங்க. வரலைன்னாலும் சொல்லுங்க…” என கேட்க,
“என்னமோ ஒப்ப மாட்டிக்கே? என்ன செய்ய சொல்லுத?…”
கொட்டகையில் போட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்துகொண்டான் பாண்டியன். அவன் அமர்ந்ததுமே படுத்திருந்த மருது அவனருகே நின்று மதுராவை அழைத்தான்.
“இவன் வேற….” என மதுரா வந்தமர்ந்ததும் அவள் காலருகே மருது படுத்துக்கொண்டான்.
“சரி இப்பவே ஏன் அந்த யோசனை? அப்பறம் பார்த்துப்போம்….” என்று சொல்லி அந்த பேச்சின் திசையை மாற்றினாள் மதுரா.
இவர்களை பார்த்து வந்த காந்திமதி மதுரா அமர்ந்திருக்கவும் இன்னும் வேகமாய் வந்துவிட்டார்.
“என்ன ஒக்காந்துட்ட? ஏத்தா வா எங்கூட நாலு சுத்து நடப்பியாம்….” என எழுப்பிவிட்டார் காந்திமதி.
“ஊஃப் போதும் பாட்டி….” என்றால் இடுப்பை பிடித்தபடி சோர்வுடன்.
“அஞ்சாயிருச்சு, மெல்ல மெல்ல சுளுவான வேலையா பாத்தாத்தேன் சொவமா பெக்க முடியும். வா வா பேசிக்கிட்டே நடப்பியாம்…” என்று அவளின் கையை பிடித்து எழுப்ப பாண்டியன் சிரித்துவிட்டான்.
“நானே கூட்டிட்டு போறேம் கெழவி, நீயி ரவைல கண்ணு தெரியாம வாரி எடுத்துக்காத. போ போ….” என விரட்டிவிட்டு மீண்டும் மதுராவுடன் பேசிக்கொண்டே அடுத்த நடையை போட்டவன் ஒரே சுற்றில் பின்பக்க வாசல் வழியாக அவளுடன் உள்ளே சென்றுவிட்டான்.
“என்ன கெழவி வாசல்ல ஆருக்கு இந்நேரம் காவலு?…” அப்போது தான் வீடு வந்த ஜகா கேட்க,