“ஹேய் என்னடி? அதான் தூங்குன்னு சொல்றேன்ல. குட்நைட்…” என்று அவளின் கன்னம் தட்டியவன், இன்னும் தன்னை பார்த்தபடி இருந்தவள் தலையை தன் மாரோடு சாய்த்துக்கொண்டான்.
“உன்னை கட்டாயப்படுத்த தோணுது. கட்டுப்பாட்டுல நானும் இல்ல லக்ஷ்மி. ப்ளீஸ் தூங்கிடு. திரும்ப உன்னை ஹர்ட் பன்ற மாதிரி பண்ணவச்சிடாதம்மா…” என்றவன் குரலில் கிட்டத்தட்ட இறைஞ்சுதலே விஞ்சி இருந்தது.
அவனின் பேச்சும், அந்த குரலும், அவளை அணைத்திருந்த விதமும் விருஷ்திகாவை உடைத்து போட, விழிநீர் கசிந்தது.
“கண்டிப்பா விசாரிச்சிருவோம். வேற?…” என்றான் அழகர் விருஷ்திகாவை பார்த்து கீழே வரும்படி தலையசைத்துக்கொண்டே.
“நேத்து நீங்க அட்மிட் பண்ணின பையனுக்கும் அப்படித்தான்னு உங்ககிட்டையே சொன்னேன். ரோட்ல கிடந்தான். தூக்கிட்டு வந்தேன்னு சொன்னீங்க. எதுக்கும் விசாரிங்க ஸார். எதுவும் பெரிய பிரச்சனையா இருக்க போகுது….” என்ற மருத்துவர்,
“எதோ பிரச்சனையில சிக்கியிருக்கனும். யாரோ நாலஞ்சுபேர் சேர்ந்து அடிச்ச மாதிரி இருக்கு. பார்த்துக்கோங்க. நானும் உங்க ரிலேட்டிவ் அரவிந்த்கிட்ட சொன்னேன் கம்ப்ளைன்ட் குடுங்கன்னு. வேண்டாம்ன்னு முடிவா சொல்றார். நீங்க தான் பார்த்து பேசுங்க…”
“கண்டிப்பா பேசிடறேன். அதோட யார் என்னன்னு விசாரிச்சு கம்ப்ளைன்ட் குடுக்கவும் சொல்லிடறேன்….” என்றவன் கீழே இறங்கி வர அம்மையப்பன், சுடர்மணி, ஞானசேகரன், புகழ்மதி என அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.
“அப்பறம் அப்பாவும், பையனும் இப்ப எப்படி இருக்காங்க?…” என்றவன் வல்லியை பார்த்து குடிக்க காபி கேட்க, மற்றவர்களின் கவனம் அவனிடம் தான்.
விருஷ்திகாவும் வந்துவிட்டவள் வல்லியை இருக்க சொல்லிவிட்டு தான் எடுத்துவந்தாள் அழகருக்கு.
“ஓஹ், ஹ்ம்ம். சரி. பார்த்துக்கோங்க. எமெர்ஜென்சின்னா கால் பண்ணுங்க டாக்டர்…” என்ற அழகர்,
“அரவிந்த் கொஞ்சம் சாப்ட் நேச்சர். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க. நான் பேசிக்கறேன்…” என்றும் கூறி வைத்துவிட்டான்.
அவனின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் என்ன விஷயம் என்பதை போல வாய்விட்டு கேளாமல் அமர்ந்திருந்தனர் அவனே சொல்லட்டும் என்று.
“எனக்கு மட்டும் காபி கொண்டுவந்தா, நீ நாளைக்கு குடிப்பியா? உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வரவேண்டியது தானே?…” என்றான் சட்டென விருஷ்திகாவிடம்.
“அழகரு, என்னய்யா?…” என்றார் ஞானசேகரன்.
அவர்களுக்கு எங்கே இதனை கொண்டு மருமகளிடம் மகன் முகம் காண்பிக்கிறானோ என்னும் பதட்டம்.
இப்படி சட்டென அனைவரின் முன்னிலையிலும் அவன் அதட்ட, பதறி போய் பார்த்தனர்.
“எனக்கு போடும் போதே உனக்கும் கலந்துக்க வேண்டியது தான லக்ஷ்மி…” என்றான் இன்னும் சத்தமாய்.
அதுவரை கவலையில் தொய்ந்துபோய் உயிரின்றி அமர்ந்திருந்தவர்கள் அதனை மறந்து இவர்களின் வழக்கை பார்க்க,
“நீங்க அத்தைட்ட கேட்டீங்க நான் கொண்டுவந்தேன். அவ்வளோ அக்கறைன்னா போட்டு தரலாம்….” என்று என்றைக்கும் இல்லாது மற்றவர்கள் முன்பே அவனை வம்பு பேச,
“எம்மா என்னம்மா நீயும்?…” என்றார் சுடர்மணி.
“யாத்தே, அடியேய்…” என்று அழகுமீனாள் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு இறங்க,
“ப்ச், சும்மா இரு அப்பத்தா. என்ன நினைச்சா இவ?…” என அழகரும் எழுந்துவிட்டான்.
“அப்படி சொல்லுய்யா ஏ சீம ராசா. பேச்ச பாத்தியா வவுசுக்காரிக்கு….” என்று கம்பை ஊன்றியபடி தெம்பாய் அவரும் எழுந்துவிட, மற்றவர்கள் எங்கே சண்டை முற்றிவிடுமோ என்று பார்த்தனர்.
“அப்பத்தா நான் பார்த்துக்கறேன். நீ உக்காரு…” என்றவன்,
“இந்தா எம்பொண்டாட்டி போட்ட காபியை நீயே குடி. நான் அவளுக்கு போட்டு கொண்டுட்டு வர்றேன்….” என்று சொல்லிவிட்டு,
“மறந்துட்டேன் பாரேன்…” என விருஷ்திகாவை தாண்டி சென்றவன், மீண்டும் வந்து அழகுமீனாள் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு அடுக்களைக்குள் செல்ல,
“அடியாத்தே…” என அழகுமீனாள் மேவாயில் கைவைத்துவிட்டார்.
விருஷ்திகாவும் பேவென்று திகைத்து நிற்க, மற்றவர்கள் முகத்தில் மென்புன்னகை.
இதனை எதிர்பார்க்கவில்லை. சட்டென்று மனம் லேசாகிவிட்டதை போலிருந்தது.
“ஆகமொத்தம் அவென் ஒன்னொண்ணுக்கும் ஒங்கிட்ட கால்ல விழுந்து எழும்புதியான். என்னத்தா சொல்லி வச்சிருக்க?…” என்றார் சுடர்மணி லேசாய் முறைப்புடனும், மெல்லிய சிரிப்புடனும்.
“நானா, நா என்னத்த சொன்னேம்?…” என்றார்,
“இங்காரு சாமி. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆமா…” என அழகுமீனாள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க துவங்க,