அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு எழுந்த மலர்விழி காலை கடன்களை முடித்துக் கொண்டு கூடத்திற்கு வந்த போது, “குட் மார்னிங்” என்ற அவ்யுதகண்ணனின் உற்சாக குரல் வரவேற்றது.
அவளும் மென்னகையுடன், “குட் மார்னிங் அண்ணா” என்றாள்.
அவளது முகம் தெளிவாக இருக்க, அதில் திருப்தியுற்றவன், “மீ மலர் எழுந்துட்டா” என்று சமையல் அறையில் இருந்த அன்னைக்கு குரல் கொடுத்தான்.
அவர், “சரிடா” என்ற அடுத்த சில நொடிகளில், “குட் மார்னிங் மலர்” என்றபடி புன்னகையுடன் வந்த அம்ரிதா அவள் அருந்த போர்ன்விட்டா(Bournvita) கலந்த பாலை கொடுத்தாள்.
“குட் மார்னிங் அண்ணி” என்றபடி அதை வாங்கி அருந்த ஆரம்பித்தாள்.
அவள் பாலை அருந்தியதும், அவள் கையில் இருந்து அம்ரிதா குவளையை வாங்கப் போக, “அய்யோ அண்ணி! நானே கழுவி வச்சிடுறேன்” என்றாள்.
“இருக்கட்டும்.. கொடு.. உன் அண்ணா உன் கிட்ட ஏதோ பேசத் தான் இங்கே உட்கார்ந்து இருக்கார்” என்ற அம்ரிதா குவளையை வாங்கிக் கொண்டு சமையல் அறைக்கு சென்றாள்.
மலர்விழி சிறு பதற்றத்துடன், “திரும்ப ஏதும் பிரச்சனையா அண்ணா?” என்று கேட்க,
“ஹே! ரிலாக்ஸ்.. ஒரு பிரச்சனையும் இல்லை.. ஜஸ்ட் ஃப்யு(few) வொர்ட்ஸ்.. எப்படியும் காலையில் எழுந்த அப்புறம் அவன் உனக்கு போன் போடுவான்.. நீ டென்ஷன் ஆகாம, தைரியமா பேசணும்..
தன்னோட வீடியோ பார்த்துட்டு பெருசாலாம் டென்ஷன் ஆக மாட்டான்.. ஈவன் உன்னோட வீடியோவை ரெக்கவர் செஞ்சிடுவேன்னு மிரட்டக் கூட செய்வான்.. அதை கேட்டு நீ பயப்படவோ டென்ஷன் ஆகவோ கூடாது.. அவனை கண்காணிக்க ஆள் போட்டு இருக்கிறேன்.. ஸோ அவன் ரெக்கவரி ஷாப் போனா, அங்கேயே அவனை கொத்தா தூக்கிடுவேன்.. ஆனா நீ பேசுற விதத்தில் பேசி அவனை உசுபேத்தி காலேஜ் வர வை.. அங்க தான் அவனுக்கு கச்சேரி வச்சு இருக்கிறேன்” என்றான்.
அவ்யுதகண்ணன் மேல் கொண்ட நம்பிக்கையில், “ஓகே ண்ணா” என்றவள் பின் சிறு யோசனையுடன், “அந்த வீடியோ பார்த்து டென்ஷன் ஆக மாட்டானா அண்ணா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் சூடு சுரணை இருக்கிறவங்களுக்குத் தான்.. மே பி இதான் முதல் முறைனா டென்ஷன், பயம்லாம் வரலாம் ஆனா இவன் அப்படி இல்லை.. இவனிடம் இப்படி சிக்கியதில் நீ நாலாவது ஆள்..
ஸோ, இவனை மாதிரி கேடுகெட்ட ஆட்கள் இதுக்கெல்லாம் அசர மாட்டான்க.. முதல்ல சின்னதா ஷாக் வேணா ஆவானே தவிர பெருசாலாம் பாதிப்பு இருக்காது.. அப்புறம் எதுக்கு அவனை வீடியோ எடுத்து அனுப்ப சொன்னேன்னு கேட்கிறியா! அதை அனுப்பிய அப்புறம் உனக்கு ஒரு தைரியம் வந்து இருக்கும்.. கூடவே சின்னதா அவனை பழி வாங்கிய திருப்தி இருக்குமே!”
“அது என்னவோ உண்மை தான் அண்ணா.. அதை அனுப்பினப்ப எனக்குள் ஒரு திருப்தி வந்தது தான்.. பழி வாங்கினேன்னு இல்லை.. ஆனா அதை எப்படிச் சொல்ல! எதைச் செய்து அவன் என்னை மிரட்டினானோ அதையே அவனுக்கு திருப்பி கொடுத்தப்ப சின்னதா ஒரு சந்தோசம்.. கூடவே எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் வந்தது”
“எஸ்.. அதுக்காகத் தான் உன் கையாலேயே அந்த வீடியோவை அனுப்ப வச்சேன்”
“ஆனா அவனை எதுவுமே செய்ய முடியாதா அண்ணா? நான் வேணா அவன் மேல கம்ப்ளைன்ட் தரவா?”
“குட் இந்த தைரியமும் துணிச்சலும் தான் வேணும்.. ஆனா அப்பா அம்மா வந்த அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்.. உன் கம்ப்ளைன்ட் இல்லனாலும் என்னால் அவனோட முகத்திரையை கிழிக்க முடியும்..” என்றவனின் பேச்சை இடையிட்டு,
“நீங்களே இப்படி சொல்லலாமா அண்ணா?” என்றவள், “கம்ப்ளைன்ட் இல்லாம அவனை அரெஸ்ட் செய்யவோ தண்டனை வாங்கித் தரவோ முடியாதே!
இனி ஒரு பொண்ணு இப்படி கஷ்டப்படக் கூடாது அண்ணா.. எல்லோருக்கும் அவ்யுத் அண்ணா கிடைக்க மாட்டாங்களே! நான் கம்ப்ளைன்ட் தரேன் அண்ணா” என்றாள்.
“என்னை கேட்டா, நீ கம்ப்ளைன்ட் கொடுப்பது தான் சரினு சொல்லுவேன்.. ஆனா உன்னோட அம்மாவும் அப்பாவும் அதை விரும்பனுமே!”
“அப்போ எப்படித் தான் அவனை தண்டிக்கிறது?”
“பார்க்கலாம்” என்றவன், “இப்போதைக்கு எனக்கு விஷயம் தெரியும்னு காட்டிக்காத.. முகிலை நீயா அப்ரோச் செய்ததா சொல்லு” என்றான்.
“அவரை மாட்டிவிட்ட மாதிரி ஆகிடுமே!”
“அந்த பன்னாடை எழுந்துக்க முன்னாடியே, ஆறு மணிக்கெல்லாம் முகில் கிளம்பி வீட்டுக்கு போயிட்டான்.. அந்த பரதேசி எப்படியும் முகில் வேலைனு கண்டு பிடிச்சிடுவான்”
“அப்போ அவருக்கு பிரச்சனை வருமா?”
“முகிலை அவனால் என்ன செய்திட முடியும்? திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான்.. ஸோ பிரச்சனை எதுவும் வராது.. முகிலும் தைரியமான பையன் தான்.. இல்லைனா இதில் இறங்கி இருக்க மாட்டானே!”
“எதுக்கும் நானா அவர் பெயரை சொல்லலை.. அவன் கண்டு பிடிச்சு கேட்டா பார்த்துக்கலாம்” என்றபோது அவளது கைபேசியில் அழைப்பு வந்தது.
“அந்த பொறுக்கி தான்” என்றபடி அவ்யுதகண்ணன் கைபேசியை அவளிடம் நீட்ட,
ஒரு வித கோபத்துடன் அழைப்பை எடுத்து ஒலிபெருக்கியை இயக்கியவள் அவன் பேச காத்திருந்தாள்.
அவன் நக்கலும் விரசமும் நிறைந்த குரலில், “என்ன செல்லம்! இவ்ளோ சிரமப்பட்டதுக்கு, நீ கேட்டு இருந்தா லைவ் ஷோவே காட்டி இருப்பேனே!” என்றான்.
“உவ!” என்றவள் பரிகாச குரலில், “அந்த கருமத்தை நான் போன்லேயே பார்க்கலை! இதுல லைவ் ஷோவா!” என்றாள்.
அவ்யுதகண்ணன் புன்னகையுடன் கட்டைவிரலை உயர்த்திக் காட்ட, அம்ரிதாவுமே கட்டை விரலை காட்டியபடி வந்து அமர்ந்தாள். தேவகி கட்டைவிரலை காட்டிவிட்டு அவ்யுதகண்ணன் அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். ஆதினி எழும் நேரம் நெருங்கிவிட்டதால் அவர் அங்கே சென்றுவிட்டார்.
கார்த்திக்கோ எகத்தாள குரலில், “ஆமா இந்த முகிலை உனக்கு எப்படி தெரியும்! ஒரே நேரத்தில் என்னையும் அவனையும் ஓட்டுனியா?” என்றான்.
“செருப்பு பிஞ்சிடும் நாயே! என்னையும் உன்னை மாதிரி ஈனப்பிறவினு நினைச்சியா?”
அதீத நக்கலுடன், “பார்டா! பிள்ளபூச்சிக்கு கொடுக்கு முளைத்து இருக்கதை!” என்றவன், “என்ன உன்னோட வீடியோவை டெலிட் செய்த தைரியத்தில் பேசுறியா! அதை ஈஸியா ரெக்கவர் செஞ்சிடுவேன்.. அதை செஞ்சிட்டு உன்னை கவனிச்சுக்கிறேன்.. அக்சுவளி உன்னை மென்மையா தான் அனுபவிக்கனும்னு நினைத்து இருந்தேன்.. ஆனா இப்போ.. ‘என்னை விட்டுரு’னு நீ கெஞ்சி கதறுவதை ரசித்தபடி உன்னை ருசிப்பேன்டி” என்று கோபம் கலந்த வெறியுடன் கூறினான்.
“நீ ரெக்கவர் செய்றதுக்கு முன்னாடி உன் வீடியோ வைரல் ஆகி இருக்கும்டா”
“நான் உன்னை மாதிரி அழுது புலம்பிட்டு இருக்க மாட்டேன்டி.. அதை வச்சு ஆதாயம் தேடுவேன்.. என்ன புரியலையா! நீ ஒரு பேபிடி” என்றவன் அடுத்து மிகவும் விரசமாக பேச,
“சீ” என்றவள் அவனது பேச்சில் ஏற்பட்ட ஒவ்வாமையில் சற்றே பதற்றமடைய, அம்ரிதா அவள் அருகே அமர்ந்து முதுகை வருடியபடி ‘ஒன்றுமில்லைடா’ என்று வாய் அசைத்தாள்.
சத்தமாக வாய்விட்டு சிரித்த கார்த்திக், “இது வெறும் தியரி தான்.. நாளைக்கு ப்ராக்டிகல் கிளாஸ் எடுக்கிறேன் செல்லம்.. ரெடியா இரு” என்றான்.
அவனை எப்படியாவது பதற்றம் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற வெறி அவளுள் மூள, என்ன பேசுவது என்று யோசித்தவள், “அப்போ அதை உன்னோட அப்பா அம்மாக்கு அனுப்பினாலும் எதுவும் இல்லையா? இல்ல உன் அம்மா கிட்ட அவங்களோட சீமந்திர புத்திரனோட அருமை பெருமைகளை எடுத்து சொன்னாலும் உனக்கு ஒன்னுமே இல்லையா!” என்றாள்.
“ஏய்!” என்று கத்தியவனின் குரலில் சிறு பதற்றம் எட்டி பார்க்கவும்,
இப்போது சத்தமாக சிரித்த மலர்விழி, “என்ன சொல்லிடவா?” என்றாள்.
“அப்படி மட்டும் செய்த! பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்!” என்று பதற்றம் கலந்த குரலில் மிரட்டினான்.
“என்ன குரல் ஷேக் ஆகுது!” என்று பரிகாசம் செய்தவள், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினியே! அதை உன் அம்மா கிட்டயும் செய்வியாடா?” என்று சற்றே ஆக்ரோஷத்துடன் கத்தினாள்.
“ஏய்!” என்று கடும் கோபத்துடன் அவன் கத்த,
மலர்விழியும் குறையாத கோபத்துடன், “உன் அம்மா கிட்ட விஷயம் போகக் கூடாதுனா என்னோட வீடியோவை ரெக்கவர் செய்ற ஐடியாவை மறந்துட்டு காலேஜ் வந்து சேரு.. இல்ல எனக்கு பயந்து வீட்டிலேயே இருந்துக்க போறியா?” என்று அவனை சீண்டுவது போல் பேசினாள்.
“**** யாருக்குடி பயம்! உன்னை காலேஜ் வந்து கவனிச்சுக்கிறேன்.. உன்னை மட்டும் இல்லை.. நான் எந்திக்கிறதுக்கு முன்னாடி ஓடிப் போன அந்த பொட்ட கிட்டயும் சொல்லி வை” என்றவன் இவளது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்து இருந்தான்.
அழைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த நொடி அவ்யுதக்கண்ணன் கைகளை தட்டியபடி, “சூப்பர்டா” என்று கூற,
அம்ரிதா அவளை அணைத்தபடி, “இந்த துணிவு தான் வேணும்” என்றாள்.