‘ஓ மை கடவுளே! இதை எப்படி நோட்டீஸ் பண்ணாம விட்டேன்னு தெரியல. அம்மா யாருகிட்டயோ அமாவாசை, திதி அது இதுனு ஃபோனுல பேசிட்டு இருந்ததை செவியேற்க போய் தான் இதை நான் அவதானிச்சேன்.
என் பர்த்டே அன்று அமாவாசை! அன்னைக்கு தான் அவளை என் கனவுல ஃபர்ஸ்ட்டா பார்த்தேன். நான் திரும்ப அவளைப் பார்த்ததுவும் கூட அதே மாதிரியான ஒரு அமாவாசை ராத்திரியில தான்..
வாவ், ஐ ஃபீல் சம்திங் டிஃபரண்ட்!
அப்படினா அவ ஒவ்வொரு அமாவாசைக்கும் என் கனவுல வருவா இல்ல? ஐம் ஸோ எக்ஸைடட்! இனிமே நான் ஒவ்வொரு அமாவாசைக்காகவும் தவமிருந்து காத்திருக்க போறேன்.
அவ டேன்சிங்ல ரொம்ப ஆர்வம் கொண்ட ஒருத்தியா இருப்பா போல. முதநாள் போலவே ஒரு டேன்சிங் கஸ்டியூம்ல தான் அவளைக் கண்டேன், கூடவே கையில ஒரு பழங்காலத்து வீணையும் பல்லிளிச்சிட்டு நின்னுது.
அவளோட அழகு தோற்றம் என் கண்ணை விட்டு நொடிப் பொழுதும் நீங்காம, மனசின் அடியாழத்துல பசுமரத்தாணியா பதிந்து போய்டுச்சு. வசியக்காரி! விடிஞ்சதுலேர்ந்து நைட்டு தூங்குற வரைக்கும் என் கண்ணுக்குள்ள நின்னு நர்த்தனம் ஆடறா..
அவளைப் பார்க்குறப்போ வருஷக் கணக்கா லவ் பண்ண.. ம்ம்கூம், அது என்னனு சொல்லுவாங்க? ஹான்! ஜென்ம ஜென்மம்.. ஆமா ஜென்ம ஜென்மமா அவளை காதலிச்சாப்ல ஃபீல் பண்ணுறேன். என் இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் இதையே தான் சொல்லி இருப்பாங்க.
அவ எனக்கானவனு நான் முடிவு பண்ணிட்டேன். ஆமா, எனக்கானவ! எனக்கே எனக்கானவ! நான் உலகத்துல எந்த மூலைக்கு போயாவது அவளைத் தேடிப் பிடிப்பேன்.
அவ என்னைக்கா இருந்தாலும் நிச்சியமா.. சத்தியமா என்கிட்ட வந்திடுவானு என் மனசு உறுதியா சொல்லுது. நானும் அதை நம்புறேன்; அவளுக்காக வெயிட் பண்ணுறேன்.
மோகனா! என்னை ரொம்ப நாள் தவிக்க விடாம என் கண்ணு முன்னாடி வந்தா என்ன? இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஏன் எனக்கு இந்தளவு தவிப்பைக் கொடுக்குதுனு புரியல. இந்த தவிப்புக்கும், ஏக்கத்துக்கும் பேர் தான் காதலா.. நேசமா..’
-செழியனின் நாட்குறிப்பிலிருந்து..
“என்னமா ஆச்சு? மாப்பிள்ளை முகமே சரியில்ல. என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லிக்காம கெளம்பி போய்ட்டாரு. ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என கட்டிலில் முகம் குப்புற விழுந்திருந்தவளின் தலை கோதிக் கேட்டான், அறிவழகன்.
தமிழிசையின் சோர்ந்த முகத்தை(!) வேறு விதமாகப் புரிந்து கொண்டவன், அமலேஷின் கருமை படிந்த முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஏதோ பிரச்சனை என ஊகித்து, வந்ததிலிருந்தே கட்டிலோடு சரசமாடிக் கொண்டிருந்தவளை கேள்விக் கணைகளால் குடைந்து கொண்டிருக்கிறான்.
“தமிழ்..” என நான்காவது முறையாக அழைத்துப் பார்த்தவன் அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை என்றானதும்,
“என்னாச்சுனு தெரியலையே கண்ணம்மா! மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு..” என மனைவியிடம் ஆதங்கப்பட்டான்.
அதற்கு மேலும் அண்ணனை வருத்துவானேன்?
சட்டென்று எழுந்தமர்ந்தவள், “இரிடேட் பண்ணுறாருணா! எப்போ பாரு கையை, காலை சும்மா வைச்சிட்டு நிற்காம சீண்டிக்கிட்டே இருக்காரு. கடுப்பாகி, கொஞ்சம் சும்மா இருங்களேன்னு சொன்னதுக்கு அவர் மூஞ்சி அப்படி டார்க் அடிச்சிடுச்சு!” என சலித்துக் கொண்டாள்.
“அதெல்லாம் லவ்வும்மா! அப்படி தான் சீண்டிக்கிட்டே, அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கிட்டே இருக்க தோணும். இதையெல்லாம் இரிடேட்னு சொல்ல மாட்டாங்க..” என பொறுமையாக நாத்தூணுக்கு விடயத்தை எடுத்துரைக்க விழைந்தாள் கார்த்திகா, கணவனின் பார்வையைத் தெளிவுறப் புரிந்து கொண்டு!
“வாட்டெவர்!”
“மாப்பிள்ளைக்கு உன்மேல ரொம்ப லவ்சுடி தமிழு!” என தன் பங்கிற்கு அண்ணன்காரன் வேறு கலாய்ப்பில் இறங்கி விட,
“கடுப்பாக்காதணா! அவர் பண்ணா மட்டும் போதுமா? எனக்கும் ஸ்பேஸ் வேணுமில்லையா? நான் அவர் பக்கத்துல கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணவே இல்ல. இட்ஸ் ஸோ எம்பாரஸ்ஸிங்!” என முகம் சுணங்கியவளை, தான் கிசுகிசுப்பான தொனியில் செவியுறும் விடயங்கள் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவாறு ஏதோவொன்று தடுத்தது.
ஒருவேளை அதைப் பற்றி அவர்களிடம் கூறி இருந்தால், பிற்காலத்தில் வரும் இடர்களை ஓரளவாவது தவிர்த்து இருக்கலாமோ, என்னவோ..
சட்டென்று யோசனை வயப்பட்ட அழகன், “உனக்கு அமலேஷைப் புடிச்சிருக்குனு தானே சொன்ன?” என அச்சம் இழையோடிய குரலில் வினவ,
“அஃப்கோர்ஸ்!” என ஆமோதிப்பாய் தலை அசைத்தாள், தமிழிசை.
“அப்பறம் என்னம்மா?”
“ப்ச், ஐ டுன்னோ! நான் ரெஸ்ட் எடுக்க போறேன்..” என அத்தோடு அந்தப் பேச்சைக் கத்தரித்துக் கொண்டு கவிழ்ந்து படுத்துக் கொள்ள,
“ரெஸ்ட் எடு தமிழ்!” என்றவன், ‘வா!’ என மனையாளுக்கு கண்ணசைத்து விட்டு அறை விட்டு வெளியேறினான்.
மின்விசிறியை ஓடவிட்டு, அறைக் கதவை சாற்றிக் கொண்டு கணவனின் பின்னோடு சென்ற கார்த்திகா,
“என்ன இவ.. இப்படி பேசுறா! எனக்கு என்னவோ மனசே சரியில்லடி..” என வருந்தியவனின் தோள் தொட்டு,
“அவ மார்னிங்லேருந்தே தலை வலிக்குதுனு சொல்லிட்டு இருந்தா! அதுனால தான் இரிடேட்டிங்கா ஃபீல் பண்ணி இருப்பா போல’ங்க. அவளுக்கு தலைவலி வந்தா மண்டைக்கு வேற எதுவும் உறைக்காது. உங்களுக்கு தெரியாததா?” என காலையில் தமிழிசை தலை வலிப்பதாக முனகிய நினைவில் கூறினாள்.
“வேற எதுவும் இருக்காதுலடி?”
“ப்ச், என்னங்க இது? சின்ன பிள்ளையாட்டம் பிஹேவ் பண்ணுறீங்க.. அவ அமலேஷ் வீட்டுலேர்ந்து வர்றதா சொன்னதும் எவ்ளோ ஹாப்பி ஆகுனானு எனக்கு மட்டுந்தான் தெரியும்..”
சற்று முகம் தெளியப் பெற்றவன், “விஷயத்தை ஆறப் போடாம நான் இப்போவே பேசுறேன் கண்ணம்மா..” என்று கூறிக் கொண்டு நகர்ந்து விட,
“எனி ப்ரோப்லேம்?” என்று வினவியபடி கதவருகே நின்று இருவரின் சம்பாஷணைகளை செவியேற்றுக் கொண்டிருந்த செழியன் சோபாவில் வந்தமர்ந்தான்.
“ப்ரோப்லேம்னு எதுவும் இல்லணா!” என்றவள் மேலோட்டமாக விடயத்தை கூற,
“ம்ம்..” என முனகியவனை என்ன ஏதென்று புரியாத ஒருவித நிம்மதி ஆட்கொண்டது.
மணமாக இருக்கும் இருவரின் மனக் கசப்புகளைப் பற்றி வருத்தப்பட்டு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் போது வருந்துவதை விடுத்து நிம்மதி அடையும் தன்னை நினைத்தே அதிருப்தியுற்றவனாய்,
“அவ எங்க?” என்று ஏதோவொரு உணர்வில் உந்தப்பட்டு சட்டென்று கேள்வி தொடுத்தான்.
“எவ?” என முதலில் அதிர்ந்தாலும், சடுதியில் சுதாகரித்துக் கொண்டு, “தூங்குறா!” என பதில் உரைத்தாள் கார்த்திகா, சிறு புன்னகையுடன்.
சிறு தலையசைப்புடன் அவ்விடத்தினின்று நகர்ந்த செழியனுக்கு சித்தார்த்திடமிருந்து அழைப்பு வர, மற்றவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டு விடலைப் பருவ வாலிபனாய் உற்சாகமடைந்தான் ஆடவன்.
இத்தனை நாட்களாய், தெளிந்த நீரோடையாக மங்கையின் நினைவுகளுடன் சலசலத்துக் கொண்டிருந்த தன் மனம், இப்போதெல்லாம் தமிழிசையின் நினைவுகளையும் அவ்வப்போது உள்வாங்கிக் கொள்வதன் ரகசியம் என்ன என்பதை தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தவன்,
“ஹேய்!” என க்ரீச்சிட்ட பெண்குரலில் திடுக்கிட்டு விழி சுழற்றினான்.
நினைவுகள் நிஜமாகி விட்ட தோரணையில் – பக்கத்து அறையின் பேல்கனியில், கையில் தேநீர் கப் கமகமக்க வானத்து நிலவுக்கு ஒப்பான ஒளியோடு நின்றிருந்தாள், தமிழிசை.
“ஹேய், யூ..”
“நான்தான்! நான்தான்! தூங்கலை?”
“இதையே நானும் உங்க கிட்ட கேட்கலாமே! கலியாண பொண்ணு ஏன் இன்னும் தூங்கலை?”
நெற்றி வகுட்டிலிருந்து வழிந்து முகத்தில் விழுந்த மயிரிழையைக் காதோரம் ஒதுக்கி விட்டபடி மறுப்பாக தலை அசைத்தவள், “ராத்திரி நிலவைப் பார்க்கறதுல அப்படி ஒரு ஹாப்பி ப்ரோ..” என இழுவையாய் நிறுத்த,
“இன்ட்ரெஸ்ட்டிங்!” என முணுமுணுத்தான், தன் ரசனையை ஒத்த ரசிப்புத் தன்மை கொண்டவளை கண்களால் பருகியபடி! ‘ப்ரோ’ என்ற அழைப்பு பாகற்காயாய் கசந்தது ஆடவனுக்கு.
சிரித்தவன், “அவ என் மனசுல வாழ்ந்துட்டு இருக்கா! பார்க்குற இடமெல்லாம் அவ மட்டுமே தெரியுறப்போ, நிலவுல மட்டும் வேறு எதைத்தான் புதுசா பார்க்க போறேன்?” என நேசம் சொட்டும் குரலில், கிறக்கத்தில் மூடிக் கொண்ட விழிகளோடு வினவினான்.
அவனின் ஆத்மார்த்த காதல், பெண்ணவளை சட்டென்று மயிர் கூச்செறியச் செய்தது.
மெய் மறந்து நின்றிருந்தவளின் தொண்டையில் நீர் வற்றிப் போய் நெஞ்சாங்கூடு தீரா தவிப்புடன் படுவேகமாக ஏறி இறங்கியது.
வீசிய குளிர் காற்றை ஆழமாக சுவாசித்தபடி கண்களை இறுக மூடியவள், “அவ பேர் என்ன?” என்று கேட்டாள், தன்னை மீறி துளிர்த்த ஆசையுடன்.. பதிலறியும் ஆவலுடன்..
தமிழிசையின் கரத்தில் வாகாகப் பொருந்தியிருந்த தேநீர் கப், அவளது உடலில் அதிர்வு தாளாமல் கீழே விழுந்து துகள்துகளாக நொறுங்கிப் போனது.
(காதல்) மயக்கம் தெளிந்து, “ஆர் யூ ஓகே இசை?” எனப் பதறினான் ஆடவன், தங்கள் இருவருக்கிடையில் தடுப்பாக இருக்கும் இடுப்பளவான சுவற்றில் தன் கட்டுடம்பை சாய்த்தபடி!
தலையை மேலும் கீழுமாக அசைத்தவளுக்கு ஒருசில நொடிகள் முன்பு, ‘தேவி..’ என காதருகே ஒலித்த குரல் மீண்டும் மீண்டும் செவிக்குள் ரீங்காரமிட, மேனி சில்லிட்டது.
பயத்தில் கிடுகிடுத்த கால்கள் அவளைத் துவழச் செய்ய, வலுவிழந்த கைகளால் பேல்கனியில் ஹாண்ட் ட்ரில்லை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்கியது.
“திடீர்னு என்னாச்சு?” என்றவனுக்கு தவிப்பு தீர்ந்தபாடில்லை. என்னவாயிற்றோ, ஏதாயிற்றோ என மனம் பதைபதைத்தது; தவித்தது.
“ஐம்.. ஐம் ஓகே!” என்றவள் இருபுறமாக தலையைப் பலமாக அசைத்ததில் கொண்டையிட்டிருந்த கூந்தல் மொத்தமாக அவிழ்ந்து போக, நெற்றியை உள்ளங்கைகளால் தாங்கி பிடித்துக் கொண்டவள்,
“திடீர்திடீர்னு என்னாகுதுனே புரிய மாட்டேங்குது!” என வாய்விட்டே புலம்பினாள்.
“நோ! ஐம் ஓகே..” என்றவள் உடைந்து நொறுங்கிய தேநீர் கப்பின் துண்டங்கள் தன் காலைப் பதம் பார்த்து விடாதபடி, அணிந்திருந்த இலகு உடையைத் தூக்கிக் கொண்டு திரும்பி நடந்தாள்.
தரையில் பார்வை பதித்து ஏதோவொரு சிந்தனையில் தன்னிலை மறந்திருந்தவனின் கண்கள், நிலவொளி வெளிச்சத்தின் உதவியுடன் தமிழிசையின் பாதத்தில் ஆறாவதாய் இருந்த குட்டி விரலை இணங்கண்டு கொண்டன.
ஏதேதோ நிழற்படங்கள் கண்முன் விரிய, “மோகனா..” என்ற முணுமுணுப்புடன் இமை தூக்கிப் பார்த்தவனது கண்கள் அகல விரிந்தன, எதையோ கண்ணுற்று..