“உங்களுக்கு அட்மிஷன் இருக்குமே? காலேஜ்ல எவ்வளோ வேலை?…” என இல்லாத குட்டிக்கரணங்கள் அடிக்க பொருத்து பொருத்து பார்த்தவன்,
“அப்போ என்னோட நீ வரலை…” என்றான் இடுப்பில் கைவைத்து பார்த்தபடி.
“இல்ல தனியா போறதுக்கு அத்தை, மாமா, ஸ்வாதி அண்ணி…”
“ஆதித்தை விட்டுட போற?…” என கடுப்பில் பல்லை கடித்தவன் இரவு உடைக்கு மாற அவனின் கோபம் கண்டு நிதர்ஷனா கப்சிப்.
“இது ஹனிமூன். அது புரியுதா உனக்கு?…” என்றவனின் அழுத்தமான கேள்வியில் வாயை திறக்கவில்லை.
“சாப்பிட்டாச்சா?…” என்றான் அவளின் அமைதியில்.
“ஹ்ம்ம், ஆச்சு. அத்தையோட…” என அதையும் சொல்ல பெருமூச்சுடன் அவளை பார்த்தவன்,
“உனக்காக தான் இந்த ட்ரிப்…” என்றான் அவளிடம்.
“இல்லை, தனியா அவ்வளோ தூரம் போறதுக்கு எல்லாரும் வந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன்…” முனங்கலாய் வந்தது அவள் குரல்.
“ஓஹ்…” என்றவன் முகத்தில் சட்டென ஒரு இலகுத்தன்மை.
“உன்கிட்ட மட்டும் காமிக்க ஒரு விஷயம் இருக்கு. எல்லாரையும் கூட்டிட்டு போனா பிரச்சனையாகிடாதா? அதான் நம்ம மட்டும். ஹனிமூன் போன மாதிரியும் ஆச்சு. அந்த நபரை நீ மீட் பண்ணின மாதிரியும் ஆச்சு…” என்று இதழ்களுக்குள் புன்னகையை அடக்கியபடி நக்கலாய் அவன் சொல்ல,
“உங்க ப்ரெண்டா?…” என கேட்டாள்.
“ம்ஹூம். இதுவரைக்கும் யாருமே கெஸ் பண்ணாத ஒரு விஷயத்தை கரெக்ட்டா நீ தான் கெஸ் பண்ணின. பயமில்லாம சொல்லவும் செஞ்ச. அதான் சின்ன கிப்ட்…” என சொல்லியவன் அவள் விழிப்பதை பார்த்து,
“அதான்ம்மா என்னோட பர்ஸ்ட் வொய்ப்பை போய் மீட் பண்ணிட்டு வரலாம்ன்னு சொல்றேன்…” என்று போட்டு உடைக்க நிதர்ஷனாவின் நெஞ்சாங்கூடு பொட்டீர் என உடைந்தது.
“பார்க்க ரெடியா இரு. நான் போய் சாப்பிட்டு வரேன்…” என சொல்லியவன் தன் கையிலிருந்த டவலை மனைவியின் தோளில் போட்டுவிட்டு வெளியேறினான்.
“இப்படியே டென்ஷன்லையே இரு கொஞ்சநேரத்துக்கு. ஹனிமூன் போகலாம்ன்னா என்கூட வர இவ்வளோ ஆர்ப்பாட்டமா?…” என அவளை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான்.
நிதர்ஷனா அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான். அதன் பின்னர் எப்படி தெரியும்? எப்போது தெரியும்? யார் சொல்லியது? என கேள்விகள் அவளை சுற்றி பிய்த்தெடுக்க வேகமாய் கீழே இறங்கி சென்றாள்.
திருமொழி சாப்பிட்டுக்கொண்டிருக்க அதுவரை அத்தனை வேகத்தில் வந்தவள் அவன் நிமிர்ந்து பார்த்ததும் பதறியது அந்த பார்வைக்கே.
“என்ன பாப்பா?…” என்றார் சங்கவை மருமகளிடம்.
“தண்ணி, தண்ணி குடிக்க வந்தேன் த்தை…” என்று சொல்லி திருமொழியை பார்க்க அவன் தான் வைத்திருந்ததை அவளுக்கு நகட்டி வைத்தான்.
அதை எடுத்து குடித்துவிட்டு நிற்க சாப்பிட்டு முடித்தவன் எதுவும் சொல்லாமல் இளங்கோவனுடன் பேச அமர்ந்துவிட்டான்.
அவன் எப்போது அறைக்கு வருவான், எப்படி கேட்க என யோசித்துக்கொண்டே குட்டி போட்ட பூனையாய் சுற்றி சுற்றி வர திருமொழியின் முகத்தில் சிரிப்பை அடக்கமுடியாத பாவனை.
இதில் இளங்கோவன் வேறு என்னென்னவோ பேச அதை எங்கே காதில் வாங்கினான்?
‘இவன் என்னை எதுக்கு வம்படியா கூப்பிட்டு உக்கார வச்சிருக்கான்?’ என பார்த்தவருக்கு மருமகள் பாவமாய் நிற்பதும் அவளை பார்க்காதது போல மகன் இருப்பதும் என புரிய,
“சரிப்பா நான் தூங்கறேன்…” என எழுந்து சென்றுவிட்டார்.
சங்கவையும் கிளம்பிவிட போனை வைத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டான் திருமொழி.
“நீங்க தூங்க வரலை?…” என மெல்ல அவனருகே வந்து நிதர்ஷனா கேட்க,
“வரலை…” என்று மட்டும் சொல்ல,
“நான் உங்க கூட எங்கவேணா வரேன்…” உடனடி சமாதானத்திற்கு வந்தாள் அவள்.
“சரி…”
“வரமாட்டேன்னு சொல்ல மாட்டேன்…”
“ஓகே. வேற?…” என அவன் நிமிர்ந்து கேட்கவும் ஒன்றுமில்லை என தலையசைத்தவள் அமைதியாக,
“குட்நைட்…” என்று எழுந்து சென்றுவிட்டான் மாடிக்கு.
‘சொதப்பாத நிது. அப்படி என்ன பயம் உனக்கு? கேளு கேளு’ என மூச்சை இழுத்து விட்டபடி செல்ல அறையை இருட்டாக்கி திருமொழி கவிழ்ந்து படுத்திருந்தான்.
“அதுக்குள்ள தூங்கிட்டாங்க?…” என அருகில் சென்றமர்ந்தவள் அவனின் தோளை சுரண்ட,
“ஹ்ம்ம்…” என்றான் திருமொழி.
“தூங்கிட்டீங்களா?…” என மீண்டும் சுரண்டினாள்.
“ஹ்ம்ம்..”
“ஒன்னு கேட்கனும். கொஞ்சம் முழிச்சுக்கோங்க…”
“ப்ச், முடியாது…”
“இல்ல இப்பவே கேட்கனும்…” என இப்போது கையை பிடித்து அவனை திருப்ப மொத்தமாய் அவளை தனக்கு கீழ் கொண்டுவந்தவன்,
“அதான் நான் உங்களோட வரேன்னு சொல்லிட்டேனே? வேற என்ன?…”
“நீ வரலைன்னாலும் நாம போறோம். அதை இங்க கொண்டு வராத….” என்றவன் விரல்கள் அவளின் இதழை வருட,
“நீயா தரனும். நான் கேட்காமலே. நான் நினைக்காமலே. நான் எதிர்பார்க்காமலே. எப்போ தர்ஷி?…”என ஏக்கமும், எதிர்பார்ப்புமாய் கேட்க வெட்கங்கள் கொள்ளை கொண்டது நிதர்ஷனாவை.
“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா?…” என சிரிப்புடன் கேட்க அவள் தலை வேகமாய் ஆடியது.
“செய்யறதெல்லாம் சேட்டை. ஆனா ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி பம்முறது…” என அவளின் கன்னத்தை வலிக்க கடித்தவன்,
“நீ என்னைக்கு சொன்னியோ அன்னைக்கே தெரியும்….” என்று சொல்ல,
“அப்பவேவா?…” என்று அதிர்ந்து பார்த்தவள் அதன்பின் தான் திருமொழியை பார்த்த பொழுதுகளையும், தன் திருமணம், அதன் பின்னான நிகழ்வுகள் எல்லாம் வரிசையாக நினைக்க,
அதை சொல்லி சொல்லியே அவனுடன் வெளிநாடு கிளப்பியிருந்தான் திருமொழி.
கணேசனுக்கு பெருமை பிடிபடவில்லை. சரஸ்வதியிடம் சொல்லி, மகன்களிடம் பூரித்து என மாய்ந்து போனார்.
“கிளிக்கு றெக்கை முளைத்துடுத்து. பறந்துடுத்து…” என பிரகாஷ் ஒருபுறம் வாழ்த்த,
“அத்த நானு…” என ஷிவேஷ் அடம் பிடிக்க, ஸ்ரீதரும் மெர்லினும் சமாளிக்க என நிதர்ஷனாவின் யுஎஸ் பயணம் துவங்கியது.
பதினைந்து நாட்கள் அவனுடன் மட்டுமே. ஒவ்வொரு முறையும் அவள் பேசிய வார்த்தைகளை அட்சு பிசகாமல் திருமொழி சொல்லி சொல்லி சீண்டிக்கொண்டே இருந்தான்.
திருமொழி படித்து, பழகிய இடம் என்பதால் வரும் முன்னரே தங்குவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டான்.
ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருப்பான் என நிதர்ஷனா நினைத்தால் தனி வீடாகவே இருந்தது அங்கே.
“இங்கயா இருக்க போறோம்?…” என்றவள் அந்த வீட்டை சுற்றி பார்த்தாள்.
“வீடு குட்டியா இருந்தாலும் அழகா இருக்கே….” என சொல்லி,
“இங்க நம்ம மட்டும் தான். நமக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நாமளே தேவைன்னா குக் பண்ணிக்கலாம். வேண்டாம்ன்னா ரெஸ்ட் எடுக்கலாம்…” என்று சொல்லி ஒரு அறைக்குள் நுழைய திருமொழியின் புகைப்படம் சுவற்றில்.
அவன் அங்கிருக்கும் பொழுது எடுத்தது. மனைவியின் திகைத்த பார்வையில் புன்னகைத்தவன் பின்னிருந்து அணைத்தபடி,
“இது நானும் என் ப்ரெண்ட்டும் சேர்ந்து வாங்கின வீடு. நான் படிக்கும் போது சேல்க்கு வந்துச்சு. நாங்களே ஷேர் பண்ணி வாங்கிட்டோம். அப்பப்ப அம்மாப்பாவும் வருவாங்க வெகேஷனுக்கு…” என கதை கதையாய் சொல்லிக்கொண்டே வர அவனின் கைகளுக்குள் கண்கள் சொருகியது.
“ஹோய், என்ன தூங்கற நீ? முதல்ல குளிச்சிட்டு ப்ரெஷாகி வரலாம்…” என அவளை உலுக்கினான்.
பகல் நேரம் ஆதலால் இந்திய நேரத்திற்கு உறக்கம் வர நிதர்ஷனா கண்ணை கசக்கியபடி அவனுடன் உடன்பட ஒருகட்டத்திற்கு மேல் அவளால் முடியவில்லை.
“அநியாயம் பன்றடி நீ…” என்றவன் தானுமே பயண அலுப்பு நீங்கமட்டும் தூங்கி எழுந்தான்.
மாலை மயங்கும் நேரம் தான் விழிக்கவே முடிந்தது. கண்விழித்தவள் தன் முன் காபி குடித்துக்கொண்டிருந்தவனை பார்த்ததும் பட்டென்று எழுந்தமர்ந்தாள்.
“இவ்வளோ நேரமா தூங்கிட்டேன்?…” என கேட்க,
“ஹ்ம்ம், நோ ப்ராப்ளம். நம்ம கன்ட்ரி டைம்ன்னு நீ முழிச்சாலே போதும்…” என்றான் திருமொழி நமுட்டு சிரிப்புடன்.