“எல்லாத்துக்கும் பதட்டமா? எப்போ இலகுவா இருக்க நீ?…” என்றான் திருமொழி.
“ஸ்வாதி அண்ணி…” என ஸ்வாதியை தேட,
“நான் தான் கீழே போக சொன்னேன். ஏன் என் கூட இருந்தா என்ன?…” என கேட்டவன் அவளை பாதாதிகேசம் பார்வையிட திரும்பிக்கொண்டாள் அவன் மனைவி.
“அப்பறம் தர்ஷி, என்னால இந்த ரெண்டுநாள் உன் கூட அவ்வளவா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. திருவிழா முடியனும். நாளைக்கு தேரோட்டம் இருக்கு. நைட் ஊர்கோலம் எல்லாம். கொஞ்சம் பிஸியா தான் இருப்பேன். நீ மேனேஜ் பண்ணிப்பல்ல…” என கேட்க வேகமாய் அவளின் தலையாடியது.
மனதிற்குள், ‘தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே’ என்ற பாடல் ஒலிக்க மானசீகமாக மிகப்பெரிய கும்பிடு ஒன்றை நிதர்ஷனா திருமொழிக்கு வைக்க,
“ரெண்டுநாள் தான்னு சொன்னேன். என்ஜாய்…” என்றான் திருமொழி மெல்லிய முறைப்புடன்.
‘எதே’ என அவனை அதிர்ந்து போய் பார்க்க திருமொழியின் ஆமோதிப்பான பார்வையில், ‘ஷட்அப் மை மைண்ட்’ என பாவமாய் பார்த்தாள்.
“சரி வா, சாப்பிட்டு எல்லாரும் கோவிலுக்கு கிளம்பனும். கீழே போவோம்…” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு வந்தான் திருமொழி.
கீழே வந்ததும் சாப்பிட்டு முடித்து உடனே கோவிலுக்கு சென்று மீண்டும் வீடு வந்ததும் பெண் வீட்டினர் சீர்வரிசை கொண்டுவரும் சம்பிரதாயம் என அன்று முழுவதும் சென்றது.
மறுநாள் காலை தேரோட்டம். முதலில் வடம் பிடிக்க திருமொழி குடும்பத்தினர் அங்கே இருக்கவேண்டிய அவசியம் என்பதால் அதிகாலையே கிளம்பி அங்கே சென்றுவிட்டனர்.
தம்பதிகளாக திருமொழியும், நிதர்ஷனாவும் கோவிலுக்கு செல்ல அதற்கு முதல்வருடம் தான் வந்ததும், இப்போது வந்திருப்பதும் என நிதர்ஷனாவின் மனதில் அலையலையாய் உணர்வுகள்.
அமைதியாய், மிக அமைதியாய் நின்றிருந்தவள் அவ்வப்போது திருமொழியை பார்க்க,
“கோவில்ல வச்சு என்ன பன்ற நீ?…” என்றான் அவன் அவளிடம் முறைப்பாக.
“இல்ல, நீங்க என்ன பண்றீங்கன்னு பார்த்தேன். இதை நான் ரொம்ப எல்லாம் கவனிச்சதில்லை. அதான்…” என நிதர்ஷனா சமாளிக்க,
“ஹ்ம்ம், போன வருஷம் நீ என்னை பார்க்க கூட இல்லை…” என்றான் அவன் தன் காதை தேய்த்துவிட்டபடி வேறு யாரும் கேட்டுவிடாமல்.
“போன வருஷமா? எப்போ?…” என யோசனையாய் கேட்டவளுக்கு அவனை பார்த்த ஞாபகமே இல்லை.
“இது சரிவராது, முதல்ல நீ கிளம்பு. நான் இங்க இருக்கனும்…” என சொல்லி அவளை வீட்டினருடன் அனுப்பி வைத்தான் திருமொழி.
அன்று முழுவதும் கோவிலில் தான் திருமொழியும், இளங்கோவனும். வீட்டிற்கு வரவே நேரமானது.
இளங்கோவன் திருமொழியிடம் அத்தனை சொல்லிவிட்டார் கிளம்பும்படி. புதிதாய் திருமணமானவன். அங்கே அத்தனைபேரின் பார்வையும் அவனிடம் தான்.
“திருவை அனுப்பி வைங்க…” என சங்கவை சொல்ல,
“அவன் கிளம்புவேனான்றான். நான் என்ன செய்ய?…” என்றார் இளங்கோவன்.
“உன் புருஷனுக்கு போன் பண்ணி வர சொல்லு பாப்பா…” என சங்கவை சொல்ல,
“அவங்க வேலை இருக்கும். முடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டாங்க த்தை…” என்றாள் ஸ்வாதியிடம் பேசிக்கொண்டே.
அதன்பின் எங்கே மகனை வரவழைப்பதும், மருமகளை மகனுடன் அனுப்புவதும்?
ஸ்வாதிக்கு தாயின் முகம் போன போக்கில் அப்படி ஒரு சிரிப்பு. மறுவீடு செல்ல இன்னும் இரு நாட்கள் இருந்தது.
அதற்குள் ஓரளவு அந்த வீட்டின் நடைமுறைகளை கவனித்துவிட்டாள் நிதர்ஷனா.
திருமொழியை தவிர மற்ற அனைவரிடமும் அவளாகவே பேசவும், அந்த இடத்தில் பொருந்தி போகவும் என்று சிறப்பாகவே நடந்துகொண்டாள்.
அவனை பார்த்துவிட்டால் மட்டும் தைரியமெல்லாம் ஆட்டம் கண்டுவிடும். இருந்தாலும் அவளை பேசவைத்துக்கொண்டு தான் இருந்தான் திருமொழி.
நான்காம்நாள் பெண்ணின் வீட்டிற்கு என மறுவீடு கிளம்பி செல்ல அன்றைக்கு அவள் செய்த அலும்பல்கள் தீராது.
காலையே தன் வீட்டிற்கு போன் செய்து அவர்களை ஒரு கலக்கு கலக்கிவிட்டாள். சரஸ்வதிக்கு அழைப்பு விடுக்க எடுத்தது பிரகாஷ்.
“சொல்லு பாப்பா…” என்றவனின் கிண்டலில்,
“வாய்லையே வெட்டுவேன். போடா தடியா அண்ணா…” என்றவள்,
“அம்மா எங்க?…” என கேட்க,
“சரஸூ ம்மீ, பார்த்துக்கோ உன் மகளுக்கு புகுந்தவீட்டுக்கு போகவும் அண்ணன்ற மரியாதையே இல்லை. வாய்ல வெட்டுவேன்னு மிரட்டறா. இப்பவே நான் கிளம்பறேன். எனகென்ன வேலை இல்லையா?…” என அவன் ஒருபக்கம் அலப்பரையை கூட்ட,
“அங்க என்ன வெட்டி பேச்சு மகளும், மருமகனும் வந்துருவாங்க. தடிமாட்டு பயலுங்க. ஒன்னுத்துக்கும் லாயக்கில்லை…” என கணேசன் ஒருபுறம் காலையில் இருந்து கூவிக்கொண்டிருந்தார்.
புரிந்தது போல அவர் அழைப்பை துண்டித்துவிட திருமொழி கட்டிலை பார்த்தான்.
அதிலிருந்த அத்தனையும் நிதர்ஷனாவின் புடவைகளும் அதற்கு மேட்சிங் ப்ளவுஸ்களும்.
“சேரி தானே, நான் சூஸ் பன்றேன். ஏன் இதுக்கு ஒரு கால் பண்ணி அவங்களையும் டிஸ்டர்ப் பன்ற நீ?…” என்று கேட்டவன் அசையாமல் நின்றவளை இன்னும் நன்றாய் தன் முன் நிறுத்தினான்.
“இந்த கலர், ம்ஹூம், வேற…” என ஒவ்வொன்றாய் அவள் மேல் வைத்து பார்க்க,
“இல்ல நானே எடுத்துக்கறேன். இது ஓகே…” என அவனிடமிருந்து நழுவவே முயன்றாள்.
அவனின் விரல்கள் அங்குமிங்குமாய் உரசி சோதித்து வைக்க திருமொழியின் பாவனை வேறு அவளை படுத்தியது.
‘இப்ப இவர் சேர்மனே இல்லை’ என நினைத்துக்கொண்டவள் அவன் தன் மேல் வைத்த புடவையை பற்றியபடி,