மனையாளின் வருகையில் அவள் பக்கம் திரும்பியவன், அவள் கதவை மூடியதும், “வெல்கம் மிமி” என்று கூற,
“தேங்க்ஸ் ஃபார் தி வார்ம் வெல்கம் மான்ஸ்டர்” என்றாள்.
இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.
அம்ரிதா, “என்னாச்சு! தூக்கத்தில் முழிச்சு கால் வலிக்குதுனு சொன்னாளா?” என்று வினவியபடி மகளின் தலை பக்கம் அமர்ந்தாள்.
“இல்லல்ல.. இன்னைக்கு கொஞ்சம் அதிகமா ஆட்டம் போட்டுட்டா.. நடுராத்திரி தூக்கத்திலேயே கால் வலிக்குதுனு அனத்த வாய்ப்பு இருக்குது.. அதான் இப்பவே கொஞ்சம் பிடித்து விடுறேன்” என்றான்.
பின், “நம்ம ஷேரிங்கை பாலில் இருந்து ஆரம்பிப்போம்.. நீ குடிச்சுட்டு கொடு.. எனக்கு சும்மா ஒரு மடக்கு போதும்” என்றான்.
லேசாக உதட்டை பிதுக்கியவள், “எனக்கு வெறும் பால் பிடிக்காது.. ஆனா அத்தமா ஒரு டம்பளர் கொடுத்து இருக்கிறாங்க” என்றாள்.
அவளை செல்லமாக முறைத்தவன், “சொல்லிட்டு தானே வந்தேன்! நீ குடிக்க மாட்டேனா அரை டம்பளர் மட்டும் வாங்கிட்டு வர வேண்டியது தானே!” என்றான்.
“அது.. முதல் முறை.. மறுக்க வேணாமேனு சொல்லலை”
“சரி.. சம்பிரதாயத்துக்கு ஒரு வாய் குடிச்சிட்டு தா”
“மீதியை நீங்க குடிச்சிடுவீங்களா?”
“எனக்கும் வெறும் பால் பிடிக்காது”
“அப்போ என்ன செய்ய!”
“அப்படியே வைக்க வேண்டியது தான்”
“ப்ச்”
“என்ன?”
“பால் கெட்டு போய்டும்.. கொட்டவும் எனக்கு மனசு வரலை” என்றதும் அவன் சிரித்தான்.
“என்ன சிரிப்பு?”
“சும்மா”
அவள் புருவத்தை சுருக்கி பார்க்கவும்,
“காரணத்தை சொன்னா நீ நிஜமாவே மிமியா மாறிடுவ” என்றான்.
“நீங்க ரொம்ப தான் பயந்தவர்”
“அப்போ சொல்லலாம்னு சொல்ற!”
“ஹ்ம்ம்”
“இப்பவே சொல்லிட்டேன்.. நீ தான் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்னு கேட்டு இருக்க! சொன்னதுக்கு அப்புறம் கோபப்பட்டா கம்பெனி பொறுப்பாகாது”
“பில்டப்ப நிறுத்திட்டு விஷயத்தை சொல்லுங்க”
“நீ பீல் செய்ற அளவுக்கு இந்த பாலில் பெருசா சம்பிரதாயம்லாம் கிடையாது.. மாப்பிள்ளை அவுட் ஆகாம நின்னு ஆடவும், பொண்ணு அவுட் ஆகாம தெம்பா இருக்கவும் தான் சொம்பு நிறைய பால்” என்று கூறி கண்சிமிட்டினான்.
பால் சொம்பை அருகில் இருந்த சிறு முக்காலியில் வைத்துவிட்டு அவனை அவள் முறைக்க,
அவனோ, “நீ தான் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்னு சொன்னது” என்று தோளை குலுக்கினான்.
“அதுக்காக ஒரு பொண்ணு கிட்ட இப்படி பேசுவீங்களா?”
“இந்த பொண்ணு கிட்ட மட்டும் பேசலாம்.. தப்பில்லை”
“இந்த பொண்ணு கிட்டயும் பேசக் கூடாது”
“நீ தானே பிரெண்ட்னு சொன்ன!”
“நீங்க சொன்னீங்க.. நான் ஓகே சொன்னேன்”
“ஓகே சொன்ன தானே!”
“அதுக்கு!”
“நாங்கலாம் பிரெண்ட்ஸ் குள்ள இதுக்கு மேல பேசுவோம்”
“ஓ! சாருக்கு கேர்ள் பிரெண்ட்ஸ் அதிகமோ!” என்று அவள் காரமாக வினவ,
“மிமி!” என்று முணுமுணுதத்தவன், “பொறாமை!” என்றான் நமட்டு சிரிப்புடன்.
“ஒரு ஆமையும் இல்ல.. ஜஸ்ட் ஒரு ஜெனரல் நாலேட்ஜுகு கேட்டேன்”
“ஓ!”
“நக்கலு!”
“அப்படியா தெரியுது!”
“ஆமா”
“அப்போ அப்படி தான்”
மீண்டும் அவனை முறைத்தவள், “பதிலை சொல்லுங்க” என்றாள்.
“எந்த பதிலை?”
“ரெண்டுத்துக்கும் தான்”
“காலேஜ் படிக்கிறச்சே பிரெண்ட்டா கேர்ள்ஸ் இருந்தாங்க.. ஆனா எல்லாருமே வெறும் பிரெண்ட் மட்டும் தான்.. பைனல் இயர் லாஸ்ட் டேஸ்ஸப்ப பசங்க பொண்ணுங்கனு கொஞ்சம் க்ளோஸ்ஸா பேசிப்போம் தான்..
சில பசங்க எல்லார் முன்னாடியும் சில கேர்ள் பிரெண்ட்ஸ் கிட்ட இப்படி ஓப்பன்னா பேசி கேட்டு இருக்கிறேன் பட் நான் பேசியது கிடையாது..” என்றவன்,
“ஆனா நான் உன் கிட்ட மட்டும் பேசலாம்.. தப்பில்லை.. ஏன்னா நீ ஸ்பெஷல் இல்லையா!” என்று கூறி மீண்டும் கண் சிமிட்டினான்.
“அது என்ன ஸ்பெஷல்?”
“டாலி அம்மா எனக்கு ஸ்பெஷல் தானே!”
“ஓ! அப்படி!”
“எஸ்”
“சரி உங்க காதலைப் பத்தி சொல்லுங்க”
“என்ன திடீர்னு?”
“சும்மா தெரிஞ்சுக்க தான்”
“கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம்.. ஆனா மெல்ல.. இன்னைக்கே இல்ல”
“ஏன்? அதான் நாம க்ளோஸ் ஆனதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்னீங்களே!”
“நாம இன்னும் க்ளோஸ் ஆகலையே!”
“க்ளோஸ் ஆகாம தான்! ஸ்பெஷல் பிரெண்ட்னு சொல்லி அப்படி பேசினீங்களா?”
“அப்போ நாம க்ளோஸ் ஆகிட்டோம்னு சொல்ற!”
“ஆமா!”
“அப்போ ஏன் நான் அப்படி பேசியதுக்கு கோபப்பட்டீங்க மேடம்!”
“அது.. திடீர்னு பேசவும்” என்று இழுத்து நிறுத்தினாள்.
“நீ தானே நான் சட்டென்று மாறுது வானிலை மாதிரி சட்டென்று மாத்துறேன் மனநிலையைனு சொன்ன! அதான் இப்படி.. இனி பழகிக்கோ”
‘எது! பழகிக்கோவா!’ என்று சிறு அதிர்வுடன் அவள் பார்க்க, அவன் சிரிப்பை அடக்கியபடி, “எஸ்! பழகிக்கோ” என்றான்.
“நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?”
“கெட்டவனும் இல்லை நல்லவனும் இல்லை”
“மான்ஸ்டர்!”
“அதே தான்.. எல்லாமே இருக்கு ஆனா இல்ல தான்” என்றவன், “உன்னைப் பத்தி சொல்லு” என்றான்.
“அதை பத்தி நான் நினைக்கக் கூட விரும்பலை”
“உன்னோட பாஸ்ட்னா அது மட்டும் இல்லை.. உன்னோட இனிமையான ஸ்கூல் டேஸ், காலேஜ் டேஸ்னு எவ்வளவோ இருக்குது.. அதுக்குன்னு அதை பத்தி பேசவே மாட்டேன்னு சொல்ல மாட்டேன்.. ஒரே ஒரு முறை மட்டும் அதை பத்தி கேட்பேன்.. அது எப்போனா! உனக்கா சொல்ல தோனுறப்ப அதை பத்தி சொல்லு, அப்போ கேட்கிறேன்.. இப்போ உன்னோட பிரெண்ட்ஸ் பத்தி சொல்லு” என்றவன், “என்னை கேட்டியே! உனக்கு பசங்க பிரெண்ட்ஸ் இருந்தாங்களா?” என்று கேட்டான்.
“என்னோட முதல் பிரெண்ட் என்னோட அப்பா தான்.. ஸ்கூல் டேஸ்ல ரொம்ப க்ளோஸ்னா ஒருத்தி தான் பட் அவ கூட இப்போ காண்டக்ட்டே இல்ல.. அப்புறம் பசங்க பிரெண்ட்! எஸ், காலேஜ் படிக்கிறச்சே ஒருத்தன் இருந்தான்.. பட் அவன் கூடயும் இப்போ காண்டக்ட் இல்ல”
“ஏன் காண்டக்ட் இல்ல?” என்று அவன் கேட்ட போது, தூக்கத்தில் இருந்து விழித்த ஆதினி, “டாடி” என்றபடி எழுந்து அவனை கட்டிக் கொண்டாள்.
சட்டென்று வாயின் மேல் விரலை வைத்து அம்ரிதாவை பேசாதே என்பது போல் செய்கை செய்தவன், மகளின் முதுகை தட்டிக் கொடுத்தபடி எழுந்து சென்று குழல் விளக்கை அனைத்து விடிவிளக்கை போட்டுவிட்டான். பின் நடந்தபடி மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்.
அவன் ஒரு பாடலை பாடி முடிக்கவும், ஆதினி நன்றாக உறங்கி இருக்க, அவளை நடுவில் படுக்க வைத்துவிட்டு மிக மெல்லிய குரலில், “நீ இந்த பக்கம் படு.. நான் அந்த பக்கம் படுத்துக்கிறேன்” என்றான்.
‘சரி’ என்பது போல் தலையை ஆட்டியவளும் மிக மெல்லிய குரலில், “குட் நைட்” என்றாள்.
மென்னகையுடன், “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றவன் படுத்துக் கொண்டான்.
ஆனால் இரண்டே நொடிகளில் அவன் எழு, அப்போது தான் படுத்து இருந்த அம்ரிதாவும் எழுந்தபடி, “என்ன?” என்றாள்.
மென்னகையுடன், “பால்” என்றபடி எழுந்து வந்து பாலை குவளையில் ஊற்றி குடித்தான். கிட்டத்திட்ட முழுவதையும் குடித்தவன் ஒரு மிடறை மட்டும் மிச்சம் வைத்து, குவளையை அவளிடம் நீட்டினான்.
குவளையை வாங்கியபடி, ‘என்னவோ சொன்னீங்க!’ என்பது போல் பார்க்க,
அவன் மென்னகையுடன் மெல்லிய குரலில், “இனி உனக்கு பிடிக்காதது எதுவும் இந்த வாழ்க்கையில் நடக்காது” என்று கூறினான்.
அதை குடித்தவள், “பிடிக்காததை நீங்க குடிச்சீங்களே! அப்போ இந்த வாழ்க்கையில் உங்களுக்கு பிடிக்காதது நடக்குமா!” என்றாள்.
அவனோ வசீகர புன்னகையுடன், “பிடிச்சவங்களுக்காக பிடிக்காததை செய்யும் போது கூட அதில் பிடித்தமே இருக்கும்!” என்று கூறி கண்சிமிட்டினான்.
அவனை அவள் நெகிழ்ச்சி கலந்த பிரம்மிப்புடன் பார்க்க, அவன் அவளது கையில் இருந்து குவளையை வாங்கியபடி சொம்பையும் எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி நகர்ந்தான்.
அப்பொழுது தான் சுயம் பெற்றவள், “நான்..” என்று ஆரம்பிக்க,
திரும்பி நின்று உதட்டின் மீது விரலை வைத்தபடி மகளை சுட்டி காட்டியவன் மெல்லிய குரலில், “நான் பார்த்துக்கிறேன்.. நீ படு” என்றுவிட்டு சென்று இரண்டையும் நீரில் கழுவி எடுத்து வந்து முக்காலி மீது வைத்தான்.
பின் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவளிடம், “குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றுவிட்டு சென்று படுத்துக் கொண்டான்.
அவளும், “குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றுவிட்டு படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் இருவரும் மன நிறைவுடன் உறங்கினர்.