தனது பர்மிட்டை புதுப்பிக்க வந்திருந்தான் வான்முகிலன். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒரு மணியாகியும் வேலை முடியாமல் போக, பசியெடுக்கவே, சாப்பிட்டு வரலாம் என வெளியே வந்தான்.
வான்முகிலன் முடிந்தவரை வெளியில் அசைவம் சாப்பிடமாட்டான். அங்கிருக்கும் அனைத்து கடைகளும் அசைவ கடைகளாக இருக்க, சைவ கடையை தேடி சற்றுதூரம் பைக்கில் பயணம் செய்தான்.
அங்கிருந்த கோவிலைக் கடந்தவன், அது அம்மா மாதிரி என யோசித்தபடி வண்டியின் வேகத்தை குறைத்து.. அக்காள் தங்கை இருவரும் கணவன் வீட்டில் இருக்க, இவ்வளோ தூரம் கோவிலுக்கெல்லாம் துணையில்லாமல் வரமாட்டாங்களே, வேற யாராவதாக இருக்குமோ என நினைத்தவனுக்கு மனம் சமன்பட மறுக்க, மீண்டும் கோவிலுக்கு பைக்கை திருப்பினான்.
கோவிலின் வெளியே நின்றபடி அன்னைக்கு அழைக்க.. “எங்க இருக்க முகிலா? சாப்பிட்டியா?” என்றார் சுப்புலஷ்மி.
“இன்னும் சாப்பிடலம்மா, நீ எங்க இருக்க?” என்றான்.
“நான் இங்க கோவில்ல இருக்கேன்.” என்றார்.
“எந்த கோவில்?”
“ஆர்.டி.ஓ ஆபிஸ்கிட்ட இருக்க அம்மன் கோவில்ல.” என்றவரின் குரல் குறைந்து வர.. “இங்க எதுக்கு தனியா வந்த? வெளில வா.” என்றான்.
“வெளிலயா?” என அதிர.. “ம்.. நீ சொல்ற கோவில்க்கு வெளிலதான் நின்னுட்டிருக்கேன். வா.” என்றான்.
இரண்டு நிமிடத்தில் சுப்புலஷ்மி வெளியே வர.. “சொல்லாம இங்க வரைக்கும் எதுக்கு வந்த.? அதுவும் தனியா?” என்றான் கோபமாக.
“இல்லடா, நம்ம தரகர் ஒரு இடம் சொன்னார், உன்கிட்ட சொன்னா கத்துவ, வந்து பார்க்கலாம், சரிவந்தா உனக்கு சொல்லலாம்னுதான் உன்கிட்ட சொல்லாம வந்தேன்.” என்றார்.
“தரகர் சொன்னா என்கிட்ட கூட சொல்லாம தனியா வந்துடுவியா? கல்யாணம்லாம் ஆறேழு மாசம் கழிச்சி பேசிக்கலாம்னுதான சொன்னேன்?” என முறைத்தான்.
“கல்யாணம் ஆறு மாசம் கழிச்சி பண்ணிக்கலாம்டா, பொண்ணு பத்தி விசாரிக்கத்தான வந்தேன்? இதுக்கேன் கோபப்படுற? அருமையான இடம், முதல்முறை மட்டும் கோவில்ல பேசலாம்ன்றாங்கனு தரகர் சொல்லவும் வந்தேன்.” என்றார்.
“ப்ச்.. வாம்மா.” என முறைக்க.. “பொண்ணோட அப்பா உள்ள இருக்கார்டா, இப்போதான் பேச ஆரம்பிச்சோம். சொல்லாம கொள்ளாம எப்படி வர முடியும்? வா, இரண்டு பேரும் பேசலாம்.”
“ஏண்டா.? கல்யாண வயசுல பையனை வச்சிக்கிட்டு பொண்ணு பார்க்குறது ஒரு குற்றமா? எதுக்குடா இப்படி கடுகடுக்கிற?”
நீ பொண்ணு பார்க்குற லட்சணம் எனக்கு தெரியாதா? என மனதினுள் கடுகடுத்து, பொறுமையை இழுத்துப்பிடித்து.. “பொண்ணு எந்த ஊரு? என்ன படிச்சிருக்காளாம்.?” என்றான்.
“பொண்ணு நம்ம ஊருதான், நம்ம முன்னாள் மேயர் இருக்கார்ல? அவர் பொண்ணுதான், டாக்டருக்கு படிச்சிருக்காளாம். டாக்டருக்கு படிச்சிருந்தாலும் பொண்ணு அப்பன் பேச்சை தட்டமாட்டாளாம். நமக்கு ஓ.கேன்னா அடுத்த மாசமே கூட கல்யாணத்தை வச்சிக்கலாம்ன்னார்.
மேயர் அண்ணாபத்தி ஊருக்குள்ள பேசறதெல்லாம் தப்பு முகிலா, அவர்கிட்ட பழகவும்தான் எவ்வளோ நல்லவர்னு தெரியுது. நான் இங்க வரும்போது இன்னார் பொண்ணுனு எனக்கு தெரியாது. வந்து பார்த்தா நமக்கு தெரிஞ்சவரா போய்ட்டார்.
மேயருக்கு இந்த கோவில்தான் ராசியாம், அதான் இங்க வர சொன்னாராம்.” என்றார் ஆர்வமாக.
“அதான் பேச வேண்டியதெல்லாம் பேசிட்டல்ல? மீதியை வீட்டுக்கு போய் பேசிக்கலாம், பைக்ல ஏறு.” என்றான்.
“ஏது? பசியா? இன்னும் சாப்பிடலயா நீ?” என பரிதவித்து, தரகருக்கு அழைத்து.. “முகிலன் வந்துருக்கான். நான் அவனோட போய்க்கறேன், முகிலன்கிட்ட பேசிட்டு என்னைக்கு பொண்ணு பார்க்க வரோம்னு சொல்றேன்.” என இணைப்பை துண்டித்து பைக்கில் ஏற.. ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தி உண்டவன், ஆட்டோ பேசி சுப்புலஷ்மியை அனுப்பி வைத்து ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு விரைந்தான்.
வீட்டுக்கா? என யோசித்தவன்.. “ரொம்ப முக்கியமான விசயமா பாஸ்.?” என்றான்.
“முக்கியமான விசயம்தான். ஆனா அவசரமில்ல, ஆனா கண்டிப்பா இன்னைக்கு என்னை பார்க்கனும்.” என்று இணைப்பை துண்டித்தார் செந்தாமரை.
நான்கு மணிபோல் தனது லாரி பர்மிட்டை ரினிவல் செய்து முடித்து செந்தாமரை வீட்டிற்கு வந்தான் வான்முகிலன்.
“வா முகிலா.” என இன்முகமாய் வரவேற்கவும்தான் நிம்மதியானது வான்முகிலனுக்கு.
“நான் கூட எதோ பெரிய பிரச்சனைனு நினைச்சிட்டேன்.” என உரிமையாய் கோபித்தவன்.. “ம்.. என்னனு சொல்லுங்க.” என்றான் ஆயாசமாக.
அன்னை மேயரின் மகளை பார்த்தது அத்தனை கோபத்தை கொடுக்க, பொதுஇடம் என்பதால் பெரிதாய் பேச முடியாமல் இருந்தவனின் முகம் கடுகடுப்பாக இருக்க.. “முகம் ஏன் வாடியிருக்கு. மதியம் சாப்பிடலயா?” என்றார் அக்கறையாக.
“சாப்பிட்டேன் பாஸ்.. பர்மிட் ரினிவல் பண்ண இவ்வளோ நேரமாகிடுச்சி.” என சலிப்பாய் சொல்ல.. “டீ காபி எதாவது எடுத்து வர சொல்லட்டா.?” என்றார்.
“ம்.. உனக்கு ஏத்த வயசுல பொண்ணு இருந்திருந்தா உன்னை வளைச்சி போட்டிருப்பேன். என்ன செய்ய.? என் இரண்டு பொண்ணுங்களும் உன்னை விட பெரியவங்களா போய்ட்டாங்களே..” என ஏமாற்றத்தோடு பெருமூச்சிழுத்தார்.
“இப்படி பேச்சு சரிங்களா பாஸ்.?” என வான்முகிலன் கோபப்பட, அப்பொழுதும்.. “ஹம்.. இந்த குணம்தாண்டா உன்கிட்ட என்னை கட்டிப்போடுது.” என பெருமையாய் சொல்லி.. “அந்த பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கா?” என்றார் செந்தாமரை.
மீண்டும் தேன்நிலாப் பற்றி கேட்பாரோ என யோசித்தபடி.. “எந்த பொண்ணை?” என இவன் முகம் சுருக்க.. “அதான்.. உங்க தெருவுல குடியிருக்கானே எக்ஸ் மேயர்.. அவன் பொண்ணு..” என்றார்.
வான்முகிலன் சிரிக்கவும்.. “ஓ.. அப்போ அந்த பொண்ணை பிடிச்சிருக்கா?” என்றார் சுரத்தையின்றி.
“ஓரிருமுறை பார்த்திருக்கேன். இதுவரை அந்த பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை பேசினதில்ல, தெருவுல குடியிருக்கான்றதால அவளை எனக்கு தெரியும்.
ஆனா சின்ன வயசுலயிருந்து கார்லயே போய்ட்டு வந்துட்டிருக்க அவளுக்கு கண்டிப்பா என்னை தெரியவே தெரியாது. இந்த லட்சணத்துல அவளை எனக்கு பிடிச்சிருக்கானு கேட்குறிங்க. என்னைப் பார்த்தா எப்படி தோணுது உங்களுக்கு?” என முறைத்தான் வான்முகிலன்.
“வேற ஒன்னும் இல்ல முகிலா, அந்த பொண்ணை உங்கம்மா உனக்காக விசாரிச்சது தெரியவும் கொஞ்சம் பதட்டம் ஆகிடுச்சி. அந்த பொண்ணை குறை சொல்ல ஏதுமில்லதான். தப்போ ரைட்டோ அவன் அப்பா பேச்சை மட்டும் மீறவே மாட்டா, ஆனா உன் குணத்துக்கும் அந்த பொண்ணுக்கும் செட் ஆகாது முகிலா.
அதோட அந்த மேயர் ரொம்ப மோசமான கேரக்டர், உனக்கு அந்த பொண்ணும் குடும்பமும் வேணாம்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்.” என்றார் தயக்கத்தோடு.
“இதை சொல்ல எதுக்கு பாஸ் இவ்வளோ தயக்கம்?” என தேற்றியவன்.. “எங்கம்மா விபரமில்லாம விசாரிச்சிருக்கும், அவனைப் பத்தி சொன்னா புரிஞ்சுக்கும்.” என்றான்.
“உங்கம்மா புரிஞ்சிப்பாங்க, ஆனா அந்த மேயர் உன்னை விடமாட்டான்.” என்றார் செந்தாமரை.
“ஹா..ஹா.. என்ன செய்வான்?” என்றான் சிரிப்போடு.
“சிரிக்காத முகிலா. அவனுக்கு ஏற்கனவே உன்மேல ஒரு கண்ணு.. அவன் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடல, தில்லுமுல்லு செய்து சேர்த்த சொத்துக்கு பாதுகாவலனை தேடிட்டிருக்கான். இதெல்லாம் புரியாம உங்கம்மா அவன் பொண்ணைப் பத்தி தரகர்கிட்ட விசாரிச்சிருக்காங்க, அந்த தரகர் பணத்துக்கு ஆசைப்பட்டு உங்கம்மாவை அழைச்சிருக்கான். இதையே அவன் பிடிச்சிக்கப்போறான்.
“சட்டுபுட்டுனு ஒரு கல்யாணத்தை பண்ணு..” என்றார் கட்டளையாக.
“சன்யாசம் வாங்குற ஐடியாலாம் எனக்கில்ல பாஸ்..” என சிரித்தவன்.. “என் தொழிலை கேவலமா நினைக்காம என்னை கட்டிக்க யாராவது சம்மதிச்சா உடனே கல்யாணம்தான்.” என்று செந்தாமரையிடம் விடைபெற்று வீடு திரும்பினான்.
“வா.. முகிலா.” என இன்முகத்தோடு வரவேற்ற அன்னையை முறைத்தான்.
“முகிலா, லாரி டிரைவருக்கு பொண்ணு தர யோசிக்கிறாங்கன்றதுதான உன் கோபம்? அதனாலதான நிறைய சம்மந்தம் தள்ளி போச்சு?
மேயர் அண்ணா அப்படியில்ல.. அந்த சின்ன வயசுல தன் குடும்பத்துக்காக படிப்பை தியாகம் செய்து, க்ளீனர் வேலைக்கு போய், லாரி ஓட்டி கத்துக்கிட்டு குடும்பத்தை காப்பாத்தியிருக்கார்னு லாரி ஓட்டுறதை ரொம்ப பெருமையா பேசினார்.
எவன் பெத்தவளையும் கூடப்பிறந்தவங்களையும் பாசமா பார்த்துக்கிறானோ அவன்தான் கட்டினவளையும் நல்லபடியா பார்த்துப்பான். உங்க மகனுக்கு பொண்ணு கொடுக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும்னு சொல்றார் முகிலா.
எல்லாரும் நினைக்கிற மாதிரி மேயர் தவறானவர் இல்ல முகிலா, வாய்ப்பு கிடைச்சா யார்தான் பணங்காசு சேர்த்தாம இருப்பாங்க? எல்லாருக்கும் அவர்மேல பொறாமை, அதான் தப்பா பேசுறாங்க.
அரசியல் செல்வாக்கு இருக்குன்னாலும் என்கிட்ட அவரோட அரசியல் செல்வாக்கைப் பத்திலாம் பேசவேயில்ல, ரொம்ப சாதாரணமா இயல்பா பேசினார். அந்த தரகரும் நிறைய பொண்ணுங்க போட்டோ காமிச்சார்.
ஆனா யாரும் அந்த நிலா அளவுல பாதி லட்சணம் கூட இல்ல, மேயர் அண்ணா பொண்ணுதான் நிலா கலருக்கே இருக்கா. டாக்டருக்கும் படிச்சிருக்கா. இந்த இடத்தையே முடிச்சிடலாம் முகிலா.” என்றார் ஆவலாக.
இத்தனை நேரம் அன்னையின் மீது கோபமாய் இருந்தவனுக்கு, நிலாவின் பெயர் கேட்டதும் கோபம் குறைந்திட.. “ஏம்மா.. கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன என்னை வேணாம்னு சொன்ன மஹிமாவை கூட மறந்துட்ட.. நிலாவை மறக்கமாட்ட போல.” என்றான் இலகுவாக.
“அந்த மஹிமாவை உனக்கு பேசினதுக்கப்புறம்தான் தெரியும். ஆனா நிலா அப்படியா? சின்ன வயசுலயிருந்து பார்க்கிறோம், நம்மளைப் பத்தி எல்லாமும் அவளுக்கு தெரியும். அவளைப் பத்தின எல்லாமும் நமக்கும் தெரியும்.
கல்யாணத்துக்கு இரண்டுநாள்தான் இருக்கு, அந்த புள்ள வேணாம்னுட்டானு எப்படிபட்ட சூழல்ல அவகிட்ட போய் நின்னேன்? என்னை ஏமாத்திட்டாளே.” என்றார் ஆதங்கமாக.
இன்னும் அன்னை தன் தவறை உணரேவேயில்லை என வருந்தினாலும்.. “ம்.. அப்போ நிலாக்கு பதிலடி கொடுக்குறதுக்காகத்தான் மேயர் பொண்ணை பார்த்திருக்க. ஆமாவா?” என்றான்.
“ஆமாம்.” என சுப்புலஷ்மி ஒப்புக்கொள்ள, “ஆஸ்தி, அந்தஸ்து, படிப்புனு எல்லா விதத்துலயும் என்னைவிட சிறப்பானவ்வோனட நிலா கல்யாணம் நடந்ததுனா நீ அவகிட்ட தோத்ததா ஆகிடுமா?” என்றான்.
“முகிலா..” என சுப்புலஷ்மி அதிர.. “நீ யோசிக்கிறதெல்லாம் ரொம்ப தப்பும்மா.. பொண்ணு கேட்குறேன்ற பேர்ல அவ அப்பாம்மாவை அசிங்கப்படுத்தினது பத்தாம அவளை எதிரியா வேற மனசுல நினைச்சிட்டிருக்க.
உன் வயசுக்கு அவ உனக்கு எதிரியா? அப்போ அவ அப்பாகிட்ட உன் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கலயா.?” என்றான் கோபத்தோடு.
“ரேவதி பேசுனது தப்புன்றதாலதான் அவ அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டேன். ஆனா உன்னை வேணாம்னு சொன்னதுல அவமேல உள்ள கோபம் போகவேயில்ல.” என்றார் உண்மையாக.
“ரேவாக்காவோட சேர்ந்து ரொம்ப கெட்டுபோய்ட்ட, நிலாவைப் பத்தி இன்னொருநாள் பேசலாம். காலைலயிருந்து ஆர்.டி.ஓ. ஆபிஸ்லயிருந்தது தலை வலிக்குது. ஒரு டீ யை போடு.” என்றான் சலிப்பாக.
சுப்புலஷ்மி டீ வைக்க போக.. உன்னை விட அழகானவளை சல்லடை போட்டு தேடுற அளவுக்கு எங்கம்மா மனசுல பதிஞ்சிருக்க.. அவ்வளோ பெரிய பேரழகியாடி நீ.? என யோசித்தபடி தேன்நிலாவின் முகத்தை கண்முன் கொண்டு வந்தான் வான்முகிலன்.