குருநாதனுடன் பள்ளியில் இருந்து 3.15 மணிக்கு வீட்டிற்கு வந்த ஆதினி உள்ளே நுழைந்ததும், தன்னை நோக்கி தவழ்ந்து வந்து கொண்டிருந்த ஆதவைப் பார்த்து, “வெயிட்.. வெயிட்.. அக்கா கையை கழுவி ட்ரெஸ் மாத்திட்டு வரேன்” என்றபடி கூடத்தில் இருந்த கழுவுதொட்டியில்(washbasin) கை அலம்பச் சென்றாள்.
“ஹு.. க்கா.. ஹு” என்று மழலையில் தன்னை தூக்கச் சொன்ன தம்பியிடம், “இதோ.. ரெண்டே நிமிஷம்டா பட்டு” என்றபடி வேக வேகமாக கை மற்றும் முகம் அலம்பியவள், “இதோ.. ஒரே நிமிஷம்.. ட்ரெஸ் மாத்திட்டு வரேன் ஆதுமா” என்றுவிட்டு அறையினுள் ஓடி கதவை மூடினாள்.
“டேய் குட்டி கண்ணா.. இருடா அக்கா வந்திடுவா” என்ற தேவகியையும்,
“சின்ன ஆது குட்டி தாத்தா கிட்ட வாங்க” என்ற குருநாதனையும் சிறிதும் கண்டு கொள்ளாமல் அறை நோக்கி தவழ்ந்த குழந்தை தனது பிஞ்சு கையால் கதவை தட்டியபடி, “ஹு..ஹு..க்கா” என்று கத்தினான்.
சொன்னது போல் ஒரு நிமிடத்தில் உடை மாற்றியவள், “ஆது குட்டி தள்ளி இருங்க.. அக்கா கதவை திறக்க போறேன்” என்றாள்.
“ஹு..ஹு”
“தள்ளி போயிட்டீங்களா? இல்லைனா கை நஞ்சிடும்”
“ஹு.. வ” என்ற தம்பியின் பதிலை கேட்டாலும் மிக ஜாக்கிரதையாக கதவை லேசாக திறந்தவள் குழந்தை தள்ளி அமர்ந்து இருப்பதை பார்த்த பிறகே முற்றிலும் திறந்தாள்.
அவள் திறந்த அடுத்த நொடி கையை தூக்கியபடி, “ஹு..ஹு” என்று குழந்தை தூக்குமாறு சத்தம் கொடுத்தான்.
தம்பியை அழகாக தூக்கிக் கொண்ட ஆதினி, “அக்காக்காக தூங்காம இருந்தீங்களா?”
“என்ன மம்மம் சாப்டீங்க?”
“இப்போ அக்கா கூட சேர்ந்து கொஞ்சமா சாப்பிடுறீங்களா?”
“அக்கா ஊட்டி விடவா?” என்று பேசியபடியே தம்பியுடன் மெத்திருக்கையில் அமர்ந்து, “ஆச்சி குட்டி கண்ணா சாப்ட்டானா?” என்று கேட்டாள்.
“சாப்பிட்டான்டா.. கொஞ்சமா வேணா கொடு.. நிறைய கொடுக்காத” என்றபடி உணவு பாத்திரத்தை பேத்தியிடம் கொடுத்தார்.
முதலில் சிறிது உணவை எடுத்து தம்பிக்கு ஊட்டிய பிறகே தான் உண்ண ஆரம்பித்தாள். தம்பியிடமும், தாத்தா மற்றும் ஆச்சியிடமும் கதை பேசியபடியே நடு நடுவே தம்பிக்கு கொஞ்சம் ஊட்டியபடி தானும் உண்டு முடித்தாள்.
அந்த வீட்டின் குட்டி கண்ணனான ஆதவ் அனைவருக்கும் செல்லம் என்றாலும் அக்காவிடம் கூடுதல் செல்லம். இப்போதே அக்கா என்றால் அந்த குட்டி கண்ணனுக்கு அவ்வளவு இஷ்டம். அதனாலேயே மற்றவர்களிடம் குறும்புடன் சேட்டை செய்தாலும் அக்கா சொன்னதை மட்டும் அப்படியே தட்டாமல் செய்துவிடுவான்.
வீட்டின் பின் புறம் இருந்த இடத்தில் ஒரு அறையை இழுத்து கட்டிய அவ்யுதகண்ணன் சற்றே போராடி குருநாதனையும் தங்களுடன் தங்க வைத்து கொண்டான். அவ்யுதகண்ணனின் காதல் பற்றி முழுமையாக அறிந்து நெகிழ்ந்தவர், அவன் தன்னவளுக்கு நியாயம் செய்ததை அறிந்து மகிழ்ச்சியுடன் மகள் விரும்பும் மீசைக்காரராக வலம் வருகிறார்.
தம்பியுடன் சிறிது நேரம் விளையாடியவள் தேவகியிடம், “என்னை பைவ் ஓ’கிளாக் எழுப்பிடுங்க ஆச்சி” என்றுவிட்டு தங்கள் அறைக்கு சென்று தம்பியை தட்டி கொடுத்து தூங்க வைத்துவிட்டு தானும் தூங்கினாள்.
மாலை ஐந்து மணிக்கு தேவகி எழுப்பியதும் கண் விழித்தவள் தம்பிக்கு அணைவாக தலையணையை வைத்துவிட்டே எழுந்து சென்றாள். முகம் அலம்பி தயாரானவள் தம்பி எழுமுன் அன்றைக்கு படிக்க வேண்டிய வீட்டு பாடங்களை படித்து முடித்தாள்.
ஆதவ் எழுந்து குரல் கொடுக்கவும், வேகமாக அறைக்கு சென்றவள் அவனை தூக்கி வந்து தேவகியிடம் கொடுத்தபடி, “அக்கா எழுதுற ஹோம் வொர்க் முடிச்சிட்டு வந்து ஆது குட்டி கூட விளையாடுவேனாம்.. அது வரை பட்டு சமத்தா ஆச்சி தாத்தா கூட விளையாடிட்டு இருப்பீங்களாம்” என்றுவிட்டு எழுத சென்றாள்.
குழந்தையும் சமத்தாக குருநாதனுடன் விளையாடியாடினான். சிறிது நேரம் கழித்து தேவகி செரலக் கொடுத்தபோது ஒழுங்காக வாங்காமல் போக்கு காட்டிய குழந்தை ஆதினி, “ஆது குட்டி சமத்தா சாப்பிடுங்க” என்று குரல் கொடுத்ததும் ஒழுங்காக சாப்பிட ஆரம்பித்தான்.
“நம்ம கிட்ட மட்டும் எவ்ளோ சேட்டை பார்த்தீங்களா அண்ணா!” என்று தேவகி கூற, குருநாதன் சிரித்தார்.
குழந்தையோ தேவகியைப் பார்த்து முளைக்க ஆரம்பித்து இருந்த பால் பற்களை காட்டி சிரித்தான்.
“சிரிச்சே மயக்கிடுடா” என்றபடி உணவை ஊட்டி முடித்தார். ஆதினி வீட்டு பாடங்களை எழுதி முடித்ததும் தம்பியுடன் விளையாட ஆரம்பித்தாள்.
இரவு 7.30 மணி போல் அம்ரிதாவும் அவ்யுதகண்ணனும் ஒன்றாக வர,
ஆதினி எப்பொழுதும் போல், “டாடி!” என்று தந்தையை வரவேற்ற பிறகே, “அம்மாவும் வந்தாச்சு” என்றாள்.
“ஹாய் பாப்பு! ஹாய் பட்டு!” என்றபடி உள்ளே வந்த அம்ரிதா வேகமாக அறைக்கு சென்று கை மற்றும் முகத்தை அலம்பி உடையை மாற்ற ஆரம்பித்தாள்.
கையை அலம்பியபடி, “டாலி ஹோம் வொர்க் முடிச்சாச்சா?” என்று கேட்ட அவ்யுதகண்ணன் மகளின் பதிலை பெற்ற பிறகே, “ஹாய் பட்டு.. மம்மம் சாப்பிட்டீங்களா? அக்கா கூட விளையாடிட்டு இருக்கிறீங்களா?” என்று கேட்டான்.
குழந்தை ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டி, “ஹு” என்றான்.
அதற்குள் உடை மாற்றி வந்த அம்ரிதா மகளின் கன்னத்தில் முத்தமிட்டபடி, “லவ் யூ டாலி” என்றுவிட்டு மகனை தூக்கினாள்.
ஆதினி அம்ரிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ மம்மி” என்றதும், ஆதவ் அவளை பார்த்த பார்வையில் சிரிப்புடன் தம்பியின் கன்னத்திலும் முத்தமிட்டு, “லவ் யூ ஸோ மச் ஆது குட்டி” என்றதும் குழந்தை சிரிப்புடன் அக்காவின் கன்னத்தில் முத்தமிட்டான்.
இவற்றை பார்த்தபடி அவ்யுதகண்ணன் புன்னகையுடன் குளிக்க அறைக்கு சென்றான்.
அம்ரிதா, “பாப்பு தாத்தா கூட விளையாடுங்க.. அம்மா தம்பிக்கு பால் கொடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு மகனுடன் தங்கள் அறைக்கு சென்று கதவை மூடினாள்.
ஆதினி, “தாத்தா வாங்க கெரம்போர்டு விளையாடலாம்” என்றபடி விளையாட ஆரம்பித்தாள்.
அறையினுள் வந்த அம்ரிதா, “இன்னும் நீங்க குளிக்க போகலையா?” என்று கேட்க,
“அதுக்குள்ளே நான் எதிர்பார்த்துட்டு இருந்த மெசேஜ் ஒன்னு வந்துது.. போன் பேசிட்டு வரேன்” என்றபடி வெளியே சென்றவன் பத்து நிமிடங்கள் கழித்தே உள்ளே வந்து குளிக்க சென்றான்.
குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு வெளியே வந்த அவ்யுதகண்ணன் பூனை நடை நடந்து தனக்கு முதுகு காட்டி அமர்ந்தபடி மகனிற்கு பாலூட்டிக் கொண்டிருந்த மனைவியை நெருங்கி அமர்ந்தான்.
அவன் அடுத்து என்ன செய்வான் என்பதை அறிந்திருந்த அம்ரிதா, “கண்ணா.. டாலி கூட போய் விளையாடுங்க” என்றாள்.
ஆனால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் அவளது வெற்று முதுகில் இதழ் கொண்டு ஓவியம் வரைந்தபடி, “கொஞ்ச நேரம் ராதி கூட விளையாடிட்டு டாலி கூட விளையாடுறேன்” என்றான்.
“ப்ச்.. டிஸ்டர்ப் செய்யாதீங்க”
“இதில் உனக்கு என்ன டிஸ்டர்பன்ஸ்? என் பையன் கண்டுக்காம சம்மத்தா பால் குடிப்பான்” என்றவனின் உதடுகள் குட்டி குட்டி முத்தங்களை வழங்கியது.
“வர வர உங்க சேட்டை தான் கூடிட்டே போகுது” என்றவள் அவனை தள்ளி விட,
மல்லாக்க படுத்தபடி விஷம புன்னகையுடன், “அப்படி என்ன சேட்டை செய்றேன்! சொல்லேன் கேட்போம்” என்றான்.
அவள் அவனை முறைக்க, அவனோ மாய கண்ணனின் புன்னகையுடன், “மிமி” என்றான்.
அவள், “மான்ஸ்டர்” என்று கூற, அதற்கும் சிரித்தான்.
“உங்களை மாதிரியே இவனும் சிரிச்சே மயக்குறான்”
“வேற எதில் என்னிடம் மயங்குற?”
“அதான் மொத்தமா மயக்கி வச்சு இருக்கிறீங்களே!” என்று சிறு வெட்கத்துடன் கூற,
“ஹ்ஹான்!” என்றபடி புருவம் ஏற்றி இறக்கினான்.
“ஹ்ம்ம்”
“நான் தான் தெளியவே முடியாதபடி மொத்தமா மயங்கி கிடக்கிறேன்”
இப்போது அவனை போலவே அவள், “ஹ்ஹான்!” என்று கேட்க,
“ஹ்ம்ம்” என்றவன் அவளது இதழில் நீண்ட இதழ் முத்தத்தை பதித்து காதலுடன், “லவ் யூ ராதி” என்றான்.
அவளும் இதழ் முத்தம் கொடுத்து காதலுடன், “லவ் யூ கண்ணா” என்றாள்.
“நைட் கவனிச்சுக்கிறேன்” என்றுவிட்டு எழுந்து சென்று மகளுடன் விளையாட ஆரம்பித்தான்.
அடுத்து அம்ரிதா தேவகியுடன் சேர்ந்து சமைக்க சென்று விட அவ்யுதகண்ணன் மகள் மற்றும் மகனுடன் நேரம் செலவிட, குருநாதன் தனது உடற்பயிற்சி மையத்திற்கு சென்று இருந்தார்.
இரவு உணவிற்கு பின் அம்ரிதா சிறு சிறு வேலைகளை முடித்து விட்டு அறைக்குள் வந்து கதவை அடைத்த நொடி அவ்யுதகண்ணனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
அவள் வருவதற்குள் குழந்தைகளை தூங்க வைத்து இருந்தவன் அவளது கழுத்தோரம் சின்ன சின்ன முத்தங்களை கொடுத்தபடி, “முமு வந்து ரொம்ப நாள் ஆச்சு” என்றான்.
“கண்ணா” என்று கிறக்கத்துடன் கூறியபடி அவன் தோளில் அவள் தலை சாய்க்க, அவனது இடது கரம் அவளது புடவையினுள் நுழைந்தது.
அவனது கரங்கள் அவளது மேனியில் பயணிக்க ஆரம்பிக்கவும், அவனது தீண்டலில் தன்னுள் பிரவேசிக்கும் உணர்வின் கனம் தாங்காமல், “க.ண்..ணா” என்று முனங்கினாள்.
அவளது முனங்கல் அவனுக்கு போதை ஏற்ற, அவளை கைகளில் ஏந்தியபடி திவான் கட்டிலை அடைந்தவன், “ராதி” என்று காதலும் மோகமுமாக அழைத்தபடி இதழ் கொண்டு இதழ் தீண்டி தனது தேடலை தொடங்கினான்.
டாலி, மான்ஸ்டர், மீ, மிமி உங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.. தன்னவளின் நினைவையே சுவாசக்கற்றாய் வாழ்ந்த கண்ணின் காதலும், நினைவு பெட்டகமும் உங்கள் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் நம்புகிறேன்.. அதனால் வோட்(VOTE) போடும் போது மறக்காமல் கண்ணன், ராதை மற்றும் அவர்களின் செல்ல மகள் டாலிக்கும் போடுங்க தோழமைகளே….
எனக்கு ஆதரவு அளித்து கமெண்ட்ஸ் போட்டு உற்சாக படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி.. ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து ஆதரவு அளித்து கமெண்ட்ஸ் மூலம் எனக்கு ஊக்கம் தந்த அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி…
சைலென்ட் ரீடர்ஸ் சின்னதாவது உங்கள் கருத்தை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..