மலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும், நல்ல ஆரோக்கியத்துடன் செல்வங்கள் வளரட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.. தோழமைகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
மகளை தூங்க வைத்த பின் அவ்யுதகண்ணன் அறையின் சன்னலோரம் போடப்பட்டு இருந்த சிறிய திவான் கட்டிலில், சன்னலை ஒட்டியிருந்த முல்லை கொடி வீசிய நறுமணத்துடன் நிலவொளியில் தன் இதயம் கவர்ந்தவளை இதயத்தில் சாய்த்து அணைத்தபடி கால்களை நீட்டி கண்களை மூடியபடி அமர்ந்து இருந்தான்.
அவர்களை வெளியில் இருந்து பார்க்க முடியாதபடி முல்லைக் கொடி மறைத்து இருந்தது.
“எவ்ளோ நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்கப் போறீங்க?” என்று அம்ரிதா நிலவிய மௌனத்தை களைய,
அவனோ மென்னகையுடன், “ஆயுள் முழுவதும்” என்றபடி அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
கண்களை மூடி அதை ரசித்தபடி, “பேசணும்னு…” என்றவளின் பேச்சு அவன் பாடிய பாரதியார் பாடலில் நின்றது. அவள் சட்டென்று கண்களை திறக்க, காதலும் கிறக்கமுமாக அவளது விழிகளை பார்த்துக் கொண்டே,
“கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி!
உன்னை தழுவிடலோ – கண்ணம்மா
உன்மத்த மாகுதடி!!” என்று பாடியபடி அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன்,
என் கண்ணிற் பாவையன்றோ! கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!” என்று பாடி அவளது இதழில் கவி பாடினான்.
நீண்ட இதழணைப்பின் பிறகு அவள் வெட்கமும் சிணுங்கலுமாக, “பேசணும்னு சொன்னீங்க” என்றாள்.
அவனோ அவளது கழுத்தோரத்தில் இதழால் உரசியபடி, “நீ இப்படி சிணுங்கினா, உன்னை இன்னும் இன்னும் சிணுங்க வைக்க தான் எனக்கு தோணும்” என்றவனின் வலகரம் அவளது வெற்றிடையில் கோலம் வரையத் தொடங்கியது.
அவனது தீண்டலில் உடல் சிலிர்த்தபடி உணர்வலைகளில் தத்தளிக்க ஆரம்பித்தவள் அவனது வலது கரத்தை பற்றியபடி, “பேசி முடிச்..சிட..லாம் கண்..ணா” என்று சற்றே திணறலுடன் கூறினாள்.
தன் கரத்தை தடுத்த அவளது கரத்துடன் கை கோர்த்துக் கொண்டவன் அவளது தொண்டை குழியில் முத்தமிட்டபடி, “போர்த்திட்டு படுத்தா என்ன! படுத்துட்டு போர்த்தினா என்ன!” என்றான்.
“கண்ணா!”
“ராது” என்றவனின் கரம் அவளது மேனியில் வலம் வர ஆரம்பித்து, இதழ்கள் தாபத்துடன் அவளது கழுத்தடியில் இறங்க, அவள் சித்தம் கலங்கி அவனிடம் கரைய ஆரம்பித்தாள்.
முத்த ஊர்வலத்தை நடத்தியபடி திறந்திருந்த ஒற்றை சன்னலை சாற்றியவன் தனது தேடலை தொடங்கி இருந்தான்.
கூடலின் முடிவில் மனம் நிறைந்த புன்னகையுடன், “லவ் யூ ராதி” என்றபடி தன்னவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட,
அவளும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், “லவ் யூ கண்ணா” என்றபடி அவனது நெஞ்சில் முத்தமிட்டாள்.
சில நொடிகள் இருவருமே மனம் கவர்ந்தவரின் அருகாமையை ரசித்தபடி அமைதியாக இருந்தனர்.
பின் அவ்யுதகண்ணன், “ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா.. பழையதை பேசி முடிச்சிடலாம்” என்றான்.
அடுத்த சில நிமிடங்கள் கழித்து பழையபடி சன்னலை திறந்து முல்லை கொடியின் வாசத்தில் நிலவொளியில் தன்னவளை தோளில் சாய்த்தபடி கால்களை நீட்டி அமர்ந்த அவ்யுதகண்ணன், “என் கிட்ட ஏன் சொல்லணும்னு உனக்கு தோணவே இல்ல? அட்லீஸ்ட் ஊரை விட்டு போறதுக்கு முன்னாடியாவது ஒரு மெயில் அனுப்பி இருக்கலாமே?” என்றான்.
“சொல்லி இருக்கணும்.. சாரி.. அப்படி அப்ரப்ட்டா தொடர்பை நிறுத்தி இருக்க கூடாது தான்.. பின்னாடி நானும் இதை நினைத்து இருக்கிறேன்.. மனசுக்குள் உங்களிடம் மன்னிப்பும் கேட்டு இருக்கிறேன்”
“உன் மன்னிப்பை நான் கேட்கலை.. ஏன்னு தான் கேட்கிறேன்.. நீ கஷ்டபட்ட நேரத்தில் ஒரு நண்பனா கூட உன் நினைவிற்கு நான் வரலையானு எவ்ளோ வருந்தினேன் தெரியுமா?”
அவன் தோளில் சாய்ந்தபடியே இடது கரத்தினால் அவனை இறுக்கமாக அணைத்தபடி, “சா..” என்றவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடி பேச்சை நிறுத்தியவன், “சாரி கேட்காத.. காரணத்தை மட்டும் சொல்லு” என்றான்.
அவனது காதலில் அவன் மீது பித்தம் கொண்டவள் அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு பேச ஆரம்பித்தாள்.
“அந்த பொறுக்கி என் காலேஜ் சேர்மேன் பையன்.. அவனோட பொறுக்கித் தனம் எனக்கு தெரியும்னு தெரியாம என்னிடம் ப்ளர்ட் செய்தான், காதல் வசனம் பேசினான்.. எதற்கும் நான் மயங்கலை.. பிரச்சனை வேணாம்னு ஜஸ்ட் மறுப்பு சொல்லிட்டு விலகித் தான் போவேன்.. ஆனா ஒரு நாள் எல்லோர் முன்னாடியும் என் கையை பிடிச்சு இழுத்து கிஸ் பண்ண வந்தப்ப, அவனை தடுத்து கன்னத்தில் அடிச்சு அவனோட பொறுக்கித்தனத்தை பற்றி பேசி திட்டிட்டு போயிட்டேன்.. அந்த அவமானத்தை தாங்கிக்க முடியாம தான் என்னை கடத்திட்டு போய்..” என்று அவள் ஒரு நொடி நிறுத்த,
அவளது முதுகை வருடியபடி, “விடுடா” என்றான்.
மறுப்பாக தலை அசைத்தபடி, “சொல்லி முடிச்சிடுறேன்.. யார் கிட்டயாவது எனக்கு சொல்லணும்” என்றவள் அவனது கண்களை தவிப்புடன் நோக்க,
அவளது புஜத்தை ஆறுதலாக தடவியபடி, “சொல்லு” என்றான்.
பார்வையை முல்லை கொடியில் பதித்தபடி உணர்ச்சியற்ற மரத்த குரலில் பேச ஆரம்பித்தாள்.
“என்னை மயக்க நிலையில் வைத்தபடியே அவனோட இச்சையை தீர்த்துக்க ஆரம்பித்தான். எனக்கு கொஞ்சம் கொஞ்சமா மயக்கம் தெளிய ஆரம்பிச்சுது.. நான் எதிர்ப்பை காட்டவும் ஏதோ ஒரு போதை மருந்து பொடியை என் மூக்கில் வைத்து என்னை சுவாசிக்க வச்சிட்டான்..
அதுக்கு அப்புறம் நடப்பது புரிந்தாலும் என்னால் அவனை தடுக்க முடியலை.. அவனை அடிச்சே கொல்லனும்னு அவ்ளோ வெறி வந்தது. ஆனா.. என்னால் எதுவுமே செய்ய முடியலை.. என் கையை கூட அசைக்க முடியலை” என்றவள் அன்று தான் அனுபவித்த உடல் மற்றும் மன வலியை பகிர்ந்துக் கொள்ள, அதையெல்லாம் அதீத வலியுடன் கேட்டுக் கொண்டு இருந்தவனோ அதை சிறிதும் வெளியே காட்டாமல் அவளது முதுகை ஆறுதலாக தடவிக் கொண்டு இருந்தான்.
“அவனோட இச்சை தீர்ந்த பிறகு அவனே என்னை என் வீட்டு வாசலில் போட்டுட்டு போயிட்டான். அவனை பற்றி வெளியே சொன்னா அவன் என்னை புணர்ந்த வீடியோவை நெட்டில் போடுவேன்னு மிரட்டி தான் என்னை வீட்டில் விட்டான்.
அவனை சும்மா விட எனக்கு மனசே இல்லை.. அவன் மிரட்டியது தெரிந்தும் அப்பா எனக்கு அவ்ளோ சப்போர்ட்டா இருந்தாங்க.. அவன் நெட்டில் வீடியோ போட்டாலும் பரவாயில்லைனு துணிந்து அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தோம்.. அவன் வீடியோவை நெட்டில் போடலை.. ஏன்னா அப்படி ஒரு வீடியோவே அவனிடம் இல்லை.. சும்மா மிரட்டத் தான் அப்படி சொல்லி இருந்தான்..
ஆனா பண பலத்தை வைத்து அவன் தப்பிச்சுட்டான்.. அது மட்டுமில்லாம நான் போதை பழக்கத்துக்கு அடிமையானவள்னு போலி சாட்சிகள் வைத்து நிரூபிச்சதோடு நான் தான் அவனை படுக்க கூப்பிட்டதா சொல்லி என் கரெக்டரையே மொத்தமா சிதைச்சிட்டான்.. அதுக்கு அப்புறம் அக்கம் பக்கத்தில் இருந்தவங்களோட கண்ணோட்டம் கூட மாறிடுச்சு” என்றவள் அவனைப் பார்த்து, “சின்ன வயசில் இருந்து என்னை பார்த்தாங்க தானே! ஒருத்தருக்கு கூடவா என் நிஜ குணம் புரியலை!” என்று கேட்டாள்.
“உன்னை சேர்ந்தவங்களுக்கு உன்னை தெரிந்தால் போதும்.. விடுடா” என்றபடி அவளை அணைத்துக் கொண்டான்.
சில நொடிகள் கழித்து அவன் நெஞ்சில் தலை சாய்த்தபடியே பேசினாள்.
“சுற்றி இருந்தவர்களே பேச்சாலும் பார்வையாலும் என்னை காயப்படுத்தினாங்க.. இன்னும் சில ஆண்கள் பச்சையா பேசி என்னை படுக்க கூப்பிட்டான்க.. அதில் தான் மொத்தமா ஆண்களை வெறுத்தேன்..” என்றவள் அண்ணாந்து அவன் முகத்தை நோக்கியபடி,
“அப்போ இருந்த மனநிலையில் உங்களை தொடர்பு கொள்ளவே எனக்கு தோணலை என்றதோடு ஞாபகம் இல்லைனு தான் சொல்லணும்.. ஏன்னா அந்த அளவிற்கு இந்த சமுதாயம் என்னை படுத்தியதில், கொஞ்சம் கொஞ்சமா நான் என் சுயத்தை இழக்க ஆரம்பிக்கவும் தான் அப்பா ஊரை விட்டே கிளம்பும் முடிவிற்கு வந்தாங்க.. சேரன்மகாதேவி வந்த அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தெளிவானதும் உங்க ஞாபகம் வந்தது தான்..
என்னோட மெயில் ஐடி டியாக்டிவேட் ஆகி இருந்தாலும் உங்க ஐடி எனக்கு தெரியுமே! ஆனாலும்.. நண்பனா உங்க மேல எனக்கு நம்பிக்கை இருந்தாலும் ஏனோ என்னால் உங்களை தொடர்பு கொள்ள முடியலை” என்றவள் தவிப்புடன், “நீங்களும் என்னை தப்பா நினைச்சிடுவீங்களோனு உங்களை சந்தேகப்படலை ஆனா என்னால் உங்களை தொடர்புகொள்ள முடியலை.. புரியுதா உங்களுக்கு?” என்று கேட்டாள்.
அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, “புரியுதுடா” என்றான்.
“தேங்க்ஸ்” என்று அவள் நெகிழ்ச்சியுடன் கூற, அவன் முறைத்தான்.
“பின்ன எப்படி நான் தேங்க்ஸ் சொல்றது?” என்றாள்.
அவளது மனநிலையை சற்றே இலகுவாக்க நினைத்தவன் அவளது இதழில் மென்மையாக இதழ் ஒற்றியெடுத்து, “இப்படி தான்” என்று கூறி கண் சிமிட்டினான்.
“மாய கண்ணா” என்றபடி மென்னகையுடன் அவனது புஜத்தில் லேசாக தட்டினாள்.
“ஹஹான்” என்றபடி அவளை அணைத்து அவளது உச்சந்தலையில் கன்னம் பதித்தான்.
சில நொடிகள் அதை ரசித்தவள் பின், “நினைவு பெட்டகத்தில் அப்பாவை மீசைகார்னு சொல்லி இருப்பீங்க ஆனா எனக்கு நியாயம் செய்ய முடியாத கோபத்திலும் விரக்த்தியிலும் மீசையை எடுத்துட்டு தான் அப்பா சென்னையை விட்டே கிளம்பினாங்க.. எனக்கு அப்பா மீசை பிடிக்கும் தெரியுமா! அதுவும் கம்பீரமா அப்பா மீசையை முறுக்குறது அவ்ளோ பிடிக்கும்” என்றபடி அவனை நோக்கினாள்.
ஆறுதல் அளிப்பது போல் பார்த்தவன், “இனி மீசை வைக்க சொல்லலாம்” என்றான்.
மறுப்பாக தலை அசைத்தபடி, “மாட்டாங்க” என்றாள்.
“உனக்கு நியாயம் செய்ய முடியலைனு தானே மீசையை எடுத்தாங்க.. இனி வச்சிக்கலாம்”
அவள் புரியாமல் பார்க்கவும், “இப்போ அவன் வேஸ்ட் வெஜிடபிள் மாதிரி தான்” என்றான்.
அதிர்ச்சியும் ஆர்வமுமாக கண்களை விரித்தவள், “என்ன செய்தீங்க அவனை?” என்று கேட்டாள்.