“ப்ளீஸ், பாடறதை நிப்பாட்டுங்க முதல்ல. அந்த டாக்குமெண்ட்ஸ்ல என்ன எழுதியிருக்கோ அதை படிங்க…” வைதேகி கறாராக சொல்ல,
“படிச்சாச்சு, படிச்சாச்சு….” என்றவன் பேச்சில்,
“இங்க வந்திருக்கவே கூடாது. நீங்க அதை குடுங்க. நான் வேற யாரையாவது பார்த்துக்கறேன்….” என பிடுங்கிக்கொண்டாள் அந்த பத்திரத்தை.
“வேற எங்க போனாலும் கிடைக்காது. பாத்தியதை எழுதிக்குடுத்து கையெழுத்து போட்ட அந்த பத்திரமே இதுல இல்லை. இத்த மட்டும் வச்சுக்கிட்டு வேற எங்க போனாலும் முதல்ல அதை தான் கேட்பாங்க….” என்றான் ஜகா.
வைதேகியின் முகமே மாறிவிட்டது. சஞ்சலத்துடன் அவனை பார்த்தவளுக்கு அடக்கப்பட்ட சினம் ஒருபுறம் மூண்டாலும், இன்னொருபுறம் இதை எப்படி கையாள்வது என தெரியவில்லை.
இரு கைகளால் தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள் வைதேகி. என்ன செய்ய போகிறோம் என்றொரு தவிப்பு அவளிடம்.
அவளின் சோர்வில் பிஞ்சு கை ஒன்று அவளின் உச்சி முடியை பிடித்து இழுக்கவும் நிமிர்ந்து பார்க்க,
“அடேய் மவனே, எழுப்புன்னா புடிச்சு இழுத்து எனக்கு இழுப்பு வாங்கித்தருவ போல?…” என கிச்சுகிச்சு மூட்டி அண்ணன் மகனை மேலே தூக்கி போட்டு பிடிக்க குழந்தையின் சிரிப்பில் வைதேகியும் தெளிந்தாள்.
“டாக்டர் நிமிர்ந்தாச்சு….” என்ற ஜகா,
“எதுவும் இல்லன்னா ஒடனே ஒடஞ்சு போறதா? என்ன டாக்டர் நீங்க? முதல்ல முறைச்சிக்கிட்டே இருக்கறத விட்டுட்டு கொஞ்சம் யோசிங்க….” என கூற அவனை யோசனையுடன் பார்த்தாள் வைதேகி.
“இப்ப என்ன, பாடல? செரியா?…” என சிரித்துக்கொண்டே சொல்லியவன்,
“நா பாத்துக்கிடுதேம். ஒங்கண்ணே நாளைக்கி எங்கன இருப்பாருன்னு மட்டும் எனக்கு ஒரு தகவல சொன்னா போதும்…” என தன்னுடைய போன் நம்பரை அவளுக்கு தரவும் பதிந்துகொண்டாள் வைதேகி.
இதற்குள் இரு வக்கீல்களை பார்த்தாகிற்று. இருவருமே சொல்லி வைத்ததை போல இது வேலைக்காகாது என்று சொல்லியதோடு, சொந்தத்துக்குள்ள பிரச்சனைனா பேசி பைசல் பண்ணுங்க என்றுவிட்டனர்.
ஜகாவை பார்த்ததும் மதுரா, பாண்டியனை எண்ணி தைரியமாக வந்தவளுக்கு அவன் பாடலும், பார்வையும் எச்சரிக்கை உணர்வை விதைக்க, இப்போது ஜகா கூறிய தைரியமான வார்த்தைகள் அதனை மட்டுப்படுத்தியது.
அவன் மீதான அபிப்ராயம் நல்லவிதமாகவும், சற்றே எச்சரிக்கையுடனும் என மாறி மாறி இருந்தாலும் இப்போது தனக்கு அவன் தலையீடு அவசியம் என பட்டது.
“அடடே வாம்மா டாக்டர்….” என்றாள் மதுரா.
“இப்பதான் பாட்டி சொன்னாங்க நீ வந்திருக்கன்னு. எப்படி இருக்க வைதேகி?….” என கேட்கவும்,
“நான் நல்லாயிருக்கேன் க்கா. நீங்க எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு….” என்றாள் சோபையான புன்னகையுடன்.
வைதேகியின் கவனம் மதுராவில் பதிய ஜகாவின் பார்வை அவளை வருடி மீண்டுகொண்டிருந்தது நொடிக்கு நொடி.
“இப்ப அந்த ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்ணலைன்னு கேள்விப்பட்டேன்….”
“அதனால என்ன? கங்ராட்ஸ் வைதேகி…” என கை குலுக்கினாள்.
“உங்க குட்டி நல்லா வளர்ந்துட்டான்….” என விக்கிரமபாண்டியனை கொஞ்சிக்கொண்டு சிறிது நேரம் வந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்க மதுரா ஜகாவை கண்டுகொண்டாள் அப்பட்டமாக.
“எல்லாம் சீக்கிரமே சால்வாகிடும். ஜகாக்கிட்ட வந்தாச்சுன்னா சக்சஸ் தான்….” என்று வேறு பெருமை பேசினாள் மதுரா.
“என்னத்தா பேசியாச்சா?…” என்று காந்திமதியும் வந்துவிட,
“கிழிஞ்சது….” என ஜகா முகத்தை திருப்பவும் காந்திமதி குழந்தையை பார்த்தார்.
“ஏலே சகா, இன்னும் புள்ளைக்கு அந்த சட்டிய கழட்டி மாத்தி போடலியாக்கும்? என்னத்த பண்ணுதியோ? ஒரு சட்டி போட தெரியல இவேனுக்கு….” என்றதும் ஜகா எழுந்த வேகத்தில் காந்திமதியை அலேக்காக தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினான்.
“கெழவி கத்துன ஒஞ்சங்க நசுக்கிருவேன். எப்ப பாரு எங்கிட்ட ஒரண்ட இழுக்குதது….” என அவரின் அறைக்குள் விட்டு கதவை சாற்ற,
“ஏலே சகா….” என்று கத்தியும் விடவில்லை.
“என்ன ஜகா, பாட்டியை உள்ள வச்சு பூட்டியாச்சு போல?….” மதுரா கிண்டலாக சிரிக்க,
“அட போங்க மதினி….” என்று சொல்லிவிட்டு வைதேகியின் தந்த பத்திரத்தை பத்திரப்படுத்தினான்.
“ஆமா மதினி…” என்று மறையாமல் ஒப்புக்கொள்ள இதனை எதிர்பார்த்திராத ஒரு திகைப்பு மதுராவிடம்.
“என்ன மதினி, இல்லன்னுவேன்னு நெனச்சீகளோ?….” என புன்னகைத்துக்கொண்டவன்,
“சமாளிக்கவெல்லாம் மாட்டேம். ரவைக்கு அண்ணே வரவும் பேசத்தான்…” என சொல்லி கையிலிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டான்.
குழந்தை வரவும் மருது துள்ளிக்கொண்டு அங்கே ஓடி வர பிள்ளையும் கைதட்டி குதூகலித்தான் மருதுவை கண்டு.
“ஒக்காருடா. ஒடனே குதிப்ப நீயி…” என அவனுக்கு விளையாட்டு காண்பிக்க குழந்தையுடன் குழந்தையாய் மருதுவும் அவ்விடத்தை சுற்ற, நிற்க, அமர என்று ஆட்டம் போட்டான்.
“சரி இருங்க, நான் இப்படியே இவனுக்கு சாப்பாடும் ஊட்டிடறேன். போய் எடுத்துட்டு வரேன்….” என உள்ளே சென்றவள் சற்று நேரத்தில் பெரிய கிண்ணத்தில் மசிக்கப்பட்ட சாதத்தில் நெய்யும், பருப்பும், ரசமும் ஊற்றி இருந்தாள்.
ஜகா மருதுவின் மேல் விக்கிரமபாண்டியனை அமர வைத்து சறுக்கு விளையாடவிட வாகாய் சாய்ந்து படுத்திருந்தான் மருது.
“அவங்க வரவும் என்ன பேசறதா இருக்கீங்க ஜகா?…” மதுரா பேசிக்கொண்டே உணவை மகனுக்கு ஊட்ட,
“அதுசரி. விட்டா என்னை மொத்தமா கோர்த்துவிட்டுடுவீங்க போல?…”
“எல்லாரும் சேர்ந்து தான் பேசனும். பேசுவோம்…” என்றவன்,
“வீட்டுலருந்து பொண்ணு கேட்கற மாதிரியே வெச்சிக்கிடுவோம். இல்லன்னா அந்த ராங்கி வேணாமின்னாலும் ஆச்சர்யமில்ல….”
“விவரம் ஜகா….” என சொல்ல எழில்மணி அந்நேரம் வந்துவிட்டார்.
படுத்திருந்த மருதுவின் அருகே பேரன் நின்று அதன் வயிற்றை தட்டிக்கொண்டு சாப்பிட, மகள் நின்று ஊட்ட, பேரனை பிடித்தபடி ஜகா நிற்க பார்த்தவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.
இதில் பேரன் மருதுவின் கொம்பை பிடித்து இழுக்கவும் ஜகா மருதுவின் கழுத்தில் குழந்தையை தூக்கி அமர வைக்க பதறிக்கொண்டு ஓடி வந்தார்.
“என்ன பன்றீங்க நீங்க? சின்ன குழந்தையை போய் இப்படி மாட்டுக்கிட்ட உக்கார வச்சுக்கிட்டு….” வெடுக்கென்று அவர் தூக்கிய வேகத்தில் பிள்ளையின் கை வலித்துவிட அலறி கத்த ஆரம்பித்துவிட்டான் விக்கிரமபாண்டியன்.
“மாமோவ் என்னத்துக்கு இம்புட்டு பதட்டமாம்? இங்கின என்னாகி போச்சு?….” ஜகா இலகுவாக கேட்க,
“என்னாகிருச்சா? என்ன இப்படி கேட்டுட்டீங்க?….” என்றவர்,
“மது….” என மகள் பக்கம் திரும்ப பேரன் ஜகாவிடம் தான் போகவேண்டுமென கையை நீட்டினான்.
“இதை பிடிங்க ஜகா….” என உணவு கிண்ணத்தை அவனிடம் தந்தவள் மகனை வாங்கிக்கொள்ள பிள்ளைக்கு எழில்மணி பிடித்து தூக்கியதில் கை சிவந்திருந்தது.
“சரிப்பா, ஒண்ணுமில்லப்பா. ஒண்ணுமில்ல….” என தட்டிக்கொடுக்க மருது வேறு குழந்தையுடன் எசப்பாட்டு பாட ஆரம்பித்துவிட்டான்.
குழந்தை ஒரு கத்து, மருது ஒரு கத்து என அவ்விடம் ரணகளப்பட அனைவருமே வந்துவிட்டனர் அங்கே.
என்ன என்ன என வந்து கேட்க எழில்மணி கோபத்துடன் நின்றிருந்தார் நடுவில்.
குழந்தை அழுகையை குறைக்காமல் இன்னும் சத்தமிட்டு கத்தி கண்ணீர் வடிக்க யாராலும் நிறுத்த முடியவில்லை.
“எங்கிட்ட கொண்டாங்க மதினி….” என வாங்கியவன் பிள்ளையின் கண்ணீரை துடைத்துவிட்டு மருதுவின் மேல் அமர வைக்கவுமே தன் அரிசி பற்கள் காண்பித்து அழகிய புன்னகை.
புறங்கையால் கண்களை கசக்கிவிட்டு நன்றாக மருதுவின் இருபக்கமும் கால்களை போட்டு அமர்ந்துகொண்டவன் பிஞ்சு கையால் தட்டி விளையாட மருதுவும் அதற்கேற்ப அசைந்தாடினான்.