காபி ஆறியிருந்தாலும் அதனை சிறிதுசிறிதாய் குடித்தவனை புருவம் உயர்த்தி பார்த்தாள் விருஷ்திகா.
“என்னடா, புதுசா பார்க்கிற?…”அரவிந்த் கேட்க,
“இல்ல, புதுசா தான் இருக்கு…” என்று புன்னகைத்தவள்,
“ஆறின காபி எல்லாம் என் அண்ணா குடிக்கிறாங்களே? அதான்…” என்றதுமே அரவிந்த் சிரித்துவிட்டான்.
“உன் மைன்ட் போகுது பாரு…” என்றவன்,
“ஒரு முக்கியமான விஷயம். உன்கிட்ட சொல்லவா வேண்டாமான்னு யோசனை. அதுதான்…” என்று மீண்டும் சிந்தனையுடன் காபியை பருக,
“சொல்லனும்ன்னு அவசியம் இருந்தா சொல்லுங்க. இல்லைன்னா பிரச்சனை இல்லை. விட்டுடுங்க அண்ணா…” என்றாள் அவளும்.
“இந்த புரிதலும், பொறுமை உனக்கு இந்த வீட்டுலையும் அவசியம் விருஷ்தி…” என அரவிந்த் புன்னகையுடன் தம்ளரை கீழே வைத்துவிட்டு பார்க்க விருஷ்திகா முகம் மாறாது கவனித்தாள்.
“உனக்கு புரிஞ்சாலும் சமாளிக்கிற பாரு…” என்றவன்,
“வெளில வா. கண்டிப்பா உன்கிட்ட சொல்லியே ஆகனும்…” என்று எழுந்துகொண்டான்.
“இதை வச்சிட்டு வர்றேன் ண்ணா. வெய்ட் பண்ணுங்க…” என்று அவன் உண்டு வைத்தவற்றை எடுத்துக்கொண்டு அடுக்களை செல்ல, தில்லை பேசிக்கொண்டிருந்தார் புகழ்மதியிடம்.
“என்னத்தை, ஏன் அவளை திட்டிட்டு இருக்கீங்க?…” என்றாள்.
“போனை கீழ போட்டு உடைச்சிருக்கா லச்சுமி. எம்புட்டு கவனமில்லாம இருக்கா பாரு. இப்ப இவ அப்பா கேட்டா நா என்னத்த சொல்ல?…” என்றார் அவர் பதற்றத்துடன்.
புகழ்மதி முகமே இருளடைந்திருந்தது. சற்றுமுன் எத்தனை தெளிவாய், சிரித்த முகமாய் இருந்த பிள்ளை, இது என்ன என்று பார்த்தாள் விருஷ்திகா.
நடுங்கிக்கொண்டு அவள் நின்றிருக்க தில்லை பேசிக்கொண்டே இருந்தார் மகளை.
“வேணும்னே கீழ போடுவாங்களா? தெரியாம விழுந்திருக்கும்…” என்று விருஷ்திகாவும் சமாதானமாய் கூற,
“இந்தாத்தா, பாத்துக்கோ…” என்று அந்த கைப்பேசியை விருஷ்திகாவிடம் நீட்டினார்.
“நான் பார்த்துக்கறேன் த்தை. நீங்க திட்டாதீங்க….” என்றவள் கைப்பேசியுடன் வெளியே வந்தாள்.
அழகுமீனாள் வல்லியுடன் பேசியபடி திண்ணையில் அமர்ந்திருக்க அரவிந்த் சற்று தள்ளி நின்றிருந்தான்.
“உக்காரவேண்டியது தானே ண்ணா…” என்று விருஷ்திகா வர,
“இவ்வளோ நேரம் உள்ள உக்கார்ந்து தானே இருந்தேன்…” என்றவன், பார்வை அழகுமீனாளை கவனித்தது.
“இவங்களுக்கு நீங்க சொல்லாம மேரேஜ் பண்ணிக்கிட்டது தான் கோபமா?…” என்றான் தங்கையிடம்.
“ஆமான்னு தான் நினைக்கறேன். ஏன் அண்ணா?…” என்றாள் அவளுமே அவரை பார்த்தபடி.
“ம்ஹூம். எனக்கு அப்படி தோணலை. அதுமட்டும் காரணம்ன்னு தோணலை. என்னன்னு பார்ப்போம்….” என்றவன் அப்போது தான் அந்த கைப்பேசியை கவனித்தான்.
“இது உன் போன் இல்லையே விருஷ்தி….” என பார்த்ததும் கேட்க,
“என் போன் இல்லைன்னு மட்டும் தான் தெரியுதா? இல்லை யார் மொபைல்ன்னும் தெரியுதா?…” குறும்பாய் தன் அண்ணனிடம் கேட்க,
“உதை வாங்குவ ராஸ்கல்…” என்று அவளின் தலையில் குட்டியவன்,
“புகழ் மொபைல் நீ எடுத்துட்டு வந்திருக்க?…” என்றான் அவளிடம்.
“இதையே நான் கேட்டா எனக்கு ஒரு குட்டு ப்ரீயா?…” என்ற விருஷ்திகா,
“ஹ்ம்ம், அவளோடது தான். மொபைல் கீழே விழுந்திருச்சு. ஐ மீன், கீழ போட்டதுல தண்ணில விழுந்திருச்சு போல. திரும்ப ஆன் பண்ணமுடியலை. அதான் சின்னத்தை சத்தம் போட்டுட்டு இருக்காங்க…”
“ஓஹ்…”
“இதை சரி பண்ணி தர்றேன்னு சொல்லியும் இனிமே மொபைல் வேண்டாம்ன்னு அழுதுட்டு போறா. அத்தை என்னன்னா எப்பவும் கவனமா இருக்கறவ இப்படி செஞ்சிட்டான்னு கூட ரெண்டுவார்த்தை பேசிட்டாங்க போல…” என்றதும் அரவிந்தின் கண்கள் இடுங்கியது.
“மொபைல் வேண்டாம்ன்னு சொல்லுச்சா அந்த பொண்ணு..”
“அதென்ன சொல்லுச்சா அந்த பொண்ணு? அவ என்ன அடுத்த வீட்டு பொண்ணா?…” என விருஷ்திகா கேட்க,
“சொந்தமாவே இருந்தாலும் இன்னொருவீட்டு பொண்ணு….” என்றவன்,
“புகழ் விஷயமா தான் உன்கிட்ட பேசலாமேன்னு கூப்பிட்டேன்…” என்றான் அரவிந்த்.
“அண்ணா…”
“நீ அந்த பொண்ணை பார்த்துக்கோ விருஷ்தி. விஷால் அவக்கிட்ட பிஹேவ் பண்ணினது சரி இல்லை…” என்றதும்,
“வாட்? என்ன சொல்றீங்க?…” என்றவளுக்கு நெஞ்சாங்கூடே காலியாகும் உணர்வு.
அரவிந்த் நடந்தவற்றை எல்லாம் கூறவும் கேட்டவள் நிற்கமுடியாமல் தடுமாறினாள்.
“நானும் புகழ்கிட்ட பேசிட்டேன். விஷால் நம்பரை அன்னைக்கே ப்ளாக் பண்ணிட்டதா சொல்லவும் தான் எனக்கு நிம்மதியாச்சு…” என்றான்.
இருக்கும் பிரச்சனைகள் போதாதா? இதுவேறா என்று தோன்ற பயத்தில் வியர்த்துவிட்டது விருஷ்திகாவிற்கு.
“லூசுப்பய, அந்த பொண்ணுக்கிட்ட ரிவெஞ் எடுக்கறேன்னு போர்ஸ் பண்ணி பேசறான். ராஸ்கல். நல்லா வெளுத்துட்டேன். ஆனாலும் அவன் கேட்பானான்னு தெரியலை…” என்றவன்,
“இந்த மொபைல் கீழே விழுந்தது, திரும்ப வேண்டாம்ன்னு புகழ் சொல்றதெல்லாம் பார்த்தா திரும்ப விஷால் எதுவும் பேசியிருப்பானோ?…” என்றான் அரவிந்த்.
“ஹ்ம்ம், உங்களுக்கு காபி குடுத்துட்டு போன கேப்ல போன் வந்திருக்கும் போல. நிஜமான்னு தெரியலை. ஆனா நடந்திருக்கலாம். நான் பார்த்துக்கறேன்…” என்றவள்,
“விஷால்கிட்ட சொல்லி வைங்கண்ணா. இவருக்கு தெரிஞ்சது தொலைஞ்சான். அதுவும் கட்டாயப்படுத்தினான்னு தெரிஞ்சா…” எனும்பொழுதே உயிர் துடித்தடங்கியது.
தான் விருப்பம் என்று சொல்லியதற்கே திருமணத்திற்கு பின்பும் கூட இரக்கமின்றி தன்னை வார்த்தையால் துண்டாடியவன் தானே?
நினைக்கவே ஈரக்குலை நடுங்கியது விருஷ்திகாவிற்கு. அதனை அரவிந்திடம் காண்பித்துவிடாமல் இருக்க முயற்சித்தவள்,