“அதான் மாப்பிள்ளை சொல்றாருல. எதுக்கும்மா அழற? சொல்லாம இருந்தாலும் பாத்துக்குவாங்க. இப்ப சொல்லிட்டாங்க. நீ எதையும் நினைச்சு பீல் பண்ணாத. போ…” என்ற எழில்மணி,
“மது இங்க வா…” என மகளை அழைத்து,
“அழுது பாரு. கூட்டிட்டு போ….” என்று அனுப்பி வைத்தார்.
அவருக்கும் நெல்லையப்பனின் மனம் புரிந்தது. தனக்காவது மகேஷ்வரி இருக்கிறார். நெல்லையப்பனுக்கு என நினைக்கும் பொழுது மனதும் இரங்கியது அவர்களுக்காக.
ஜகா எழில்மணியை பார்க்க அவர் பேரனுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தார்.
“அப்படியே உங்கப்பாடா நீ. கொஞ்சமாச்சும் என்கிட்ட நிக்கிறியா? என் பேச்சை கேட்கிறியா?…” என இரண்டு வயது கூட ஆகாத குழந்தையிடம் மல்லுக்கு நின்றார்.
அவர் முறைக்க, அவரை போலவே விக்கிரமபாண்டியனும் முறைத்து காண்பித்து தாத்தாவை டென்ஷன் ஏற்றினான்.