“தூக்கம் வந்தா பேஸ்வாஷ் பண்ணிட்டு வந்து உட்கார். சூடா குடிக்க கொண்டுவர சொல்றேன்…” என்றான் திருமொழி.
சொல்லியது போலவே டீயை வரவழைத்தவன் தான் எப்போதும் கிளம்பும் பார்வையிடலுக்கு எழுந்துகொண்டான்.
“ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வரேன். போன் கால்ஸ் எதுவும் வந்தா ஆபீஸ் ரூம்ல இருக்கறவங்க அட்டன் பண்ணுவாங்க. நீ அதை கண்டுக்க வேண்டாம். சரியா?…” என்றதும் அவள் தலையாட்ட,
“கொஞ்சம் சிரிம்மா….” என சொல்லிவிட்டு கிளம்ப நிதர்ஷானாவும் அமர்ந்துகொண்டாள் புன்னகையுடன்.
டீ வந்துவிட குடித்தபடி புத்தகத்தின் பக்கங்களை அவள் புரட்ட சில நிமிடங்களில் வாசலில் யாரோ வந்து நின்ற அரவம்.
நிமிர்ந்து பார்க்க வந்து நின்றது என்னவோ மிருதுளா தான். அவளின் முகத்தில் அத்தனை எரிச்சலும், வன்மமும்.
“இங்க என்ன பன்ற நீ?…” என வேகமாய் மிருதுளா கேட்க,
“பார்த்தா தெரியலையா?…” என்றாள் நிதர்ஷனா.
“இன்னைக்கு உனக்கு காலேஜ் இல்லையே. ஏன் வந்த?…” என கோபமாய் உள்ளே வந்து விட்டாள் மிருதுளா.
‘இவள் யார் என்னை கேள்வி கேட்க?’ என்ற கோபமும், அவளின் அசிங்கமான எண்ணங்களும் என அப்படி ஒரு முறைப்பு முறைத்தாள் மிருதுளாவை.
“என்ன சொன்ன? நீ இங்க என்ன பன்றன்னு கேட்டா?…” என சொல்லும் பொழுதே,
“எக்ஸ்க்யூஸ் மீ…” என்ற திருவின் சத்தத்தில் பதறிப்போய் திரும்பினாள் மிருதுளா.
“நீங்க இங்க என்ன பன்றீங்க?…” என்றபடி உள்ளே வந்தவன் நிதர்ஷனாவின் அருகில் வந்து சேர்ந்து நிற்க அதை பார்க்க பார்க்க பற்றி எரிந்தது மிருதுளாவிற்கு.
ஆனால் அதை எல்லாம் அவனின் முன் காண்பித்துவிட முடியாதே. எங்கிருந்து வந்ததோ அப்படி ஒரு மிருதுவான முகபாவனை.
“இல்ல ஸார், இன்னைக்கு காலேஜ் லீவ். நிதர்ஷனாவுக்கு நாளைக்கு தான் எக்ஸாம். அதான் கேட்டுட்டிருந்தேன் அவகிட்ட. இங்க என்ன பன்றான்னு…”
“அதை நீங்க ஏன் கேட்கறீங்க?…” என்ற திருமொழி,
“அன்ட் கிளாஸ் ரூம்ல தான் அவங்க ஸ்டூடன்ட். இப்ப இங்க என்னோட வொய்ப். மரியாதையா பேசுங்க. நீங்க இங்க ஒரு ஸ்டாஃப். புரிஞ்சதா? அதுவும் என் முன்னாடி அவ இவன்னு? ஹவ் டேர்…” என்றவன் சட்டென தலையை கோதி தன்னை நிதானப்படுத்தினான்.
பேயறைந்ததை போல பார்த்தாள் மிருதுளா. நிதர்ஷனாவுமே கணவனின் கோபத்தில் ஒருவகையில் நிம்மதியானாலும் இன்னொருவகையில் இவனுக்கு எவ்வளவு கோபம் வருகிறது என பார்த்தாள்.
திருமொழிக்கு இந்த உடை விஷயத்திலிருந்தே மனது எங்கேயோ உதைக்க தான் வரும்பொழுது நிதர்ஷனாவை அவள் அதட்டி பேசுவதையும் கேட்டவனுக்கு அப்படி ஒரு கோபம்.
“ஆமா இந்த நேரம் நீங்க இங்க என்ன பன்றீங்க? உங்களுக்கு இன்னைக்கு எக்ஸாம் ஹால் ட்யூட்டி தானே?…” என கேட்டவன் அவள் பதில் சொல்லமுடியாமல் நிற்க பார்த்து,
“ஏதாவது விஷயம் இருந்து அது எதுவா இருந்தாலும் உங்க பிரின்ஸிபால் மூலமா ரிப்போர்ட் பண்ணுங்க. கிளம்புங்க…” என்று சொல்லிவிட மிருதுளாவிற்கு முகத்தில் அடித்ததை போலிருந்தது திருமொழியின் பேச்சுக்கள். அவள் செல்லவும்,
“நீ உட்கார்ந்து படி…” என மனைவியிடம் சொல்லியவன் தன்னிருக்கைக்கு செல்ல நிதர்ஷனா அமைதியாகிவிட்டாள்.
வேண்டாம், இதுகுறித்து திருமொழியிடம் சொல்லவே வேண்டாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.
மறுநாள் பரீட்சைக்கு நிதர்ஷனா கிளம்ப முதல்நாள் போலவெல்லாம் உடை எதையும் எடுத்து வைக்கவில்லை.
அவள் கிளம்பி இருக்க திருமொழி கிளம்பாமல் இலகுவான ஆடையில் தான் இருந்தான்.
“நீ டைம்க்கு கார்ல போய் இறங்கிக்கோ. நான் காலேஜ் வர லேட்டாகும்…” என சொல்லிவிட்டான் திருமொழி.
அதன்பின் கல்லூரி ஆரம்பித்த நேரம் சரியாய் வந்து சேர்ந்தான். மிருதுளாவும் அன்றைக்கு திருமொழியை காணாமல் உடை விஷயத்திலும் மாறினாள்.
எத்தனை நாளைக்கு இதையே செய்ய முடியும்? சட்டென எதையும் செய்துவிடமுடியாமல் அவன் மௌனமாய் இருக்க இதோ இறுதி பரீட்சைக்கு இருநாட்களுக்கு முன் தாலி பிரித்து கோர்க்கும் வைபவம்.
அதற்கு முதல்நாளில் இருந்தே திருமொழிக்கு காய்ச்சல் கனன்றது. யாரிடமும் காண்பித்துக்கொள்ளாமல் மாத்திரையை விழுங்கி, தானே மருத்துவமனை சென்று வந்துவிட்டான்.
நள்ளிரவில் அவனின் மெல்லிய அனத்தல் குரலில் பதறி எழுந்துவிட்டாள் நிதர்ஷனா.
“என்ன இப்படி கொதிக்குது?…” என அவனின் நெற்றி கழுத்து என்று தொட்டு பார்த்தவள்,
“நீ கீழ போ, வரேன்…” என சொல்லவும் நிதர்ஷனாவும் கீழே வந்துவிட நெருங்கிய சொந்தங்களும் வர ஆரம்பித்திருந்தனர்.
கணேசனும் குடும்பத்துடன் வந்துவிட விசேஷம் சிறப்பாகவே நடந்தது. வேஷ்டி சட்டையில் மதியம் வரை அங்கே இருந்த திருமொழி மதிய உணவை அறைக்கு கொண்டுவரும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
இரவு வரை கீழே இறங்கவில்லை. அப்படி ஒரு உறக்கம். இரவும் அவன் உறங்கும் முன் சங்கவை தான் இளங்கோவனுடனும், ஸ்வாதியுடனும் மகனை பார்க்க வந்திருக்க,
“காய்ச்சல் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் டயர்ட். அவ்வளோ தான். எதுக்கும்மா இவ்வளோ தூரம் மாடி ஏறி வந்தீங்க?…” என்றவன்,
“ஸ்வாதி பிள்ளையை கூட்டிட்டு கீழே போ. நான் நல்லா சரியாகவும் பார்க்கறேன்…” என தங்கையையும் அதட்டினான்.
“நாளைக்கு காலேஜ்க்கு நீங்க காலையிலையே போங்கப்பா…” என அவருக்கும் சொல்லி அனுப்ப அனைவரும் கீழே இறங்கிவிட்டனர்.
இன்னும் நிதர்ஷனா காலை உடுத்தியிருந்த அதே பட்டுப்புடவையில் தான் இருந்தாள்.
உடை மாற்ற கூட செல்லமுடியவில்லை. திருமணத்திற்கு பிறகு இந்த விசேஷத்திற்கு தான் ஆட்கள் வந்திருக்க முதலில் போல பேசாமல் ஒதுங்கி நிற்கவில்லை நிதர்ஷனா.
வீட்டு பெண்ணாய் ஒருவர் விடாமல் அனைவரையும் கவனித்து பார்த்துக்கொண்டவளை சங்கவை மகிழ்ச்சியும், நிம்மதியுடனும் பார்த்தார்.
இப்போதும் அறைக்கு வந்து திருமொழிக்கு என்ன தேவை என்று பார்த்து கவனிக்க,
“அவ்வளோ பெரிய பொண்ணாகிட்டியா நீ?….” என கேட்க அவளின் காதில் விழவில்லை.
“மாத்திரை இன்னும் போடலையே நீங்க?…” என சொல்லியவள் அவனுக்கு எடுத்து தர,
“கிட்ட வந்து பக்கத்துல உட்கார்ந்து தா…” என்று தானும் கட்டிலில் நடுவில் சென்று நகர்ந்து அமர்ந்தான் திருமொழி.
அவனருகே அமர்ந்தவள் மாத்திரைகளை பிரித்து தரவும் தண்ணீரை எடுத்து குடித்தவன் போட்டு முடிக்க,
“இப்ப ஓகே வா?…” என்றாள்.
“தெரியலை, நீயே பாரு…” என கரகரத்து சொல்லியவனின் குரல் மாற்றத்தை நிதர்ஷனா கவனிக்கவில்லை.
“இந்த தெர்மாமீட்டர் எங்க வச்சேன்?…” என தேட,
“ஹோய் தர்ஷி, கிட்ட வா…” என கை பிடித்து இன்னும் தனக்கருகில் அமர வைத்தவன்,
“தொட்டு பார்…” என்றான் திருமொழி அவளின் வலது உள்ளங்கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து.
அவனை பரிசோதிக்கும் பெண் அவனை வெகுவாய் சோதித்தாள். கலைந்த கூந்தலும், கொஞ்சமாய் வாடியா பூச்சரமும், நெற்றியில் ஈஷியிருந்த சந்தனமும் குங்குமமும் என அந்த அயர்ந்த தோற்றத்திலும் அவனை சுண்டி இழுத்தாள் நிதர்ஷனா.
“இன்னும் லேசா சூடா இருக்கோ?…” என்றவள் கழுத்தில் வைத்து, நெற்றியில் பார்த்து, கன்னத்தில் வைக்கவும் சட்டென அவளை அள்ளி அணைத்துக்கொண்டவன் முகம் நிதர்ஷனாவின் கழுத்தில் புதைந்தது.
அவன் மூச்சுக்காற்றில் வெப்பத்தின் சூட்டை உணர்ந்தவள் இந்த இறுகிய அணைப்பை எதிர்பாராது ஒருகணம் மூச்சடக்கினாள்.
“என்னாச்சு, குளிருதா?…” என திக்கி திணறி அவனிடம் கேட்டுவைக்க,