“என் மகன்டா நீ.. எப்படி சம்மதிக்காம இருப்பேன்?” என்றார் கோபமாகவே.
“இவ்வளோ வெறுப்பா சம்மதிக்க வேணாம்.” என வான்முகிலனும் முறைக்க.. “நீ பண்ணின கல்யாணத்துக்கு கோபமே வராம இருக்குமா? இல்ல உன்மேல கோபப்பட எனக்கு உரிமையில்லையா?” என குரலுயர்த்தினார் சுப்புலஷ்மி.
“ப்ச்.. ம்மா.. என் விருப்பம் சொல்லியும் நீ சம்மதிக்கல, இனி எப்பவும் சம்மதிக்கமாட்டனு நினைச்சி கல்யாணம் செய்துட்டேன். இப்போ என்னதான் செய்யனும்ன்ற?” என்றான் சலிப்பாக.
“என்னை வீட்டை விட்டு போங்கனு சொன்னாடா.” என்றார் ஆற்றாமையாக.
“ரேவாக்கா பேசினதுக்கு இதை கூட சொல்லமாட்டாளா?” என முறைத்தவன்.. “நாங்க இரண்டு பேரும் சந்தோசமா இருக்கனும்னு நினைச்சினா இனி பழசை பேசக்கூடாது.” என்றான்.
“இதே மாதிரி அங்கயும் கண்டிஷன் போடனும்.” என்றார் முறைப்பாக.
“ஓ.. இதுதான் உன் பிரச்சனையா?” என இலகுவாய் கேட்டவன்.. “அவ்வளோ நடந்த பின்னயும் நீ மன்னிப்பு கேட்டதும் மாமா அமைதியாதான போனார்? என் கல்யாணத்துக்கு முன்னவே சண்டை வேணாம்னு நினைச்சவங்க, இனி சண்டை போடுவாங்களா? அதோட தேன்நிலா அப்பாம்மா பத்தி உனக்கு தெரியாதா என்ன?” என்றான்.
சுப்புலஷ்மியின் முகம் நிம்மதியை காட்ட, டீ குடித்து முடித்த வான்முகிலன் தனதறைக்கு செல்ல எழ.. ரிசப்ஷன் பற்றி பேசவில்லையென்றால் நிலா வீட்டிலேயே குடித்தனம் செய்திடுவானோ என்ற பயத்தில்.. “என்னைக்கு ரிசப்ஷன் வைக்கலாம்?” என்றார்.
தவித்திருந்த அன்னையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன்.. “என்னைப் பொருத்தவரை என் கல்யாணம் என் இஷ்ட தெய்வமான ஈசன் கோவில்ல, நம்ம குடும்பம், தேன்நிலா குடும்பம்னு எல்லார் முன்னாலயும் சிறப்பாதான் நடந்தது. எனக்கு ரொம்ப ரொம்ப நிறைவா இருக்கு.
ஆனா.. எனக்கு கிராண்டா கல்யாணம் செய்யனும்னு நீ ஆசைப்பட்டதுக்காகவும், தேன்நிலாக்கும் அப்படியேது ஆசையிருக்குமோனும் யோசிச்சி, உங்க இரண்டு பேருக்காகத்தான் ரிசப்ஷனுக்கு யோசிச்சேன்.
அதனால ரிசப்ஷன் பத்தி முடிவெடுக்க வேண்டியது நீயும் நிலாவும்தான்.” என்றான் தன்மையாக.
விருப்பத்தை ஏற்காத போதும் தனக்காக பார்க்கும் மகனின் அன்பில் மனமிறங்கிய சுப்புலஷ்மி.. “நிலா என்ன சொன்னா?” என்றார்.
முன்பு போல் அல்லாமல் தற்போது அக்கறையாய் கேட்கவும்.. “கேட்டேன், அவ இன்னும் பதில் சொல்லல.. பக்கத்து வீட்டுலதான இருக்கா.? போய் கேட்டுட்டு வாயேன்.” என்றான்.
“விருப்பமில்லாமத்தான் கேட்டேனா?” என கோபம் காட்ட, “அப்போ எதுக்கு தயங்கற?” என்றான் முறைப்பாக.
சுப்புலஷ்மியின் முகம் குற்றவுணர்விற்குள்ளாக, அவர்களிடம் இறங்கிப்போக முடியாமல் தவிக்கும் அன்னை மனம்புரிய.. “அங்க யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க, நீ போய் கேளு.” என்றான்.
பிருந்தாதான் மங்களம் லிங்கேசனிற்கு விருப்பம் என.. “பிருந்தாவையும் வர சொல்லி..” எனும்போதே இடைமறித்தவன்.. “பிருந்தாவை கூட்டிட்டு போனா என்னை ஏன் கூப்பிடலனு ரேவாக்கா சண்டைக்கு வரும், ரேவாக்காவை கூட்டிட்டு போய் திரும்ப பிரச்சனை ஆகாம உன்னால பார்த்துக்க முடியும்னா கூட்டிட்டு போ, அதனால யாரும் வேணாம். நீ போய் கேளு.” என்றான்.
அரை மனதாக சரி என்பதாய் தலையசைத்தார் சுப்புலஷ்மி.
மெச்சுதலான பார்வையோடு முகிலன் அறைக்குள் போக.. “கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் மங்களத்துக்கிட்டயும் அவ புருசன்கிட்டயும் ஒருமுறை நீ கூட பேசினதில்ல, இப்போ வார்த்தைக்கொரு அத்தை மாமா போடுற?” என்றார் முறைப்போடு.
“ஹா..ஹா.. ஆமாம்ல?” என சிரித்தவன்.. “அப்பா இருக்கும்போது, லாரிக்கு போய்ட்டு வீட்டுக்கு வரும் நேரம் பிருந்தா வீட்டுல இல்லனா, உன் தங்கை எங்கடா? அவங்கத்தை வீட்டுல இருக்காளானுதான் கேட்பார்.
தேன்நிலாவின் அப்பாவும் தன் கணவரும் நெருங்கிய நண்பர்கள்.. மிலிட்டிரியிலிருந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம் மேலே மாடியில் அமர்ந்து மணக்கணக்காக பேசுவார்கள் என்பது சுப்புலஷ்மிக்கு தெரியும்தான்..
அறைக்குள் சென்றவனுக்கு தேன்நிலாவின் அழுது வடிந்த முகமே கண்முன் வர, அவளிற்கு அழைக்கும் ஆவல் வந்தது.. ஆனாலும் சற்றுமுன்தான் அவளின் சிறு வயது ரணங்களை கிளறி வந்திருக்கிறோம், அதன் தாக்கத்திலிருந்து வெளிவரட்டும் என தேன்நிலாவிற்கு அழைக்கும் எண்ணத்தை விடுத்து டி.வியை ஆன் செய்தான்.
ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. எப்படி அந்த வீட்டில் ஒருத்தியாய் இருக்கிறாள் என்ற நினைவுதான்.. தேன்நிலாவின் வீடு மூன்று அறைகளை மட்டுமே கொண்டது. ஆனால் ஒவ்வொரு அறையும் மிகப் பெரிது. மாடியிலும் இரு அறைகள் இருக்கிறது, ஆனால் அதை யாரும் பயன்படுத்துவதில்லை.
அந்த காலத்தில் அவளின் தாத்தா கட்டியது என தந்தை சொல்ல கேட்டிருக்கிறான். தாத்தா பாட்டி இறந்த பின்னும் அவ்வீட்டில் தனியாய் வசிப்பதற்கு நிச்சயம் மனதிடம் வேண்டும்.
ம்.. முன்பெல்லாம் அவளின் விருப்பத்திற்காக தனியாய் இருக்கிறாள் என சாதாரணமாய் நினைத்தோம், ஆனால் எத்தனை ரணங்களை அவ்வீட்டினுள் புதைத்து வாழ்கிறாள் என இன்று அவளின் மௌனக் கண்ணீர் எடுத்துரைக்க, வான்முகிலனின் மனம் வேதனை கொண்டது.
ஒருமணி நேரம் வரை அவளின் நினைவோடு தனதறையில் இருந்தவனிற்கு அதற்குமேல் முடியாமல் போக எழுந்து வெளியே வந்தவன்.. “ம்மா.. சமையல் ஆச்சா? இல்ல லேட் ஆகுமா?” என்றான்.
“இன்னைக்கென்ன இந்த நேரத்துக்கே கேக்குற? இன்னும் செய்யல, இரு பத்து நிமிஷத்துல செய்துடறேன்.” என கிச்சன் விரைந்தார் சுப்புலஷ்மி.
சந்தோசமடைந்தவராய்.. “நாளைக்கு பாப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு வா. உன் அக்கா கேக்குறா.” என அவரின் மகளின் ஆசையை வெளிப்படுத்த..
“நாளைக்கேவா? பார்க்கலாம் பாஸ், வரதுனா உங்களுக்கு கால் பண்றேன்.” என்றான்.
முகிலன் பேசி முடித்தான் என உணர்ந்ததும், மகனின் பாஸ் என்ற அழைப்பிலேயே, செந்தாமரைதான் பேசியிருப்பார் என்றுணர்ந்து.. “அண்ணா என்ன சொன்னார்?” என்றார் சுப்புலஷ்மி.
வான்முகிலன் செந்தாமரையிடம் பேசியதை விளக்க.. காலையிலிருந்து மங்களம் குடும்பத்திடம் எப்படி இறங்கிப்போவது? என்று மட்டுமே யோசித்திருந்தவருக்கு, தற்போதுதான் மகனின் தொழில்முறை நட்புகள் நியாபகம் வந்தது.
மங்களம் குடும்பத்திற்கும், தன் குடும்பத்திற்கும் பல வருட நட்பிருப்பதோடு, திருமணமும் இருகுடும்பங்களின் முன்னே நடந்திருக்க, அதை விமரிசையாக வெளிப்படுத்திவிட்டால் ஊராரின் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கலாம். மகனிற்கும் அது கௌரவமாய் இருக்கும்.
அதோடு முகிலனின் திருமணம் குறித்து தன்னிடம் யாரேனும் கேட்டால் இப்படி திருமணம்தான் ஜாதகத்தில் செய்ய சொன்னார்கள் என்றிடலாம்..
ஆனால் மங்களம் பொய்யுரைக்கமாட்டார், கேட்போரிடம் முன்பு ஏற்பட்ட மனக்கசப்பை வெளிப்படுத்தினால் தன்னைத்தான் இழிவாய் நினைப்பார்கள், முக்கியமாக தான் பெரிதாய் நினைக்கும் செந்தாமரை அண்ணன் முகிலனிற்காக தன்னிடம் சண்டைக்கே வந்திடுவார்..
ரிசப்ஷனிற்கு ஏற்பாடு செய்வதுதான் சரி.. ஆனால் ரிசப்ஷன் குறித்து மங்களத்திடம் தானேதான் போய் பேசனும் என்கிறான் முகிலன்.
தாமதித்தால் நான் பேச சொல்லியும் பேசல, அதான் இப்படி செய்துட்டேன் என திருமணத்தை போல சொல்லாமல் எதையேனும் செய்திடுவான் என வான்முகிலன் மீது பயமும் இருக்க, முடிந்தவரை மங்களத்திடம் ரிசப்ஷன் குறித்து சீக்கிரம் பேசிடவேண்டும்..
ஆனால் எப்படி அவர் முகத்தில் விழிப்பது என்ற சங்கடம் பெரிதாய் ஆட்கொள்ள, நானும் வருகிறேன் என்றானே, முகிலனோடே போய்விடலாம் முடிவெடுத்தார்.
“முகிலா டிபன் செய்துட்டேன், வா.” என்றார்.
சாப்பிட அமர்ந்த வான்முகிலனின் முகம் அஷ்டகோணலாய் மாற.. “என்ன டா?” என்றார் சுப்புலஷ்மி.
“என்னம்மா செய்து வச்சிருக்க? ஒரு வாய் சாப்பிட்டு பாரு.” என தானே ஊட்டிவிட, சுப்புலஷ்மியின் முகமும் சுருங்கியது.
“சொல்லாம கல்யாணம் செய்ததுக்காக சமையல்ல பழி வாங்க முடிவு பண்ணிட்டியா?” என வான்முகிலன் சிரிக்க.. “டேய்.. அப்படியில்ல.. மங்களத்துக்கிட்ட எப்படி பேசனு யோசிச்சிட்டே உப்பு இரண்டு முறை போட்டுடனாட்டங்குது.” என்றார் பாவமாக.
தப்பு செய்தோம் என உணர்ந்ததால் மட்டுமே இப்படி தடுமாற்றம் என அன்னையை மெச்சுதலாய் பார்த்தவன்.. “சரி விடு, நான் சட்னி பண்றேன்.” என கிச்சன் சென்றான்.
“நானே வேற பண்றேன்.” என சுப்புலஷ்மியும் பின்னோடு வர, “ம்மா.. உனக்கு இன்னைக்கு சமைக்கிற மூட் இல்ல, நான் பண்ணறேன் விடு.” என தன்மையாகவே சொல்லி வெங்காயம் உரிக்க ஆரம்பித்தான்.
இனி எத்தனை தடுத்தாலும் அவன்தான் சமைப்பான் என உணர்ந்து, “சாப்பிட்டதும் மங்களம் வீட்டுக்கு போலாமா?” என்றார் மெல்லிய குரலில்.
ஆச்சர்யமாய் பார்த்தவன்.. “இந்த நேரத்துக்கா? மணி ஒன்பதாகப் போகுதும்மா. நாளைக்கு போலாம்.” என்றான்.
“நாளைக்கு சனிக்கிழமைடா, இன்னைக்குத்தான் நல்ல நாள்.” என்றார்.
மச்சானிடம் பேச்சை வளர்க்கும் ஆவலோடு.. “நல்லாவே சமைப்பேன். அதர் ஸ்டேட்டுக்கு சரக்கு ஏத்திக்கிட்டு கிளம்பினா வீட்டுக்கு வர பதினைஞ்சு இருபது நாளுக்கு மேல ஆகிடும். அத்தனை நாளும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டிருந்தா இந்நேரம் அல்சர்ல போய் சேர்ந்திருப்பேன்.
எப்போவும் இரண்டு டிரைவர் போவோம்.. மாத்தி மாத்தி சமைச்சிப்போம். அப்போதான் சமையல் கத்துக்கிட்டேன்.” என்றான்.
வான்முகிலன் இயல்பாய் உரையாடியது தமிழரசனிற்கு சந்தோசத்தை கொடுக்க.. இவர் பெரியாட்களோடு மட்டும்தான் இயல்பாய் பேசுவார் என தான் நினைத்தது தவறோ என யோசித்திருந்த நேரம்.. “என்னடா அமைதியாகிட்ட? என்ன விசயமா ஃபோன் செய்த?” என்றான்.
“என்ன இப்படி பொசுக்குனு கேட்டுட்டார்? என்ன கேட்கனு தெரியலையே..” என தமிழரசு முணகியது வான்முகிலனிற்கு கேட்டிட, தமிழை வீட்டிற்கு அழைத்து அம்மாவை அவனோடு பேச வைத்துவிட்டால் நிலா வீட்டிற்கு செல்லும் போது அம்மாவிற்கும் தயக்கம் குறையும் என யோசித்தவன்.. “சரி என்ன வேணும்னு யோசிச்சி வை, இப்போ இங்க சாப்பிட வா.. என் சமையல் எப்படியிருக்குனு சொல்லு.” என்றான்.
“நானா? அங்கையா?” என தயங்க.. “ஏன் வரமாட்டியா?” என வான்முகிலன் குரலுயர்த்த.. “இல்ல வரேன் மாமா..” என உடனே சம்மதித்தான் தமிழரசன்.