காரில் வினயனும் அவரும் உட்கார்ந்திருக்க, அப்பா பக்கம் வந்த ஜெய்
“என்னப்பா?” என்று கேட்க
“அவ அச்சச்சன் பேத்திடா! நீ அவர் கிட்டயே இஷ்டத்துக்கு பேசுற? போகும்போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குனு சொல்லிட்டு போறார். உண்மையை சொல்லவும் முடியல, விஜயனை நினைச்சு கவலையா இருக்கு! ராஜீவனே அவனுக்குப் பொண்ணு இருக்கானு சொல்லாதப்ப நான் எப்படி சொல்றது?” பாலச்சந்திரன் கார் ஜன்னலில் கை வைத்திருந்த மகனின் கைப்பற்றி தன் கவலை சொல்ல, ஜெய் ஆதரவாக அவர் கையைத் தட்டிக்கொடுத்தான்.
“நீங்க நல்லது நினைச்சு தானேப்பா செஞ்சீங்க? எதுவும் தப்பாகாது!” ஆதுரமாக சொல்ல, பாலச்சந்திரனும் புன்னகைக்க, வினயன் இவர்களை பார்த்து
“எல்லாம் உன்னால!” என்று அவனை திட்டியவர் ஜெய்யிடம்,
“என் மருமகளை பத்திரமா பார்த்துக்கோடா” என்றார் மெல்லிய குரலில். அப்பா அப்படி சொல்ல ஜெய் முகம் விகசித்தது. அவன் மீசையை ஒற்றைக்கையால் வருடியவன், புருவம் உயர்த்தி அவன் அக்மார்க் கிண்டல் பாவனையில்
“ஓஹ் பின்னே!” என்றான்.
அவன் தோளில் அடித்தவர், “ஊர்மியைப் பத்திரமா பார்த்துக்கோ, வினய் போடா!” என்றபடி வினயனோடு கிளம்பி சென்றார்.
“ஃபைவ் மினிட்ஸ்” என்று சொல்லி அம்மாவின் படம் முன் நின்றான். சில நிமிடங்கள் கண் மூடி அம்மாவை வணங்கியவன், ஊர்மிளாவிடம் வந்தான்.
“பக்கத்துலதான் இருக்கு, நடந்தே போகலாம் ஊர்மி” என்று சொல்லி முன்னே நடக்க, அவனை பின் தொடர்ந்தாள் ஊர்மிளா. ஜெய் கதவைப் பூட்டிவிட்டு அவளோடு தெருவில் நடந்தான். தூரத்தில் தேயிலைத் தோட்டங்கள் தெரிய, அந்த தெருவில் நிறைய மரங்கள். சமீபத்தில் பெய்த மழையில் ஈரம் நிறைந்திருக்க, வீடுகளை வேடிக்கைப் பார்த்தபடி ஊர்மிளா அவனோடு போனாள். அரக்க பறம்பில் வீட்டு முன் நின்ற ஜெய்ச்சந்திரன்,
“இதான் அரக்க பறம்பில் வீடு!” என்று அந்த பெரிய வீட்டைக் காட்டினான். அவளை அழைத்து உள்ளே நடக்க, ‘பூமுகத்தில்’ அவரின் ஆஸ்தான தேக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்த அச்சுதன் இவர்களை பார்த்துவிட்டார். ஊர்மிளாவையும் ஜெயனும் ஜோடியாக பார்க்க பெரியவருக்கு புன்னகை அரும்பியது.
“வாடா ஜெயா! வா மோளே! பெண்குட்டி பெயரெந்தானு?( பொண்ணு பெயரென்ன?)” என்று மறந்து போய் அச்சுதன் கேட்க
“ஊர்மி..ஊர்மிளா அச்சச்சா” என்றான் ஜெய். அச்சுதன் வேறு ஏதோ சொல்ல வர, ஊர்மிளா எதையாவது கண்டுகொள்வாளோ என்று நினைத்த ஜெய்,
“ஒரு நிமிஷம் அச்சச்சா! அச்சம்மா எங்க?” என்று சத்தமாகக் கேட்க, இவன் சத்தத்தில் ஷோபனாவும், பிந்துவும் வெளியே வந்தனர்.
ஊர்மியை நெருங்கியவன் மெல்லிய குரலில், “வரவங்க உன்னோட அத்த” என்றதும் அவள் முறைத்தாள். அவளுக்கு புதிதாய் இந்த உறவுகள் எதுவும் வேண்டாம் என்ற நிலையே.
“நான் உங்க மாமா பொண்ணாதான் வந்துருக்கேன், எனக்கு எங்க ஊர்ல இரண்டு அத்தைங்க இருக்காங்க! இப்படியே பேசிட்டு இருந்தா நான் வீட்டுக்குப் போயிடுவேன்” என்றாள் கோபத்தை அடக்கி. அவள் மாமா பெண் என்றதிலே ஜெய்யின் மனதில் தூவல் தூறியது!
ஷோபனா வர, “எங்க மாமா பொண்ணு அத்த, அச்சம்மாவைப் பார்க்க அழைச்சிட்டு வந்தேன்” என்று அறிமுகம் செய்து வைத்தான். அவரும் ஊர்மிளாவை விசாரித்தபடி உள்ளே அழைத்து சென்றார்.
ஊர்மி போய்விட்டாளா என்று எட்டி பார்த்த ஜெய், “ஊர்மி எண்ட ப்ரயணத்தைக் குறிச்சு அறியல்லா அச்சச்சா!”(அவளுக்கு என் காதல் தெரியாது அச்சச்சா!) என்றான் அவரிடம் அவசரமாக.
“ஏடா ஜெய்! ரகசியப் ப்ரேமம்?(ரகசிய காதல்?)” என்று அட்டகாசமாக சிரித்தார் அச்சுதன்.
“அதே! ரகசியம்தான். நீங்க இப்படி பேசி என்னை மாட்டிவிடாதீங்க!” என்று ஜெய் சொல்ல
“ஏடா ஜெய்! நான் வேணும்னா உனக்கு ரெகமெண்ட் பண்ணவா? என் ஜெயன் நல்ல பையன் சொல்லவா?” அச்சுதன் அவரின் பிரியமான ஜெயனுக்காகக் கேட்க, ஜெயனுக்குப் புன்னகை.
சொந்த பேரனில்லாத என் மீதே இவ்வளவு பிரியம் காட்டுகிறார், ஊர்மிளா பேத்தியென்றால் எவ்வளவு பாசமாக இருப்பார்? பிந்து மீது பாசம் காட்டினாலும், இத்தனை வருடம் பார்க்கவில்லை என்ற கோபம் இருக்கிறது. ஊர்மிளா அப்படி இல்லையே, அவளுக்கு எதுவுமே தெரியாது.
“அச்சம்மா!” என்று அவர் அருகே சென்று அவர் தோளில் கைப்போட்டவன், “என் ஸெலெக்ஷன் எப்படி? அவதான் உங்க பேத்தி” என்றான் மலையாளத்தில். பிந்துவோடு பேசிக்கொண்டிருந்த ஊர்மிளாவைக் காட்டி கேட்க,
“காலையிலயே உங்க அச்சச்சன் சொன்னார்டா ஜெய், உனக்கு பார்த்திருக்க பொண்ணு வந்திருக்கானு, எனக்கு ரொம்ப சந்தோஷம். உனக்கும் விஜயனுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும். உன் அச்சன்ட்ட கேட்டியா? ராஜீவன் எப்போ வருவான்?” என்று ஆவலாக அச்சம்மா கேட்க, ஜெயனுக்கு அவரை பார்க்க பாவமாக இருந்தது. இப்படி ஒரு அம்மா, அப்பாவை ஏங்க விடும் ராஜீவன் மீது கோபம்.
“உங்களுக்கு மட்டும் ரகசியம் சொல்லவா? பிரிகடியர் ராஜீவன் நாளைக்கு தேவிகுளத்தில் இருப்பார்” என்றதும் அச்சம்மாவின் கண்கள் சந்தோஷத்தில் மின்னின, கூடவே நீரும் சேர
“என்ன இது அச்சம்மா? அழறதுக்கா சொன்னேன்? அப்புறம் அச்சச்சன் என்னை அடிப்பார். நாளைக்கு உங்க பையனோட நான் அரக்க பறம்பில் வருவேன். சிரிங்க அச்சம்மா! என் ஆளு வந்திருக்கா, உங்க கையால சாப்பிடணும்னு அழைச்சிட்டு வந்துட்டேன். நாளைக்கு மகன் வந்தா என்னை கவனிக்க மாட்டீங்க..” என்றதும் அச்சமா அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டினார்.
இவர்கள் பேசும்போது அங்கே வந்த விஜயன், “ஜெயேட்டா! யார் இந்த பொண்ணு? உங்க மாமா பொண்ணுன்னு அம்மச்சன் சொல்றார்” என்று விசாரிக்க,
“விஜய்! எனக்கு மட்டும் மாமா பொண்ணு இல்ல, உனக்கும் மாமா பொண்ணு! ராஜீவன் மாமா பொண்ணு” என்றதும் அதை எதிர்ப்பாராத விஜயன்
“ஜெயேட்டா!” என்றான் அதிர்வோடு.
“எந்தாடா விஜயா? அவ சொல்ல மாட்ட! ரிலாக்ஸ்” என்று தோளில் தட்டிய ஜெய் “உண்மை தெரியற அன்னிக்கு நம்ம எல்லாருக்கும் இருக்கு” என்றான் கவலையாக.
அன்று மதிய விருந்து தடபுடலாக இருந்தது, ஊர்மிளாவுக்கு புதிய உணவுகளோடு புதிய உணர்வுகள்! ஆனால் எப்போதும் போல் அம்மா சமையலுக்கே அபிலாஷை கொண்டாள் பெண்.
அச்சச்சன், அச்சம்மாவும் அவளிடம் மிகுந்த அன்போடு நடந்தனர். கிளம்பும்போது அச்சம்மா ஊர்மிளாவுக்குப் புது புடவை, குங்குமம் எல்லாம் வைத்து கொடுத்தார். ஜெய்யும், ஊர்மிளாவும் சொல்லிக்கொண்டு செல்ல, அச்சம்மா ஊர்மியின் அருகே வந்தவர், அவரின் கண்மையை எடுத்து ஊர்மிளாவின் காதோரம் திருஷ்டிப்பொட்டாக வைத்தார். ஊர்மிளாவுக்கு அவரின் செயல், பரிவு பாசம் எல்லாம் அவள் ஆச்சியை நினைவூட்டியது.
ஜெய்யும் ஊர்மிளாவும் மீண்டும் வீடு நோக்கி நடந்தனர். ஊர்மிளா ஜெய்யிடம்,
“அந்த பாட்டியும் தாத்தாவும் என்னை ஏன் அப்படி கவனிச்சாங்க? உங்க மாமா பொண்ணுன்னா அவ்வளவு ஸ்பெஷலா?” என்று தெரிந்து கொள்ள கேட்டாள்.
“நான் அவங்களுக்கு ஸ்பெஷல், அதனால இருக்கும். நீ அவங்க பேத்தினு தெரிஞ்சா இன்னும் உன்னை ரொம்ப நல்லா கவனிப்பாங்க”
“உங்களுக்கு புரியல! எங்க வீட்ல என்னை கவனிக்க நிறைய பேர் இருக்காங்க. சில உண்மை தெரியாம இருக்கிறது நல்லது! அவங்க பிந்துவை அவங்க பேத்தினு நினைக்கிறாங்க., அவளுக்கும் யாருமில்லை. எனக்கு அப்படி இல்லை, எங்க தாத்தாவுக்கு, அப்பாவுக்கு நாந்தான் செல்லம்! எல்லாருக்கும் நல்லதுன்னா பொய் கூட தப்பில்லை!” என்ற ஊர்மிளாவை ஜெயனுக்கு இன்னும் பிடித்து போனது.
அந்த அந்தி நேரத்தில், தேவிகுளம் வீதியில் அவளோடு இணைந்து நடப்பதே மனதுக்கு இதமாக இருந்தது. மாலை மங்கிய நேரத்தில் வினயனும் பாலச்சந்திரனும் வீடு வந்துவிட, ஜெய், வினயன் இருவரிடமும் ஊர்மிளாவுக்கு இயல்பாக ஒரு நட்பு உண்டானது. அதிலும் வினயனுக்கும் அவளுக்கும் ஒரே வயது என்பதால் பேச எளிதாகவே இருந்தது.
பாலச்சந்திரனும் இவர்கள் பேச்சைக் கேட்டவர், “டேய் வினய்” என்று சத்தம் போட
“இதெல்லாம் கேஸ்வல் டாக்ஸ் அங்கிள்” என்று பாலாவிடம் சொன்னவள் “ப்ரண்ட்! எங்க ஊர்ல என் தாத்தாவை மீறி யாரும் எங்கிட்ட பேச மாட்டாங்க! ஸ்கூல்’ல பாய்ஸ் எல்லாம் டிஸ்டன்ஸ் கிப் அப் பண்ணுவங்க, எனக்கு இரண்டு அண்ணனுங்க! ஸோ ஒரு ப்ரோபஸல் கூட வராது, வரதுக்கு முன்னாடியே என் அண்ணாஸ் கட் பண்ணிடுவாங்க.”
“ப்ரண்ட் அப்போ நீங்க பெரிய ஆளு போல?” வினய் கேட்க
“பின்ன ரத்னவேல் பேத்தினா பெரிய ஆளுதான் ப்ரண்ட்” என்றாள்.
ஊர்மிளா வினயனிடம் சிரித்தபடி சொல்ல, பாலச்சந்திரன் தன்னருகே இருந்த மகனிடம்,
“மோனே! ரெண்டு அப்பா, ரெண்டு அண்ணா, ரெண்டு தாத்தா! கஷ்டம்டா! நீ வேணும்னு ஊர்மியா சொன்னா உண்டு” என்றார். ஜெய் அப்பாவை முறைக்க, ஊர்மிளா வினயனிடம்,
“எதுக்கு லவ் எல்லாம் பண்ணிட்டு வினய்? எப்படியும் கடைசியில நான் என் தாத்தா, அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்பேன், அதுக்கு அவங்க சொல்ற ஆளையே கட்டிட்டா ஈசி.. எப்படி?” என்று ஊர்மிளா விழிகள் உயர்த்தி கேட, வினயன் விழிகள் ஜெயனின் விழிகளை சந்தித்தன. பாலச்சந்திரன் ஜெய்யிடம்,
“என்னடா பறக்க ஆரம்பிச்சிருப்பியே!” என்று கிண்டலாகக் கேட்டார். அப்பா கிண்டல் செய்ய ஜெயனும்,
“உங்க மருமக சொல்லிட்டா இல்ல, அவங்க தாத்தா நம்பர் வாங்கி பேசுறீங்களா?” என்றான். அவர் முறைக்க, சிரித்தபடி எழுந்தவன்
“குட் நைட் ஊர்மி!” என்று சொல்லி மாடியேற, வினயன் ஊர்மிளாவிடம் “எங்க ஜெயேட்டா அப்படி, இப்படி..” என்று சிறிது நேரம் அளந்துவிட, பாலச்சந்திரன்
“காலையில ராஜீவனை பிக் அப் பண்ண நீதான் வரணும். வந்து படு. ஊர்மிமா ரெஸ்ட் எடு” என்று அனுப்பினார்.
அதுவரை இயல்பாக இருந்த ஊர்மிளாவுக்கு, மனதுக்குள் பேரலை. அப்பா, அம்மாவிடம் பேசிவிட்டு உறங்கி போனாள். அடுத்த நாள் ராஜீவன் வந்த போது, அவ்வளவு தூரம் அவரை பார்க்கவென வந்தவளுக்கு கோபம், அழுகை, ஆதங்கம் எல்லாம் சேர ராஜீவனை பார்த்த கணம் வேகமாக உள்ளே சென்றாள்.
ஜெய் வீட்டில் இருக்கும் ஆம்பல் குளத்தின் படிகளில் உட்கார்ந்தாள் பெண். எதிரே இருந்த நீரை பார்த்தபடி அவள் இறுக்கமாக உட்கார்ந்திருக்க, மகளை விட்டு சில அடிகள் தள்ளி வந்தமர்ந்தார் ராஜீவன் அச்சுதன்!
ஊர்மிளா பேசாமல் இருக்க, “எப்படி இருக்க ஊர்மி?” என்று ராஜீவனே ஆரம்பிக்க
“உண்மை தெரியற வரைக்கும் நானும் எங்கப்பாம்மாவும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம்” என்று அதுவரை காட்ட முடியாத கோபம் அத்தனையும் அவரிடம் காட்டினாள் ஊர்மிளா.
ராஜீவன் பார்வை மகளிடம் இருக்க, அவளோ அவரை பார்க்க கூட இல்லை.