“ஆஹ்ன்! இதெல்லாம் செல்லாது, உண்மையை சொல்லுங்க” என்று ஊர்மிளா கேட்க
“அவ என் க்ளாஸ்மேட் ஊர்மி, எனக்கு அவ பேசுறது லீடர்ஷீப் எடுத்து ஒவ்வொரு விஷயமும் செய்றது எல்லாம் பிடிச்சது. அவ கூட ப்ரண்டாகிட்டேன், அப்புறம் அந்த வருஷம் வாலெண்டைன்ஸ் டே’ல ப்ரோபோஸ் பண்ணிட்டேன். என் வாழ்க்கை முழுக்க இவளோட இருக்கணும்னு ஆசைப்பட வச்ச பொண்ணு ப்ளஸி!” என்றார் காதலில் திளைத்த குரலில்.
“அப்போ அந்த காலத்திலிருந்து ப்ரண்ட் ஆகிட்டு லவ் சொல்ற பழக்கத்தை இந்த பசங்க விடல..” என்று கிண்டலான குரலில் சொல்ல
“இந்த காலத்துல ஜெய்யும் அதான் பண்ணினானா?” என்று ராஜீவன் சிரிப்போடு கேட்க
“இல்லை! ஜெய் செகண்ட் டைம் பார்த்தப்போ உடனே சொல்லிட்டார். அவர் மனசுல தோணுறதை டக்குனு செஞ்சிடுறார்” என்றாள் ஊர்மிளாவும் புன்னகையுடன்.
“என்ன செய்ய சொல்ற? முதல்லயே ஒருத்தங்களை பார்த்தா லவ் வராதுடா, பிடிக்கும்… சினேகம் ஒரு பயணம் அல்லே? எடுத்தவுடனே போய் உன்னை லவ் பண்றேன் சொன்னா என்ன தெரியும்னு என்னை அக்செப் பண்ணுவாங்க? அவ கூட ஒரு வருஷம் பழகி சொன்னதுக்கே உன் அம்மா என்னை பளார்னு விட்டுட்டா” என்றவர் அம்மா என்றதை ஊர்மிளா கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. ராஜீவனுக்கு அது தெரியவில்லை, அவர் காதல் காலத்தை மகளிடம் ஆர்வமாக பகிரும் ஆவலில் இருந்தார்.
“அப்புறம் எனக்குக் கோவம் லவ் சொன்னா அடிப்பாளான்னு. ரெண்டு வாரம் பேசல, காலேஜ் ட்ரிப் ஒன்னு போனோம். நான் சோகமா இருந்தேனா, பாவம் பார்த்து பேசிட்டா! அப்புறம் அவளுக்கும் என்னை பிடிச்சது, ஆறு மாசத்தில லவ் சொன்னா.. பின்னேடு ஞங்களுடே ப்ரண்யகாலமாயிருன்னு!( அப்புறம் எங்க காதல் காலம்)” என்றார் பிரியத்தின் காலத்தை நினைவு கூர்ந்தவராய்.
“எனக்கு உங்க ரெண்டு பேர் ஃபோட்டோஸ் காட்டுங்க” ஊர்மிளா கேட்க, ராஜீவன் எழுந்து மெத்தையில் இருந்த தன் சூட்கேஸை திறந்தார்.
“எங்க போனாலும் எடுத்துட்டு போவீங்களா?” என்று கேட்க, மெல்ல தலையசைத்தார். ஊர்மிளாவிடம் ஒரு ஆல்பத்தைக் கொடுத்தவர் ஒரு காக்கி கவரை பத்திரப்படுத்த
“என்னது?” என்று கேட்க
“லெட்டர்ஸ்” என்றார்.
“லவ் லெட்டர்ஸ்?!” ஆச்சர்யமாக அவள் கேட்க ஆமோதித்தார் ராஜீவன்.
“ப்ளீஸ் காட்டுங்க, நான் லவ் லெட்டரே படிச்சதில்ல” என்று கேட்க
“நோ நோ! தட்ஸ் பெர்சனல், உனக்கு வேணும்னா ஜெய்யை எழுத சொல்லி படிச்சிக்கோ” என்று ராஜீவன் மறுக்க
“பர்த்டே அன்னிக்குக் கேட்கிறேன், நான் படிக்கக் கூடாதா?” என்று பாவமாகக் கேட்க கொஞ்சம் யோசித்தவர்
“பத்திரமா வச்சு படிக்கணும்” என்று மகளிடம் நீட்ட, ப்ளஸீக்கு ராஜீவன் எழுதிய இரண்டு கடிதம் பிரிக்க இரண்டுமே மலையாளத்தில் இருந்தன.
“இதுக்கா பில் டப்?” என்று கடுப்பாக சொல்ல ராஜீவனுக்கு சிரிப்பு.
திட்டியபடி ப்ளஸி ராஜீவனுக்காக எழுதிய கடிதம் படிக்க அது ஆங்கிலத்தில் இருந்தது.
“ப்ளஸிமா சூப்பர், எனக்கு புரியற மாதிரி இங்கிலிஷ்ல எழுதியிருக்காங்க” என்ற ஊர்மி அந்த கடிதத்தைப் படிக்க தொடங்கிய பின் பேச்சை நிறுத்தினாள்.
டியர் ராஜீவன்,
நான் நல்லாயிருக்கேன், நீயும் நல்லா இருப்ப நினைக்கிறேன்.
எனக்கு வேலை ரொம்ப பிடிச்சிருக்கு, டைம் போறதே தெரியல. அப்பச்சன் கிட்ட நம்ம விஷயம் பேசினேன், அவர் வழக்கம்போல் ஒத்துக்கல! ஏடா ராஜீவா! இந்த காதலை எப்படி இன்னொருத்தவங்களுக்குப் புரிய வைக்கிறது தெரியல எனக்கு.
நீ இதை படிச்சிட்டு ஃபீல் பண்ணாத! நீ எப்பவும் ப்ளஸீயோட ராஜீவன்தான்! அப்பச்சனும் அம்மேயும் ஒத்துக்கலன்னா கூட நம்ம கல்யாணம் பண்ணத்தான் போறோம். மனசை விட இங்க மதம் முக்கியமாகிடுச்சு, ஒரு நாள் எல்லாம் மாறும்! God is love, and whoever abides in love abides in God, and God abides in him. இதை நான் ரொம்ப நம்புறேன். என் ராஜீவனை அப்பச்சனுக்கும் ஒரு நாள் பிடிக்கும்! கண்டிப்பா நடக்கும் பாரு!
அடுத்த லீவ் எப்போ உனக்கு? உன்னை பார்க்க காத்திருக்கேன் என்று அதுவரை ஆங்கிலத்தில் இருந்த கடிதத்தில் மலையாளத்தில் இருவரிகள் இருக்க ஊர்மிளா அதுவரை ப்ள்ஸியின் காதலை, திடத்தை படித்தவள் புரியாமல் விழித்தாள்.
‘எண்ட பிரியப்பட்ட பட்டாளக்காரனு ஆயிரம் சும்பனங்கள், அடுத்த தவண கண்டுமுட்டுன்னது வரே இது சூக்ஷிகுகா‘ (என் பிரியமான பட்டாளக்காரனுக்கு ஆயிரம் முத்தங்கள்! அடுத்த தடவ பார்க்கிற வரைக்கும் இதை வச்சிக்கோ)என்று எழுதியிருக்க,
“இதுக்கு என்ன அர்த்தம்? ஏன் தீடீர்னு மலையாளம்?” என்று ஊர்மி கேட்க, மாட்டிக்கொண்டதாக விழித்த ராஜீவன் சட்டென்று
“படிச்சிட்டேனா கொடு ஊர்மி, அது அவளுக்கு மலையாளம் வேகமாக எழுத வராது, அதான் இங்கிலிஷ்ல எழுதுவா. இது ஜஸ்ட் ஐ மிஸ் யூ” என்று லெட்டரை வாங்கிட, அடுத்த கடிதம் படித்தாள்.
அதற்குள் மதிய உணவு நேரம் வந்துவிட “இப்போ என்ன சாப்பிடுற ஊர்மி? வெளியே போவோமா? இல்லை ஆர்டர் பண்ணவா?” என்று கேட்க
“இங்கயே சாப்பிடுறேன், எதாவது வெஜ்” என்று சொல்ல, ராஜீவன் போன் எடுத்து ஆர்டர் சொல்ல, ராஜீவன் தனியே எடுத்து வைத்த கடிதத்தில் மலையாள பகுதியை மட்டும் போட்டோ எடுத்து ஜெயனுக்கு அனுப்பி அர்த்தம் கேட்டாள்.
அடுத்த கடிதம் பார்க்க
டியர் ராஜீவன்,
எப்படியிருக்க? நான் நல்லாயிருக்கேன், நீ என்னை பத்தி கவலைப்படாத.
நான் உங்கிட்ட விஷயம் பகிர நினைச்சேன் தவிர, அப்பச்சன் என்னை அடிக்க எல்லாம் மாட்டார். நீ வார் ஃபீல்ட் போகும்போது பார்த்து போ, நான் எல்லா இடத்திலும் அமைதி இருக்கணும்னு கர்த்தர் கிட்ட வேண்டிக்கிறேன். நீ காஷ்மீர்ல குளிர்ல, எங்க எல்லாரையும் விட்டு தனியா இருக்க, உன்னை நல்லா பார்த்துக்கோ. எனக்காவும் சேர்த்து உன்னை பார்த்துக்கோ! எப்பவும் என் பாட்டாளத்துக்காரனை நினைச்சு எனக்கு பெருமை தான்!
உனக்காக இந்த ஆலப்புழாக்காரி நிறைய பிரியத்தோட காத்திருக்கேனு மட்டும் மனசுல வச்சிக்கோ! அவங்க நம்ம அப்பா, அம்மா! நம்மை ஒரு நாள் கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க. எதாவது பிரச்சனைனா நான் பார்த்துக்கிறேன், நீ எப்பவும் சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும்.
வாழ்க்கையில எல்லாமே உடனே நடந்துட்டா என்ன சுவாரசியம் இருக்கு? நம்ம காதலுக்காக நம்ம காத்திருக்க ஒவ்வொரு நொடியும் அது பெருகிட்டே தான் போகும், எனக்கு கண்டிப்பா தெரியும், உன் தலையில இருக்க எல்லா முடியும் நரைச்சாலும் இந்த அன்பு குறையாது!
நாளைக்கு நம்ம பசங்களுக்கு நம்ம காதல் கதை சொல்றப்ப நிறைய விஷயம் வேணும்ல.. ஏடா என்னை இப்படி தனியா புலம்ப விட்டுட்டு நீ ஜாலியா காஷ்மீர்ல இருக்கியா? இருந்தாலும் ராஜீவேட்டா, யுனிஃபார்மில் நீ சுந்தரனானு! என்று அதுவும் மலையாளத்தில் இருந்தது. ஊர்மிளா ரசித்து படிப்பதை பார்த்த ராஜீவன் அவள் கண் கலங்கவும், மகள் பக்கம் உட்கார்ந்து எட்டி பார்க்க அவர் ஊர்மிளாவின் தோளில் தட்டிக்கொடுத்தார்.
அவரை பார்க்கவும் கண்ணீரை உள்ளிழுத்த ஊர்மிளா புன்னகையோடு, “பார்த்தீங்களா அவங்க நான் படிக்கணும்னு அப்பவே ஆசைப்பட்டிருக்காங்க” என்றதும் ராஜீவனும் பேசாமல் புன்னகை செய்தார். உணவு வர இருவருக்கும் ஊர்மிளா எடுத்து வைத்தாள்.
ப்ளஸீ பற்றி கேட்க ராஜீவன் சலிக்காது பேசினார். காதலிப்பவர்களுக்கு காதல் பற்றியும் காதலிப்பவரை பற்றியும் பேச என்றுமே கசக்காதே! ராஜீவனும் அப்படியே! ப்ளஸி மீதான பிரியத்தில் மூழ்கி வந்தன அவர் வார்த்தைகள், ப்ளஸியோடு இருந்த ஒவ்வொரு நொடியும் மறக்காது அவர் மனதில் பதிந்திருக்க மகளோடு மனம் விட்டு பகிர்ந்தார். பிரியமானவர்கள் பற்றி பேசுவது கூட பிரியத்தின் மொழி!
“ஆலப்புழாக்காரிக்கு மீன்னா ரொம்ப இஷ்டம், நல்ல காலம் நாங்க இங்க இருந்தப்போ நிறைய ஃபீஷ் கிடைக்கும்.”
“எனக்கும் மீன் பிடிக்கும்” ஊர்மி சொல்ல
“தெரியும்டா” என்றவர் சூப் எடுத்து கொடுத்தார். இத்தனை வருடங்களில் அன்று உண்ணவே மனம் வராது, மகள் இருக்கவும் மனது லேசாக அவளுடன் உண்டுவிட்டார்.
ஆல்பத்தில் ஒவ்வொரு படங்களாக காட்ட, அதை எடுத்த கதை சொல்லி என்று அவர்கள் பொழுது நீள, பிரபாகரன் மனைவியோடு ஷிலாங்கின் மஹாதேவ் கோலா தம் என்ற சிவன் ஸ்தலத்தில் தரிசனம் முடித்து அருகே இருந்த உணவகம் சென்றனர்.
பிரபாகரன் பேசாமல் இருக்க, “நீங்களா ஊர்மியை அனுப்பி வச்சிட்டு இப்போ மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்கீங்க?” என்று ஜமுனா இயல்பாகக் கேட்டார். மகனுக்காக வருந்தினாலும் மகளின் பிறந்த நாள் என்று தன்னை மீட்டுக்கொண்டவர் அவளுக்காக கடவுளிடம் வேண்டினார்.
“இந்த ராஜீவன் எப்படி பச்ச குழந்தையைத் தூக்கிக் கொடுத்தான் தெரியலடி, நாளைக்கு ஊர்மிக்கே குழந்தை வந்திரும், எனக்கு அவளை விட்டு வந்தது கஷ்டமா இருக்கு. எனக்கே தெரியுது ரொம்ப சுய நலம்னு, ஆனாலும் அவ விஷயத்துல பெரிய மனுஷனா நடக்க முடியல” என்று வருத்தத்தோடு சொல்ல
“என்ன நீங்க? ராஜீவண்ணா கேட்டோ ஊர்மி கேட்டோ நீங்க இங்க எங்களை அழைச்சிட்டு வரல, சும்மா இப்படி யோசிச்சு ஃபீல் பண்ணாதீங்க! ப்ளஸி எவ்வளவு ஆசையா குழந்தை எதிர்ப்பார்த்த நமக்கு தெரியும், நம்ம பையன் இறந்தப்போ கூட அவ அவ்வளவு அழுதா, அது கூட அவ ஹெல்த் அஃபெக்ட் பண்ணிச்சோ நான் நினைச்சிருக்கேன். சிலதெல்லாம் நம்ம கையில இல்லைங்க, நீங்க ஃபீல் பண்ணாதீங்க. ஊர்மி உங்க முகம் பார்த்தாலே கண்டுபிடிச்சிருவா.. இப்பவே இப்படின்னா அவ கல்யாணமாகி போன அப்புறம் கேப்டன் எப்படி இருப்பீங்க?” என்று ஜமுனா கிண்டலாகக் கேட்க
“இந்த ராஜீவன் அளவு நான் ஸ்ட்ராங் இல்லை, பெரிய இவன்னு நினைச்சிட்டு இருந்தேன்! ஊர்மி இன்னொரு வீட்டுக்குபி போய்டுவான்னு நானே என்னை சமாதானம் பண்ணிட்டு அதுக்கு ரெடியா தான் இருக்கேன். ஆனா
நீ இல்லைனா நான் இருக்கவே மாட்டேன், உனக்கு ஒரு நிமிஷம் முன்னாடி நான் போய் சேர்ந்திருவேன்” என்று பிரபாகரன் உணர்ச்சிவசப்பட்டு பேசிட, ஜமுனா கடுப்பாகிவிட்டார்.
“அறிவிருக்கா உங்களுக்கு? என்ன வார்த்தை பேசுறீங்க? காதல் மன்னன் நினைப்பா? வாயை கழுவுங்க! எனக்கு வர கோவத்துக்கு” என்று ஜமுனா சிடுசிடுக்க பிரபாகரன் எழுந்து சென்றார்.