“ஓகே, முடிஞ்சது முடிஞ்சது தான். ஆனாலும் முடிக்க வேண்டியதையும் பேசனுமே. சரி சொல்லுங்க. வாகனத்தோட பிஸ்னஸ் பாட்னர் மகனை தானே லக்ஷ்மிக்கு நீங்க பார்க்க நினைச்சது. எங்கேஜ்மென்ட் பண்ணிடலாம்ன்ற வரைக்கும் யோசிச்சிருந்தீங்க…” என்று கதிர்வேலனின் முகத்துக்கு நேராக கேட்டான்.
அவன் பேசிய ஒவ்வொன்றும் கதிர்வேலனின் மனதிற்குள் தன் பக்கம் தான் தவறோ என நினைக்க வைத்தது.
“ஆமா, ஆனா அது ஏன்னு…” என்று சாந்தாதேவி முன்வர,
“உங்ககிட்ட கேட்கலை….” என அவரை நிறுத்திவிட்டவன்,
“உங்க அண்ணா சொல்லி லக்ஷ்மியை குடுக்க நினைச்சீங்களே, அந்த வீட்டுல பொண்ணை குடுத்து அரவிந்துக்கு பொண்ணு எடுக்கறதா பேசியிருந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?…” என்றான் அழகர்.
கதிர்வேலன் அதிர்வுடன் பார்த்தார். இந்த விஷயம் அவருக்கு புதிதே. பார்வை தன் அண்ணனிடம் திரும்ப,
“என்ன? யார் சொன்னா? நீ செஞ்ச பிராடுத்தனத்துக்கு இப்ப என் பக்கம் பழியை திருப்புறியா?…” என்றார் ஆவேசமாய்.
“இங்க யார் யாரை பழி வாங்கறான்னு இன்னும் கொஞ்சநேரத்துல தெரிஞ்சிரும்…” என்றவன் கதிர்வேலனை பார்க்க, அவர் ‘இல்லை’ என தலையசைத்தார்.
“சரி, போகட்டும். உங்க பூர்வீக வீட்டை முந்தாநாள் யாரோ வந்து அளந்துட்டு போனாங்க. யாருன்னு தெரியுமா?…” என்றும் கேட்க அதுவும் அவருக்கு தெரியவில்லை.
“பூர்வீக வீட்டுல மராமத்து வேலை பார்த்து வைக்கனும், அரவிந்துக்கு எப்ப வேணா இடம் தகையும்ன்னு சொல்லி முந்தாநாள் இஞ்சினியர் யாரோ வந்ததா தானே சொன்னாங்க?…” என்றார் சாந்தாதேவி.
“வந்தது வீட்டை ஆல்டர் பன்றதுக்காக இல்லை. வீட்டை விக்கிறதால வாங்க வேண்டியவங்க வந்து பார்த்துட்டு அளந்துட்டு போனாங்க…” என்ற அழகர்,
“அந்த வீட்டோட பவர் உங்க அண்ணனுக்கு தானே எழுதி குடுத்திருக்கீங்க?…” என்றதும் மயில்வாகனனுக்கு வியர்க்க துவங்கியது.
“என்ன வாகனம்? அதுக்குள்ளையா?…” என்றவன்,
“வீட்டை விக்கிறதுக்காக பேசப்பட்ட டாக்குமென்ட்….” என்று ஒரு ஆவணத்தை காண்பித்தான்.
விஷாலுக்கு சரியாகும் முன் இந்த விஷயங்களை முடித்துவிட எண்ணி தான் சத்தமின்றி வேலை பார்த்திருந்தார் மயில்.
அதற்காகவே நித்தமும் என்னை பார், என் மகனை பார் என்று கதிரை திசைதிருப்பியே வைத்திருந்தார்.
இப்படி மொத்தமாய் போட்டு உடைத்து விடுவான் என்று நினைக்கவா செய்தார்? எத்தனை தூரம் ரகசியமாய் செய்தும் கூடவா என்று கையை பிசைந்துகொண்டு மயில்வாகனன் நிற்க,
“அண்ணே…” என்றார் கதிர்வேலன்.
“இருங்க, அதுக்குள்ள என்ன? இதை கலெக்ட் பன்றதுக்குள்ள நான் எவ்வளோ கஷ்டப்பட்டிருக்கேன்…” என்றவன் அடுத்த ஆவணத்தை நீட்டினான்.
“இப்ப நீங்க இருக்கிற இந்த எதிர்வீடுமே விலை பேசப்பட்டு, எப்போ வேணா ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்ன்னு சொல்லி, அதுக்கான தொகை உங்க அண்ணனோட கை மாறி அக்கவுண்ட்க்கு மாறியிருக்கு. பாருங்க…” என்று அவன் காண்பித்ததை கண்டவருக்கு தலை சுற்றியது.
“இந்த வீட்டோட மதிப்பு இரண்டுமடங்கா விலை பேசப்பட்டிருக்கு. காரணம் குடியிருப்பு பகுதில ஹோட்டலோட பாரும் சேர்த்து கட்டற ப்ளான். வெளில தெரிஞ்சா எங்க பிரச்சனையாகுமோன்னு அந்த பில்டரும், ஹோட்டல் கட்டறதா இருந்தவங்களும் சைலன்ட்டா மெய்ண்டெய்ன் பண்ணிருந்தாங்க…”
“எல்லா விஷயமும் பண்ண தெரிஞ்சவருக்கு எப்படி எப்படியாவது இது வீட்டாளுங்க காதுக்கு வரும்ன்னு தெரியாம போச்சுன்னு யோசிக்க அவசியமே இல்லை. ஏனா நீங்க தான் அவர் என்ன சொன்னாலும் நம்ப தயாரா இருந்தீங்களே. அதான் பொண்ணுக்கு அந்தாள் சொன்ன வரன் எப்படியானதுன்னு கூட விசாரிக்க தோணலை…” என்றான் கசப்புடன்.
“கதிரு, இவன் என்னென்னவோ சொல்றான். இதெல்லாமே ஃபேக் டாக்குமென்ட். நம்பாதடா…” என்று மயில்வாகனம் கரைய,
“நம்பிக்கை இல்லைன்னா டாக்குமென்ட் ரெடி பண்ணி தந்தவர், சென்னைல அந்த பிஸ்னஸ் பாட்னர் ஆபீஸ்ல இருந்து ஒருத்தர், வீட்டை அளந்துட்டு போனவர், ஏன் அந்த பில்டர் சைட்ல இருந்து கூட ஒருத்தர் வருவாங்க….” என்றவன்,
தான் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று கதிர்வேலன் உடைந்துபோய் நிற்க, சாந்தாதேவி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.
“நீங்க இங்க மதுரைல, சென்னைல வாங்கி போட்ட இடமெல்லாம் ஏன் உங்க அண்ணனுக்கும் பாத்தியமிருக்குன்னு வாங்கி இருக்கீங்க? அதுக்கான காரணம் என்னைக்காவது அவர்க்கிட்ட கேட்டிருக்கீங்களா?…” என்றவன்,
“ஓகே, அது எனக்கு அவசியமில்லை. என்னவும் செய்யட்டும்…” என்று மொத்த ஆவணங்களையும் அவரிடம் வைத்துவிட்டான்.
“யார் வேணாலும் கோபத்துல யார் மூஞ்சில வேணாலும் தூக்கி வீசலாம். யாராலையும் முடியாதுன்னு இல்லை…” என்று ஒரு குட்டும் வைக்க, அவமானமாய் இருந்தது கதிர்வேலனுக்கு.
“முதல் திட்டம் பொண்ணை குடுத்து பிஸ்னஸ் பாட்னர் பொண்ணை தன் பையனுக்கு கட்டி வைக்கிறது. பொண்ணு குடுத்தா தான் அப்படின்ற சூழ்நிலை போல. நடக்கலை. உங்களோட சேவிங்க்ஸ் எல்லாம் இடங்கள் சொத்துக்கள் வாங்கினது போக பிஸ்னஸ்க்கு யூஸ் பண்ணியிருக்கார். இல்லையா?…”
“இப்போ அவர் எண்ணம் நடக்கலைன்னு மொத்த சொத்தையும் உங்ககிட்ட இருந்து பறிக்க என்ன செய்யனுமோ செஞ்சிட்டார். டவுட் இருந்தா இதோ டாக்குமென்ட் பேசும்…” என்றவன்,
“ஆனா அவருக்கே தெரியலை. நீங்க கேட்டாலே சொத்தை எழுதி தர தயாரா இருந்தது. இப்பவும் என்ன? அந்த முடிவுல இருக்கும்போது ஏன் மாறனும்? தாராளமா குடுங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்…”
“இந்த எதிர்வீட்ட நீங்க விக்க நினைச்சாலும் அங்க ஹோட்டலோ, பாரோ வர போறதில்லை. அப்பறம், இதையெல்லாம் அனுபவிக்க வாகனம் இருக்க போறதில்லை….” என்று ஒவ்வொன்றாய் அவன் கூற நெஞ்சம் வெடிக்காத குறைதான் கதிர்வேலன், சாந்தாவிற்கு.
அத்தனை ஆவணங்களுக்கும் மத்தியில் சில புகைப்படங்கள். விருஷ்திகாவிற்கு பேசப்பட்ட வரனின் பிரத்யேக புகைப்படங்கள்.
அவனின் யோக்கியதையை அதுவே காண்பித்துக்கொடுத்தது. நிச்சயம் தெரியாமலா இருக்கும் தன் அண்ணனுக்கு என வேதனை பொங்க பார்த்தவருக்கு தன் அறியாமையை எண்ணி அத்தனை வேதனை.
எத்தனை நம்பினார்? தன்னை வளர்த்தவர் என்று எவ்வளவு அன்பை காண்பித்தார்? இப்படி நடுத்தெருவில் நிறுத்தவா?
‘நீ துபாய்ல இருக்க கதிரு. ஒண்ணொண்ணுக்கும் நீ அலைய முடியுமா? அதான் அண்ணனுக்கும் பவர் குடுத்துட்டா உனக்கானத நான் செய்வேன்டா. நான் இருக்கும்போது உனக்கு என்ன கஷ்டம்?’ என்று எத்தனை நயமாய் எழுதி வாங்கியிருந்தார்.
அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தவரின் அடிமடியில் கைவைப்பதை போல இப்படி நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டாரே என்று கூனி குறுகி போனார்.
“கதிரு, நம்பாதடா. நம்பாத. நான் சொல்றதை கேளு. இதெல்லாம் உன் நல்லதுக்கு தான்…” என்றவர்,
“இங்க வேண்டாம். நீ இங்க இவன் முன்னாடி, உன்னை ஏமாத்தின உன் மகளை பார்த்து மனசு மருகுவியேன்னு தான் எல்லாத்தையும் வித்துட்டு உன்னை என்னோட கூட்டிட்டு போயிடலாம்ன்னு நினைச்சேன். அதுக்காக தான். இந்த காசு பணத்தை வச்சு நான் என்ன செய்ய போறேன்?…” என்று அப்போதும் அவர் பேச,
“நீயெல்லா மனுஷனாடா? உன்ன எத்தனவாட்டி தான் அடிச்சு தொவைக்க?…” என சுடர்மணி மயில்வாகனத்தின் மீது பாய,