“இப்படி எங்கயும் நான் அசிங்கப்பட்டதில்லை. என்னை தலைகுனிய வச்சிட்டியே?…” என்றார் அவர் ஆற்றாமையுடன்.
இத்தனை அடியும் வாங்கியவள் திருமொழியை தான் பார்த்தாள். அவன் இவள் பக்கம் திரும்ப நினைக்கவே இல்லை.
“மன்னிச்சிடுங்க தம்பி. நான் இவளை கூட்டிட்டு போயிடறேன்…” என சுகேசவன் தளர்ந்து போய் அவனிடம் கை கூப்பி கும்பிட்டு கேட்க ரத்னாவும் உள்ளே வந்துவிட்டார்.
“லெட்டர் ரெடி…” என்று மேஜையில் வைக்க,
“உங்க பொண்ணை சைன் பண்ண சொல்லுங்க…” என்றான் அவரின் முன்னால் நகர்த்தி.
“இல்லை நான் மாட்டேன். என்னால இங்க இருந்து போக முடியாது. அப்பா ப்ளீஸ்…” என்று மீண்டும் மிருதுளா பிடிவாதம் பிடிக்க ரத்னாவிற்கு என்ன நடக்கிறது என அதிர்ச்சியாக இருந்தது.
“இங்க பாருங்க ஸார்? நான் வெளி இடத்துல இல்லாம காலேஜ்க்கு வர சொன்னதே என்னால என் கோவத்தை வேற எங்கையும் கன்ட்ரோல் பண்ண முடியாதுன்ற காரணத்துக்காக தான்….” என்றவன் கை முஷ்டியை மேஜையில் குத்தியவன்,
“வெளிலன்னா கண்டிப்பா கை நீட்டியிருப்பேன் எனக்கு இருக்கற கோவத்துக்கு. மரியாதையா இருக்கனும்ன்னு நினைக்கறேன். புரிஞ்சுக்கோங்க. கூட்டிட்டு போங்க. அப்படியே அந்த வீட்டையும் காலி பண்ண சொல்லுங்க. ரிலாக்ஸா மாடிக்கு கூட போக முடியலை…” என்று அவன் சொல்லியவிதத்தில் சுகேசவன் முகம் கன்றி விட்டது.
“இப்பவும் நானே உங்க பொண்ணை டெர்மினேட் பண்ணிட முடியும். காலேஜ்ல ஆபீஸ் ரூம்ல இது ஆரம்பிச்சு தேவையில்லாத இஷ்யூ. இந்த மதிப்போடவே கிளம்ப சொல்லுங்க…” என்றான் அப்போதும் ஒரு நல்ல தலைமைத்துவத்துடன்.
“இனி என் பொண்ணு உங்க கண்ணுல கூட படமாட்டா தம்பி. அவ செஞ்சதுக்கு எல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்…” என்று சொல்லியவர்,
“இதுதான் நீ இந்த காலேஜ்ல இருக்கற கடைசி நாள்…” என சொல்லிவிட்டு அந்த பேப்பரை அவளின் முன் விட்டெறிய அழுதுகொண்டே கையெழுத்தை போட்டவள்,
“திரு…” என்று அவனை பார்க்க,
“கெட் லாஸ்ட்…” என்றான் அவன் அப்போதும் அவளை பாராமல்.
“நான் கூப்பிடவும் வந்ததுக்கு நன்றி ஸார்…” என்று சுகேசவனிடம் சொல்ல தலையசைத்தபடி அங்கிருந்து வெளியேறினார் மகளுடன்.
“என்ன இதெல்லாம்?…” என ரத்னா திருமொழியிடம் கேட்க அதுவே அவனுக்கு அத்தனை சங்கடத்தை தந்தது.
“ஈவ்னிங் வீட்டுக்கு வாங்க. பேசிப்போம். இப்ப இதை பைல் பண்ணிட்டு அந்த ஸ்டாஃப்க்கு பதில் வேற ஒருத்தரை இன்டர்வ்யூ பண்ணி செலெக்ட் பண்ணுங்க…” என்று சொல்லவும் ரத்னா கிளம்பிவிட்டார்.
திருமொழியால் அப்போது தான் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது. தன் மீதுமே அத்தனை கோபம் தான்.
எப்படி இதை தான் கவனிக்காமல் போனேன் என்று. தலையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு வேலையில் கவனம் செலுத்தினான் திருமொழி.
——————————————
இரவு அறைக்கு வந்தததும் சோர்வெல்லாம் பறந்து போக ஒரு குளியலை போட்டுவிட்டு வந்தமர்ந்தான் திருமொழி.
திருமணம் முடிந்து முதல் பிரிவு. அன்று காலை தான் நிதர்ஷனா தாய்வீட்டிற்கு கிளம்பி சென்றிருந்தாள்.
கிளம்பும் முன் எத்தனை பேச்சுக்கள்? ‘சொல்லமாட்டேன், பேசமாட்டேன்’ என அத்தனையும் ஒப்புவித்திருக்க நினைக்க அது அவனுக்கு இனிக்க முகமெல்லாம் புன்னகை கூத்தாடியது.
“முகம் பார்த்து பேசமாட்டாளாம். பயமாம்…” என சிரித்துக்கொண்டவன் அவளுக்கு அழைக்க எடுத்தவன் பின் அப்படியே வைத்துவிட்டான்.
‘பேசிட்டு போக மட்டும் தெரிஞ்சது. கூப்பிடட்டும் தானா’ என தலையை கோதியபடி அமர்ந்திருக்க அழைப்பு வந்துவிட்டது.
குறுஞ்சிரிப்பு பொங்க அழைப்பை துண்டித்தவன் வீடியோ காலில் அழைக்க, அவள் அதை துண்டித்து ஆடியோவில் அழைக்க என சில நொடிகள் இந்த விளையாட்டில் செல்ல,
“கொழுப்பை பாரு…” என்றபடி அவளின் அழைப்பை ஏற்றான்.
“என்ன?…” என கோபம் போல கேட்க,
“ஹாங், அது…” என்றவள் ‘என்ன பேச?’ என்று தயங்க,
“எனக்கு வேலை இருக்கு. கூப்பிட்ட விஷயத்தை சொல்லு…” என்றதுமே நிதர்ஷனாவிற்கு புஸுபுஸுவென பொங்கியது.
‘இவங்க மட்டும் எதையும் என்கிட்ட சொல்லமாட்டாங்க. ஆனா நான் எல்லாம் சொல்லிடனுமா?’ என முறுக்கிக்கொண்டாலும் அவனிடம் பேச மனது ஆர்ப்பரித்தது.
“இல்ல நீங்க கோவமா இருக்கேங்களான்னு கேட்க தான் கூப்பிட்டேன்…”
“ஆமா, கோவமா இல்லைன்னா வந்திட போறியா நீ? அதான் சண்டை போட்டு கிளம்பிட்ட இல்ல. வைடி போனை…” என்றான் திருமொழி வரவழைக்கப்பட்ட கடுமையுடன்.
“என்ன சண்டையா?…” என இங்கே இவள் வாய் பிளந்து திகைப்பதை அவன் கண்முன்னால் கண்டதை போல ரசனையான ரசனை.
“ஆமா, சண்டை தானே?…” என்றான் புன்னகையை அடக்கிக்கொண்டு.
“இல்ல இல்ல. நான் சண்டை எல்லாம் போடலை…” என அவசரமாக அவள் மூச்சு வாங்க சொல்ல,
“உன் இஷ்டத்துக்கு மாத்திப்பியா? அது சண்டை தான். ப்ச், நான் வீடியோ கால் வரேன். அதுல பேசிக்கலாம்…” என வைத்துவிட்டான்.
வீடியோ காலில் அழைக்க நிதர்ஷனா அதனை எடுக்காமல் ஆடியோவை மட்டும் எடுத்தாள்.
“ஹோய், வீடியோ கால் வா…” என்றான் எடுத்ததும் திருமொழி.
“ம்ஹூம். இதுலையே, இப்படியே பேசுங்க…” மெல்லிய குரலில் அவள் முனங்க,
“நீ தான் தைரியமான ஆளாச்சே, வீடியோ வா…” என்றான் திருமொழி.
“திட்டுவீங்க…”
“நான் திட்டற அளவுக்கு நீ என்ன பேசினன்னு ஞாபகம் இருக்கா?…” என கேட்கவும் ‘அச்சோ’ என தலையில் கைவைத்து கண்களை மூடிக்கொண்டாள் நிதர்ஷனா.
“காலையில எப்படி கேட்ட, திரும்ப கேளு…” என வம்பிழுத்தான் அவன்.
“தெரியாம கேட்டுட்டேன்…” என உடனே சரணடைந்தாள் நிதர்ஷனா.
“அப்படியெல்லாம் உன்னை விடமுடியாது. வீடியோ கால் வா. வரனும். ஆன் பண்ணு…” என்றதும் ‘போச்சு, போச்சு’ என்றபடி தான் இணைப்பை கொடுத்தாள் நிதர்ஷனா.
முகம் லேசாய் வியர்த்திருக்க மெல்லிய வெளிச்சத்தில் கணவன் ‘என்ன சொல்லுவானோ?’ என்னும் பதட்டத்துடன் மஞ்சள் நிலவாய் ஒளிர்ந்தவளை கண்கொட்டாமல் பார்த்தவன் முகத்தில் கோபமா என ஆராய்ந்துகொண்டிருந்தாள் நிதர்ஷனா.
அவன் கண்களை பார்த்து கூட கண்டுகொள்ள முடியாமல் முகத்தின் பாவனையை வைத்து இலகு தன்மையை, புன்னகையை தேடிக்கொண்டிருப்பவளை இப்போதே அழைத்து வந்துவிட்டால் என்னெவென்று தான் தோன்றியது திருமொழிக்கு.
“கோவம் போயிருச்சா?…” என நிதர்ஷனா கேட்க,
“இல்லை….” தலையசைத்தான்.
“சாப்பிட்டாச்சா?…”
“இல்லை…”
திருமொழி சொல்லவும் அடுத்து என கேட்க என தெரியாமல் அவன் முகம் பார்ப்பதும் விழிகளை அறைக்குள் சுழல விடுவதுமாக இருக்க,