மயில்வாகனனுமே மகனுக்கு பிடிக்கவில்லை, கழன்றுகொண்டான் என்று நினைத்திருந்தார்.
இப்போது விஷாலின் அறைக்குள் சீற்றத்துடன் நுழைந்த அரவிந்த் கட்டிலில் இருந்தவனை தூக்கி நிறுத்தியவன் பளாரென்று நான்கு அறை விட பல்லை கடித்துக்கொண்டு மௌனமாய் நின்றான் விஷால்.
“கொன்னு போட்டுடுவேன் பார்த்துக்க. என்ன ஒரு சீப் மெண்டாலிட்டி? ஹவ் டேர் யூ விஷால்?…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
தன் அண்ணனிடம் பதில் சொல்லாமல் விஷால் அவன் முகம் காணாமல் அலட்சியமாக நின்றான்.
“எவ்வளோ தைரியம் இருந்தா அந்த பொண்ணுக்கிட்ட போய் இப்படி பேசுவ? அசிங்கமா இல்ல? இதையே அந்த பொண்ணு அவங்க வீட்டுல சொல்லியிருந்தாலோ, இல்லை நீ செஞ்ச காரியத்தை யாரும் கவனிச்சிருந்தாலோ நடக்கறதே வேற…” என்றான் எச்சரிக்கும் குரலில்.
“என்ன பண்ணிட்டேன்? ப்ரப்போஸ் பண்ணினேன். என்ன தப்பு? பயந்து கிளம்பினா. கையை தானே பிடிச்சேன்?…” என்று கொஞ்சமும் தான் செய்ததில் தவறில்லை என்பதை போல் விஷால் பேச மீண்டும் அடி வெளுத்துவிட்டான் அரவிந்த்.
“நீ பண்ணினதுக்கு பேர் காதலா? என்ன ரிவேஞ்ச்சா? அது பாவம் சொந்தம்ன்னு நினைச்சு கல்மிஷம் இல்லாம பழகுது. என்ன எண்ணத்தோட நீ பேசற?…” என்று சொல்லிக்கொண்டிருக்க மயில்வாகனன் வந்துவிட்டார்.
“என்னடா கன்னமெல்லாம் கை தடம்? என்ன உன்னை அவன் அடிச்சானா? மாப்பிள்ளைன்ற திமிரை காட்டறானா?…” என்றவர்,
“பார்த்தியா அரவிந்த், அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு என்னையும் வயசு பார்க்காம அறைஞ்சான். இப்ப உன் தம்பியை. அவனை நான் சும்மா விடமாட்டேன்…” என்று ஒருவேகத்தில் பேசிவிட அதிர்ந்துபோனான் அரவிந்த்.
“நீங்க என்ன செஞ்சீங்க? அவர் அடிக்கிற அளவுக்கு என்ன பேசினீங்க?…” என்று சொல்லவும் விஷால் முறைத்து பார்த்தான் தகப்பனை.
அரவிந்த் இதை தான் கேட்பான் என்று தெரியுமே. இப்போது இது தேவையா என்பதை போல மயில்வாகனனை பார்க்க,
“என்னடா, என்னை அடிச்சான்னு சொல்றேன். உன் தம்பியை ஒரே அறையில சாய்ச்சிட்டான். தெரியுமா? பிள்ளை சுருண்டுட்டான். நீ என்னடான்னா கொஞ்சமும் அதுக்கு கொதிக்காம நீங்க என்ன செஞ்சீங்கன்னு எங்களை கேட்கிற?…” என்றார் ஆவேசத்துடன்.
“உங்களை தான் கேட்பேன். சும்மா கை நீட்டற அளவுக்கு அழகர் ஒன்னும் நிதானம் இல்லாதவர் கிடையாது….”
“ஓஹோ, நீ அப்படி வர்றியா? பெத்த அப்பனை, கூடப்பிறந்த தம்பியை விட உனக்கு அவனும், உன் சித்தப்பன் குடும்பமும் பெருசா போய்ட்டாங்களா?…” என்றார்.
“உங்க மரியாதைக்காக தான் நானுமே நிறைய பொறுமையா போறேன். நீங்க எதுவும் பேசியிருப்பீங்க. சித்தப்பா முன்னாடியே சித்தியை பேசினவங்க தானே நீங்க. என்ன சொன்னீங்க?…” என அரவிந்த் கேட்க,
“என்ன சொல்லனும்? இனிமே செய்யறேன். என்னை மதிக்காத ஒவ்வொருத்தனையும். பார்த்துட்டே இரு. அந்த சில்வண்டு என்னன்னா என் வீடுன்னுட்டு போறா. அவ வீடா? ஒவ்வொருத்தருக்கும் இருக்கு….” என்றார் பல்லை கடித்துக்கொண்டு.
“இவனை இப்படி செய்ய சொன்னதும் நீங்க தானா?…” என அரவிந்த் கேட்க,
“என்ன செஞ்சான்? நான் என்ன சொன்னேன்?….” என்ற மயில்வாகனம்,
“விஷால் என்னாச்சு? அவன்கிட்ட வார்த்தை குடுத்தியா நீ? அதுக்கு என் பிள்ளையை இப்படி அடிப்பானா? அதான் நீ இங்கயே இருக்கியா? அப்பவே சொல்லியிருந்தா அசிங்கபடுத்தி அனுப்பிருப்பேனே…” என்றார் இளைய மகனிடம்.
“அசிங்கப்பட்டு நின்னிருப்பீங்க….” என்ற அரவிந்தை ‘என்ன?’ என்று பார்த்தார் மயில்வாகனன்.
“இவனை அடிச்சது அழகர் இல்லை. நான்…” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
“ஏன்? கேட்டா கேட்கட்டுமே? என்ன பயமா?…” என்ற மயில்வாகனனை,
“வாயை மூடுங்க…” என அதிகபட்ச குரலில் கத்தி அடக்க, பயந்துபோய் பார்த்தார் மகனை.
“இங்க என்ன நடந்திட்டிருக்கு. இவன் பண்ணின வேலை என்ன தெரியுமா? வீட்டுக்கு வந்த பொண்ணுக்கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னதும் இல்லாம, திரும்ப காதலிச்சு தான் ஆகனும்ன்னு சொல்லி கட்டாயப்படுத்தி கையை பிடிக்கிறான்….” என அரவிந்த் கொந்தளிக்க,
“கையை பிடிக்கிறதெல்லாம் ஒரு விஷயமா? அதுவும் இந்த காலத்துல…” விஷால் பேச,
“செருப்பால அடிப்பேன், ராஸ்கல்…” அரவிந்த் மீண்டும் கையை ஓங்கிவிட, அவனிடமிருந்து மயில்வாகனன் தான் இளையமகனை காப்பாற்றினார்.
“விருப்பமில்லாத பொண்ணை தப்பா பார்க்கிறது கூட ஒழுக்க கேடு தான்….” என விரல் நீட்டி அரவிந்த் எச்சரிக்க,
“யார் வீட்டு பொண்ணா இருந்தா என்ன? அதுவும் இந்தவீட்டு பொண்ணு தானே புகழ்மதி. என்ன பழக்கம் இது?…” என்றவன் கோபம் தணியவே இல்லை.
“இத்தோட இந்த விஷயத்தை நிறுத்திக்கோ. நீ என்னோடவே துபாய் கிளம்பற. அவ்வளோ தான். திரும்ப அந்த பொண்ணுக்கு நீ இடைஞ்சல் குடுத்தன்னு தெரிஞ்சது தம்பின்னு பார்க்கமாட்டேன்…” என்று மிரட்டிவிட்டே தான் சென்றான் அரவிந்த்.
“பார்த்தீங்களாப்பா…” என அரவிந்த் செல்லவும் மயில்வாகனன் மகனை விட்டார் ஒரு அறை.
“நான் இங்க என்ன பாடுபட்டு வந்திருக்கேன். எதுக்கு இருக்கேன்னு தெரிஞ்சும் குடிய கெடுக்கற மாதிரியா செய்யற? ராஸ்கல், இன்னும் நாலு சாத்தட்டும்ன்னு விட்டிருப்பேன். உனக்கு பொண்ணே கிடைக்கலையோ? போயும் போயும் அவக்கிட்ட…” என்று முகம் சுளித்தார்.
“உங்களையும் என்னையும் அவ அண்ணன் எப்படி பேசி அடிச்சான்?…”
“போடா டேய், அதுக்கு அவளை கட்டிட்டு நீயே போய் குழில விழுவேன்னு சொல்றியா? அவ தங்கச்சியை கட்டினா மட்டும் உன்னால அவனை ஆட்டிவைக்க முடியுமா என்ன? நீ தான் அவன் காலடில விழுந்துகிடக்கனும்….” என்ற மயில்வாகனன்,
“வந்த வேலையை பார்த்தோமா போனோமான்னு இருக்கனும். பொம்பளைப்புள்ளை பின்னாடி சுத்தின, நானே கைய, கால உடைச்சு போட்டுடுவேன். பழிவாங்கறானாம் கிறுக்குப்பய…” என்று கோபமாய் அங்கிருந்து புறப்பட்டார் மயில்வாகனன்.
கீழே வந்த அரவிந்திற்கு ஒருநிலையில் இல்லை மனது. டைனிங்டேபிளில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து தொண்டைக்குள் சரித்தவன் மனதின் வெம்மை மறையவே இல்லை.
“அரவிந்த், என்னாச்சு?…” என சாந்தா அவனை கவனித்துவிட,