“அதனால என்ன தம்பி? நீங்க உதவி செஞ்சிருக்கீங்க. நாங்க வாங்கிருக்கோம். இதை சொல்றதுல எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை…” என்றவரின் நேர்மையான குணம் பாண்டியனை வியக்க செய்தது.
“இருக்கட்டும், இருந்தாலும் ஒங்க வீட்டுமனுஷன் இந்த ஊர்க்காரர். வந்து போயி இருக்கற எடத்துல நாளப்பின்ன நீங்க கடன அடச்சாலுமே இன்னாருக்கிட்ட வாங்கித்தான் எல்லாம் முடிஞ்சதுன்னு பேச்சுக்கு வந்துட்டாலும் அவரு கௌரதைக்கு கொறச்சல் தான அங்கின?…” என்றான்.
“ஊர் பேசுதுன்னு நினைக்கலாமா?…” மகேஷ்வரி கேட்க,
“அந்த ஊருக்கு மத்தில தான வாழறோம். அதுவும் அவரு கோவத்துக்கு மத்தவக சொல்லி காமிக்கிதமாரி வேணாங்கிதேன்…”
“பரவாயில்லை தம்பி. நீங்க இன்னுமே எங்க மனசுல உயர்ந்துட்டீங்க. அவர் உங்களை எவ்வளோ கோவமா பேசினாலும் கூட அவருக்காக பாக்கறீங்க…” என்றார் மகேஷ்வரி.
“வடிவு, எம்பேத்தி எந்த கால வச்சு உள்ளார வந்தா?…” என கேட்டு நச்சரித்துக்கொண்டு இருந்தார்.
“நா என்னத்த கண்டேன்த்தே?…”
“என்னத்த கண்டியா? இத்த கவனிக்காம என்னத்த? ஐயோ இப்ப நா என்ன செய்யுவேன்? எல்லாம் அந்த அழகரு பயலால. அவேன் நின்னு வாயாடி இத்த கவனிக்கல…” என புலம்பி தள்ள வடிவு முழிபிதுங்கியது.
“இப்ப என்னத்தே?…” என சொல்லி அவரை ஆற்றுப்படுத்த முயல,
“என்னத்தேயா? எம்புட்டு முக்கியமான சமாச்சாரம்டி? சுளுவா கேக்குதா?…” என காந்திமதி அடுக்களையில் இங்குமங்கும் நடக்க,
“அவக அங்கனவே நிக்குதாக. போயி பேசத்தான. நா சோத்த வடிச்சிட்டு வாரேன்…” என்று அனுப்பி வைத்தார்.
பாண்டியனும் ஜகாவுடன் சென்றிருக்க காந்திமதியும், வடிவும் அடுக்களையில் இருக்க மகேஷ்வரியும், மதுராவும் அமர்ந்த இடத்திலேயே வீட்டை சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“யத்தா வந்துட்டேம்ய்யா நானு…” என சிறுபிள்ளைபோல காந்திமதி சொல்ல அவரின் அலும்பில் பக்கென்று சிரித்துவிட்டாள் மதுரா.
“ஒரு ரோசன சொல்லுதேம். ஒங்க நல்லதுக்குத்தேன்…” என்று சொல்ல மதுராவும், மகேஷ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“ஒங்க ட்ரைவர காச குடுத்து ஊருக்கு அனுப்பிவிடுங்க. இன்னைக்கு ரவைக்கு கெளம்ப வேணா. நாளைக்கு விடியறப்ப கெளம்புங்க. வண்டி ஓட்ட ஒருத்தனும், கூட எந்தம்பியும் வருவான். ஒரு பாதுகாப்புக்கு…” என சொல்ல மதுரா யோசித்தாள்.
“எதுக்கு தம்பி? ட்ரைவர் பல வருஷமா நம்ம வீட்டுல வேலைக்கு இருக்கறவர் தான். நம்பிக்கையானவரும் கூட…” மகேஸ்வரி சொல்ல,
“பலவருசமா தொழில் பண்ணின ஒங்க பங்குதாரரும் இதுக்குமின்ன நம்பிக்கயானவக தான்னு தானே நினச்சீங்க?…” என்றவன் வார்த்தை சுள்ளென்று தாக்கியது கேட்டவர்களை.
“ஒங்கள வெசனப்பட வெக்க நா சொல்லலைங்க. இப்ப இருக்கற கெரகத்துக்கு நல்லது கெட்டது தெரியாது. ட்ரைவர மட்டும் சொல்லல. நா பணத்த எடுத்தத அங்கருக்கற ஆளுங்க களவாணிப்பயலுவ ஆருக்காச்சும் தாக்கல் சொல்லிருந்தா?…” என கேட்டவன்,
“சரிங்க தம்பி. நீங்க சொல்லும்போது காரணமிருக்கும்…” என சொல்லவும் தலையசைத்தவன் வெளியே சென்றான்.
“ஹ்ம்ம், பயங்கர மைண்டட் ம்மா. இதெல்லாம் நாம யோசிக்கவே இல்லை. ஆனா இப்ப யோசிக்கும் போது இந்த பாதுக்காப்புமே பயத்தை குடுக்குது. இவ்வளோ பணம் இருக்கு. கொண்டுபோகனும்னு…” என்றவள்,
“பகல்லயே போகலாம். நமக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். போனதும் முதல்ல பிராப்பரா அக்கவுண்ட்ஸ்ல மாத்தற வேலையை பார்க்கனும்…” என கூற,
“சரிதான் மது…” என்றார் மகேஷ்வரி.
“உங்கப்பாவை தான் சமாளிக்கனும்…” என கவலையுடன் சொல்ல,
“அதை நான் பார்த்துக்கறேன். நீங்க டோன்ட் வொர்ரிம்மா…” என்றாள் புன்னகையுடன்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க மீண்டும் பத்து நிமிடத்தில் பாண்டியன் உள்ளே வந்தான்.
“ரொம்ப சொல்லுதேமின்னு நெனைக்கவேணா, பேசாம எங்க வண்டில போவத்தான?…” என கேட்க,
“ஏன் என்னாச்சு?…” என்றாள் மதுரா.
“செத்த செலாத்தலா இருக்குமின்னுதேன். பெரிய வண்டி…” என்று சொல்ல அதில் மதுராவிற்கு விருப்பமில்லை.
மகளை அதனை மறுத்து பேசும் முன் மகேஷ்வரி மகளின் கையை பற்றி தடுத்துவிட்டவர்,
“சரிங்க தம்பி…” என சொல்லிவிட்டார்.
“ம்மா…” என தாயிடம் தன் மறுப்பை முகத்தில் காண்பிக்க அதுவரை இல்லாத குரல் பேதத்தில் மதுராவின் முகம் பார்த்தான் பாண்டியன்.
அவனின் பார்வையை உணர்ந்து மதுராவுமே அவனை எதிர்கொள்ள எங்கே மகள் எதுவும் பேசிவிடுவாளோ என எண்ணிய மகேஷ்வரி,
“நான் பேசிக்கறேன் தம்பி…” என்று சொல்ல ஒன்றும் சொல்லாமல் அவன் வெளியேறிவிட்டான்.
“கையை விடுங்க. நான் எதுவும் பேசலை. ஓகே வா?…” என தாய்க்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிய மதுரா,
“நான் கொஞ்ச நேரம் வெளில நிக்கட்டுமா?…” என்றாள் காந்திமதியிடம்.
அவருக்கு அப்படி ஒன்றும் மாற்றம் தெரியவில்லை. சரி என தலையசைக்க மதுரா வெளியே வந்தவள் வெளிப்புறத்தை சுற்றி பார்த்தாள்.
எல்லாமே சரி என்றவளுக்கு இது மட்டும் ஆகவில்லை. அதனை காண்பிக்க முடியாமல் வந்துவிட்டவள் சுற்றிக்கொண்டு பக்கவாட்டிற்கு வர ம்மேஹ் என்ற சத்தம்.
அத்தனை பெரிதாய் காளையை இவ்வளவு அருகே நேரில் பார்ப்பது அதுவே முதல்முறை.
“வாவ்…” என ஆச்சர்யத்துடன் மற்றதை மறந்து இன்னும் அருகே செல்ல புது ஆளை பார்த்ததும் மருது சிலிர்த்துக்கொண்டான்.
கூர்மையான கொம்புகளுடன் காளையின் கண்கள் பளபளக்க அருகே சென்றால் என்ன செய்யுமோ என பயமிருந்தாலும் செல்லத்தான் மனது உந்தியது.
வர்ணம் பூசப்பட்ட கொம்புடன் கழுத்தை சுற்றிலும் நெற்றியிலும் சிறுமணியால் கட்டப்பட்ட சலங்கை சத்தத்துடன் தலையாட்ட அதனை தடவிக்கொடுக்க முன்னே செல்லும் முன் ஒரு உலுக்கு உலுக்கி கொம்பை சாய்த்து மதுராவை நோக்கி மருது வர,
“டேய் மருது…” என்ற பாண்டியனின் அதட்டல் மருதை அடக்கியது.
அவன் குரலில் அந்த பக்கம் பார்க்க வேகமாய் வந்தவன் ஒரு கையால் மருதை பற்றிக்கொண்டு,
“தனியா இங்கிட்டு வரவேணா. உள்ள போங்க…” என்றான் கட்டளையாக அவளிடம்.
பாண்டியனின் கைகளுக்குள் நின்ற மருதுவையும், பிடித்திருந்தவனின் கையையும் பார்த்தவள் எதுவும் பேசாமல் ஒரு தலையசைப்புடன் உள்ளே சென்றுவிட்டாள்.
சற்று முன் இருந்த சஞ்சலம் இப்போதில்லை. பணத்தையும் கொடுத்து பாதுகாப்பாகவும் அனுப்புபவர் எங்கே இருப்பார்கள் என யோசித்தாள்.
“நீ ஓகே தானே மது?…” என்ற மகேஷ்வரியிடம்,
“நாமளாவா கேட்டோம். மிஸ்டர்.சொக் ப்ளான் படியே போவோமே. என்ன குறைஞ்சிடுமாம்?…” என தாய்க்கு மட்டும் கேட்கும்படி கூறியவள் உள்ளே மற்றவர்களுடன் பேச்சில் கலந்தாள்.
அவள் சென்றதும் சில நொடிகள் அங்கேயே நின்றவன் இரண்டு நிமிடம் கழித்து வீட்டினுள் நுழைய,