“அட போவியா? அவேன எப்புடி சரிக்கட்டன்னு எனக்கு தெரியாதாக்கும்? இப்பைக்கு கோவமா போனாலும் பொறவு வந்து திட்டிட்டு போனாலும் போட்டுமே. என்னத்த இங்க கொறைய போவுது?…” என காந்திமதி அசால்ட்டாக சொல்ல,
“அப்ப காது சூப்பு நெசமாவ போவுது. அதுக்குமுன்ன இந்த தண்டட்டிய கழட்டி எங்கையில தந்துடு கெழவி. வழிச்செலவுக்காவும்…” என்று கிண்டல் செய்துகொண்டிருந்தான் ஜகா.
“எங்க எங்காதுல கைய வெய்யி, பாத்துகிடுதேன்…” என சரிக்கு சரி மல்லுக்கு நின்றார் பேரனுடன்.
“சபாஷ் சரியான போட்டி…” என மதுரா கை தட்ட அவ்விடமே கலகலப்பில் ஆர்ப்பரித்தது.
மகேஷ்வரி சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் உள்ளுக்குள் எழுந்த ஒருவித ஏக்கத்துடன்.
பிறந்ததிலிருந்து சொந்தங்களுடன் பெரிதாய் வளர்ந்ததில்லை. உடன் பிறந்தவர்களும் யாருமில்லை.
மகளுக்கும் அதுவே என்றாகியிருக்க இப்போது அவரறியாமலே இந்த குடும்பத்தில் மகளும் அங்கமாக இருந்தால் எப்படி இருக்குமென ஒருநொடி நினைத்துவிட்டார்.
“என்னம்மா, வெசனமா பாக்குதாக்குல இருக்கு?…” என்று கேட்ட வடிவு,
“தப்பா நெனைக்காதீக. எங்கத்தேக்கு ஒரு ஆச. அத்த வச்சுக்கிட்டு என்னத்தையாச்சும் பேசுவாக. மத்தபடி மனசுல வச்சிக்கிடமாட்டாக. நீங்க பெருசா நெனைக்காதீக…” என்றார்.
“அதெல்லாம் இல்லைங்க. சொல்லப்போனா இங்கருந்து கிளம்பவே எனக்கு மனசில்லை. இங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். எங்க வீட்டுல இவ்வளோ கலகலப்பு இல்லைனாலும் அது எங்களை பாதிச்சதில்லை…” என்றவர்,
“ஆனா இப்ப இதை பார்க்கும் போது எதை எல்லாம் இழக்கறோம்ன்னு புரியுது. எங்க மதுவும் அப்படியே வளர்ந்துட்டா. அடுத்த தலைமுறையாவது இப்படி சொந்தங்களோட இருந்தா நல்லாருக்கும்…” என கூற,
“அதுக்கென்னத்தா, எம்பேத்திய இங்கனவே விட்டு போவத்தான? நாங்க ராசாத்தியா பாத்துக்கிடுதோம்…” என்றார் காந்திமதி.
“கிடைக்கிற கேப்ல எல்லாம் கோல் போடறீங்க பாட்டி…” என்று சிரித்தபடி அவரின் கன்னம் கிள்ளிய மதுரா,
“நான் இருக்கேன். அதுக்கொரு கண்டீஷன்…” என சொல்ல காந்திமதி கேட்கும் முன் மதுராவே,
“கண்டீஷன்னா ஒப்பந்தம். சும்மா கடிக்க கூடாது…” என ஒற்றை விரலை நீட்டி மிரட்டுவதை போல பாவலா செய்ய,
“மது என்ன இது?…” என்றார் மகேஷ்வரி சங்கடமாக.
“ம்மா, ஜஸ்ட் விளையாட்டு தானே?…” என்று சொல்ல,
“அட எம்பேத்தி எங்கூட வெளையாடாம…” என சொல்லிய காந்திமதி,
“நீ சொல்லுத்தா…” என்றார் அவளிடம் ஆர்வமாக.
“அட இருங்கத்தே, அதேம் சின்ன புள்ள….” என்றார் வடிவு மகேஷ்வரியின் சங்கடம் புரிந்தவராக.
மருமகளின் பார்வை அசைவில் தலையசைத்துக்கொண்டார் காந்திமதியும். அதற்கு மேல் அங்கே என்ன பேசமுடியும்?
மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு மாலை போல தான் அங்கிருந்து கிளம்பினார்கள் மகேஷ்வரியும் மதுராவும்.
உள்ளுக்குள் முணுக்கென்று ஒரு கோபம் எழுந்தாலும் பேசியதெல்லாம் மதுராவின் தந்தை தானே என்று தேற்றிக்கொண்டவள் அவளுடன் இலகுவாய் பேச மதுராவும் அவளின் படிப்பை பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தாள்.
“வடிவு பாத்தியா ரெண்டு பேத்தியளும் எம்புட்டு ஒத்துமையா பேசுதாகன்னு. நாத்தனார் பொருத்தம் கூட அம்சம்தேன்…” என அலப்பறையை கூட்ட,
“ஆத்தீ, ஒங்களுக்கு என்னதேன் ஆச்சித்தே?…” என்று பயந்து போனார் வடிவு.
“கிறுக்கா புடிக்கிது? இப்பிடி நாலையும் சொல்லித்தேன் கலியாணத்த பண்ணனும். வெறுவாய மென்னா ஒருவா சோறு கெடைக்குமா? போவியா?…” என அத்தனை சேட்டை அன்று அவர் செய்தது.
துர்காவிடம் மதுராவை அவளறைக்கு அழைத்து சென்று முகம் கழுவி வரும்படி சொல்லியவர் மதுரா முகம் துடைத்துவிட்டு வரவும் தலையில் இருந்த பழைய பூவை எடுத்துவிட்டு புதிதாய் தர,