அதி அகிலை தன் பாதத்தின் மேல் நிறுத்தி கொண்டு அவனை மேலே கீழே என ஆட்டிக்கொண்டு இருந்தான்…. நிதிஷ் மற்றும் முரளி இருவரும் அவனிடம் பேசிக் கொண்டு இருந்தனர்…. பெண்கள் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்….
அந்த தெருவில் உள்ளோர் அனைவரும் நிவியிடம் பேச ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தனர்…. அவள் தனியே மாட்டினால் ஆறுதல் சொல்கிறோம் என்ற பேர்வழியில் அவளை காயப்படுத்தலாம் என்று காத்துகொண்டிருந்தனர்….
அதை அங்கு தெருவில் இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு பாட்டி அபர்ணாவிடம் “அபர்ணா நிவேதாவை தனியா விடாதீங்க இங்க இருக்குற சில ஜென்மங்க சாந்தா ஜனகராஜ் பத்தி நிவேதா கிட்ட பேசி குளிர்காய காத்து இருக்குங்க…. அதுனால அவ கூட ஆளுங்க இருக்குற மாறி வெச்சுக்கோங்க….. இல்லனா ஆறுதல் சொல்றன்னு சொல்லி அவ மனசுல இருக்குற காயத்தை பெருசு பண்ணிடுவாங்க” என்று கூறி சென்றுவிட்டார் ….
அதனால் அவளை தனியாக விடாமல் வசும்மா சிவாம்மா இருவரும் கூடவே இருந்தனர்…. அதனால் நிவியிடம் பேசி குளிர் காயலாம் என்று நினைத்த சில ஜென்மங்களுக்கு அது கிடைக்காமல் தான் போனது…..
நிவேதா அதி பாக்காத நேரம் அவனைப் பார்த்து கொண்டு இருந்தாள்….. அப்போது தான் அவள் எதையோ பார்த்து வேகமா எழுந்து அதியிடம் இருந்து அகிலை வேகமாக தூக்கிக் கொண்டாள்…. அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்…. ஆனால் அதி எதுவும் கூறாமல் தலையை குனிந்துகொண்டான்….
வசும்மா தான் நிவேதாவிடம் “நிவிம்மா என்ன இது எதுக்கு போய் இப்ப இவளோ வேகமா அகிலை தம்பி கிட்ட இருந்து வாங்குன…… சிவகாமி அண்ணி என்ன நினைப்பாங்க… ” என்று கேட்டார்… எங்கு சிவாம்மா நிவேதாவை தப்பாக நினைத்து விடுவாரோ என நினைத்து கேட்டுவிட்டார்….
ஆனால் சிவாம்மாவோ “நான் என்ன நினைக்க போறேன் அவன் எதோ பண்ணி இருப்பான்… அதுனால வாங்கி இருப்பா…. இதுல என்ன இருக்கு”… என்று வசும்மாவிடம் கூறிவிட்டு நிவியிடம் திரும்பி “அந்த பையன் என்னடா பண்ணான்” என்று கேட்டார்….
“அத்தம்மா அங்க பாருங்க அவர் காலுல ப்ளீடிங் ஆகுது… அதுனால தான் அகிலைத் தூக்கினேன்” என்று அவனின் காலைக் காட்டி கூறினாள்…. அப்போது தான் அவனின் காலை அனைவரும் கண்டனர்…. அவன் போட்டு இருந்த சந்தன நிற பேண்ட்க்கு மேலே ரத்தம் வந்து கொண்டு இருந்தது…..
அனைவரும் அவனிடம் பதறி போய் என்ன ஆனது எனக் கேட்டு கொண்டு இருந்தனர்…. சிவாம்மா நிவேதாவை தவிர…. அந்த தெருவில் உள்ளவர்களும் அங்கு நடக்கும் அனைத்தையும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்…..
நிவேதா முரளியின் அருகில் சென்று அவனிடம் “மாமா அவரை முதல்ல பேண்ட் சேன்ஜ் பண்ண சொல்லுங்க…. உங்க வேட்டி இருந்தா அத குடுங்க…. பேண்ட் ஆல்ரெடி டைட்டா இருக்கும்…… அதுக்கு அப்பறம் அவருக்கு பிரஸ்ட் எயிட் பண்னலாம்…. முதல்ல எவளோ பெருசு காயம் ஆகி இருக்குனு பாக்கலாம்” என்று கூறினாள்….
அவனின் மொத்த பார்வையும் நிவியின் மேல் தான்….. அவள் கூறவும் முரளி அவனுக்கு அவனுடைய வேட்டியை எடுத்து குடுத்தான்…. அவனும் வேட்டியை கட்டிக் கொண்டு கதவை திறந்தான்…. ஆனால் அவன் கதவை திறந்ததும் முதலில் பார்த்தது முதல் உதவி பெட்டியுடன் நின்று இருந்த நிவேதாவை தான்……
அவன் எதுவும் பேசவில்லை…. அவளுக்கு வழிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான்…. அவள் அவனுக்கு கீழே அமர்ந்து அவன் காலை எடுத்து அவள் மடி மீது வைத்து அவன் ஏற்கனேவே போட்டு இருக்கும் கட்டினை அவிழ்த்தாள்…. நான்கு இன்ச்சில் எதோ வெட்டு காயம் போல் ஏற்பட்டு இருந்தது….. அதை பார்த்ததும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது… ஆனால் எதுவும் பேசவில்லை…..
ஏற்கனவே இருந்த கட்டினை நீக்கிவிட்டு அந்த காயத்தை சுத்தம் செய்து புதுசாக ஒரு கட்டினைப் போட்டாள்… அவள் கட்டினைப் போட்டுவிட்டு வெளியே செல்ல எழுந்து நின்றாள்…. ஆனால் அவள் வெளியேறும் முன் அதி அவளின் கையைப் பிடித்தான்…. ஆனால் அவள் அவனின் கையை தன்னுடைய இன்னொரு கையால் எடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்….
அவள் வெளியே சென்று சிவாம்மா தோளில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்…. அவ்விருவரை தவிர வசும்மா நிதிஷ் பிரியா முரளி அபர்ணா என அனைவரும் அதி இருந்த அறைக்குச் சென்றனர்…. அகிலும் ஷாலுவும் அங்கிருந்த மற்ற குட்டிஸ் உடன் விளையாட சென்றுவிட்டனர்….
அவர்களைத் தவிர அத்தெருவில் இருக்கும் ஐந்தாறு பேர் இருந்தனர்…. அதில் இருவரை தவிர மற்ற நால்வரும் என்ன டா கிடைக்கும் மற்றவர்களை மட்டம் தட்டலாம் எனக் காத்து இருப்பவர்கள்…. அவர்கள் நால்வரும் என்ன நடக்கிறது என ஆர்வமாக பார்த்து இருந்தனர்….
“முரளி தான் என்ன ஆச்சு அதி எப்படி கால்ல இவளோ பெரிய காயம் ஆச்சி”…. என்று கேட்டான்….
அதி வெளியே இருக்கும் தன் காதலியையும் தன் அம்மாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கூற ஆரம்பித்தான்…..
(அவன் சொல்லட்டும் நான் உங்களுக்கு சொல்றேன்)
ரவுடி என்று சொல்வதை விட டிப்டாப் ஆசாமி என்று சொல்லலாம் அவனை … பெயர் மூர்த்தி…. அவன் தொழில் ஐடியில் ஒரு கம்பெனியில் மேனேஜர்… ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஊர் மாறிக் கொண்டே இருப்பான்…. அது வெளியில் மட்டும் தான்… ஆனால் பக்கா கிரிமினல்…. ஐடியில் இருந்து கொண்டே அங்கு இருக்கும் சில இளம் பெண்களைக் காதலிக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுபவன்….. சில காலம் நல்லவன் போல் ஏமாற்றி அவர்களிடம் கல்யாணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி அவர்களிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொள்வான்….
அவர்களிடம் பேசி அவர்கள் விருப்பத்துடன் உடலுறவு வைத்து கொள்வான்… ஆனால் அதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து கொள்வான்…..
உடலுறவு வைத்து கொண்ட சில நாட்களில் அவர்களுடன் எடுத்த வீடியோகளைக் காட்டி சில பல லட்சங்கள் வாங்கிக் கொண்டு யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி விட்டு வேறு ஊருக்கு சென்று விடுவான்….
அவன் பல ஊர்களில் இந்த மாற்றி செய்து தப்பித்து விடுவான்…. மற்ற ஊர்களில் ஏமாறும் பெண்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள்… அதனால் பணம் போனால் போகட்டும்…. வெளியே மற்றவர்களுக்கு தெரியவேண்டாம் என நினைத்து அமைதியாகி விடுவர்….
ஆனால் அவன் கடைசியில் சேலத்திலும் ஒரு பெண்ணை இந்த மாதிரி ஏமாற்றி உள்ளான்… அந்த பெண் மிடில் கிளாஸ் பெண்….. பணம் கேட்டு மிரட்டியுள்ளான்…. அதுக்கு பயந்து அந்த பெண் தற்கொலை செய்து இறந்து விட்டாள்….. அதி இந்த கேஸை விசாரித்து விட்டு அந்த டிப்டாப் ஆசாமி இப்போது பெங்களூரில் உள்ளன என தெரிந்து கொண்டு பெங்களூரு சென்றான்… அவனை உடனே அர்ரெஸ்ட் செய்ய முடியாமல் அவனை கண்காணித்து அர்ரெஸ்ட் செய்யலாம் என நினைத்து கடந்த இரு மாதங்களாக கண்காணித்து வந்தனர்…..
நேற்று அதிகாலை இரண்டு மணிக்கு அவன் வேறு ஊருக்கு தப்பி செல்ல உள்ளதாக தகவல் வந்தது…… அவனுடன் பெங்களூரில் உள்ள ஒரு ரவுடியும் இருந்து உள்ளான்…. அதியுடன் சேர்த்து மொத்தம் ஐந்து போலீஸ் அந்த ஆசாமி உள்ள இடத்திற்கு சென்றனர்…. இவர்களை கண்டதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்….
அவர்கள் அங்கு இருப்பது பேர் இவர்கள் ஐந்து பேர் தான்…. ஆனாலும் சமாளித்தனர்… அதி வேறு ஒருவனை அடித்து கொண்டு இருக்கும் பொது யாரும் எதிர்பாக்காத போது அதியின் காலில் வெட்டிவிட்டான்… ஆனாலும் அதி அடுத்த நொடியே அவனின் கைகளில் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுவிட்டான்…..
அதன் பிறகு அந்த இருபது பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்… அதிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு இருந்தது… அவனை பக்கத்தில் இருக்கும் மருத்துவனையில் அனுமதித்து இருந்தனர்…..
அங்கு அவனுக்கு கட்டு போட்டுவிட்டு மருந்தை குடுத்தனர்… அங்கேயே ஓய்வு எடுக்க கூறினர் ஆனால் அவன் பெங்களூரில் தங்கி இருக்கும் அறைக்கு வந்து விட்டான்…. அவன் சிறிது நேரம் உறங்கினான்… ஐந்தரை மணிக்கு நிவேதா அழைத்து இருந்தாள்…. முதல் ரிங்கில் எடுக்கவில்லை…. இரண்டாம் ரிங்குக்கு தான் எழுந்து கட் செய்துவிட்டு அட் ஒர்க் என அனுப்பி வைத்தான்…. கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு எட்டு மணியளவில் எழுந்து குளித்துவிட்டு அந்த குற்றவாளிகளை வைத்து இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்றான்…..
அங்கு தேவையானவற்றை செய்துவிட்டு அந்த டிப்டாப் ஆசாமியை பெங்களூரில் இருந்து சேலம் அழைத்து வந்து சிறையில் அடைத்தான்…. அதன் பிறகு வீட்டிற்கு செல்லாமல் அரசுவின் வீட்டுக்கு சென்றான்…. வீட்டுக்கு சென்றால் காலில் அடிபட்டு இருப்பதை அறிந்து கொள்வார்கள் என அரசுவின் வீட்டுக்கு சென்றுவிட்டான்… அன்று இரவு முழுவதும் அரசு வீட்டில் தான் இருந்தான்……. மறுநாள் மாலை சிவாம்மா நிவேதா இருவரும் முரளியின் வீட்டுக்குச் சென்றிருப்பதை நிதிஷின் மூலம் தெரிந்து கொண்டு வீட்டுக்கு சென்றான்…. முரளி அதியையும் அழைத்து இருந்தான்… எனவே உறுத்தாதவாறு ஒரு பேண்டை அணித்து கொண்டு அங்கு புறப்பட்டு சென்றான்…..
இதில் தேவையான விஷயத்தை மட்டும் அவர்களிடம் கூறினான்…. அனைவரும் அமைதியாக இருந்தனர்… பிறகு அவனே “அண்ணா இதுலாம் சகஜம் வாங்க போய் அகில் பர்த்டே செலிப்ரேட் பண்ணலாம்” என அனைவரையும் அழைத்து சென்றான்…. சிறிது நேரத்தில் எல்லாரும் சகஜம் ஆகினர்…. பர்த்டே செலிப்ரேட் செய்ய ஆயத்தம் ஆகினர்…….
அதி மெதுவாக சிவாம்மா அருகில் சென்றான்… அவன் சென்றதும் நிவேதா அங்கு இருந்து செல்ல பார்த்தாள்… ஆனால் அதி அவள் கையைப் பிடித்து கொண்டான்….. அவன் சிவாம்மாவிடம் பேசுவதற்கு முன்பே “அதி அமைதியா போயிடு என்கிட்ட வசவு வாங்கிக்காத…. வந்த எடத்துல அமைதியா இருக்கணும்னு நெனைக்குறேன்… மொதல்ல என் பொண்ணு கையை விடு டா” என்று கூறி நிவேதாவை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டார்….
ஆனால் அவனோ நிவேதாவின் இன்னொரு பக்கம் சென்று அவளின் கையைப் பிடித்து நின்று கொண்டான்….
“டேய் அதி புள்ள கையை விட்டுட்டு அங்க போயி உட்காரு…. இல்லனா அவளோ தான் நீ…. வீட்டுக்கு வா டா உனக்கு இருக்கு” என்று கூறினார்….
அவரின் கோவத்தை அறிந்து கொண்டு “அடே அதி ஆத்தா செம கோவத்துல இருக்கு போல டா.. கம்மனு போயி உட்காந்துக்கலாம்” என்று தன்னைக்குள்ளே கூறிக் கொண்டு நிதிஷ் அருகில் அமர்ந்து கொண்டான்…..
அனைவரும் அகிலின் பிறந்தநாள் விழாவில் ஜாலியாக இருந்து விட்டு அவரவர் வீடு திரும்பினர்…. அதி வரும்போது பைக்கில் தான் வந்து இருந்தான்… எனவே நிதிஷ் அவன் பைக்கை எடுத்துவருவதாக கூறிவிட்டு பிரியாவை கார் ஓட்டுமாறு கூறிவிட்டான்……
வீடு சென்றதும் புக் எல்லாம் எடுத்து வருவதாக வசும்மாவிடம் கூறிவிட்டு அதியின் வீட்டுக்குச் சென்றாள்…. சிவாம்மா அதி இருவரும் அவளின் பின் தான் வீட்டுக்கு வந்தனர்….
அவள் நேராக அதியின் அறைக்கு சென்று அவளுடைய புத்தகத்தினை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்… அவளை வழிமறித்து அதி வந்து நின்றான்… அவள் எதுவும் பேசவும் இல்லை அவனை பார்க்கவும் இல்லை….
சிவாம்மா தான் “டேய் நகர்ந்து நில்லு” என்று அதட்டினார்….. “சாரி” என்று நிவேதாவிடம் கூறினான்… ஆனால் அவனை அவள் பார்க்கவே இல்லை….
“டேய் நீ சாரி கேட்டா எல்லாம் சரியாகிடுமா நேத்து என்ன அப்படி திட்டுற அந்த புள்ளய…. காலைலயே அடிபட்டு இருக்கு… அத சொல்ல வேண்டியது தானு டா… விடியகாலைல இருந்து அந்த புள்ள எவளோ கஷ்டப்பட்டது தெரியுமா டா…. இனிமே அந்த புள்ளய ஒரு வார்த்தை சொன்ன சாத்திபுடுவேன் அதி… “என்று திட்டினார்…..
அதி எதுவும் பேசவில்லை… நிவேதாவை மட்டும் தான் பார்த்தான்… ஆனால் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை…
சிவாம்மாவிடம் “அத்தம்மா என் முன்னாடி திட்டாதீங்க… நான் தான் காலைல சொன்னேன்ல அவருக்கு வேல இருந்து இருக்கும் னு சொன்னேன்ல பாருங்க வேலையா தான் இருந்து இருக்காரு…. நான் தான் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன் அவரை திட்டாதீங்க…. நான் நாளைக்கு காலைல வரேன்” என்று கூறிவிட்டு வசும்மா வீட்டுக்கு சென்று விட்டாள்…..
அடுத்த நாள் மாலை நிவேதாவை கோச்சிங் கிளாசில் இருந்து அழைத்து போக அதி வந்து நின்று இருந்தான்