“ஏன் பைத்தியம் மாதிரி தெரியுதா?…” என கேட்டவள், மனநிலை ஒரு நிலையில் இல்லை.
சிறிது சந்தோஷமாக இருந்தால் அதற்கு நேர் எதிராக ஏதாவது ஒன்று நடந்துவிடுகிறதே என அதிலேயே உழன்றுகொண்டு இருந்தாள்.
“நிறைய யோசிக்கிற. நடந்ததை விட்டுட்டு இனிமே என்ன செய்யலாம்ன்னு யோசி லக்ஷ்மி. லைப் இப்படியே போனா ரொம்ப கஷ்டம். எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி. உனக்கு நான் சொல்லனும்ன்னு இல்லை. ஆனா என்னை நீ நிறைய சோதிக்கிற…” என்றவன்,
“இந்த பொறுமை எவ்வளோ நாள்ன்னு எனக்கும் தெரியலை. என் மேலையும் உனக்கு வருத்தம் இருக்கிறதால நானும் கொஞ்சம் விட்டுபிடிக்கறேன். ஒரேடியா பிடிச்சேன்னா, ஹ்ம்ம். வேண்டாம் என்னை அந்த நிலைமைக்கு கொண்டுட்டு வராத…” என்றான் அழகர் நிதானமாக.
அவன் பேச பேச கேட்டிருந்தவளின் விழிகள் மீண்டும் வெறுமையை பூசிக்கொண்டது.
இப்போதுமே அவளுக்கு அவன் மேல் வருத்தம் என்று தான் கூறுகிறானே தவிர, அது ஏன், எதற்கு என்று எந்தவித கவலையும் இன்றி இருப்பவனை காண அயர்ந்து போனாள் விருஷ்திகா.
எதையும் சொல்லி புரியவைக்கலாம் என்றால் தனக்குமே பொறுமை இல்லை.
பொறுமை இல்லை என்பதை விட அதனை இழக்க செய்வதை அவனின் அலட்சிய பேச்சு அமைந்துவிட்டால் அங்கே முடிந்தது.
நிதானமாக புரியவைக்க வேண்டிய நேரம் மொத்தமும் உடைந்து சிதறிய கதையாகிவிடுகிறதே.
பெருமூச்சுடன் அவனை ஏறிட்டவள் அதற்குமேல் அவனிடம் தன் வருத்தங்களை காண்பித்து பிரயோஜனமில்லை என்பதை போல் பார்த்து,
“நீங்க கிளம்புங்க…” என்றாள் விருஷ்திகா.
“கிளம்புங்கன்னா. இப்படி முகத்தை வச்சிட்டிருந்தா எப்படி போய் வேலைன்னு நான் பார்க்க…” என்றதும் ஒட்டவைத்த சிரிப்போடு அவனை பார்த்தாள்.
“கொன்னுடுவேன் உன்னை. நீ எப்படி சிரிப்பன்னு எனக்கு தெரியாதா?…” என்றான் மீண்டும் பொங்கிவிட்ட எரிச்சலில்.
“நான் எப்படி சிரிக்கனும்ன்னு நீங்க தான் சொல்லுவீங்களா?…” என்றவள்,
சண்டை எல்லாம் இல்லாத இரு சாதாரண குரல் தான். ஆனால் அதையுமே தாண்டிய ஒரு எதிர்பார்ப்பு அவள் வேண்டாம் என்றாலும் வந்து ஒட்டிக்கொண்டது.
‘இந்த காதல், பாழாப்போன மனசு இருக்கே. ச்சை. கொன்னு வீசனும். சரியாகிடும்’ என தன் மனதினை தானே நிந்தித்தாள் விருஷ்திகா.
“இதோ இப்போ இந்த முகம் காமிச்சதே, எனக்கு தெரியுமான்னு. இந்தமாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எனக்கு தெரியாம எப்படி? அதுவும் நம்ம கல்யாணம் முடிச்சு…”
“யூ, போயா யோவ். உங்ககிட்ட போய் கேட்டேன்ல….” என்று பொறுமை இழந்து சீறிவிட, அந்த கோபம் கூட அத்தனை பிடித்தது அழகருக்கு.
“அடங்குடி. என்ன எதிர்பார்க்கிற நீ? நீ என்னை பார்த்த. நீ பார்த்ததை கோவமா நான் கவனிச்சேன். அவ்வளோ தான். ஆனா நம்ம கல்யாணம் முடிஞ்சதும் உன்னை முழுசா மொத்தமா கவனிச்சதுல புரிந்தது…”
“வாய திறக்க கூடாது. மூச், உங்ககிட்ட இனிமே நான் கேட்டேனா பாருங்க…” என்று அவனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்க அழகரின் எண்ணிற்கு அழைப்பு.
“முக்கியமான கால். வெய்ட் பண்ணுடி…” என்று அவள் விலகி செல்ல முடியாமல் கைகளை வளைத்து பிடித்துக்கொண்டான் அழகர்.
அவனின் இரும்பு பிடியை விட்டு செல்லமுடியாமல் தேமே என்று நின்றவள் எங்கோ வெறிக்க,
“இல்லை தம்பி. இனிமே தான் சொல்லனும். வீட்டுக்காரவங்களே வேண்டாம்ன்னு நேரடியா கூப்புட்டு சொன்னப்பறம் நாம என்ன செய்யட்டும்?…” என்று சொல்லி வைத்துவிட்டார் அவர்.
கைப்பேசியை கட்டிலில் போட்டவன் அவளை தன் புறம் திருப்பினான் அழகர்.
“எப்ப பாரு கோபத்துல சிலிர்த்துட்டே நிக்காத சொல்லிட்டேன்….” என்றவன் அவள் பேச வாய் திறக்கும்முன் தன் கை கொண்டு வாயடைத்து,
“கேளுடி. நல்லதை கூட காதுகுடுத்து கேட்கமாட்டியா?…” என்றான்.
எதுவும் கூறாமல் விழிகள் மட்டும் அலைபாய அவனை கவனித்தவள் கண்களில் மீண்டுமொரு முத்தம்.
“ப்ச்…” என அவள் விலக போக,
“அடிங். நில்லுன்றேன்…” என்று இன்னும் நெருக்கி பிடித்து,
“உங்கப்பா வீட்டை விலை பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம். தரகர் தான் கால் பண்ணிருந்தார்…” என்றதும் விருஷ்திகாவின் விழிகள் விரிந்துகொள்ள அழகரின் கைகள் தளர்ந்தது.
“நிஜமாவா? நிஜமாவே வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களா?…” என்றவள் முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க, அதேவேகத்தில் அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள புன்சிரிப்புடன் தானும் அணைத்து நின்றான் மனைவியை.
“இப்போ மட்டும் புருஷன் கண்ணுக்கு தெரியும். ஹ்ம்ம்?…” என்று கேட்கவும் தான், தான் செய்ததையே அவள் உணர்ந்தாள்.
பட்டென்று அவனை பிடித்திருந்த பிடியை விடுவிக்க அழகர் விடவில்லை.
“இதானே வேணாம்ன்றது. உசுப்பேத்திவிட்டு சோதிக்கவா செய்யற? தொலைச்சுக்கட்டிருவேன் ராஸ்கல்…” என சரசமான ஒரு மிரட்டல் விடுக்க,
“அது ஒரு என்துல கட்டிப்பிடிச்சிட்டேன். உங்களை பிடிச்சு கோபம் எல்லாம் போய் ஒன்னும் இல்லை…”
“நீ திருந்தவே மாட்டடி…” என்று அவளின் தலையில் குட்டியவன்,