“அதெல்லாம் வேண்டாம். சரியாகிடும்…” என்றவள் படுத்துக்கொண்டே மருதுவை அடித்து விளையாடி கள்ளப்புன்னகை புரிந்த அந்த மாயக்கண்ணன் கன்னத்தில் லேசாய் வலிக்காமல் இடித்தாள்.
“அப்பாவுக்கும், பையனுக்கும் எங்கப்பாவை கண்டா எப்படித்தான் இருக்குமோ? இவனுக்கு இப்பவே என்ன ஒரு பிடிவாதம் பாருங்க?….” என சொல்ல குழந்தை இன்னும் அட்டகாசமாய் சிரித்தான்.
“எங்கப்பா மாசம் ரெண்டுதடவை இவனை பார்க்கன்னே ஓடி வரார். இவன் விவரம் தெரிய தெரிய அவர்கிட்ட அநியாயத்துக்கு மல்லுக்கு நிக்கற மாதிரி போவேணாங்கறான். எங்கம்மாக்கிட்ட மட்டும் ஒட்டிக்கிட்டாச்சு. எங்கப்பா புலம்பல் தாங்க முடியலை….” மதுரா சொல்ல சொல்ல ஜகாவிற்கும் சிரிப்பு தான்.
சித்தப்பனின் சிரிப்பில் குழந்தைக்கு என்ன புரிந்ததோ தன் குட்டி தொப்பையை பிடித்துக்கொண்டு குலுங்கி சிரிக்க பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.
“போச்சு நான் இப்படி பார்க்கறேன். என் கண்ணும் பட போகுதுன்னு பாட்டி அட்டகாசம் பண்ணுவாங்க….” என சொல்லியவள் மகனை தூக்க,
“பொடிப்பயலே இப்பவே ஒன்னோட லந்து முடியலடா. வளந்தா என்ன செய்யுவ நீயி?….” என கொஞ்சிக்கொண்டே உடம்பெல்லாம் துடைத்துவிட்டு வெறும் டவலை சுற்றிக்கொண்டு தூக்கி வந்தான்.
“என்னத்துக்கு வழில நிக்கித? போவத்தான?…” பாண்டியன் கேட்க,
“என்ன இருந்தாலும் மதினி ஒங்களுக்கு இரக்கம்ன்னு ஒன்னு வேணாமா? நாந்தான அன்னைக்கி ஒங்கள தோப்புக்கு கூட்டிட்டு போனேம் அண்ணங்கூட பேச?….” என சொல்ல அடக்கமாட்டாமல் மதுரா சிரித்துவிட்டாள்.
“சொல்ல வந்தா சொல்லறத விட்டுபோட்டு போறேமின்னா? போ…” பாண்டியன் மீண்டும் சொல்ல,
“தெரியாம சொல்லிட்டேம் ண்ணே….” என்றவன்,
“மதினி ஒரு வயசு பையனா பொண்ண காமிச்சு கட்டி வையிங்கன்னு சொல்லமுடியும்? நீங்களா நாசூக்கா புரியத்தான?….” என்றான் கெஞ்சாத குறையாக.
“இது வீம்பா போறேன்னு சொல்லும் போது யோசிக்கனும் தம்பி. சரி விடுங்க, உங்க லவ்க்கு ஹெல்ப் பண்ணினா நாளைப்பின்ன உங்க பிள்ளைக்கு என் பேரை வைப்பேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க….” என மதுரா ரகசியம் பேச,
“ஆத்தீ எம்மவள என்னன்னு ஒங்க பேர சொல்லி கூப்புட்டு அதட்டுறதாம்? வேணா ஒங்கப்பா பேர வெக்கிதேம், பொண்ணுனாலும், பையன்னாலும். வசதியா இருக்கும்…” என அவனும் டீல் பேசினாள்.
“எனக்கு தூக்கம் வருது. குட்நைட்….” என அவள் நகர போக,
“கொழுப்பெடுத்த வாயி. அடங்கமாட்டிக்கு. மனசுல வெச்சிக்காதீங்க. ரவைக்கு கெழவி காதறுத்தாச்சும் அந்த தண்டட்டிய ஒங்களுக்கு பைசல் பண்ணி தாரேம். பேசுங்க மதினி….” என ஜகா சொல்ல கண்ணில் நீர் வரும் வரை அப்படி ஒரு சிரிப்பு மதுரா.