“எடுத்த எடுப்புல நாம போய் நிக்க ஆவாதுன்னுதேன் ஆளுகள அனுப்பி பேச பாத்தது. ஒருத்தரையும் பேச அனுமதிக்காம உறவே வேண்டாமின்னு சொல்லுறப்ப என்னய்யா செய்ய?…” என்று சொல்லியவர் தளர்ந்துவிட்டார்.
மீண்டும் அவர் அறைக்குள் சென்றுவிட சுடர்மணி, ஞானசேகரன் இருவரும் முன் முற்றத்தில் அமர்ந்துவிட்டனர்.
பெண்கள் மீண்டும் வீட்டினுள் சென்றுவிட வீடு மாப்பிள்ளைகள் மாமனாருடன் நியாயம் பேச அமர்ந்துவிட்டனர்.
மாடிக்கு சென்ற அழகரின் பார்வை மனைவியை அறையெங்கும் தேடியது. அவளில்லை அங்கே.
குளியலறையில் சப்தம் கேட்க அதனை நெருங்கியவன் லேசாய் கதவை தட்டினான்.
“லக்ஷ்மி…” என்றவன் அழைப்பில் தண்ணீர் விழும் சப்தம் நிற்கவும்,