“என்னமோ கல்யாணம் பண்ணி என் பொண்டாட்டியை நான் பொறந்த வீடு அனுப்பின மாதிரி டிரெயினிங் எடுக்க சொல்ற” என்றான் கிண்டலாக.
மாடிப்படியில் நின்ற ஜெய் “அப்பா காட்டுற பொண்ணுங்கள்ல யாரையாவது பிடிச்சிருக்கு நீ சொல்லு, உடனே கல்யாணம் பண்ணிடலாம்” என்றான்.
“நல்லா இருக்கு மேன் உங்க நியாயம்! வாலிப வயசுல பொண்ணுங்களை பார்த்தா மானம் போச்சு மரியாதை போச்சுனு சொல்றது, இருபத்தாறு வயசுல வந்து பொண்ணுங்க ஃபோட்டோவா காமிச்சு லீகலா சைட் அடிக்க சொல்றீங்க? எந்தாடா தாஸா இது?” என்று புலம்ப
“இப்பவும் உனக்கு வாலிப வயசுதானே டா? அப்பா உனக்கு அடுத்த வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும் சொல்லிட்டார், சீக்கிரம் யாராச்சும் பார்த்து ஓகே பண்ணு” என்றபடி ஊர்மிளாவை பார்க்க மாடியேறினான்.
அவர்களின் ஒரு வயது மகன் ‘ரத்னாகரன்’ தொட்டிலில் உறங்கி கொண்டிருக்க, ஊர்மி முகத்தில் ஏதோ தீவிர சிந்தனை. கட்டிலில் கால் நீட்டி கண்கள் சிவக்க அமர்ந்திருந்தவளின் தோளில் கைப்போட்ட ஜெய்
“ஊர்மிமா” என்றழைக்க, அவனை முறைத்தாள்.
“ஏடி என்னாச்சு? என்னை ஏன் முறைக்கிற?”
“உங்களை முறைக்காம… ?” என்று பல்லை கடித்தவள் “ஐ அம் ப்ரக்னெண்ட்” என்றாள் பட்டென்று. ஜெய்க்கு அவள் சொன்னது சட்டென்று உரைக்கவில்லை.
“ஊர்மி?” என்று புரியாமல் பார்க்க
“அப்படி பார்த்தீங்க கண்ல மிளகா வச்சிருவேன், என்ன ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கீங்க?” என்று கத்தினாள்.
“ஏண்டி கத்துற? குட்டா முழிச்சிக்க போறான்” என்று ஜெய் அதட்டியவன்
“நிஜமாவா ஊர்மி?” என்று சந்தேகமாய்க் கேட்க, ஊர்மிளாவுக்கு ஏற்கனவே எதிர்ப்பாராத நேரத்தில் இப்படியாகிவிட ஒரு பதட்டம், ஜெய் ஜாக்கிரதையாக இருக்கிறேன் என்றதால் அவளும் கவனிக்கவில்லை, இன்னும் குழந்தைகளுக்கு அவள் தேவை அதிகம். மூன்று நான்கு வருடம் கழித்து என்றால் சந்தோஷமாக ஏற்றிருப்பாள். மகனுக்கு இப்போதுதான் ஒரு வயது முடிந்தது, மற்றவர்கள் கிண்டல் செய்வார்களோ என்ற கவலை, மூன்று குழந்தைகளை எப்படி சமாளிப்பேன் என்ற அச்சம் என்று தவித்தவள் அத்தனை கோபத்தையும் ஜெய்யிடம் காட்டினாள்.
ஜெய் அப்படி கேட்கவும் “பேசாதீங்க ஜெய்” என்றவளுக்கு உடல்சோர்வு வேறு, இரண்டு வாரமாக முடியவில்லை. குழந்தைகளை சமாளித்தே அவளை கவனிக்காமல் விட, இன்று எதற்கும் பார்ப்போமே என்று பார்த்தவளுக்கு எதிர்ப்பாராத அதிர்ச்சியை சமாளிக்க முடியவில்லை. அழுகை வேறு வர, கண்களை மூடி படுத்துவிட்டாள்.
ஜெய் அவள் பின்னே அணைத்தவன் “உன் ஹெல்த்தான் ஊர்மி எனக்கு முக்கியம், உன் இஷ்டம்!” என்றதும் இன்னும் கோபம் வந்தது.
“எதாவது பேசி என்னை வெறுப்பேத்தாதீங்க ஜெய், செம கோவத்துல இருக்கேன்” என்றிட
“ஊர்மி! டென்ஷன் ஆகாதம்மா” என்று சொல்ல, அவள் கேட்கவில்லை.
“நீ முதல்ல அத்தை கிட்ட பேசு, உன் இஷ்டம்னு சொல்லிட்டேன். அப்புறமும் இப்படி அழுது என்னை டென்ஷன் பண்ணினா எப்படி டி?” என்று அவனும் கோபமாகக் கேட்டவன்
“சுஜி பொறந்தப்போ அம்மாவாக்கினதுக்கு தேங்க்ஸ் சொன்னவ இப்போ மட்டும் திட்டுற?” என்றதும்
“ஜெய்!” என்று அவள் கத்த, ஊர்மிளாவின் போனை எடுத்து ஜமுனாவுக்கு அழைத்து கொடுத்தவன் அறையை விட்டு வெளியே வந்தான். அவர்கள் அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் நடந்தவனுக்கு வெட்கமாகவும் இருந்தது, ஊர்மியை நினைத்து கவலையாகவும் இருந்தது. ஊர்மிளாவை விட்டு திருமணத்திற்கு முன் எத்தனை தள்ளியிருந்தானோ இப்போது அதற்கு எதிராக அத்தனை நெருக்கம், அவள் இரண்டாம் குழந்தை உண்டான போது ஆறு மாதம் கழித்தே தேவிகுளம் வர அத்தனை மாதம் பிரிந்திருந்த ஏக்கம் தீர்த்தான்.
ஊர்மிளா ஜமுனாவிடம் விஷயம் சொல்ல ஜமுனாவுக்கு சந்தோஷம்.
“இதுக்கு ஏன் டி இப்படி டென்ஷன் ஆகுற?” என்று ஜமுனா அதட்ட
“அது.. நாங்க இப்போ எதிர்ப்பாக்கவே இல்லைம்மா, நான் எப்படி மூணு குழந்தைங்களை சமாளிப்பேன்? அதுவும் கரன் சின்ன பையன், எனக்குப் பயமாயிருக்கு” என்று படபடப்பாக பேசினாள்.
“ஊர்மிமா! அதெல்லாம் பார்த்துக்கலாம், நீ…நீ வேற எதாவது நினைக்கிறியா?” என்று கேட்டு நிறுத்தியவர்
“இங்க பாரு இப்போ முதல்ல போய் சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு, காலையில டாக்டரை பாரு. அப்புறம் பேசலாம். நீ இப்படி டென்ஷன் ஆகக் கூடாது, உனக்கென்ன ஆளா இல்லை பார்க்க?” என்று அதட்டியவருக்கு ஏனோ சந்தோஷத்தில் கண்ணீர். மகளிடம் பேசியவர் அப்படியே இருக்க, அறைக்குள் நுழைந்த பிரபாகரனிடம்
“நான் ஏற்கனவே தாத்தா தானே?” என்று சிரிக்க, ஜமுனா முறைத்தார்.
“என்னடி முறைக்கிற? விஷ்ணுக்கு, ஊர்மிக்கெல்லாம் பசங்க இருந்தா நான் தாத்தா தானே? உன் கண்ணுக்கு நான் ஹேண்ட்சம்மா தெரியறதால நான் தாத்தா இல்லைனு ஆகிடாது மேடம்” என்று சிரித்தபடி சொல்லி அருகே உட்கார,
“ஊர்மி மறுபடி மாசமா இருக்காங்க” என்று ஜமுனா சொல்லவும் பிரபாகரனுக்கும் அதிர்ச்சி, அடுத்த நிமிடம் சந்தோஷத்தில் முகம் பிரகாசித்தது.
தேவிகுளத்தில் ஜெய் அறைவாசலில் நிற்க, வேலை முடிந்து வந்தவனுக்கு உண்ண கொடுக்காமல் திட்டியதில் ஊர்மிளாவுக்கும் மன வருத்தமானது. அம்மாவிடம் பேசிய பின் மனம் கொஞ்சம் ஆசுவாசப்பட,
“ஜெய்” என்று குரல் கொடுத்தாள்.
ஜெய் உள்ளே சென்றவன் எதுவும் பேசாமல் முன்னே நிற்க “டிரஸ் மாத்திட்டு வாங்க, சாப்பிடலாம்” என்றாள். மகனை பார்க்க அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான், “இப்போ தூங்கிட்டு நைட்டெல்லாம் ஆட்டம் போடுவான் ராஸ்கல்” என்று திட்டியவள் ஜெய் வரும்வரை எழவில்லை. ஜெய் டீஷர்ட் மாற்றி வர “ஜெய்” என்று அழைத்து நிறுத்தினாள். அவன் நிற்க, பின்னால் அணைத்துக்கொண்டவள்
“சாரி ஜெய்! ரெண்டு வாரமா ரொம்ப டயர்டா இருந்தது, இன்னிக்கும் ரொம்ப தலை சுத்தலா, தலைவலிச்சது. அதான் டென்ஷன் ஆகிட்டேன்” என்றதும் அவளை முன்னே இழுத்து மெல்ல அணைத்தான்.
“நாளைக்கு டாக்டர்கிட்ட போலாம், இப்போ எப்படி வீட்ல சொல்றது? இந்த வினயன் நம்மை கலாய்ச்சி தள்ளிடுவான்” என்று புலம்பியவள் கரங்கள் ஜெய்யை அணைத்துக்கொள்ள
“எனக்கும் அப்படித்தான் இருக்கு” என்ற கணவனின் வெட்கம் கண்டவளுக்கு சிரிப்பு வர மெல்ல எக்கியவள் அவன் காதில் “ஜெய் உண்மையை சொல்லுங்க, என் தாத்தா கூட எதாவது பெட் வைச்சீங்களா என்ன?” என்றவளுக்கு அடக்கமுடியாது சிரிப்பு வர, அவன் தோள்வளைவில் சாய்ந்து சிரித்தாள்.
ஜெய்யும் அவள் தோளில் முகம் புதைத்து சிரிக்க “இந்த வெட்கமெல்லம் பக்கத்துல வரதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்” என்று ஊர்மி அவனை கிண்டல் செய்ய
“பக்கத்துல வந்தா யோசிக்க முடியலயே” என்றவன் முத்தங்கள் அவளை நிறைக்க
“சாப்பிட்டு தெம்பா வந்து இந்த குட்டி பையனை பார்க்கணும், போகலாமா?” என்று கேட்டவள் ஜெய்யை இறுக்கமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட ஜெய் அந்த நொடிகளை ரசித்து நின்றான்.
ஊர்மி கீழே இறங்கி வந்தவள் பாலச்சந்திரனிடம் “சாரி மாமா! லேட்டாச்சு, வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தவள்
ஊர்மி அவனை யோசனையாக பார்க்க, “கொஞ்சம் சத்தமா இருந்தது, கூடவே ஜெய் எப்பவும் இந்த நேரம் கீழ இறங்கிடுவானே” என்று இழுக்க
“உன் ஜெயேட்டாவை போட்டு சாத்தினேன்” என்று நக்கலாக சொல்லி அவள் உணவை எடுத்து வைத்தாள்.
“ஹேய் வில்லி! என் ஜெயேட்டா மேல கை வச்சா அவ்வளவுதான்” என்று வினயனும் கிண்டலாக மிரட்ட
“ஓஹ்.. பின்னே!” என்று கணவனை போல் ராகமிழுத்தாள் ஊர்மிளா.
“சரியில்லையே” என்று வினயன் கையைப் பிசைந்து நிற்க, ஜெய் முகத்தில் விரவிய புன்னகையை அடக்க முடியாது, அதே நேரம் வெட்கம் அவன் பேச்சை வெளியிட விடாது செய்ய அப்பாவின் அருகே உணவுக்காக அமைதியாக வந்தமர்ந்தான்.
பாலச்சந்திரன் இட்லி சாம்பாரில் திளைத்திருக்க, வினயன் உறங்கிய சுஜாதாவை அங்கிருக்கும் திவானில் படுக்க வைத்து ஜெய் அருகே உட்கார்ந்தான். வினயன் ஜெய் முகத்தை பார்க்க, அவன் ஒன்றும் பேசாமல் வேகமாக உணவை முடித்து மகளை தூக்கி மாடியேறியவன் முதல் படியில் நின்று
“அப்பா!” என்றான். பாலச்சந்திரன் “சொல்லு ஜெய்” என்றிட ஊர்மிளா கணவனிடமிருந்து மகளைத் தூக்கிக் கொண்டு மாடியேறிவிட, போகும் அவளை பார்த்த ஜெய் கொஞ்சம் தயங்கினாலும் பட்டென்று
“குருவாயூரப்பா! நிஜமா சொல்றியாடா?” என்று பாலச்சந்திரன் கேட்டுவிட்டு மகன் முகம் பார்க்க, அவன் முகத்தில் மலர்ச்சியே உண்மை சொல்ல, அவருக்கு மனம் நிறைந்தது.
“ஹேட்ரிக்!” என்று வினயன் கூவிட
“போடா மோனே!” என்று பாலச்சந்திரன் சிரிப்போடு வினயன் முதுகில் தட்டி செல்ல, ஜெய் வேகமாக படியேற
“ஜெயேட்டா! எங்கிலும் நின்னில் நின்னு ஞான் இது பிரதிஷீச்சில்லா!(உன் கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கல)” என்று கீழிருந்து கத்தினான்.
“ஜெயேட்டா நீ இதுக்குத்தான் என்னை டிரெயினிங் எடுக்க சொன்னியா? நான் கூட எனக்காகன்னு நினைச்சிட்டேனே!.. இருந்தாலும் அடிபொலி நியூஸ்” என்றவன்
“கங்கிராட்ஸ் ஜெயேட்டா!” என்று வம்பிழுத்தவன் “அண்ணிக்கும் சொல்லிடு, நான் இன்னும் நாலு தாலாட்டு பாட்டு கத்துக்கிறேன்” என்றபடி அறைக்குள் போனான்.
தம்பியின் பேச்சில் ஜெயனுக்கு அத்தனை வெட்கம். முகத்தில் பூத்திருந்த சிரிப்போடு தலையைக் கோதியபடி அறைக்குள் நுழைந்தவன் பார்வையில் உறங்கும் பிள்ளைகள் பட, பாத்ரூமிலிருந்து வந்த ஊர்மிளாவைக் கட்டிக்கொண்டான்.
“மாமா என்ன சொன்னாங்க ஜெய்?”
“அவருக்கு சந்தோஷம், இந்த வினயன்தான் ஓட்டிட்டான்” என்ற ஜெய் “எல்லாம் உன்னாலதாண்டி ஊர்மி” என்று அவள் கன்னங்களை மீசையால் உரசியவன் “நாளைக்குக் காலையில டாக்டர் கிட்ட போவோம், ஆனா இந்த டைம் இங்கதான் உனக்கு டெலிவரி, உன்னை விட்டு என்னால மறுபடி ஆறு மாசம் இருக்க முடியாது” என்றான்.
“அதெல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும்” என்ற ஊர்மிளா “இவளை ஸ்கூல்ல சேர்க்கணும் ஜெய், சோ போக முடியாது போல…எல்லாம் உங்களால!” என்றவள் கணவனிடமிருந்து விலகி மகளை சிறிய மெத்தையில் உறங்க வைத்து, மகனை அவர்களுடன் படுக்க வைத்தாள்.