இந்த பர்மிட் என்றால் என்னவென்றெல்லாம் தேன்நிலாவிற்கு புரியவில்லை, ஆனால் தன் கணவன் இத்தனை நல்லவனா என்ற பெருமை வந்தது. அதுவும் எட்டு வருடத்திற்கு முன்னால் என்றால் வான்முகிலனின் வயது இருபது, அல்லது இருபத்தி ஒன்றுதான் இருக்கும். அந்த வயதில் அத்தனை நிதானம், பக்குவம், துணிவு என நினைக்க இவன் தன் கணவன் என்ற பெருமையை மீறி கர்வம் வந்தது.
“ஆனாலும் ரொம்ப கெட்ட வார்த்தை பேசுறார் அங்கிள்.” என்றாள் குறையாக.
சார் என்ற வார்த்தை மாறி அங்கிள் என சொன்னதில் தேன்நிலா, வான்முகிலனையும் தன்னையும் புரிந்துகொண்டாள் என்ற நிம்மதி வர.. “அப்படியாம்மா? எனக்கு தெரியாதே?” என அறியாத பாவனையில் சொல்லி, வான்முகிலனைப் பார்த்தவர்.. “கெட்ட வார்த்தைலாம் பேசுறியா முகிலா?” என்றார் கண்ணிமைத்து.
“பாஸ்.. பசிக்குது.” என்று வான்முகிலன் சிரிக்க.. மனைவியை விருந்துக்கு தயார் செய்ய பணித்தார்.
வான்முகிலனின் தொழில் எத்தனை டென்ஷன் ஆனதென்று செந்தாமரை அறியாததா.? லாரி வைத்திருப்பது பெரிதல்ல, அதற்கு பர்மிட்டும் தன் பெயரில் இருப்பதுதான் சிறப்பு, அதிலும் மாநிலத்திற்குள் சென்று வரும் லாரியென்றால் பர்மிட் வாங்குவது சுலபம்.. ஆனால் தேசிய அளவில் என்றால் பர்மிட் வாங்குவது மிகவும் அரிது.
தொழில் முறை போட்டிகளை தாண்டி, அத்தனை லாரிகளும் நில்லாமல் ஓட வேண்டும், சரக்கு பத்திரமாய் போய் சேரவேண்டும், வரும்போதும் சரக்கு ஏற்றிக்கொண்டு வந்தால்தான் லாபம் பார்க்க முடியும். எனவே அதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இடையே விபத்து நேர்ந்தால் அதனை எதிர்கொள்ளும் திறமை வேண்டும்.
பர்மிட், லைசன்ஸ் என அனைத்தும் சரியாக இருந்தாலும் நூறு, ஐநூறுக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தும் காவலர்களை சமாளிக்க டிரைவரை தயார் படுத்த வேண்டும், இப்படி பிரச்சனைகளை சந்திக்கும் தொழிலில், தேவையான இடங்களில் கடின வார்த்தைகளை பிரயோகித்தாக வேண்டிய சூழல் வரும் என செந்தாமரை அறிந்ததுதான்.
நேர்மையானவர்களுக்கு அதிகப்படியான கோபம் வரும்தானே.? அப்படித்தான் வான்முகிலனுக்கும்.. துரோகம், மற்றும் சொன்ன சொல் தவறுவது என்று யார் செய்தாலும் ஒருபிடி பிடித்திடுவான்..
நீ பர்மிட் வாங்கி கொடுத்து பெரியாளாக்கியவன் வயசு வித்யாசம் கூட பார்க்காம எப்படியெல்லாம் பேசுகிறான் என செந்தாமரையிடம் சொல்வார்கள்.. வான்முகிலன் வார்த்தையை அளந்து பேசுபவன். அவனறியாமல் எல்லாம் வார்த்தை வராது.
இப்படியானவர்களுக்கு இப்படி பேசினால்தான வேலையாகும் என்று அறிந்தேதான் பேசுவான் என நன்றாக அறிந்தவர் ஆதலால், தொழில் விசயத்துல யார் பேச்சையும் கேட்கமாட்டான் என்றிடுவார் செந்தாமரை.
“இப்போ சாப்பிட போலாமாம்மா?” என்றார் செந்தாமரை.
தேன்நிலா இன்முகத்தோடு சம்மதிக்க.. அமர்க்களப்பட்டது விருந்து. “இவளோ சாப்பிட முடியாது.” என தேன்நிலா மறுத்தும் கூட இடைவெளி இல்லாத அளவிற்கு இலையை நிரப்பியிருந்தாள் மகிழ்மதி.
பத்து மணியாகியிருக்க பசிதான் என்றாலும் காலை உணவிற்கு இத்தனை கறி மீன் எல்லாம் தேன்நிலாவால் சாப்பிடவே முடியவில்லை. இலையில் வைத்ததை மீதம் வைத்து எழுந்தால் தவறாக நினைப்பார்களோ என்ற அவஸ்த்தையோடு கணவனைப் பார்க்க..
“நீ எழுந்துக்கோ.” என மனைவி இலையை தன்னிடம் இழுத்து சாப்பிட ஆரம்பிக்க.. மகிழ்மதி, செந்தாமரை, அவரின் மனைவி, பணியாள் என அனைவரும் சிரிக்க.. தானும் சிரித்தபடி வான்முகிலன் உணவுண்பதில் கவனமாக, இதற்கு தானே சாப்பிட்டிருக்கலாம் என சங்கடமாகிவிட்டது தேன்நிலாவிற்கு.
சாப்பிட்டதும் கிளம்பிடலாம் எனப் பார்த்தால், இளஞ்சோடிகள் சந்தோசமாய் இருக்கட்டும் என செந்தாமரை அனுமதியளித்தாலும் மகிழ்மதி விடவில்லை.
“என் ஹஸ்பண்ட் உங்களை பார்க்கனும்னுருக்கார், மதியம் வந்துருவார், அவர் வந்தப்புறம்தான் கிளம்பனும்” என அன்பு கட்டளையிட்டு மதிய உணவும் உண்ண வைத்து, தேன்நிலாவிற்கு பட்டுசேலை, வான்முகிலனிற்கு உடை என சீர் கொடுத்து, “ரிசப்சன் எப்போனு இரண்டு நாள் முன்னாடியே சொல்லிடு முகிலா.. அப்போதான் அவரை வர வைக்க முடியும்.” என உரிமையாய் சொல்லி, மூன்று மணிபோல்தான் தம்பதிக்கு விடுதலை கொடுத்தனர் செந்தாமரை குடும்பத்தினர்.
காரில் அமர்ந்த பின்னேதான் மொபைலை பார்த்தவன்.. “இத்தனை போன் செய்திருக்கானுங்க.” என முணகியபடி, தவறவிட்ட அழைப்புகளை அழைக்க.. அனைவரும் ரிசப்சன் பற்றித்தான் கேட்டனர்.
“ரிசப்ஷன் வைச்சாலும் வைக்கலன்னாலும் உங்களுக்கு பார்ட்டி உண்டு.” என்ற பதிலையே அனைவருக்கும் கொடுத்தவன், மீண்டும் மொபைலின் ஒலியை முழுதாய் குறைத்து பாக்கட்டில் வைத்தவன்..
“இல்ல.. நமக்குள்ள பிரச்சனை வந்துடக்கூடாதுனுதான் சொன்னார். கூடவே நான் வெளில சொல்லாம நீங்க பார்த்துப்பிங்கனு உங்கமேல உள்ள நம்பிக்கையிலதான் சொன்னார்.” என தேன்நிலா சொல்ல..
“பார்டா..” என மெச்சுதலாய் சொல்லி, “உண்மைதான்.. ஆனாலும் உன் மேலயும் நம்பிக்கை வச்சிதான் சொன்னார், அதை காப்பாத்தனும்.. உன் அம்மா, என் அம்மா, முக்கியமா பிருந்தானு.. யார்கிட்டயும் மூச் விடக்கூடாது. சரியா?” என்றான் கட்டளையாக.
“எங்க போறது? எனக்கு தியேட்டர் பிடிக்காது” என்றாள் அவசரமாக.
“ம்.. தெரியும்.. தியேட்டர் போனா தலைவலி வரும்னு பிருந்தா சொன்னா.. கோவில்க்கு போலாமா? சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டிருக்க.” என்றான்.
“கறி சாப்பிட்டு குளிக்காம எப்படி கோவிலுக்கு போறது? நாம கார்லயே பேசிட்டிருக்கலாம்.”
“காருக்குள்ள இருந்தா முத்தம் கொடுக்க தோணுது. பரவால்லயா?” என்றான் தலைசாய்த்து கண்ணிமைத்து சிரிப்போடு.
தேன்நிலா தலைகுனிய.. “சரி.. சரி.. எதுவும் பண்ண மாட்டேன், நிமிரு.” என்றவன்.. “மாலுக்கு போலாம்.” என மாலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே இரண்டு மணிநேரம் பொழுதை கழித்து கிளம்பினார்கள்.
“சம்பாதிச்சா.. பத்து ரூபா பொருளை அம்பது ரூபா கொடுத்து வாங்கனுமா?” என்றாள் தாமதியாமல்.
“ம்.. யோசிக்க வேண்டிய விசயம்தான்.” என மெச்சியவன்.. “நானும் பரம்பரை பணக்காரன் கிடையாதுனு உனக்கு தெரியாதா?எனக்கும் பணத்தோட அருமை தெரியும்.இந்த மால்ல வெளில கிடைக்காத நிறைய பொருள்கள் இருக்கும். முக்கியமா லேடிஸ் திங்க்ஸ்.. பிருந்தா, ரோவக்காக்கு இங்க ஷாப்பிங் பண்ண ரொம்ப பிடிக்கும், அதனாலதான் அங்க அழைச்சிட்டு போனேன்.”
ரேவதியின் பெயரை சொன்னதும் தேன்நிலா முகம் தாழ்த்த.. ரேவாக்கா பற்றி இன்னொருநாள் பேசிக்கலாம் என.. “எல்லாரும் ரிசப்ஷன் கேக்குறாங்க. என்ன பண்ணலாம்.” என்றான்.
“ரிசப்ஷன் வைக்கலாம்.” என்றாள்.
“ஹே.. என்ன உடனே ஓ.கே சொல்லிட்ட? உனக்கு பிடிக்கலனுதான சொன்ன?” என வான்முகிலன் ஆச்சர்யப்பட, “ரிசப்ஷன் வைக்கலனா உங்களை தவறா நினைச்சிடுவாங்கனு தோணுது, அதான்..” என்றாள்.
“அதுக்காகலாம் சம்மதிக்க வேணாம், உனக்கு பிடிக்கலனா, நான் தனியாகூட பார்ட்டி பண்ணிப்பேன். உனக்கும் பிடிச்சா மட்டும் சொல்லு.” என்றான்.
“பிடிச்சிருக்கு, வைங்க.” என்றாள்.
வான்முகிலன் நம்பாமல் பார்க்க.. “நமக்கு கல்யாணம் ஆகிடுச்சினும், எப்படி ஆனதுனும்தான் ஊருக்கே தெரிஞ்சிடுச்சு. இனி ரிசப்ஷன் வச்சாலும் ஒரு வாரத்துக்கப்புறம் தை மாசம்தான் வைப்பிங்க.. அதுக்குள்ள நம்ம கல்யாணம் விருப்ப கல்யாணம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும்.” என்றாள் மெல்லிய குரலில்.
“ஆமாம்ல.?” என காதலோடு மனைவியை தன்னோடு சேர்த்துக்கொள்ள.. “முன்னாடி வண்டி வருது.” என விலக, “ஒன் வே ல முன்னாடி வண்டி வருதா?” என சிரித்தவன்.. “ம்.. பிருந்தா போன் செய்தாளா?” என்றான்.
“ம்.. காலைலயே பண்ணினா.”
“என்னவாம்?”
“அது எங்களுக்குள்ள..” என மறுத்தாள்.
என் அண்ணன் ரொம்ப நல்லவர், அவர்கிட்ட பழகிப் பார்த்தாதான் உனக்கு புரியும் என இரண்டு நாளாய் சொல்லிக்கொண்டிருந்தவளிடம், இன்று காலை அழைத்தபோது, இருவரும் வெளியே போகிறோம் என்று சொல்லவும், முத்தங்களை பரிசாக தந்து, பிருந்தா அடைந்த சந்தோசத்தை போனிலேயே உணர்ந்தாள் தேன்நிலா. அதை தற்போது நினைக்க, தேன்நிலா முகம் சிவந்தது.
தேன்நிலா தன்னை புரிந்துகொள்ளும்படியாக எதாவது பெருமை பேசியிருப்பாள் என தங்கையை உணர்ந்தவன்.. “பார்டா, என் தங்கையும் கூட உன்னை சிவக்க வைக்கிறாளா?” என்றான் கிண்டலாக.
தேன்நிலா ஜன்னல் பக்கம் திரும்பிக்கொள்ள..இரண்டு நாளாய் தன் மனதை குடையும் கேள்வியை கேட்க நினைத்து.. “கண்மணி குரூப்ஸ் ஆஃப் கம்பெணில நீ என்ன வேலை செய்யிற?” என்றான் விசாரணையாக.
வேலைக்கு போக வேணாம் என்பானோ என பதட்டமாய் பார்க்க.. “ஹேய்.. எல்லாத்துக்கும் பயப்படுவியா? அது கெமிக்கல் கம்பெணி ஆச்சேனுதான் கேட்குறேன். அடுத்தவன் சம்பாதிக்கிறதுக்கு என் பொண்டாட்டி பலிகடா ஆகிடக்கூடாதில்ல?
வேலைக்கு போறதெல்லாம் உன் விருப்பம். ஆனா உடம்புக்கு கெடுதல் இல்லாத வேலைக்கு போகனும். அதான் கேட்குறேன்.” என்றான்.
அக்கறையில் கேட்கிறான் என நிம்மதியானவள்.. “மருந்து தயாரிக்கிறதெல்லாம் மும்பையில.. பில்டிங் பிரம்மாண்டமா இருக்கும், ஆனா உள்ள குடோன் மாதிரிதான் நடக்கும்.
இங்க எவ்வளோ டேப்லட் வந்திருக்கு, எவ்வளோ சேல் ஆகியிருக்கு.. நெட் கேஷ் எத்தனை பேர் கொடுத்தாங்க.. கடன் வாங்குனவங்க லிஸ்ட்னு இப்படி விசயங்களை டெய்லி எம்.டிக்கு அப்டேட் பண்ற வேலை.” என்றதும் இவ்வளோதானா என்பதுபோல வான்முகிலன் பார்க்க..
“பிடித்தம் போக நாற்பதாயிரம் சம்பளம் தரார்னா எவ்வளோ வேலையிருக்கும்னு யோசிக்கனும். உங்க வேலையை தவிர மத்த வேலையெல்லாம் ஈஸினு நினைக்கக்கூடாது.” என்றாள் ரோசமாக.
சிரித்தவன்.. “சரி.. சரி.. ஒத்துக்கிறேன்.. நீ பெரிய உழைப்பாளின்னு ஒத்துக்கிறேன்.” என சரணடைந்து.. “பர்மிட் வாங்குறதுனா என்னனு உனக்கு தெரியலதானே? தெரிஞ்சிக்கனுமா சொல்லவா?” என்றான்.
“தெரியலதான்.. ஆனா தெரிஞ்சிக்க தோணல.” என்றாள் முகம் சுருக்கி.
கார் தெரு முனைக்குள் நுழைய.. “சரி தோணும்போது கேளு, சொல்றேன்.” என்றவன்.. ரிசப்ஷன் முடிஞ்சதும் பத்து நாளைக்கு லீவ் போடனும்.” என்றான் மைய்யலாக.
“பத்து நாளைக்கா? இப்போ நிறைய புது ஆர்டர்ஸ் வந்துட்டிருக்கு.. என்னால லீவ் கேட்கவே முடியாது.” என்றாள் தவிப்பாக.
“நீயா பேசி லீவ் போட்டுட்டினா பிரச்சனையில்ல, இல்லைன்னா..” என்க.. அச்சோ இவன் அரசியல் செல்வாக்கை வைத்து எம்.டி யையே மிரட்டுவானோ என தேன்நிலா முகம் அச்சம் காட்ட..
தேன்நிலாவின் மனமொழி புரிந்தவன்.. “உன் கம்பெனிக்கெல்லாம் வரமாட்டேன், ஆனா ரிசப்ஷன்க்கு அப்புறம் தினமும் நைட்ல தூக்கமில்லாம கண்ணெல்லாம் சிவந்திடும், வெளில தலைகாட்ட முடியாத அளவுக்கு உதடு வீங்கிடும். அப்புறம் வேற வழியே இல்லாம நீயா லீவ் போடுறமாதிரி ஆகிடும்.” என்றான் சிரிப்போடு.
தேன்நிலா தலைகுனிய.. காரை நிறுத்தி இறங்கியவன்.. இவள்புறம் கதவைத் திறந்து.. “வெளில வா.” என கை நீட்டினான்.
அச்சோ வீட்டுக்கு வந்தாச்சா? என்ற பாவனையோடு நிமிர.. இவர்களின் கார் சத்தம் கேட்டு வெளியே வந்த தமிழரசனைக் கண்டதும், “நானே இறங்கிக்குவேன்.” என சன்னக்குரலில் சொல்லி இறங்கினாள்.
தேன்நிலாவோடான பயணம் மிகவும் பிடித்திருக்க, மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்த நினைத்து.. “இன்னும் இரண்டு நாள் கழிச்சி பிருந்தாவை பொங்கலுக்கு அழைக்கப் போகனும். வேலைக்கு போய்ட்டு வந்து போலாம்னு ப்ளான் செய்தினா, நைட் அங்க ஒரே ரூம்ல தங்கறமாதிரி ஆகிடும். லீவ் போடனுமா வேணாமா பார்த்துக்கோ.” என மனைவியை சீண்டி,
வாசலில் நின்றிருந்த தமிழரசனிடம்.. “அத்தை மாமாகிட்ட அப்புறம் வரேனு சொல்லு தமிழா.” என்று தன் வீட்டிற்குள் காரை செலுத்தினான்.