“அண்ணி சொல்ல வாய்ப்பில்லை. அண்ணா தான் என்னவோ பன்றாங்க…” என ஸ்வாதி சரியாக சொல்ல,
“இப்ப என்ன உன்னோட டேஸ்ட் ப்ரோவுக்கு தெரிஞ்சிருக்கும். அதை வச்சு நீ இதுதான் கிப்ட் பண்ண போறன்னு கரெக்ட்டா சொல்லியிருப்பாங்க…” என்றாள் மெர்லின்.
“அட போங்க அண்ணி. ஒவ்வொரு தடவையும் இப்படி எப்படி கரெக்ட்டா சொல்ல முடியும்? அதான் எனக்கு டவுட்டாவே இருக்கு. உங்களை கேட்டா இப்படி கவுக்கறீங்களே?…” என நிதர்ஷனா கன்னத்தில் கை வைக்க,
“என்னடா இது மேனேஜருக்கு வந்த சோதனை?…” என ஸ்ரீதரும், பிரகாஷும் ஹைபை அடித்துக்கொள்ள,
“போங்கடா பிசாசுங்களா. உங்ககிட்ட ஐடியா கேட்டேன் பாரு…” என இருவரின் முதுகிலும் அவள் மொத்த,
“நாங்க வேணும்னா கழுத்துல கத்தி வச்சு உன் புருஷன்கிட்ட என்ன ரகசியம்ன்னு கெஞ்சி கதறி கேட்டுட்டு வரட்டுமா குட்டிச்சாத்தான்?…” என சிரித்தான் பிரகாஷ்.
“என்ன தெரியனும் இப்போ?…” என்ற திருமொழியின் சத்தத்தில் மாநாடு ஸ்தம்பித்து பார்த்தது.
“எல்லாரும் சாப்பிட்டாச்சா?…” என அனைவரையும் பார்த்து அவன் கேட்க,
“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான்…” என்றனர் ஒரு சேர.
திருமொழிக்கு அந்த பாவனை கீழே பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து செய்ததை போலவே இருந்தது. மெல்லிய புன்னகையுடன் பார்த்துவிட்டு,
நிதர்ஷனாவின் ஆசைகள் மட்டுமல்ல, அவள் எதிர்பார்ப்புகள், அவளின் எண்ணங்கள் என அவளின் அந்த நாட்குறிப்பில் தான் அவனது வாழ்நாட்களும் சுகமாய் நகர்ந்தது.
அதை வைத்து தான் அவள் செய்ய நினைப்பது எல்லாம் தெரிந்துகொள்வது. இந்த விளையாட்டை விரும்பியே அவன் செய்துக்கொண்டிருக்கிறான்.
“ஒருதடவையாச்சும் இப்படி டைரி இருக்குன்னு சொன்னியா நீ?…” என அவ்வப்போது நினைப்பதும் உண்டு சிரிப்புடன்.
இன்றும் அதை போலவே இளநகை பூக்க உடை மாற்றிவிட்டு கீழே இறங்கி சென்றான்.
ஹாலில் நிதர்ஷனா அமர்ந்திருக்க அவளை பார்க்க என்று ரத்னாவும் அவரின் சம்பந்தகாரரும் வந்திருந்தனர்.
“வாங்க…” என்று அவர்களை வரவேற்று சாப்பிட சென்றவன் உண்டு முடித்து வந்து மனைவியருக்கே அமர அவளின் குழந்தை பற்றிய பேச்சுக்கள் தான் நடந்துகொண்டிருந்தது.
“நீயாச்சும் ஒண்ணுக்கொண்ணு துணைக்கு வேணும்ன்னு நினைச்சு பெத்துக்கற. நல்ல பொண்ணும்மா நீ. அங்க பார்த்தியா?…” என தன் மகளை காண்பித்து சொல்ல நிதர்ஷனா திருமொழியை திரும்பி பார்த்தாள்.
வாயில் கைவைத்து மீசையை நீவியபடி ஒன்றும் அறியாததை போல அவன் அமர்ந்திருந்த விதத்தில் நிதர்ஷனா பல்லை கடித்தாள்.
‘இதுக்கெல்லாம் காரணம் நான்னு இந்தம்மா நினைக்கிறாங்க. ஆனா இதுக்கெல்லாம் காரணம் நானில்ல. என் பக்கத்துல உக்கார்ந்திருக்க மனுஷன்னு நான் எப்படி சொல்ல?’ என வழக்கம் போல மனதிற்குள் நினைத்து முடிக்க திருமொழி திரும்பி பார்த்துவிட்டான் அவளை.
‘ம்க்கும், ஒன்னு கூட என்னை மாதிரி இல்லை. அப்படியே அப்பா தான்’ என நிதர்ஷனா பார்க்க,
“ஓகே, அம்மாட்ட சொல்லிட்டு கிளம்புங்க. சண்டை போடாம இருக்கனும்…” என்று சொல்ல பிள்ளைகளும் நிதர்ஷனாவிடம் சொல்லிவிட்டு, கொஞ்சிவிட்டு கிளம்பி சென்றனர்.
ஸ்வாதியும் கிளம்பிவிட வீடே வெறித்துவிட்டது. மாடிக்கு வந்ததும் நிதர்ஷனாவின் காலை பார்த்தவன்,
“இவ்வளோ வீங்கி இருக்கு. பார்க்கலையா நீ?…” என்று கேட்க,
“நானும் கவனிக்கவே இல்லை…” என்றாள் நிதர்ஷனா.
“ஹ்ம்ம், எல்லாரையும் சேர்ந்து பார்த்தா உன்னை மறந்திடுவ நீ. போய் ட்ரெஸ் மாத்திட்டு வா…” என்றதும் அவள் இலகுவாய் நீள கவுன் அணிந்து வரவும் அவள் காலுக்கு வெந்நீர் ஒத்தடம் வைத்தான் திருமொழி.
அன்று மதியம் உறங்கவே இல்லை நிதர்ஷனா. அனைவரும் இருக்க திருமொழி சொல்லியதை போல அவளை கையில் பிடிக்கமுடியவில்லை.
வேலை, குழந்தைகள் என்று ஆன பின்பு எப்போதாவது இப்படியான விசேஷங்களில் தான் எல்லோரும் ஒன்று கூடுவது எல்லாம்.
அப்படி கிடைக்கும் இந்த பொக்கிஷ தருணங்களை எல்லாம் அவள் இழக்க நினைப்பதே இல்லை.
அதற்கே கணவனிடம் அத்தனை பாட்டு வாங்குவாள். திருமொழி எத்தனை பேசினாலும் அதில் அத்தனையிலும் அவள் மீதான நேசம் மட்டும் விஞ்சி நிற்கும்.
“என்னடா, ரொம்ப டயர்டா?…” என தலை கோத வாகாய் அவனை ஒட்டிக்கொண்டவள்,
“தூங்கினா சரியா போயிரும்…” என்று மட்டும் சொல்ல,
“ஓகே, இந்த குழந்தையோட போதும். ஸ்டாப் பண்ணிக்கலாம் தர்ஷி…” என திருமொழி சொல்ல வேகமாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நம்பவே மாட்டேன் போங்க…” என்று அவனின் மீசையை பிடித்து வலிக்க இழுத்தாள்.
“இதை சொல்லி சொல்லியே பூர்ணி பிறந்தா. அப்பறம் அவ என்னை மாதிரி இல்லைன்னு இன்னொன்னு. திரு பிறந்தான். அவனும் என்னை மாதிரி இல்லைன்னு திரும்ப இப்ப இன்னொரு குட்டி. ரெண்டையும் உங்களை மாதிரி வளர்த்துட்டு என்னை மாதிரினா வேணும்ன்னா எப்படி வரும்?…” என்று வேகமாய் கேட்க திருமொழி உடல் குலுங்க ஆர்ப்பரித்து சிரித்துவிட்டான்.
“நிஜமாவே போதும். தர்ஷி என்னை நம்பனும்…” என அடக்கமுடியாத சிரிப்புடன் அவன் சொல்ல,
“இப்ப தான் இந்த நம்பனும்ன்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் புரியுது. என் மண்டையை கழுவி மயக்கி இப்ப மூணு. நானும் மயங்கிடறேன். அதனால உங்களையும் நம்ப மாட்டேன். என்னையும் நம்ப மாட்டேன்…” என கோபத்தில் ஆரம்பித்து வெட்கத்தில் முடித்தவள் அவனின் தோளில் முகம் புதைக்க,
“ஆஹாங், மயங்கிட்டியா நீ? நிஜமாவா?…” என்று திருமொழி கேட்க,
“மொழி என்னை நம்பனும்…” என்றாள் நிதர்ஷனா அவனை போலவே.
“உண்மையா நான் தான் மயங்கிட்டேன் போ. தர்ஷி மயக்கம். தெளியாத மயக்கம்…” மயக்கத்துடன் திருமொழி சொல்ல,
“ஒரு சேர்மன் பேசற பேச்சா இது? ஏற்கனவே யுஎஸ் வீடியோ இப்ப வரை சுத்திட்டிருக்கு….” என நிதர்ஷனா வெட்கம் விட்டு கிண்டலில் இறங்கினாள்.
“ஹோய் அந்த வீடியோல நான் உன்னை தூக்கி சுத்தினேன். ஆனா நீ தான் கிஸ் பண்ணின…” என்றவன்,
“உன் புருஷன் என்ன வேணா பேசுவேன். என்னை யார் கேட்பா?….” என்று திருமொழி சொல்ல வயிற்றில் உள்ள குழந்தை எட்டி உதைத்தது தகப்பனின் கையில்.
நிதர்ஷனாவின் வயிற்றை சுற்றி கொடியாய் தன் கையை படர விட்டிருந்திருந்தவன் கையில் குழந்தை தன் இருப்பை காண்பித்து சேட்டை செய்ய,
“கண்டிப்பா இந்த பேபி உன்னை மாதிரியே தான்…” என்றன திருமொழிவர்ணன் மனைவியின் வயிற்றில் அழுத்தமாய் இதழ் பதித்து.
“இருக்கட்டும், உங்களை சமாளிக்க எனக்கொரு ஆள்…”
“என்னை உன்னால சமாளிக்க முடியாதுன்னா சொல்ற? தர்ஷியை நம்பமுடியலை….” என்றவன் கண் சிமிட்டலில் மீண்டும் நிதர்ஷனா நாணம் சூடிக்கொள்ள அவன் நித்தமும் தன்னில் சூடிக்கொள்ளும் பெண்ணின் வெட்கத்தில் திருமொழியின் உலகம் மார்கழியின் குளுமை.
கண்டிப்பான மகன். கண்ணியம் தவறா மருமகன். நல்லதை எடுத்துரைக்கும் ஆசான். தொழில் சக்கரவர்த்தி. தவறு பொறுக்காத தலைவன்.
ஆனால் மனைவிக்கு எப்போதும் குளிர்வானவன். நிறைவானவன். அவள் உயிரானவன். இதமானவன்.
அவனின் நிதர்சனம் அவள். அவ வார்த்தைகளில் வடிக்காத கவிதைகளின் மொழி அவன்.
உறவுகள் சங்கமத்தில் உயிர் கொண்டு கூத்தாடும் மலர்களின் வாசம் நேசம் சுமந்து சுகந்தத்தின் மொழியை மார்கழியின் துளியாய் வார்த்தது.