அவள் அவனை முறைத்தபடி, “அன்னைக்கு சொன்னது எல்லாம் சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டது! அப்படித் தானே!” என்றாள்.
அவளை புருவம் சுருக்கி பார்த்தபடி, “அன்னைக்கு என்ன சொன்னேன்?” என்று கேட்டவன், “நான் எப்பவுமே எதையும் ஜஸ்ட் லைக் தட் சும்மா சொல்றது இல்லை” என்று சேர்த்து கூறினான்.
“அன்னைக்கு கணவன் மனைவியா இல்லாம நண்பர்களா வாழ்க்கையை ஷேர் செய்யலாம்னு சொல்லிட்டு இப்போ இப்படி பேசினா என்ன அர்த்தம்?” என்று கோபத்துடன் கேட்டாள்.
அவன் புரியாமல் அவளை பார்த்தபடி, “இப்பவும் அதையே தான் சொல்றேன்.. என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லையே!” என்றான்.
“என்ன மாற்றம் இல்லை! நான் ஓகே சொன்ன உடனே இப்படி க்ளோஸ்நெஸ், உரிமை அது இதுனு பேசுறது, மாற்றி பேசுறது இல்லாம வேற என்னவாம்?” என்று அவள் பொரிய,
அவன் முறைப்புடன், “இப்பவும் அன்னைக்கு நான் சொன்னதில் மாற்றம் இல்லை தான்.. ஏன் உன் பிரெண்ட் கூட நீ க்ளோஸ்ஸா பழக மாட்டியா? உரிமையா எதுவும் பேச மாட்டியா? க்ளோஸ் பிரெண்ட், பெஸ்ட் பிரெண்ட்னு சொல்றது இல்லையா! அந்த அர்த்தத்தில் தான் நான் சொன்னேன்.. நீயா ஒரு அர்த்தத்தை நினைத்துக் கொண்டா அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றான்.
அவனது கண்கள் மற்றும் குரலில் இருந்து அவனிடம் பொய் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டவள், “ஓ” என்றாள்.
அப்பொழுது பணியாளர் வந்து அவர்கள் கேட்டதை வைத்துவிட்டு சென்றார்.
அவள் புரிந்து கொண்டதில் அவன் இயல்பு நிலைக்கு திரும்பினான்.
மீண்டும் கண்ணால் அவளை பருக கூறியவன் தன்னதை எடுத்து பருகியபடி, “என் கடந்த காலத்தில் நடந்த சிலதை உன் கிட்ட சொல்லத் தான் உன்னை நேரில் வரச் சொன்னேன்” என்று ஆரம்பிக்க,
அவளும் தன்னதை பருகியபடி, “சிலதுனா! என் கிட்ட மறைக்கிற விஷயமும் இருக்கும்.. ரைட்!” என்றாள்.
“உனக்கு தேவையானதை மட்டும் சொல்றேன்”
“எனக்கு தேவையானது எது! தேவையில்லாதது எது!னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அவனை மடக்க நினைத்து கேள்வி எழுப்ப,
அவனோ அசராமல், “நீ சொல்ற தேவையான ஆணி, தேவையில்லாத ஆணி உன் கூட பழகி பார்த்தா தான் தெரியும்.. ஆனா நான் சொன்னது என் சம்பந்தப்பட்ட விஷயம்.. ஸோ எதை சொல்லணும், எதை சொல்ல வேணாம்னு நான் தான் முடிவு செய்வேன்” என்று அழுத்தமான குரலில் முடித்திருந்தான்.
“நண்பர்களுக்குள் ஒளிவு மறைவு இருக்காதே!”
“அது நாம் நண்பர்கள் ஆன பிறகு”
“அப்போ இதையும் அப்பவே சொல்லலாமே?”
“இதையெல்லாம் நம் கல்யாணத்துக்கு முன்னாடி நீ தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்”
“ஏன்?”
“இதை தெரிந்த பிறகும் நீ எஸ் சொன்னா மட்டும் ப்ரோசீட் செய்யலாம்”
“ஹ்ம்க்கும்” என்று உதட்டை சுளித்தவள், ‘நான் சொல்றதை அப்படியே கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க!’ என்று முணுமுணுத்தாள்.
“அப்படி இல்லை.. இதுவரை இந்த கல்யாணத்துக்கு நீ நோ சொன்னப்ப, என்னை அப்ஜெச்ட் செய்ய எந்த வலுவான காரணமும் உன் பக்கம் இல்லை அதனால் உன் மறுப்பு மறுக்கப்பட்டது.. ஆனா..” என்றவனின் பேச்சை இடையிட்டவள் சிறு யோசனையுடன்,
“ஸோ உங்களை நான் ரிஜெக்ட் செய்ய, நீங்களே இப்போ காரணம் தரப் போறீங்க!” என்றாள்.
சிறு தோள் குலுக்கலுடன், “மே பி ஆர் மே பி நாட்” என்று கூற,
அவள், ‘மான்ஸ்டர்’ என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
அதை கேட்டு அவனது உதட்டோரம் மென்னகை அரும்பியது.
அதை கண்டவள் உதட்டோர நக்கல் புன்னகையுடன், “எதையுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா பேச மாட்டீங்களா!” என்றாள்.
“தேவையான இடத்தில் பேசுவேன்” என்றவன், “இதை விடு.. டாபிக் டைவர்ட் ஆகுது.. இதுவே, நீ என்னோட கடந்த காலத்தைப் பற்றி முன்னாடியே உன் அப்பா கிட்ட கேட்டு தெரிஞ்சு இருந்தா, நான் இப்போ சொல்ற அவசியம் வந்தே இருக்காது” என்றான்.
“தேவை இல்லைனு விட்டுட்டேன்”
“அது அப்போ.. இப்போ கண்டிப்பா நீ தெரிஞ்சுக்கணும்” என்றவன், “மே பி இதை கேட்டு நீ என்னை கேரெக்டர்லெஸ்னு நினைக்கலாம்” என்று கூறி தான் சொல்லப் போகும் விஷயத்திற்கு அவளை தயார் செய்ய நினைத்தான்.
ஆனால் அவளோ அவன் எதிர்பார்க்காத வகையில் அவனை யோசனையுடன் பார்த்தபடி, “உண்மையில் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தானா?” என்று கேட்டாள்.
“ஏன்?”
“என்னையே ஸ்ட்ரோங்கா நோ சொல்ல வைக்க நினைக்கிறீங்களோனு தோணுது”
அவன் லேசாக சிரிக்கவும்,
“அடப்பாவி! அப்போ அதான் உண்மையா? சம்மதிக்கிற மாதிரி நல்ல பெயர் வாங்கிட்டு என்னை நோ சொல்ல வைக்கிறது தான் பிளானா!” என்று முறைத்தாள்.
“ஹே! அப்படி இல்லை”
“பின்ன!” என்று அவள் முறைப்புடனே கேட்டாள்.
“இன்னும் கல்யாணத்துக்கு என் மனசு முழுமையா செட் ஆகலை என்பது நிஜம் தான்.. ஆனா இந்த கல்யாணத்தில் சம்மதம் என்றதால் மட்டுமே, உன் கிட்ட என்னைப் பத்தி சொல்றதுக்காக உன்னை இப்போ வரச் சொன்னேன்”
“நேரிடையா பதில் சொல்லுங்க.. என்னை நோ சொல்ல சொல்றீங்களா? எஸ் சொல்ல சொல்றீங்களா?”
“அது உன் விருப்பம் ஆனா நிஜமாவே எனக்கு இந்த கல்யாணம் ஓகே தான்”
அவள் அவனை நம்பாமல் பார்க்க,
அவன், “உன்னை பத்தி தெரிஞ்ச அப்புறம் என்னவோ என்னையும் மீறி எனக்குள் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லலாம் என்ற எண்ணம் தான் தோன்றியது..
உன்னை பத்தினா, உன் கடந்த காலத்தை சொல்லலை.. எப்படி நான் கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தேனோ அப்படி தான் நீயும் இருக்கிறனு தெரிஞ்ச பிறகு, என் டாலிக்காக இந்த கல்யாணத்தை செய்துக்கலாமோனு என்னுள் ஒரு எண்ணம்..
அதாவது கல்யாணம் நடந்தாலும், கணவன் மனைவியா இல்லாம நமக்குள் நண்பர்களா இருந்து, டாலிக்கு அப்பா அம்மாவாவும், உன் அப்பா அண்ட் என் அம்மாக்கு மருமகன் மருமகளா இருக்கலாமேனு தோணுச்சு.. அதான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்” என்றான்.
அவனது கூற்றிற்கு மறுமொழி கூறாதவள், “உங்களை பத்தி சொல்லுங்க” என்றாள்.
“எனக்கு ஆறு வயசில் ஒரு பொண்ணு இருக்கது தெரியும்னு நினைக்கிறேன்!” என்று கூறி அவளைப் பார்த்தான்.
அவள், ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்கவும்,
“நமக்கு இது செகண்ட் இன்னிங்க்ஸ்ஸா இருந்தாலும், உன்னை போல் எனக்கும் இது தான் பஸ்ட் மரேஜ்” என்று சொல்லி அவளை ஆழ்ந்து பார்க்க, அவளுக்கோ குடித்துக் கொண்டு இருந்த பால்கலவை புரையேறியது.
“ஹே பார்த்து!” என்று இவன் கூற,
தலையை தட்டி தன்னை சரி செய்துக் கொண்டவள், “அப்போ உங்க பொண்ணு?” என்று கேட்டாள்.
“விருப்பம் இல்லாமல் உன் வாழ்க்கையில் நடந்த விஷயம், விருப்பத்துடன் ஒரு முறை மட்டும் என் வாழ்வில் நடந்தது.. அதன் விளைவே என் டாலி”
“தெளிவா சொல்லுங்க”
“இதுக்கு மேல எப்படி தெளிவா சொல்றது?” என்று அவன் முறைக்க,
அவளும் முறைப்புடன், “அப்போ கல்யாணம் ஆகாம லிவ்-இன் லைஃப்பில் இருந்தியா?” என்று கேட்டாள்.
அவளது ஒருமை அழைப்பை கவனித்தவன் கவனிக்காதது போல், “லிவ்ங் டுகெதர் லைஃப்லாம் இல்லை.. லவ் மட்டும் தான்.. அதான் ஒரு முறை மட்டும்னு சொன்னேனே கவனிக்கலையா!” என்றான்.
கோபத்துடன் அவனை பார்த்தவள், “இதை சொல்ல உனக்கு வெக்கமா இல்லை?” என்று சீறினாள்.
“லுக்.. நான் எதுவும் அவளை கம்பெல் செய்யலை.. ரெண்டு பேருமே விருப்பத்தோடு தான்..” என்று அரை நொடி நிறுத்தியவன், “நடந்ததில் ரெண்டு பேருக்கும் சம பங்கு இருக்குது” என்றான்.
“டிஸ்கஸ்டிங்.. இப்போ தான் உன் மேல கொஞ்சமே கொஞ்சம் நல்ல எண்ணம் வந்தது! ஆனா..” என்று முகம் சுளித்தபடி கூற,
“உங்களுக்கு தப்பா தெரிறது எனக்கு தப்பா தெரியலை.. ஏன்னா நான் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்தே ராதாவை என் மனைவியா தான் பார்த்தேன்.. அண்ட் எங்களுக்குள் மோதிரம் மாத்திக்கிட்டோம்.. அது முறையான கல்யாணமா தான் எனக்கு தோனுச்சு.. ஸோ நாங்க அடுத்த கட்டத்துக்கு போனது எனக்கு தப்பாவே தெரியலை.. அடுத்த கட்டத்துக்கு போனோம்னா, நாங்க எதுவும் ப்ரிபிளான்டா-லாம் செய்யலை.. நாங்களே எதிர்ப்பார்க்காம தான் நடந்தது.. அதை எங்க காதலின் சங்கமமா தான் நான் பார்க்கிறேன்” என்றவன்,
“இந்த விஷயம் வெளியே தெரியாது.. ஐ மீன், வெளி உலகை பொறுத்தவரை என் முதல் கல்யாணம் மூலம் பிறந்த குழந்தை தான் ஆதினி, அண்ட் நான் என் முதல் மனைவியை பிரிந்து குழந்தையுடன் வந்துட்டேன்..
ஸோ, நாங்க சொல்லாம இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. இருந்தும் நான் எதையும் மறைக்கலை.. உன் அப்பாக்கும் இந்த விஷயம் தெரியும்.. இப்போ முடிவு உன் கையில்” என்று பேச்சை முடித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.