“போய்ட்டு அடுத்து அஞ்சு மாசம், இல்ல ஏழு மாசம். அப்போ தான் வருவேன் குழந்தையோட…” என்றவள்,
“அஞ்சு மாசமில்ல. ஏழாம் மாசம் இல்ல ஒம்பதாம் மாசம் தான் வருவேன். அதான் என்னை போ போ சொல்லியாச்சே. மெதுவாவே வரேன்…” என்றாள் கோபமாக.
“ஹ்ம்ம்…”
அதற்கும் பாண்டியன் அதே போல ஆமோதித்து வார்த்தையின்றி மௌனம் சாதிக்க, தான் சாய்ந்திருந்த நெஞ்சத்தை பற்களால் கோபமாக பதம் பார்த்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை.
“ஏப்பா மதுரா….” என்றவன் அவள் கொடுத்த காயத்தில் மெல்லிய சப்தத்தை எழுப்பினான்.
“போயா நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா?…” என கேட்டு அவனின் சட்டையை விலக்கி அவ்விடத்தை பார்க்க மதுராவின் அழுத்தமான பற்தடங்கள்.
“என்னை என்ன பன்ற நீ? இருக்கேன்னு சொல்றேன். ஒம்பதாம் மாசம் ஆகட்டும்ன்னு சொல்றேன். ஆனா என் பேச்சை யார் கேட்க? இங்கயே தனியா இருந்து அவஸ்தை படுய்யா…”