“அப்படித்தான் சொல்லுவேன். வந்தாகனும்ன்னு நீ கூப்பிட்டா என்னவாம்?…” என்று சிரித்தான் திருமொழி.
“கட்டாயப்படுத்தற மாதிரி இருக்குமேன்னு தான்….” என்றவள்,
“ஏன் கார் இங்க நிக்குது? சரி வாங்க போவோம்…” என அவனை அழைக்க,
“போகலாம். முதல்ல உன்னை பார்க்கனும்ன்னு தோணுச்சு. அங்க வந்தா தள்ளி தான் நிக்க முடியும். அதான்…”
“நீங்க இப்படியெல்லாம் யோசிப்பீங்களா?…” என விழிவிரித்து நிதர்ஷனா கேட்கவும் ரசனையாய் ஒரு புன்னகை அவன் முகத்தில்.
“என்னை தேடினியா நீ?…”
“ஹாங்…” என்றவள் பதில் சொல்லாமல் இருக்க,
“இல்லையா?…”
“அப்படியெல்லாம் இல்லை…”
“சரி, என்னை நீ கேட்கவே இல்லையே?…” என்றான் அவளின் தோளில் கையை போட்டு அணைவாய்.
“என்ன கேட்க?…”
“நான் உன்னை தேடினேனான்னு தான். வேற என்ன?…” என மென்மையாய் புன்னகைக்க அதற்கும் மௌனம் தான் அவளிடம்.
“என்னாச்சு? இல்லையா என்ன?…” என்றான் மீண்டும் அவளின் கன்னம் பற்றி.
“இல்ல, நான் கேட்டு நீங்க என்னை தேடலைன்னு சொல்லிட்டா ரொம்ப ஹர்ட்டாகிடும். அதான் கேட்காமலே இருக்கலாமே….” என அவனை பாராமல் சொல்ல அதற்குள் அத்தனை தவிப்பு நிறைந்திருந்தது.
“ஓஹ், அப்போ நானே சொல்லவா?…” என கேட்டவன்,
“உன்னை நான் ரொம்ப ரொம்ப தேடி இனிமே என்னால தனியா இருக்க முடியாதுன்னு தான் கிளம்பி வந்துட்டேன். என்னோட ஒவ்வொரு வேலையிலையும் உன்னை மட்டும் தான் தேடிட்டே இருந்தேன் தர்ஷி. இதை நீ கேட்டு நான் சொல்லனும்ன்னு இருந்தேன்…” என்றான் திருமொழி.
அவன் சொல்ல சொல்ல நிதர்ஷனாவின் விழிகள் மீண்டும் கலங்கிவிட்டது. தானாக அவன் தோள் சாய்ந்துகொண்டவள் கைகள் டிஷர்ட்டை இறுக்கமாய் பற்றிக்கொண்டது.
அவளின் சிறு அணைப்பிற்கே அவன் வசமிழந்து போனான். மனைவியை விடுத்து காரிலிருந்து முன்னும், பின்னும் என சுற்றுப்புறத்தை ஆராய்ந்தவன்,
“ஊஃப், ப்ச் வா உள்ள போவோம்…” என சொல்லி காரிலிருந்து இறங்கினான்.
“என்னாச்சு?…” என நிதர்ஷனா கேட்க,
“உனக்கு ஒன்னு குடுக்கனும். இங்க முடியாது இல்லையா? அதான். வா…” என சொல்லி அவளை வெளியே வரும்படி தலையசைக்க வாயடைத்து பார்த்தாள்.
அவ்வப்போது இப்படி எதையாவது செய்து தன்னை தன்னிலை மறக்க செய்பவனை இன்னுமின்னும் பிடித்து தொலைத்து.
இருவருமாக வீட்டிற்குள் நுழைய அனைவருமே வரவேற்றனர். கணேசன் மட்டும் உறங்கிக்கொண்டிருக்க சரஸ்வதியும் மருமகனை வரவேற்க புன்னகையுடன் அனைவரையும் விசாரித்தான்.
அவ்வளவு தான். அதன்பின் மற்றவர்கள் சலசலவென பேச ஆரம்பிக்க வேடிக்கை பார்ப்பது ஒன்றே திருமொழியின் வேலை.
அதுவும் நிதர்ஷனாவின் செயல்பாடுகள் தான் அவன் விழியை நிறைத்தது. அது வெகு சாதாரண பார்வை தான் மற்றவர்களுக்கு.
ஆனால் நிதர்ஷனாவிற்கு அவனின் புறம் மட்டுமின்றி அகமும் வெளிச்சத்தில் விளக்காய் விளங்க தடுமாறி பார்த்தாள் அவனை.
“நிது அப்பாவை போய் எழுப்பு…” என ஸ்ரீதர் சொல்ல,
“நான் மாட்டேன்…” என்றாள் உடனே.
“நீ போய் எழுப்பேன்டா…” என பிரகாஷை சொல்லும்முன் அவனே ஸ்ரீதரை சொல்ல,
“என்ன இருந்தாலும் கடைக்குட்டின்னா தனி பாசம் தான். இப்ப என்ன ரெண்டாவது கடைக்குட்டி நீ போ…” ஸ்ரீதர் நழுவ,
“உனக்கு வேணும்னா புதுசு புதுசா கண்டுபிடிப்ப. ஒழுங்கா போடா…” என விரட்டினான் பிரகாஷ்.
“நா போறேன்…” என ஷிவேஷ் முன்னே செல்ல,
“என் சிங்கக்குட்டி இருக்கையிலே என்ன பயம்? இப்ப பாரு…” என பிரகாஷ் அவனை தூக்கிக்கொண்டு கணேசன் உறங்கிக்கொண்டிருந்த அறைக்கு செல்ல திருமொழிக்கு அத்தனை சிரிப்பு.
அவன் உள்ளே சென்ற சற்றுநேரத்திற்குள் அடித்துப்பிடித்து வெளியே வர அவனோடு கத்திக்கொண்டே வந்தார் கணேசன்.
“என்ன பாடு படுத்தறீங்கடா தடிமாட்டு பசங்களா? அறிவிருக்கா உங்களுக்கு?…” என தோளில் துண்டை போட்டுக்கொண்டு வேகமாய் வெளியே வந்தவர் திகைத்து நின்றுவிட்டார் மருமகனை கண்டதும்.
லுங்கியும், சட்டை அணியாமல் வெறும் துண்டை மட்டும் தோளில் போட்டிருக்க சங்கடத்துடன் திருமொழியை பார்த்தவர்,
“வாங்க வாங்க மாப்பிள்ளை…” என்றார் பனியாய்.
“பார்த்தியா? என்ன சொல்லு மருமகன் போஸ்ட்டிங்க்கு இருக்கற கெத்து மருமக போஸ்ட்டிங்க்கு இருக்கா?…” என மெர்லினை பார்த்துக்கொண்டே பிரகாஷ் கிண்டல் பேச,
“எல்லாரும் கிளம்பட்டும். இருக்கு உனக்கு…” என மெர்லின் பல்லை கடிக்க,
“ஆத்தீ மலையேறிட்டாங்க…” என்று உஷாரானான் பிரகாஷ்.
“திருமணநாள் வாழ்த்துக்கள் மாமா, அத்தை…” என திருமொழி சொல்லவும்,