திருமொழியை வைத்துக்கொண்டு இதை எப்படி பேச என நிதர்ஷனா தயங்கி நிற்க,
“சொல்லும்மா…” என்றார் ரத்னா மீண்டும் அவளிடம்.
“மேம், இந்த ட்ரெஸ் டான்ஸ்க்கு சூஸ் பண்ணியிருக்காங்க முருகலட்சுமி மேம். ஆனா இது கம்பர்டபிளா இல்லை. இதை போட்டுட்டு டான்ஸ் பண்ண கஷ்டமா இருக்கும். ஆறு பேர் ஆடறோம். எல்லாருக்கும் ஒவ்வொரு சைஸ். எதுவுமே கரெக்ட் இல்லை…” என வேகமாக அவள் சொல்லி முடிக்க புருவங்கள் சுருங்க இதனை கவனித்தான் திருமொழி.
“இதை மேம்கிட்ட சொன்னா புரிஞ்சுக்காம பேசறாங்க. இதை எப்படி போட்டுட்டு டான்ஸ் பண்ண முடியும்? எங்களால முடியாதுன்னு சொல்லியும் ரொம்ப பேசறாங்க மேம்….” என்றாள் படபடவென நிதர்ஷனா.
“இதை நீ அவங்ககிட்டவே சொல்லியிருக்கலாமே?…” என்ற ரத்னா,
“என்ன நளினா, நீங்க தானே டான்ஸ் சொல்லி தரீங்க. முருகாகிட்ட சொல்லவேண்டியது தானே?…”
“மேம் நான் சொல்லிட்டேன். கல்சுரல்ஸ்ல கலந்துக்கற எங்க டிபார்ட்மென்ட் ஸ்டூடன்ஸ்க்கு அவங்க தான் இன்சார்ஜ். அவங்க சொன்னதை செய்ன்னு சொல்றாங்க. அட்ஜஸ்ட் பண்ணுங்கன்னு சொல்றாங்க…” என நளினா சொல்ல,
“வாட்?…” என எழுந்துவிட்டான் திருமொழி.
அவனின் கோபத்தில் நிதர்ஷனா பயந்து சட்டென நளினாவின் பின்னால் வந்து நின்றுவிட ரத்னாவும் எழுந்து அவனருகில் வந்தார்.
“நான் பேசறேன்…” என அவனிடம் சொல்லி ப்யூனை அழைத்து முருகலட்சுமியை அழைத்து வரும்படி சொல்லியனுப்ப,
“மேம் மிருதுளா மேமையும் வர சொல்லிருங்க…” என்றார் நளினா திருமொழியை தயக்கத்துடன் பார்த்தபடி.
“மிருதுளாவா? அவங்க ஏன்?…” என்றான் திருமொழி.
“டான்ஸ் ட்ரெஸ் ரெண்டல்க்கு எடுக்கற ஷாப் ஓனர் மிருதுளா மேம் கிளாஸ்மேட்டாம். ப்ரெண்ட் வேற. அவங்களுக்கு இது ஒரு வாய்ப்பா இருக்கும்ன்னு அங்க வாங்க சொல்லி ரெபர் பண்ணிருக்காங்க…” எனவும் நளினா சொல்ல ரத்னா திருமொழியை பார்த்தார்.
“ரெண்டுபேரையும் வர சொல்லுங்க…” என்றவன்,
“இந்த ட்ரெஸ் எப்படி இருக்குன்னு நீங்க இவங்களை உள்ள கூட்டிட்டு போய் செக் பண்ணுங்க மேம்…” என்றான் ரத்னாவிடம் அவன்.
“வாம்மா…” என நிதர்ஷனாவை தன்னுடைய ஒய்வு அறைக்குள் அழைத்து சென்றவர் அந்த உடையை ஆராய அத்தனை நன்றாகவும் இல்லை. உடலளவுகள் ஒருவிதமாகவும் இருந்தது.
“மேம், இன்னொரு விஷயம்…” என அங்கேயே நிதர்ஷனா பேச,
“சொல்லும்மா…” என்றார் ரத்னா,
“இல்ல இந்த ட்ரெஸ் ரெண்டல்க்கு எடுக்கறதுக்கு பதில் நாமளே ட்ரெஸ் எடுத்து ஸ்டிச் பண்ணிக்கலாம். பின்னாடி யூஸ் பண்ணிக்கவும் செய்யலாம். இந்த மாதிரி துணியா இல்லாம குவாலிட்டியா எடுக்கலாம். எனக்கு தெரிஞ்ச டெய்லர் இருக்காங்க. கம்மியா தான் ஆகும். வாடகை காசைவிட கம்மியா…” என்றாள் அவள்.
அந்த அறையின் கதவு ஒருகளித்து சாற்றி இருக்க நிதர்ஷனா சொல்லியது வெளியே திருமொழிக்கும் கேட்டது.
“நிதா சொல்றது சரி தான் ஸார். பொண்ணுங்க அவங்களே பார்த்துக்கறேன்னு சொல்றாங்க. கலர் காம்பினேஷன் சொன்னா போதும். பார்த்து எடுத்துக்கறேன்னு சொல்லிட்டாங்க. முருகா மேம் தான் பிடிவாதமா அவங்க சொன்னது தான் பைனல் அப்படின்னு சொல்றாங்க…” என்றார் நளினா திருமொழியிடம்.
ரத்னாவுடன் நிதர்ஷனா வெளியில் வர அவள் கையிலிருந்த அந்த உடையையும் பார்த்தான் அவன்.
கண்ணாடி சல்லடை போன்ற ஜிகுஜிகு துணியும், அதன் நிறமும் ஒப்புதலாய் இல்லை.
முகம் கடுத்தது அவனுக்கு. ‘இது என்ன கல்லூரியா என்ன?’ என எரிச்சலுடன் அவர்கள் வரவிற்கு காத்து நிற்க,
அதற்குள் முருகலட்சுமியும், மிருதுளாவும் வந்துவிட இவர்கள் இருவரையும் பார்த்ததும் முகம் சுருக்கினார்கள்.
அதுவும் நிதர்ஷனா கையிலிருந்த அந்த உடையை பார்த்து முருகலட்சுமிக்கு கோபம்.
“குட்மார்னிங் ஸார், குட்மார்னிங் மேம்…” என வந்ததுமே இருவரும் திருமொழிக்கும், ரத்னாவிற்கும் வணக்கம் வைத்தனர்.
ரத்னா தான் அழைத்ததாக ப்யூன் வந்து சொல்லியிருக்க அங்கே திருமொழியை மிருதுளா எதிர்பார்க்கவில்லை.
பார்த்ததும் முகம் பளீரென ஒளிரிட தன் அதிகப்படியான சந்தோஷத்தை காட்டிக்கொள்ளமுடியாமல் முயன்று இயல்பாக நிற்க நினைக்க ரத்னா கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
“இங்க என்ன பன்ற நிதர்ஷனா?…” என முருகலட்சுமி கோபமாய் கேட்க,
ரத்னாவிற்கு இடையில் பேசவே அவ்வளவு யோசனை. அவனுக்கு அது பிடிக்காது என்பதால் அமைதியாக நின்றார்.
ஒருபக்கம் இதனை தான் மட்டும் இருக்கையில் கேட்டிருக்க வேண்டுமோ என தன்னையே கடிந்துகொண்டு மிருதுளாவை பார்க்க அவளின் முகமே மாறியிருந்தது.
“இல்ல ஸார் டான்ஸ் ட்ரெஸ் எப்பவும் வெளில வாங்கறது தானே வழக்கம். அதோட ரொம்ப மோசமும் இல்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…” என முருகா அதற்கு விளக்கம் சொல்ல பார்க்க,
“வெளில வாங்கறதுன்னா ட்ரெஸ் எப்படி இருக்குன்னு ஒன்னுக்கு ரெண்டுதடவை கவனிக்கமாட்டீங்களா? என்ன ட்ரெஸ் வேணாலும் போடலாம்ன்னு எப்படி நினைக்கறீங்க? இது ஒரு துணியா?…” என நளினா கையில் இருந்ததை வாங்கி அவரிடம் நீட்ட முருகா வாயடைத்து போனார்.
“நார்மலா நாம போடற ட்ரெஸ் விஷயத்துல எத்தனை சிரத்தை எடுத்துக்கனும்? இது டான்ஸ். அத்தனைபேர் மத்தியில நின்னு ஆடனும். அப்போ அவங்களோட கம்பர்டபிள் முக்கியமில்லையா? இதை எல்லாம் நீங்க தான் கவனிக்கனும். எவ்வளோ அலட்சியம்?…” என்று கேட்க முருகாவிற்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
“அப்படி அட்ஜஸ்ட் பண்ணி ஏன் போடனும்? காசு குடுத்து தானே வாங்கறோம்? என்ன அவசியத்துக்கு ஸ்டூடன்ஸ் அட்ஜஸ்ட் பண்ணனும்? பார்க்கும் போதே உங்களுக்கா தெரிய வேண்டாமா?…” என வறுத்து எடுத்துவிட்டான்.
“தெரிஞ்ச ஷாப்ன்னு மிருதுளா மேம் தான் சொன்னாங்க ஸார். அதான் நானும் அந்த கடைலையே சொல்லிட்டேன்…” என்று திணறலுடன் அழுகையை அடக்கிக்கொண்டு கூறினார்.
அதையெல்லாம் திருமொழி பொருட்படுத்தவே இல்லை. தவறு தவறுதான் என முறைத்து பார்த்தவன் மிருதுளா பக்கம் திரும்பினான்.
“இந்த ட்ரெஸ் வாடகைக்கு குடுக்கறதை நீங்க தான் சொன்னதா?…” என அவளிடம் கேட்க,
“எஸ் ஸார்…” என்றாள் நடுக்கத்துடன்.
“காலேஜ் சேர்மன் ரிலேட்டிவ்ன்னா என்னவேணாலும் சொல்லுவீங்களா? உங்க சொந்தத்தை எல்லாம் காலேஜ்க்கு வெளில வச்சுக்கோங்க. மைண்ட் இட்…” என்று அவளுக்கும் சுளீரென கொடுத்தவன் ரத்னாவிடம் திரும்பி,
“மேம், டான்ஸ் ட்ரெஸ் மட்டுமில்லை, மத்த காஸ்ட்யூம் எல்லாமே ஸ்டூடன்ஸ்க்கு கம்பர்டபிளா இருக்கான்னு ஒருதடவை செக் பண்ணிக்கோங்க. அன்ஈஸியா இருந்தா உடனே மாத்துங்க….” என்றான்.
“ஓகே…” என ரத்னா சொல்ல,
“இங்க பளபளன்னு ஸ்டேஜ்ல இருக்க தேவை இல்லை. ட்ரெஸ் பேசக்கூடாது. பெர்பாமென்ஸ் பேசனும். படிக்கிற பசங்களுக்கு பாடம் சொல்லி தர நம்ம இதை கூடவா யோசிக்க கூடாது? ரிடிகுலஸ்…” என பல்லை கடித்தவன்,
“இங்க பாருங்க மேம், உங்களை இன்சார்ஜா போட்டாச்சு. இதுக்கே உங்களை மாத்தனும். ஆனா ஏன் எதுக்குன்னு தேவையில்லாம இஷ்யூவாகும். உங்களுக்கும் அது ரெஸ்பெக்ட் குறைவா போயிடும். அதனால கவனமா இருங்க. அடுத்து வார்னிங் எல்லாம் கிடையாது…” என எச்சரித்தான்.
“அன்ட்…” என மிருதுளாவை பார்த்தவன்,
“இது காலேஜ். இங்க எல்லாருக்குமானது தான் உங்களுக்கும். நல்ல டேலன்ட் இருக்குன்ற காரணத்தால மட்டும் தான் இங்க நீங்க டீச்சிங் ஸ்டாஃப். சொந்தக்காரங்கன்றதுக்காக இல்லை. எனக்கு இந்த அட்வான்டேஜ் எடுத்துக்கறது சுத்தமா புடிக்காது. புரியுதா?…” என்று சொல்ல அவள் முகம் கன்றி போனது.
“ஸாரி ஸார்…” என அவள் சிறுத்துப்போன குரலில் சொல்ல அதற்கு பதில் சொல்லாமல்,
“அனுப்புங்க மேம்…” என்றான் ரத்னாவிடம் திரும்பி.
மிருதுளாவிற்கு அத்தனை அவமானமாகி போனது. அந்த கல்லூரியில் சேர்ந்து இந்த ஒன்றரை வருடத்தில் இன்றுவரை இப்படி ஒரு தலைகுனிவு வந்ததில்லை.
அனைவருக்குமே மிருதுளா திருமொழிக்கு சொந்தம் என்பது தெரிந்திருந்தது. அதில் ஏக பெருமை அவளுக்கு.
ஆனாலும் சலுகை என அவள் எதையும் எடுத்துக்கொண்டதில்லை என இதுவரை நினைத்திருக்க அது வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது தான் உண்மையாக இருந்திருக்கிறது.
தன் தோழியின் முன்னேற்றத்திற்கு என முயற்சி செய்து இன்று மனம் கவர்ந்தவனிடமே பேச்சு வாங்கி நிற்கவேண்டிய நிலையை வெறுத்தாள்.
மீண்டும் ரத்னாவிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு இருவரும் வெளியே செல்ல நிதர்ஷனா கைப்பிடி சுவற்றை பிடித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
வெளியே இருந்தாலும் எந்த பேச்சுக்களும் அவளுக்கு கேட்டிருக்கவில்லை. ஒரே பயமும், பதட்டமும்.
இதை தான் செய்ததற்கு முருகலட்சுமி தன்னை என்னசெய்ய போகிறாரோ என யோசித்தபடி இருக்க அவர்கள் வரும் அரவத்தில் திரும்பினாள்.
நிதர்ஷனாவை பார்த்ததுமே முருகலட்சுமியின் முகம் கோபத்தில் பெரிதாய் கொந்தளித்தது.
மௌனமாய் அதனை எதிர்கொண்டவள் பார்வையில் மிருதுளா பெரிதாய் பாதிக்கவில்லை. அவள் நினைவுகள் மொத்தமும் திருமொழி தான்.
வெளியேறியதுமே மிருதுளா விறுவிறுவென தன்னுடைய இடம் நோக்கி சென்றுவிட,