எல்லோரும் எப்படி இருக்கிறீங்க தோழமைகளே!!! பையன் நல்லா இருக்கிறான்.. cyclone விளைவால் WiFi கிடைக்கவில்லை.. அதான் ஒரு வாரம் வர முடியலை.. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி தோழமைகளே 🙂 🙂 🙂
இப்போ இன்றைய பதிவிற்கு போகலாமா!! ஆரம்பத்தில் இருந்து உங்கள் மண்டையை குடைந்துக் கொண்டு இருக்கும் ‘ராதாவும் அம்ரிதாவும் ஒரே ஆள் தானா?’ என்ற கேள்விக்கான விடை இன்றைய பதிவில்………..
மகளுக்கு காலுறை போட்டுக் கொண்டிருந்த அவ்யுதகண்ணன், “டாலி! ஸ்கூலுக்கு போடுற வளையல் எங்க?” என்று கேட்டேன்.
“ஸ்.. சாரி டாடி.. மாத்த மறந்துட்டேன்” என்றபடி கையில் இருந்த வளையலை கழட்டினாள்.
“இனி எப்பவும் மறக்கக் கூடாது”
“ஷுர் டாடி” என்றபடி குழந்தை எழப் போக,
“இரு.. அம்மாவை எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்றவன் அருகில் நின்றிருந்த அம்ரிதாவிடம் கழட்டிய வளையல்களை கொடுத்தபடி, “டாலி ட்ரெஸ் கப்போர்டு செகண்ட் செல்ஃப்பில் மல்ட்டிக்கலர் வளையல் இருக்கும்.. எடுத்துட்டு வா” என்றான்.
இவன் காலோடை(shoe) போட்டு முடிக்கும் போது வளையலுடன் வந்த அம்ரிதா மகளின் கையில் அதை போட்டு விட்டபடி, “எதுக்கு ஸ்பெஸிஃபிக்கா இந்த வளையல்? இதில் ட்ராக்கர் இருக்குதா?” என்று கேட்டாள்.
எழுந்து நின்று கைகளை தட்டியவன் மென்னகையுடன், “நீயே கேள்வியும் கேட்டு, பதிலையும் சொல்லிட்ட” என்றான்.
“நிஜமாவே ட்ராக்கர் இருக்குதா?”
“எஸ்.. டாலி ஆட்டோவில் தானே ஸ்கூலுக்கு போயிட்டு வரா.. தெரிந்த ஆட்டோக்காரர் தான், இருந்தாலும் நாம கவனமா இருப்பதில் தவறில்லையே!” என்றவன், “என்னோட பலம் வீக்நெஸ் ரெண்டுமே டாலி தான்.. ஸோ சேஃப்ட்டி பஸ்ட்” என்றான்.
“நீங்க அவ்ளோ பெரிய அப்பாடக்கரா!” என்று அவள் கிண்டலாக கூற,
அவனோ சிறு தோள் குலுக்கலையும் புன்னகையையும் தான் பதிலாக தந்தான்.
ஆனால் அவனது பெண்ணரசியோ இடுப்பில் கை வைத்தபடி அன்னையை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
வாய்விட்டு சிரித்த அம்ரிதா, “சரிமா உன் டாடியை அம்மா எதுவும் கிண்டல் செய்யலை.. உன்னோட டாடி சிரிப்பு போலீஸ் இல்ல, டெரரான சூப்பர் போலீஸ் தான்.. போதுமா!” என்றபடி மகளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள்.
“குட்டிமாவை நம்ம பக்கம் இழுப்பனு பார்த்தா! இப்படி சரெண்டர் ஆகுறியே!” என்றபடி தேவகி வந்தார்.
“நடக்கிற விஷயமா அத்தமா!” என்றபடி அம்ரிதா சிரிக்க,
“லவ் யூ மம்மி” என்றபடி அன்னையின் கன்னத்தில் ஆதினி முத்தமிட்டாள்.
அம்ரிதா சற்றே நெகிழ்ந்த குரலில், “லவ் யூ ஸோ மச் பட்டு” என்றபடி மகளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அப்பொழுது ஆதினி பள்ளிக்கு செல்லும் தானியின் சத்தம் வீட்டு வாசலில் கேட்கவும், அவ்யுதகண்ணன், “ஆட்டோ வந்திருச்சு டாலி” என்றான்.
அவசரமாக அம்ரிதா கையில் இருந்து இறங்கிய குழந்தை, “பை ஆச்சி.. பை ம்மா” என்றுவிட்டு ஓட,
“ஓடாத டாலி” என்றபடி மகளின் புத்தக்கபை மற்றும் உணவு பையுடன் அவ்யுதகண்ணன் அவள் பின்னே சென்றான்.
மகளை அனுப்பிவிட்டு வந்தவன் தானும் அடுத்த ஐந்து நிமிடத்தில் கிளம்பி காவல் நிலையத்திற்கு சென்றான்.
அவன் சென்ற ஒரு மணி நேரத்தில் தேவகி அம்ரிதாவிடம் சிறு நகை பெட்டியை கொடுத்தபடி, “நீ கொடுத்த எல்லா நகையையும் பேங்க்(bank) லாக்கரில் வைக்கலை.. இதெல்லாம், மெலிசா இருக்க செயின், பிரேஸ்லெட், தோடுனு சின்ன சின்ன நகைங்க.. தெரிஞ்சவங்க வீட்டு பர்த்டே பார்ட்டி மாதிரி சின்ன விழாக்கு போட்டுக்கலாம்.. இதை நீயே வச்சுக்கோ” என்றார்.
“சரி அத்தமா.. ஸ்டீல் பீரோ லாக்கரில் வச்சிட்டு வரேன்” என்றுவிட்டு சென்றாள்.
அவர்கள் அறையில் இருக்கும் எஃகு நிலைப்பேழையின்(steel bureau) நிலைபெட்டியைத் திறந்து அதனுள் இடது பக்கம் இருந்த இன்னொரு சிறு நிலைபெட்டியினுள் நகை பெட்டியை வைத்து மூடப் போன கடைசி வினாடி அவளது கண்ணில் அது சிக்கியது. ஏனோ அதை என்னவென்று ஆராயத் தோன்றவும், அதை எடுத்து என்னவென்று பார்த்தாள்.
அதே நேரத்தில் தனது அறையில் இருந்த தேவகி அவ்யுதகண்ணனை கைபேசியில் அழைத்துக் கொண்டு இருந்தார்.
அழைப்பை எடுத்தவன், “என்னம்மா? இப்போ தானே கிளம்பி வந்தேன்” என்றான்.
“அரை மணி நேரம் பெர்மிஷன் போட்டுட்டு கோவிலுக்கு வர முடியுமா?”
“அம்மா!”
“புரியுது.. லீவ் முடிந்து ஜாயின் செய்து இருக்க.. போன ஒரு மணி நேரத்திலேயே பெர்மிஷன் கஷ்டம் தான்.. பட் முடியுமா?”
யோசனையுடன், “எதுக்குமா?” என்று கேட்டான்.
“முடியுமா முடியாதா?”
“இதுவரை நீங்க இப்படி கேட்டது இல்லை.. ரொம்ப முக்கியமான விஷயம்னு புரியுது.. பட் என்னனு ஒரு ஹின்ட் தரலாமே!”
“முடியுமா முடியாதா?”
“மீ!”
“என்னடா!”
“சரி வரேன்” என்று சிறு கடுப்புடன் கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்க போக,
தேவகி அவசரமாக, “உடனே கிளம்பிடாத.. சரியா பத்து பத்துக்கு பிள்ளையார் கோவிலுக்கு வா” என்றார்.
“பிள்ளையார் கோவிலா?”
“ஆமா.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தார்.
அறையில் அம்ரிதா கண்ணில் சிக்கயதோ மென்பட்டுத்துணியினால் ஆன சிறு சுருக்குப்பை. அதன் ஓரத்தில் லேசாக நீட்டிக் கொண்டு இருந்த சிறு திறவுகோலின் முனை தான் அவளை கவர்ந்து இருந்தது.
அம்ரிதா சுருக்குப்பையை திறந்து அந்த திறவுகோலை எடுத்தாள். சற்று சிறியதாக இருந்த அந்த திறவுகோலில் நிலைப்பேழையின் மற்ற திறவுகோல்களில் இருந்த அதே நிறுவனத்தின் பெயர் தான் இருந்தது.
‘இது என்ன சாவி?’ என்ற யோசனையுடன் வேறு எங்கும் ரகசிய நிலைபெட்டி இருக்கிறதா என்று தேடினாள். ஐந்து நிமிட தேடலின் பிறகு இரண்டாவது தட்டின் அடியில் சிறு சாவித்துளை அவளது கைக்கு தட்டுப்பட்டது.
அவள் சிறு ஆர்வத்துடன் புதிய திறவுகோலை அதில் பொருத்தி திருகவும், அந்த தட்டின் ஒரு பகுதி கீழே இறங்கியது. அதனுள் கண்ணணின் நினைவுப் பெட்டகம்!!
‘என்ன இது! ஏதோ டைரி மாதிரி இருக்குது ஆனா கொஞ்சம் வித்தியாசமா இருக்குதே!’ என்று நினைத்தபடி அதை கையில் எடுக்க போனவள் அதை தொடும் முன், ‘இவ்ளோ பாதுகாப்பா வச்சு இருக்காரே! ஒருவேளை அஃபிஸியல் விஷயமா இருக்குமோ! இல்லை பெர்சனல் டைரியா இருக்குமோ?’ என்று யோசித்தாள்.
பின் மறுப்பாக தலை அசைத்தபடி, ‘இது அஃபிஸியலா இல்லாம இருந்தாலும், ஒருத்தரோட பெர்சனல் டைரியை அவங்க பெர்மிஷன் இல்லாம படிக்கக் கூடாது’ என்று தனக்குத் தானே கூறி அதை எடுக்காமல் அந்த ரகசிய நிலைபெட்டியை பூட்டி சாவியை எடுத்த இடத்தில் வைத்து, உள் நிலைபெட்டியையும், எஃகு நிலைப்பேழையையும் மூடி பூட்டிவிட்டு கூடத்திற்கு சென்றாள்.
அவள் வரவும், அவ்யுதகண்ணனிடம் பேசிவிட்டு கைப்பையுடன் தேவகியும் கூடத்திற்கு வந்தார்.
“வெளியே கிளபுறீங்களா அத்தமா?”
“கிளம்புறோம்.. நான் கோவிலுக்கு.. நீ அப்பாவை பார்க்க கிளம்புற.. லன்ச்கு அண்ணாவையும் கூட்டிட்டு இங்கே வந்திடு”
கண்கள் ஒளிர விரிந்த புன்னகையுடன், “தன்க்யூ அத்தமா” என்றவள், “நீங்களும் அங்கே வரலாமே?” என்றாள்.
“மறுவீட்டுக்கு அப்புறம் இன்னைக்கு தான் போற.. அண்ணாக்கு உன் கிட்ட தனியா பேச எவ்வளவோ இருக்கும்.. அதான் லன்ச்கு இங்கே வந்திடுவீங்களே!”
அவரது புரிதலில் அவள் நெகிழ்ச்சியுடன் புன்னகைக்க,
“ஓடு ஓடு.. உடனே கிளம்பி வா.. அஞ்சு நிமிஷம் தான் டைம்.. எனக்கு வேண்டுதல் நிறைவேற்ற வேண்டியது இருக்குது.. முக்கால்மணி நேரம் தேவைப்படும்.. பத்தரைக்கு கோவில் நடை சாத்திடுவாங்க.. ஸோ இப்போ கிளம்பினா தான் சரியா இருக்கும்.. ஓடி போய், வாமா மின்னலுங்கிற மாதிரி கிளம்பி வா பார்க்கலாம்” என்றார்.
“மாயி மின்னல் மாதிரிலாம் முடியாது.. டூ மினிட்ஸ் மேகி மாதிரி வேணா கிளம்பி வரேன்” என்றுவிட்டு சிரிப்புடன் அறைக்குச் சென்றவள், சொன்னது போல் இரண்டே நிமிடத்தில் கைப்பையுடன் வந்து நின்றாள்.
தனது இரு சக்கர வண்டியின் சாவியை எடுத்தபடி, “உங்களை கோவிலில் விட்டுட்டு அப்பா வீட்டுக்கு போறேன் அத்தமா.. வேண்டுதலை முடிச்சிட்டு போன் போடுங்க.. நானே கூட்டிட்டு வந்து வீட்டில் விடுறேன்” என்றாள்.
“ட்ராப் ஓகே.. ஆனா வரது நானே வந்திடுவேன்டா”
“நீங்க ஒன்னும் வெயிலில் நடந்து வர வேண்டாம்.. நானே வரேன்” என்றவள், “நீங்க கேட்க மாட்டீங்க.. எப்படியும் 10.30 கோவில் நடை சாத்திடுவாங்க தானே! நானே வரேன்” என்றாள்.
“நீ வீணா அலைய வேண்டாம்.. நான் ஆட்டோல வந்திடுவேன்” என்றபடி வீட்டை பூட்டி சாவியை கைப்பையினுள் வைத்தார்.
“கண்டிப்பா நடந்து வரக் கூடாது”
“ஓகே ஓகே” என்றவர், “பக்கத்தில் இருக்க சிவன் கோவில் இல்லை.. சேவையில்லம் ஸ்டாப் பக்கத்தில் இருக்க பிள்ளையார் கோவில்.. நான் வழி சொல்றேன்” என்றார்.
அதன் பிறகு இருவரும் வண்டியில் கிளம்பினர்.