“சரி சரி. குறைஞ்சிரும்…” என அவனின் குளிருக்கு இதமாய் தானும் அவன் முதுகை வருடி அணைத்துக்கொள்ள அவளை மொத்தமாய் சுருட்டிக்கொள்ள பார்த்தான் திருமொழி.
“திரும்ப காய்ச்சல் வருது போல. ஹாஸ்பிடல் போவோமே…” என்றவள் அவனின் அணைப்பிலிருந்து விடுபட முயல அவள் விலக விலக அவளுக்குள்ளே புதைந்தான் அவன்.
“வேற எதுவும் வேண்டாம். போகவேண்டாம்…” என அவன் மறுக்க அந்த குரலே போதையேற்றியது நிதர்ஷனாவை.
“என்ன வாய்ஸ் இது?…” என சொல்லியும்விட்டாள் அவள்.
அந்த அணைப்பின் தாக்கம் ஒருபுறம் அவளை சுழற்றியது என்றால் இப்போது அவனின் கரங்கள் அங்குமிங்குமாய் அலைபாய நிலைகுலைந்து போனாள் நிதர்ஷனா.
“ஒரு, ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்….” என மெல்ல மெல்ல விலக முயன்றவளை மிக நெருக்கத்தில் முகத்தை மட்டும் நிமிர்த்தி பார்த்தவனின் பார்வையில்,
“எனக்கு இன்னும் எக்ஸாம் முடியலையே?…” என்றாள் மனைவியவள் அவனின் கைகளில் நெகிழ்ந்தவண்ணம்.
“எல்லாம் படிச்சாச்சு தானே?…” என கேட்டவன் இதழ்கள் அவளிதழோடு உரசி உறவாட பதில் சொல்ல முடியாமல் திகைத்து விழித்தவளின் அதரங்களை மெல்ல உரசி,
“நானும் உன்னை படிச்சுக்கறேன். ரொம்ப கஷ்டப்படுத்தாம. தர்ஷி என்னை நம்பனும்…” என்றவன் சின்ன சின்னதாய் முத்தமிட்டு போதாமல் மொத்தமாய் மூழ்கிபோனான் அதனுள்.
என்றாவது நடக்கும் தான் என நிதர்ஷனாவும் நினைத்திருக்க அன்று அவள் எதிர்பாராமலே நடக்க ஆரம்பிக்க மனதளவில் அதற்கு தயாராக முயன்றாள்.
அவனின் இதழாக்கங்கள் அதிகமாக முத்தத்திலேயே தன்னிலை இழந்துகொண்டிருந்தாள் நிதர்ஷனா.
ஒருகட்டத்தில் அவளின் திணறல்கள் அதிகமாக இருபக்க தோளிலும் அடித்தவளை விலக்கி பார்த்தான் திருமொழி.
“என்னாச்சு?…” என கேட்க,
“மூச்சுவிட முடியலை. இருங்க…” என நெஞ்சில் கைவைத்து மூச்சு வாங்க திருமொழி முகத்தில் அப்பட்டமான விஷம புன்னகை. திரும்பவும் அவளை முற்றுகையிட முயல,
“என்னால முடியலை. ம்ஹூம்…” என்றவள் முகம் திருப்ப,
“உன் கையை இப்படி கட்டிக்கோ. மூச்சு விட நான் உனக்கு டைம் தரேன்…” என உடல் குலுங்கும் சிரிப்புடன் சொல்ல அவள் ஆவென்று பார்க்கும் பொழுதே தாளமாட்டாமல் அவளிள் திளைத்தான்.
“மே ஐ…” என கேட்டவனின் பாவனையில் இன்னும் அவன் நெஞ்சில் தன் முகத்தை அழுத்த அதற்கு மேல் என்ன வேண்டும் திருமொழிக்கு.
அறையின் விளக்கை அமர்த்திவிட்டு மெல்லிய விளக்கை ஒளிரவிட்டவன் விழிகள் மின்னலுக்கு இணையாய் பளிச்சிட அவன் முகம் பார்க்கவே மறுத்தவளின் நாணம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை ஆட்டிப்படைத்தது.
மொத்தமாய் ஆட்டம் கண்டுபோனாள் அவனின் இந்த பரிமாணத்தில். கணவனாய் அவளுக்கு மட்டுமேயான இந்த உலகத்தில் அவனிடம் இத்தனையை எதிர்பார்க்கவில்லை.
சின்ன சின்ன வலிகளால் ஆன காயங்கள் கூட தாம்பத்தியத்திற்கு அழகு சேர்த்தது.
மனைவியை ஆற்றுப்படுத்தும் சொற்களும், தலைகோதலும், மென்மையாய் முத்தமிட்டு சட்டென துளிர்த்துவிட்ட கண்ணீர் துடைத்து என அவளை தன்னைவிட்டு விலகவே அனுமதிக்கவில்லை திருமொழி.
கணவனின் அணுகுமுறையில் ஒவ்வொரு அணுவிலும் மூங்கில்கள் வெடிக்க சிறுபெண் தள்ளாடி, தடுமாறி தான் அவனோடு சேர்ந்தாள்.
“தர்ஷி பாப்பான்னாங்க? இல்லையாமே?…” என்று சன்னமான புன்னகையுடன் உல்லாச சிரிப்பில் பதில் சொல்லமுடியாமல் நாணம் பின்னிக்கொண்டது அவளை.
திருமொழியின் தொடுகையில், அவனின் அண்மையில், பார்வையில் எல்லாம் கூசி, சிலிர்த்து, அவன் கையில் துள்ளி, நெகிழ்ந்து நொடிக்கு நொடி அவனை தான் மூர்ச்சையடைய செய்துகொண்டிருந்தாள் நிதர்ஷனா.
மீண்டும் மீண்டுமான மெல்லிய தழுவலும் அவனின் விரல் நடனங்கள் நர்த்தனம் புரிந்ததன் தாக்கமுமாய் ஆலிங்கனமெல்லாம் திருமொழியின் பேராட்சி.