விநாயகம் அழைப்பை எடுத்து, “குட் மார்னிங் சார்” என்று விறைப்பாக கூறியதும்,
“குட் மார்னிங்.. உங்க பையன் கிட்ட விசாரிச்சு சொல்லச் சொன்னேனே! என்னாச்சு?” என்று கேட்டான்.
“சாரி சார்.. ரெண்டு நாளா எனக்கு நைட் டுட்டி.. பையனை பார்க்க முடியலை”
“ப்ச்.. என்ன அண்ணா இப்படி பதில் சொல்றீங்க! போனில் கேட்டு இருக்கலாமே!”
“இல்ல சார்.. இது பொண்ணு விஷயம்.. அதான் கொஞ்சம் சூதானமா இருக்க நேரில் பேசலாம்னு நினைச்சேன்.. ஒருவேளை அந்த பையன் என் பையனோட பிரெண்டா இருந்தா! அதான் நேரில் அவன் முகத்தை பார்த்து பேச நினைச்சேன்.. இன்னைக்கு சாயுங்காலம் கண்டிப்பா கேட்டு சொல்லிடுறேன் சார்”
“ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. சரி சாயுங்காலம் கண்டிப்பா விசாரிச்சு சொல்லிடுங்க”
“கண்டிப்பா சார்” என்றவர், “ஏதும் பிரச்சனையா சார்?” என்று இழுத்தபடி கேட்டார்.
“தெரியலை.. பிரச்சனை இருக்க கூடாதுனு தான் நினைக்கிறேன்.. பார்க்கலாம்” என்றவனின் குரலில் சிறு சஞ்சலம் எட்டி பார்த்தது.
“சார்!”
“என்ன அண்ணே?”
“இல்ல.. நீங்க இதுவரை இப்படி சொன்னது இல்லை.. அதான்” என்று இழுத்து நிறுத்தினார்.
“நைட்டெல்லாம் அழுது இருக்கா.. கேட்டதுக்கு ப்ரேக்-அப் ஆகிடுச்சுனு சொல்றா.. ஆனா எனக்கு என்னவோ, ஏதோ சரி இல்லைனு தோணுது.. கொஞ்சம் சீக்கிரம் விசாரிச்சு சொல்லுங்க”
“கண்டிப்பா சார்”
“சரி” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
அம்ரிதா, “மலர் சொன்னது போல ப்ரேக்-அப் தான் காரணமா இருக்கலாமே!” என்றாள்.
மறுப்பாக தலை அசைத்தவன், “அதை சொல்லும் போது அவ கண்ணில் வலியையும் வேதனையையும் விட, தவிப்பும், பயமும், பதற்றமுமே பிரதானமா இருந்தது.. கண்டிப்பா ஏதோ சரி இல்லை.. என் கிட்ட சொல்ல முடியாத விஷயமா இல்ல என் கிட்ட சொல்ல பயப்படுறாளானு தெரியலை” என்றான்.
பின், “ஆன்ட்டி அங்கிள் வேற நாளைக்கு காலையில் தான் ஊரில் இருந்து வராங்க.. சாயுங்காலம் எதுக்கும் அவ மேல ஒரு கண்ணு வச்சுக்கோ.. யூசுவல்லா சாயுங்காலம் அஞ்சேகாலுக்குள்ள வீட்டுக்கு வந்திடுவா.. அவ வர லேட் ஆனா எனக்கு போன் போட்டு சொல்லு” என்றான்.
“சரி”
“என்ன சொல்ல வந்த?”
“டாலிய ரொம்ப அருமையா வளர்த்து இருக்கிறீங்க”
புன்னகையுடன், “தன்க்யூ” என்றவன், “திடீர்னு என்ன?” என்று கேட்டான்.
“முன்னாடியே சொல்லணும்னு நினைத்தேன் தான்.. சொன்னது இல்லை.. இப்போ அவளுக்கு பேட் டச் சொல்லி கொடுத்தேன்.. அதுக்கு அவ நீங்க சொல்லி தந்ததை சொன்னா.. தப்பிக்கிறதுக்கும், அடுத்து எப்படி செயல்படனும்னும் அழகா ஸ்கெட்ச் போட்டு சொல்லி கொடுத்து இருக்கிறீங்க.. அண்ட் தப்பிக்கிறது மட்டுமில்லாம தாக்கவும் சொல்லி கொடுத்து இருக்கிறீங்க.. இப்பவே தைரியத்தை ஊட்டி வளர்க்கிறீங்க.. ஹட்ஸ் ஆஃப் டு யூ”
“ஹே! இவ்ளோ புகழ்ற அளவுக்கு பெருசா எதுவும் நான் செய்யலை.. இப்போ இருக்கிற காலகட்டத்தில் பெண் குழந்தைகளை இப்படி தான் வளர்க்கணும்..
இதே பையனா இருந்தாலும் பேட் டச் பத்தி இதே மாதிரி சொல்லிக் கொடுத்து இருப்பேன்.. கூடவே அவனும் யாரையும் அப்படி டச் செய்யக் கூடாதுனும், அப்படி யாரும் ஒரு பெண் குழந்தை கிட்ட நடந்துக்கிறதை பார்த்தா அந்த குழந்தையை காப்பாத்துறது அவன் கடமைனும் சேர்த்து சொல்லி கொடுத்து இருப்பேன்”
“எஸ், இதான் சரி.. பசங்களை வளர்க்கும் போதே சரியா சொல்லிக் கொடுத்து வளர்க்கணும்.. உங்களோட இந்த எண்ணத்திற்கு தான் ஹட்ஸ் ஆஃப்னு சொல்றேன்”
“போதும்.. போதும்.. டாலி கிளம்பிட்டாளா?”
“குளிச்சிட்டு இருந்தா.. ட்ரெஸ் செய்து இருப்பா.. நான் போய் பார்க்கிறேன்” என்றபடி உள்ளே செல்ல, அவனும் அவள் பின்னே சென்றான்.
இருவரும் கூடத்திற்கு சென்ற போது, “அம்மா நான் ரெடி” என்றபடி ஆதினி அங்கே வந்தாள்.
“வாவ்! யூனிபார்ம் போட்டு டாலி சூப்பரா கிளம்பிட்டீங்களே! வாங்க அம்மா தலை சீவி விடுறேன்”
குழந்தையோ தந்தையைப் பார்க்க,
அவன் மென்னகையுடன், “இனி அம்மாவே டாலிக்கு தலை சீவி விடுவாங்க” என்றான்.
“ஆனா டாடி ஊட்டி விடனும்”
“ஓகேடா” என்றபடி மகளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டவன், “டாலி தலை சீவி கிளம்பும் போது டாடி கூடவே இருக்கிறேன்” என்றதும் தான் குழந்தையின் முகம் மகிழ்ச்சில் பிரகாசித்தது.
அதே மகிழ்ச்சியுடன், “லவ் யூ டாடி” என்றபடி தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“மீ டூ லவ் யூ பேபி” என்றவன் மீண்டும் மகளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
அம்ரிதா, “எனக்கு” என்று கேட்க,
மகள் மறுமொழி கூறும் முன், “லவ் யூ மம்மி” என்றிருந்த அவ்யுதகண்ணன் மாயக்கண்ணனாக வசீகர குறும்பு புன்னகையுடன் கண் சிமிட்டினான்.
“கிஸ் கொடுங்க டாடி.. அன்னைக்கே நீங்க கொடுக்கலைனு அம்மா அழுதாங்களே!”
அவனது ‘லவ் யூ’-விலேயே அதிர்ந்திருந்த அம்ரிதா மகளின் கூற்றில், ‘எது! இவர் கிஸ் கொடுக்கலைனு நான் அழுதேனா!’ என்று மனதினுள் இன்னும் அதிர்ந்தாள்.
அவனோ மனையாளை ஓரப்பார்வை பார்த்தபடி மகளிடம் அறியாதவன் போல், “அப்படியா சொல்ற?” என்று கேட்டான்.
“ஆமா டாடி! இப்போ கூட அம்மா உங்களையே பார்த்துட்டு இருக்காங்க பாருங்க!”
மகளின் பேச்சை தட்டாமல் மனையாளை நோக்கியவனின் பார்வை சற்றே மாறியது. ஆம்! அவள் நின்ற நிலை அவனது மனதை வெகுவாக கவர, முன்தினம் இரவில் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும் சேர்ந்துக் கொள்ள அவன் தன்னை மறந்த நிலைக்கு சென்றுக் கொண்டு இருந்தான்.
அம்ரிதாவோ ‘இவரு என்ன சட்டுன்னு லவ் யூ சொல்லிட்டாரு! அப்போ நேத்து சொன்னது காதல் தானா!’ என்று தன்னுள்ளேயே யோசித்தபடி நின்றிருந்தாள். தந்தை மகளின் இரண்டாவது சம்பாசனையை அவள் கவனிக்கவே இல்லை.
மகளின், “டாடி!” என்ற அழைப்பில் அவ்யுதகண்ணன் சுயம் பெற்றாலும், ஏனோ மனையாள் தரும் புதுவித போதையில் இருந்து அவனால் முழுவதுமாக வெளி வர முடியவில்லை என்று சொல்வதை விட வெளி வர விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பார்வையை ஒரு முறை சுழற்றி அன்னை இல்லாததை உறுதி செய்தவன், சட்டென்று அம்ரிதாவின் கன்னத்தில் பட்டும் படாமல் சிறு முத்தம் கொடுத்து இருந்தான்.
சட்டென்று சுயம் பெற்ற அம்ரிதா அவ்யுதகண்ணனை கடுமையாக முறைத்துவிட்டு குழந்தையை பிடுங்கியபடி அறைக்குச் சென்றாள்.
அவனோ மென்னகையுடன் மெத்திருக்கையில் அமர்ந்தபடி முன்தினம் இரவில் தங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை யோசித்துப் பார்த்தான்.
மகளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்துக் கொண்டிருந்த அவ்யுதகண்ணனை வைத்தக் கண் எடுக்காமல் அம்ரிதா பார்த்துக் கொண்டு இருக்க, அதை உணர்ந்தாலும் மகள் உறங்குவும் வரை காத்திருந்தவன் ஆதினி உறங்கிய பிறகே அம்ரிதா பக்கம் திரும்பி,
“என்ன பார்வை இது?” என்று கேட்டான்.
சிறு வெட்கப் புன்னகையை உதிர்த்தவள், ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைத்தாள்.
“பெண்கள் எத்தனை பூக்களை சூடினாலும், எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுறது போல் ஒரு அழகை தரது இந்த வெட்கப்பூ தான்”
அவள் கண்களை விரிக்கவும்,
அவன் விரிந்த புன்னகையுடன், “அண்ட் வெட்கப்படும் போது நீ கொள்ளை அழகு” என்றான்.
மகிழ்ச்சியையும் பரவசத்தையும் மீறி மனதினுள் சொல்லத் தெரியாத ஏதோ ஒரு உணர்வு எழ, அவள் பேச்சிழந்தாள்.
அதை உணர்ந்தது போல் அவன் மென்னகையுடன், “எதுக்கு அப்படி பார்த்த?” என்று மீண்டும் கேட்டான்.
“சும்மா”
“இல்லையே! நீ விடாம சைட் அடிச்சதை பார்த்தா..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“நான் ஒன்னும் சைட் அடிக்கலை” என்றாள்.
மீண்டும் விரிந்த புன்னகையை உதிர்ந்தவன், “ஓவர் பழமா இருந்தா, இந்த சப்ஜெக்ட்டில் வீக் தான்” என்றான்.
அவள் முறைக்கவும்,
“ஹே! சீரியஸ்ஸா தான் சொல்றேன்.. ஓவர் படிப்ஸ்ஸா, பழமா இருக்கிறவங்க படிக்கிற சப்ஜெக்ட்டில் டாப்பரா இருப்பாங்க பட் இந்த சப்ஜெக்ட்டில்” என்று உதட்டை லேசாக பிதுக்கியபடி நிறுத்தியவன் கட்டை விரலை கீழ் நோக்கி காட்டினான்.
“நான் ஒன்னும் வீக் இல்லை” என்று அவள் ரோஷத்துடன் கூற,
அவனோ கிண்டலான குரலில், “வீக் இல்லாம தான் சைட் அடிக்கிறது கூட தெரியாம சைட் அடிக்கிறியா?” என்றான்.
“அது” என்று சற்றே திணறியவள் பின் அவனை பார்க்காமல், “தெரியும்” என்றாள்.
“என்ன தெரியும்?” என்று அவன் உதட்டோர சிரிப்புடன் வினவ,
அவனைப் பார்த்தவள், “அது உங்களுக்கு தெரியும்” என்றாள்.
“ஸோ சைட் அடிச்ச!”
“ப்ச்.. ஏன் அதிலேயே இருக்கிறீங்க?”
“அதை ஒத்துக்க ஏன் இப்படி தயங்குற?”
“ஓகே.. நான் உங்களை சைட் அடிச்சேன்.. போதுமா!” என்று அவள் பொறுமை இழந்து சற்றே குரலை உயர்த்தி கூறிவிட, குழந்தை அந்த சத்தத்தில் அசைத்தாள்.
“ஷ்” என்றபடி மீண்டும் தட்டி கொடுத்தவன் ஆதினி ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றதும், தனக்கு முதுகு காட்டியபடி படுத்து இருந்த மனையாளை சீண்டும் குரலில், “ஓய்!” என்று அழைத்தான்.