“கோளாறா சீவனுமிண்ணே. கேரளாவுக்கு போற லோடு. பாத்துக்கிடுங்க…” என புருவம் சுருங்க சொல்லிவிட்டு அடுத்த பகுதிக்கு நகர்ந்தான் பாண்டியன்.
நேந்திரங்காய் வாழை மரங்கள் முழுவதும் அதில் நிறைந்திருக்க காய்த்து வெட்டுவதற்கு தயாராக குலை தள்ளி இருந்த வாழைத்தார்களை பார்த்துக்கொண்டே வந்தவன்,
“எண்ணே இந்த தார விட்டு வைய்யும். மரத்திலையே பழுக்கட்டும்…” என்றான் பாண்டியன்.
“வீட்டுக்குங்களா தம்பி…” என்றவரிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அடுத்த பகுதிக்கு சென்றான்.
ஜகாவிற்கு போன் செய்து அழைத்து அங்கே வரும்படி சொல்லியவன் லோடு ஏற்றும் லாரிகள் நிறுத்தத்திற்கு வந்தான்.
சற்று நேரத்தில் ஜகாவும் வந்துவிட அவனிடம் ஒரு நோட்டை நீட்டியவன் லாரியை காண்பித்தான்.
“ஜகா மதுர டவுன் மார்க்கெட்டுக்கு இந்த லோடு போவுது. வாழ மண்டில இத்த எறக்கிட்டு இந்த சிட்டைய கையில குடுத்துட்டு போன லோடுக்கான காச வாங்கிட்டு வந்துரு….” என சொல்ல அவன் நீட்டிய சிட்டையையும் நோட்டையும் பார்த்தான் ஜகா.
“செரிண்ணே…”
“அவேன் முன்னுக்கையே காச வாங்கிட்டு வரவு வெய்யி. காச குடுத்தா மட்டும் லோட எறக்கு…”
“இல்லன்னா?…”
“இல்லாங்காட்டி எனக்கு போன போடு. நா பேசுதேன்…” என்றவன்,
“அந்தளவுக்கு வெக்கமாட்டியான்னு நெனக்கேன். பாத்துக்கிடுவோம். போயிட்டு போன போடு. பத்துமணிக்குள்ள போய் சேரனும், பாதுக்கிடு…” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு அந்த லோடை முதலில் அனுப்பினான்.
“தம்பி சொல்லுதேம்ன்னு வெசனப்படக்கூடாது…” என தோப்பில் வேலைக்கு ஆள் சேர்த்துவிடுபவர் வந்து பேச,
“என்னன்னு கேக்கத்தான ண்ணே? அம்புட்டுக்கா பயந்து வருது?…” என்று சிரித்தான் பாண்டியன்.
“கோளாறா கேக்கனுமின்னுதேன்…” என்றவர்,
“இந்த லோடையும் கேரளாவுக்கே மாத்திவிடத்தான? பணத்துக்கு பணமுமாச்சு. (Alprazolam) காசு கறாரா வருமில்ல…” என்று கூற மௌனமாய் சிரித்துக்கொண்டவன்,
“அங்கருக்க வாழ மண்டில கொள்ளப்பேருக்கு யே அய்யன் காலந்தொட்டு வரவு செலவு பாக்குதோமிண்ணே. சுளுவா காசுக்கு மாத்தலாம்ந்தேன். அதுக்குன்னு ஈரமில்லாம போவறதா? அதும் நம்மூர்க்காரரு வேற…” என்றதும்,
“இருந்தாலும் தம்பி…”
“சோலிய பாருங்கண்ணே, வெட்டி நாயத்த பேசிக்கிட்டு…” என்றுவிட்டான் பட்டென்று.
விட்டால் இதற்கும் மேல் தன்னிடம் நின்று புத்தி சொல்கிறேன் என வாயாடத்தான் செய்வார்கள் என்று அவ்விடத்திலேயே வெட்டி பேசினான் பாண்டியன்.
வார்த்தைகள் கத்திரித்துவிழ அதற்கு மேல் அவனிடம் உரையாட முடியாதே என நகர்ந்துவிட்டார் அவர்.
முதலிரண்டு லோடுகள் கிளம்பவும் மூன்றாம் லாரியில் வாழைத்தார்கள் ஏற்றப்பட்டது. அங்கே நின்றுகொண்டிருந்த நிமிடம் அவனின் அலைபேசி அழைக்க எடுத்ததும்,
“யய்யா நாயகி வழுக்கி விழுந்துப்பிட்டாளாம். மரிக்கொழுந்து சொல்லியனுப்பினா. ஆஸ்ப்பத்திருக்கி போயிருக்காவலாம். நீயி ஒடனே வா ராசா…” என பதட்டமாய் காந்திமதி சொல்ல,
“என்னப்பத்தா எப்புடி?…” என்றான் தனது பைக்கை நோக்கி நகர்ந்துகொண்டே.
“குளிக்க போயிருப்பா போல. பாதகத்தி தல கிறுகிறுக்கவும் அங்கனவே விழுந்துட்டா. தலையில அடியாம்…” என்று சொல்லும் பொழுதே அவர் விசும்பிவிட,