“நீ ஏன் எழுந்த?படு.” என தன்னோடு சேர்த்துக்கொள்ள.. “எனக்கு குளிக்கனும்.” என்றாள்.
“ப்ச்.. இந்த படத்துல வரமாதிரி விடியகாலம் குளிக்கலனா மாமியார் திட்டுவாங்க, அப்படியிப்படிலாம் யோசிக்காத. இங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. பேசாம படு. எட்டு மணிபோல எழுந்துக்கலாம்.” என்றான் கட்டளையாக.
“பிருந்தா என்னை பார்க்க நினைப்பா. குளிச்சிட்டு வந்துடறேன்..” என கெஞ்ச.. “எட்டு மணிக்கு மேல பிருந்தாவைப் பார்த்தா ஆகாதா? பேசாம படு.” என்றான் மீண்டும்.
“அச்சோ.. எட்டு மணிவரைக்கும் தூங்கறதா? பத்து மணிக்கு மேல கூட தூங்கிக்கறேன். எனக்கு இப்போ குளிச்சாகனும்.” என பிடிவாதமாய் சொல்ல.. “ப்ச்..” என சலிப்பாய் மனைவியை விடுவித்து கண்மூடினான்.
பிருந்தா சொன்ன கபோர்டை திறந்து பார்க்க, அதில் டவலும் தேன்நிலா உடையும் இருந்தது. எடுத்துக் கொண்டு குளியலறை நுழைந்தாள். அரைமணி நேரம் வரை வெந்நீரில் குளித்து வர, உடலும் மனமும் இதமாய் உணர்ந்தது.
“பார்டா.. உன் டிரஸ் இங்க இருந்ததா? நான் கூட டவலோட வருவ.. என் லோயர் டிசர்ட்டை கொடுத்து உதவலாம்னு இருந்தேன்.” என சிரிப்போடு சொல்ல, “தூங்கலயா நீங்க?” என வான்முகிலனை பாராமல் வேலையில் கவனம்போல் முடியை டவலால் சுருட்டி கொண்டை முடிந்தாள்.
“எனக்கும் தூக்கம் போச்சு.” என தேன்நிலாவை அணைக்க, “அச்சோ..” என வாய்விட்டு அதிர்ந்தாலும், வான்முகிலனிடமிருந்து விலகவில்லை தேன்நிலா.
பொலிவான தேன்நிலா முகம் கண்டு மனம் குளிர்ந்த வான்முகிலன்.. “என்ன அச்சோ?” என சிரிக்க, “போய் குளிங்க, இல்ல தூங்குங்க.” என்றாள் தலைகுனிந்தபடி.
“இரண்டும் முடியாது.” என மீண்டும் சிரிக்க, தேன்நிலா தவிப்பாய் பார்க்க.. வெக்கப்படுவாள் என நினைத்தால் இதென்ன பாவனையென.. “என்ன?” என்றான் புருவம் சுருக்கி.
“இ.. இல்.. இல்ல.. நடக்கனுமா?” என திணற.. வான்முகிலன் புரியாமல் பார்க்க.. “தூக்கம் வரலனா நடப்பிங்கதான? அ.. அதான் கேட்டேன்.” என மீண்டும் பரிதவிப்பாய் பார்க்க.. பிறகுதான் வான்முகிலனிற்கு புரிய.. “ஏய்.. அதில்லடி.” என அணைத்துக்கொண்டான் தன்னோடு.
வெட்கம் உயிரை தின்றபோதும் வான்முகிலனிற்கு மறுக்க முடியவில்லை என்பதோடு தேன்நிலாவால் கணவனுக்கு மறுக்க தோன்றவில்லை என்பதே உண்மை.
சிறு மறுப்பும், விருப்பமின்மையும் காட்டாத தேன்நிலா மீது பித்தான வான்முகிலனிற்கு நேரம் சென்றதே தெரியவில்லை.
தேன்நிலா தண்ணீர் குடிக்க எழும்போது லைட்டை போட, அப்பொழுது நேரம் பார்த்தபின்னேதான் அதிகாலை வரை தூங்கவிடாமல் செய்திருக்கிறோம் என உணர்ந்தான் குற்றவுணர்வோடு.
பிறகு தேன்நிலாவை உறங்கச்சொல்ல, உறங்கியவள் இப்படி இந்நேரமே எழுந்து குளிப்பதற்கு பிடிவாதம் செய்வாள் என நினைக்கவில்லை வான்முகிலன்.
தற்போதும் அவளை உறங்க வைக்க வேண்டிதான் இரண்டும் முடியாது என்றான். ஆனால் புதுக் கணவனுக்கான சீண்டலோடு சொல்ல.. அதை தனக்கான தேடல் என நினைத்து பரிதவிக்கும் மனைவியிடம் மொத்தமாய் மயங்கிய வான்முகிலன் அணைத்திருந்தவளை தன்னோடு புதைத்துக்கொண்டான்.
தற்போதும் மறுப்பின்றி தேன்நிலா வான்முகிலனுள் கட்டுண்டு இருக்க, தான் உறங்கவில்லை என்றால் இவள் உறங்கமாட்டாள் என தானே விலக்கியவன்.. “நீ முழிச்சிருந்தா எனக்கு தூக்கம் வராது, கொஞ்ச நேரம் தூங்கு.. குளிச்சிட்டு வந்து நானும் தூங்கறேன்.” என குளியலறை புகுந்தான்.
மெத்தை விரிப்பு மாற்றியிருந்ததை கண்டு, உண்மையில் உறங்க சொன்னான் போல என ஆசுவாசத்தோடு கட்டிலில் அமர்ந்தவள் தற்போதுதான் அறையை முழுதாய் நோட்டமிட்டாள்.
நேற்றை அலங்காரத்தில் வான்முகிலன் மீதான ரேவதியின் பாசம் புரிந்தது. ரேவதி பற்றி பிருந்தா சொன்னதையும் நினைத்தவள், கடவுளே உயிர்தோழிக்காகவும், கணவனிற்காகவும் பழைய மனக்கசப்பை மறந்து அவங்களோட இயல்பா இருக்குற மனநிலையை கொடு என வேண்டியபடி தலையில் இருந்த துண்டை கழற்றி முடியை உலர்த்திக்கொண்டிருந்தாள்.
குளித்து வந்த வான்முகிலன்.. “தூங்கலயா நீ?” என முறைத்தபடி கபோர்டை திறக்க, அங்கே புதுப்பை இருப்பதை பார்த்து.. நிலாவோடதா இருக்கும் என நகர்த்தி தனது உடையை எடுக்க, கீழே விழுந்த பையிலிருந்து சிறிய நகைப்பெட்டியை கண்டவன் எடுத்து ஆராய.. “ஹே.. இதென்ன உன் மோதிரமா? உன் சம்பாத்தியத்துல வாங்கினதா?” என பெருமையாய் கேட்டபடி தனது சுண்டுவிரலில் போட முனைய.. “இல்ல, அது உங்களுக்கில்ல.” என்றாள் அவசரமாக.
“ஏன்? உன் மோதிரம் நான் போடக்கூடாதா?” என முறைக்க.. “என் மோதிரம் போடலாம். அது பிருந்தாக்கு வாங்கினது. அவளுக்குத்தான்.” என்றாள் சன்னக்குரலில்.
“பிருந்தாக்கா?” என ஆச்சர்யமானவன்.. “நம்ம கல்யாணத்துக்கு அவதான நமக்கு கொடுக்கனும்? நீ எதுக்கு வாங்கின?” என்றான்.
“இ..இது அவ கல்யாணத்தப்போ அவளுக்கு கொடுக்க வாங்கினது. அப்போ கொடுக்க முடியல, அதான் இங்க வரும்போது எடுத்துட்டு வந்தேன்.”
பிருந்தா திருமணத்திற்கு ரேவதியும், சுப்புலஷ்மியும் ஏதேனும் சொல்வார்களா என்ற பயம், வான்முகிலனோடு காதல் வந்த பின்னே அது ஈடேற வாய்ப்பே இல்லை, எனவே யார் உறவும் வேணாம் என நினைத்ததால் கொடுக்க வேணாம் என முடிவெடுத்தது, பிறகு தன் திடீர் கல்யாணம் கொடுத்த அதிர்ச்சி, அதன் பின்னே கணவன் வீட்டிற்கு சென்ற பிருந்தாவை நேற்றுதான் நேரில் பார்த்தாள்.
இக்காரணங்களால் கொடுக்க முடியாமல் போனதை எவ்வாறு சொல்வதென.. “கல்யாணத்துக்கு முன்னவரைக்கும் ஃபோன்லதான் பேசினோம். அதுக்கப்புறம் நேத்துதான் நேர்ல பார்த்தேன், நேத்தும் எல்லார் முன்னாடியும் எப்படி கொடுக்கனு ஒருமாதிரி இருந்தது. அதான்..” என்றாள் தயக்கத்தோடு.
“அநியாயத்துக்கு நல்லவளா இருக்கியேடி.” என அணைக்க, பிருந்தா திருமணத்திற்கு வாங்கியதை தனது திருமணம் முடிந்த பின்பு கொடுத்தால், அன்று பிருந்தா வீட்டிற்கு வந்தபோது திட்டி அனுப்பியதை நினைத்து, இத்தனை நாள் ஏன் கொடுக்கல? அப்போ என்னை தலைமுழுகனும்னு நினைச்சியா என பிருந்தா கோபிப்பாள் என்பது முன்பு நினைத்த காரணங்களை விட முக்கிய காரணமாக இருக்க.. “இதை நீங்களே கொடுத்துடுறிங்களா?” என்றாள்.
ஆறு மணியாகியிருக்க, தோழியை காணும் ஆவலோடு ஐந்து மணிக்கே எழுந்த இந்தபிருந்தா இதற்கு மேல் தாளமுடியாமல் வெளியே வந்து வான்முகிலன் அறையை தட்டினாள் மெதுவாக.
சுப்புலஷ்மி கிச்சனில் இருக்க, ரேவதி.. “எதுக்கு இந்நேரத்துக்கே எழுப்பற?” என முறைத்தபடி கிச்சனிற்குள் சென்றுவிட, தேன்நிலா மீது இன்னும் வெறுப்பு குறையலையா? நேற்று அத்தனை அக்கறையாய் பேசினாங்களே என்ற குழப்பத்தோடு பிருந்தா நின்றிருக்க, கதவைத் திறந்தாள் தேன்நிலா.
“நிலா…” என கண்களை அகல விரித்தவள்.. “வா.. வா.. வா..” என தனதறைக்கு அழைக்க, அங்கே சுபாஷ் இருப்பார் என்பதாலும், வெளியே ரேவதி சுப்புலஷ்மி இருப்பார்கள் என்பதாலும், “நீ வா உள்ள.” என தோழி கையை இழுக்க.. முதலிரவு நடந்த அறை என்பதால் உள்ளே செல்ல பிருந்தா மறுக்க.. “ப்ச்.. வா.” என கதவை நன்றாக திறந்து அறைக்குள் போனாள் தேன்நிலா.
அறையை சுற்றியிருந்த அலங்காரங்கள் அப்படியே இருக்க, மெத்தை விரிப்பு மட்டும் ஓர் மூலையில் இருந்தது. சாட்ஸ் டிசர்ட்டோடு வான்முகிலன் உறங்கிக்கொண்டிருக்க, பிறகுதான் தோழியை ஊன்றிப் பார்த்தாள்.
பாதி உலர்ந்திருந்த முடியை பார்த்து முன்னரே எழுந்து குளித்திருப்பாள் போல என நினைத்தாள். தேன்நிலாவின் கண்கள் சிவப்பேறியிருக்க, முகம் காட்டிய பொலிவில் மனம் மகிழ்ந்த பிருந்தா.. அணைத்துக்கொண்டாள் தோழியை.
“பிருந்தா.” என வெளியிலிருந்து சுப்புலஷ்மி அழைக்க, “ம்மா.” என வெளியே வந்தவளிடம், “உங்கண்ணனுக்கும் அண்ணிக்கும் கொடுத்துட்டு வா. உனக்கு கசாயம் வைக்கிறேன்.” என டீ யை கொடுத்து சென்றார்.
இவர்கள் பேச்சரவத்தில் வான்முகிலன் எழுந்திட, தேன்நிலா.. “நீங்க தூங்குங்க.” என்றாள் அக்கறையாக.
இவள் தூங்கவில்லை என்ற கோபத்தில்.. “இப்படி நைய்ய நைய்யனுட்டிருந்தா எப்படி தூங்குறது?” என கடிந்து, பிருந்தாவிடம்.. “நீ ஏன் இந்நேரத்துக்கே எழுந்துட்ட? உன் ஃப்ரண்டை நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றான் பொய்க் கோபத்தோடு.
“அதில்லண்ணா.. புது இடம்ல்ல? நிலா எதையும் வெளிப்படையா சொல்ல மாட்டா. இப்போ கூட பாருங்க.. முன்னவே எழுந்து குளிச்சிருப்பா போல, முடி எவ்வளோ காஞ்சிருக்கு.. ஆனா வெளில வரல.. டீ, காபி தேவைப்பட்டாலும் கேட்கமாட்டானுதான் வந்தேன்.” என்றாள் பாவமாக.
மங்களத்திடமிருந்து அழைப்பு வர.. “அம்மா..” என்றாள்.
“ம். எழுந்துட்டேன், ம்.. குளிச்சாச்சு.” என்க.. “இங்க கொடு நான் பேசுறேன்.” என வாங்கிய பிருந்தா.. “ஆன்ட்டி நிலாவை நான் பார்த்துப்பேன்.” என்றாள் சந்தோசத்தோடு.
“எல்லாரும் பார்த்துப்பிங்கனு தெரியும் பிருந்தாம்மா, நான் சும்மா எழுந்துட்டாளானு தெரிஞ்சுக்கத்தான் போன் செய்தேன்.” என்றவர்.. “மோதிரம் பிடிச்சிருந்ததா?” என்றார்.
“மோதிரமா? என்ன மோதிரம்?” என பிருந்தா கேட்க, தேன்நிலா தடுமாற.. “அது சரி.. இன்னும் நிலா உன்கிட்ட கொடுக்கலயா?” என சிரித்து.. தேன்நிலா மோதிரம் வாங்கியதை விவரித்து.. “எனக்கே ஒரு வாரம் முன்னதான் சொன்னா..
அன்னைக்கே உனக்கு பிடிச்ச கலர்ல ஒரு சேலையும் வாங்கியிருக்கா, மாசமா இருக்க பொண்ணுக்கு புதுசேலை கொடுக்க கூடாதுனு நான்தான் இப்போ கொடுக்காத, தண்ணியில நனைச்சு எடுத்தபின்ன கொடுத்துக்கலாம், இப்போ மோதிரம் மட்டும் கொடுன்னுட்டேன்.” என்றார் மகிழ்வோடு.
தோழியை முறைத்தவாறு.. “சரிங்க ஆன்ட்டி, நான் அப்புறம் பேசுறேன். டீ ஆறுது.” என இணைப்பை துண்டித்து, “உன் மோதிரம் எனக்கு தேவையில்லை.” என எழுந்தாள் சிறு கோபத்தோடு.
வான்முகிலன் ஆச்சர்யமாய் பார்க்க, “ரேவாக்கா பிரச்சனை செய்ததுக்கு அப்புறமும் எனக்காக வாங்கிருக்க.. ஆனாலும் கொடுக்கக் கூடாதுனு நினைச்சிருக்க.. அப்போ.. அன்னைக்கு இனி என்னோட பேசாதே.. பார்க்க வராதேனு சொன்னதெல்லாம் கோபத்துல இல்ல, நல்லா யோசிச்சு உள் மனசுலயிருந்து உண்மையாத்தான் சொல்லியிருக்க.. அப்படித்தான?” என தேன்நிலா நினைத்தவாறே சண்டைக்கு தயாரானாள் இந்துபிருந்தா.
அன்று தேன்நிலா நடந்துகொண்டதை பிருந்தா சொல்லி அழுதாள்தான்.. ஆனால் அப்போது அதை பெரிதுபடுத்தவில்லை வான்முகிலன்.
தேன்நிலா வருந்தி பேசவும், கோபத்தை இழுத்து வைக்க முடியாமல்.. “டீ ஆறுது, முதல்ல குடி.” என இருவருக்கும் கொடுக்க, “நீ குடிக்கல.?” என தேன்நிலா கேட்க.. “ம்ஹும் குடிச்சேனா ஒரு டம்ளர் டீக்கு இரண்டு டம்ளரா வெளில வரும். நீ குடி நான் குளிச்சிட்டு வரேன்.” என வெளியேறினாள்.
“அப்போ.. நான் கல்யாணத்துக்கு கேட்கும் முன்னவே என்னை விரும்பியிருக்க.. ஆனாலும் சொல்லல, அதோட என் விருப்பம் சொன்ன பின்னகூட கல்யாணத்துக்கு சம்மதிக்கல.” என வான்முகிலனும் முறைக்க..