மறுநாளில் இருந்து ரத்னாவின் கவனிப்பு கூடுதலானது. கல்லூரி விழாவின் பொறுப்புகளை ஒப்படைத்திருப்பவர்களுடன் சிறு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டான் திருமொழிவர்ணன்.
“ஒவ்வொருதடவையும் நான் சொல்லிட்டிருக்க முடியாது மேம். நீங்க தான் சரியா என்னன்னு பார்க்கனும். எல்லாரும் என்ன கேஜி ஸ்டூடண்ட்ஸா? டீச்சர்ஸ் தானே?…” என ரத்னாவையும் காய்ச்சிவிட்டான்.
“உன் மகன் என்னை ரொம்ப திட்டறான் பார்த்துக்கோ…” என சங்கவையிடம் ரத்னா போன் செய்து பேச வேறு செய்தார்.
அன்று ஸ்வாதியை பார்க்க கல்லூரி முடிந்து மாலை வந்திருந்தவர் திருமொழி வரவும் அவனிடம் பேசவே இல்லை.
“எப்ப வந்தீங்க பெரியம்மா?…” என்றான் அவரிடம் திருமொழி.
“நான் பேசலை…” என ஸ்வாதியிடம் ரத்னா சொல்ல,
“ரொம்பத்தான் பன்றீங்க? அப்பறம் எதுக்காம் அண்ணனுக்கு பிடிச்ச பூந்தி செஞ்சு கொண்டு வந்தீங்க?…” என்று ஸ்வாதி கிண்டலாய் கேட்டாள் ரத்னாவிடம்.
அதற்குள் சங்கவை செல்வாவை வரவழைத்து பூந்தியை திருவுக்கு எடுத்து வரும்படி சொல்லிவிட்டு சங்கவை மெல்லிய குரலில் ரத்னாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“சரி பேசிட்டிருங்க, வரேன்…” என திருமொழி எழுந்து உள்ளே செல்ல,
“சாப்பிட்டு போ திரு…” என்றவர்,
“ரகசியம் எல்லாம் இல்லை. எல்லாம் நம்ம காலேஜ் கல்சுரல்ஸ் பத்தி தான் பேசிட்டிருந்தேன். உங்கம்மாவால இந்ததடவை வர முடியாதுல. அதான்…” என்றார் ரத்னா.
“அம்மா மட்டுமில்லை, நானுமே வரமுடியாது…” என ஸ்வாதி சொல்ல,
“ஆமா, உனக்கும் கஷ்டம்…” என்ற ரத்னாவிடம் தன் அண்ணனை கண் காட்டினாள் ஸ்வாதி.
“ஹ்ம்ம், சரிதான்…” என்றவர் திருமொழியை பார்க்க,
“பூந்தியை ரூம்க்கு அனுப்பிருங்க. அப்படியே ஒரு ப்ளாக் டீ…” என சொல்லி தோளை குலுக்கியபடி சென்றுவிட்டான் அவன்.
“ஹப்பா போயாச்சு. இப்ப சொல்லுக்கா…” என சங்கவை கேட்க,
“எனக்கு தான் நேத்து கால் பண்ணியிருந்தாங்க. இன்னைக்கு காலையில வந்துட்டு மதியம் புறப்பட்டுட்டாங்க பெரிம்மா….” என்றாள் ஸ்வாதி.
“ஹ்ம்ம், என்ன சொன்னாங்க?…” ரத்னா ஸ்வாதியிடம் கேட்க,
“எல்லாம் திரு கல்யாண விஷயமா தான். என்ன பன்றீங்க? வயசு போகுதே? பொண்ணு எதுவும் பார்க்கறீங்களா? எங்க பக்கத்துல பொண்ணு நிறைய இருக்கு, சொல்லட்டுமா? இப்படி நிறைய கேட்டாங்க…” என்றார் சங்கவை.
“நீ என்ன சொன்ன?…” என தன் தங்கையிடம் ரத்னா கேட்க,
“நான் என்ன சொல்ல? இவன் ஏற்கனவே ஸ்வாதி டெலிவரி முடிஞ்சு அனுப்பின பின்னாடி தான் பேசனும்ன்னு சொல்லியிருக்கான். இதுல திரும்பவும் நான் ஆரம்பிச்சா அவ்வளோ தான்…” சங்கவை தலையை உலுக்கியபடி சொல்ல ஸ்வாதி வாய் பொத்தி சிரித்தாள்.
“என்ன ஸ்வாதி, நீ என்ன நினைக்கிற?…” என அவளிடம் ரத்னா கேட்க,
“நினைக்க என்ன இருக்கு? எனக்கு முன்னாடியே என் அத்தை மைன்ட் வாய்ஸ் தெரியும். ஆனா மிருதுளா எந்தளவுக்கு திரு அண்ணனுக்கு ஒத்து வருவா?…” என்று முகம் சுருக்கியபடி கேட்டாள்.
“உடம்பு சரியில்லைன்னு ஊருக்கு போயிருக்கா போல. அதையும் என் அத்தை தான் சொன்னாங்க. போய் பார்க்கனுமாம்…..” என்றாள் ஸ்வாதி.
“ஹ்ம்ம், காலேஜ்ல சின்ன இஷ்யூ. மிருதுளாவால தான். திருவும் ஹார்ஷா சொந்தத்தை எல்லாம் வெளில வச்சுக்கோன்னு பேசிவிட்டுட்டான். அதுக்கு அடுத்த ரெண்டுநாளும் காலேஜ்க்கு வரலை. லீவ் சொல்லியிருந்தா….” என்றார் ரத்னா.
நடந்ததை சுருக்கமாக சொல்ல சங்கவைக்கு ஒருபக்கம் கவலையாக ஸ்வாதி பரபரத்தாள்.
“எந்த பொண்ணு கம்பளைன்ட் பண்ணுச்சு? யார்ன்னு சொன்னீங்க பெரிம்மா?…” என கேட்க,
“அம்மாவுக்கு பொண்ணு தப்பாம இருக்க. எல்லாம் அந்த பொண்ணு தான். ஒரு நிமிஷம் திருவை பார்த்ததும் அவ முழிச்ச முழி இருக்கே. பயந்துட்டா…” என்று மெல்லிய புன்னகையுடன் சொல்ல,
“அண்ணா என்ன சொன்னாங்க? எதாச்சும் பேசினாங்களா?…” என ஸ்வாதி கேட்க,
“ம்க்கும், பேசிட்டாலும். நீ வேற ஏன்டா?…” என்றார் அயற்சியாய் சங்கவை.
“பேசினான், பேசினான். அந்த பொண்ணு கம்ப்ளைன்ட் பண்ணினதுக்கு பாராட்டினதோட அட்வைஸ் கூட பண்ணினான். இனிமே பொறுமையா நிதானமா பேசனும்ன்னு…” என்று சொல்லவும் சங்கவைக்கும், ஸ்வாதிக்கும் திகைப்பில் வாயடைத்து போனது.
அதை பார்த்த ரத்னா முகத்தில் குறுஞ்சிரிப்பு. ‘அடேய் திரு’ என தங்கை மகனை எண்ணிக்கொண்டவர்,
“எதுக்கு இவ்வளோ ஷாக்? நார்மலா தான் பேசினான். அப்படி இருக்கறது தானே கரெக்ட்…” என்றும் அவர் சொல்ல,
“கரெக்ட் கரெக்ட்…” என்ற ஸ்வாதி,
“அதை விடுங்க பெரிம்மா. இப்ப இதுக்கு என்ன சொல்ல?…” என்றாள்.
“மிருதுளா பத்தியா?…” ரத்னா கேட்க,
“ஆமா, ஆமா. என் மாமியார் சொல்லிட்டு போயிருக்காங்க. அம்மாக்கிட்ட பொதுவா சொன்னவங்க, என்கிட்ட மிருதுளாவை திருவுக்கு பார்க்கலாம் ஸ்வாதி. கல்யாண பேச்செடுத்தா நீ சொல்லி வைன்னு சொல்லிட்டு போயிருக்காங்க….” என்றாள்.
“திருவுக்கு பிடிக்கனுமே?…” சங்கவை யோசிக்க,
“அவன்கிட்ட கேட்காம பண்ண போறோமா? ஒருவேளை அவனுக்கு இப்படி பார்க்கறோம்ன்னு சொன்னா அப்ப பிடிக்கலாம் இல்லையா? அவனோட பார்வை மாறும்ல. வேலை வேற. கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்ற எண்ணத்தோட பார்வை வேற….” என்றவர்,
“அய்யய்யோ, அவர் மூணு மாசத்துல வந்திடனும்ன்னு சொல்லியிருக்கார். என் மாமியார், மாமனாரும் அதான் சொல்லியிருக்காங்க. நான் கிளம்பிருவேன்…” என வேகமாய் ஸ்வாதி சொல்ல ரத்னா சிரித்துவிட்டார்.
“அப்பறம் என்ன? இன்னும் நாள் இருக்கே? பார்த்துக்கலாம் சங்கவை. இப்ப எதுவும் அவன்கிட்ட வாய் திறக்கவேண்டாம். கல்சுரல்ஸ் முடியனும். அடுத்து திருவிழா. அது முடிஞ்சதும் செமஸ்டர் எக்ஸாம். அடுத்து லீவ்ல அட்மிஷன் டைம்ன்னு கடகடன்னு ஓடும். அதுக்கப்பறம் ரிலாக்ஸா பேசிக்கலாம். நீ எதையும் போட்டு டம்ப் பண்ணிக்காத…” என்றார்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஸ்வாதி போனில் அவள் கணவனிடமிருந்து அழைப்பு வர,
“நீங்க பேசிட்டிருங்க. நான் வரேன்…” என்றாள் ஸ்வாதி.
தன்னறைக்கு வந்தவள் முதலில் அவனை விசாரித்துவிட்டு பின் மாமியார் வந்ததை பற்றி சொல்ல,
“அதை விடுங்க. நீங்க என்ன நினைக்கறீங்க?…” என அவனிடமே கேட்க,
“நான் நினைக்க என்ன இருக்கு? கல்யாணம் செஞ்சுக்க போறது உன் அண்ணன். அவர் முடிவு தான் எதுவானாலும். அவருக்கு பிடிச்சிருந்தா தானே?..” என்றான் அவன்.
“என்ன இப்படி சொல்றீங்க?…” என்ற ஸ்வாதி,
“எனக்கு இது சரிவரும்ன்னு தோணலை…” என சொல்லவும் பாலாஜியிடம் மௌனம்.
“என்ன அமைதியாகிட்டீங்க?…” அவனை அழைக்க,
“உன் அண்ணன் சரின்னு சொன்னா?…” என்றான் பாலாஜி.
“என் அண்ணன் வேண்டாம்ன்னு சொன்னா அத்தையும், மாமாவும் எதுவும் நினைக்க கூடாது…”
“அப்போ அவ்வளோ நம்பிக்கை அவர் சம்மதிக்கமாட்டார்ன்னு…”
“கிட்டத்தட்ட. எனக்கு அண்ணனோட விருப்பமெல்லாம் எப்படின்னு முழுசா தெரியாது. ஆனா அண்ணனுக்கு பிடிக்காததுன்னு சில இருக்கு. அதை வச்சு தான் சொல்றேன்….”
“சரி இப்பவே ஏன் நீ இந்த டென்ஷனை உன் தலையில போட்டுக்கற? நான் அம்மாக்கிட்ட சொல்றேன்…” என்றதும் பதறிவிட்டாள்.
“ஹைய்யோ பாலா அப்படி எதுவும் பண்ணிடாதீங்க. அதுவும் நான் அங்க இல்லாதப்போ. அது நல்லா இருக்காது. அத்தை தப்பா நினைச்சுப்பாங்க. நான் சும்மா உங்ககிட்ட ஷேர் பண்ணிப்போம்ன்னு தான் சொன்னேன்….” என்றவள்,
“அதோட அத்தை பேசறதை பார்த்தா மிருதுளாவுக்கு நிறைய ஹோப் குடுத்துட்ட மாதிரி தோணுது. என்கிட்டையுமே அழுத்தி சொல்றாங்க. அதான், நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க. உங்ககிட்ட எப்படியும் இந்த பேச்சு வரும்….”
“சரி நான் கவனிச்சுக்கறேன். இப்ப நீ எதையும் நினைக்காம குழந்தை பெத்து வீடு வந்து சேரும்மா. இங்க தனியா பைத்தியம் பிடிக்குது…” என்றதும் ஸ்வாதி சிரித்துவிட்டாள்.
மேலும் சிலமணி துளிகள் பேச்சில் கரைய பேசி முடித்து வெளியே வரும்பொழுது ரத்னா கிளம்பி இருந்தார்.
திருமொழி சாப்பிட்டுக்கொண்டு இருக்க அங்கே சென்றாள் ஸ்வாதி. அப்போதிருந்ததை விட இப்போது முகத்தில் அத்தனை தெளிவு.
திருமொழியும் தங்கையின் புன்னகையை கண்டுவிட்டு உண்டு முடித்தவன் வெளியே சென்று அமர்ந்தான்.
“என்னண்ணா ரிலாக்ஸா உக்கார்ந்துட்டீங்க?…” என தானும் செல்ல,
“ப்ரெண்ட் கால் பன்றேன்னான் ஸ்வாதி…”
“சரி நீங்க பேசுங்க. நான் உள்ள இருக்கேன்…” என்று அவள் சென்றதும் திருமொழிக்கு யுஎஸ்ஸில் இருந்து அவனின் நண்பன் அழைப்பு விடுக்க அவனோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான்.
மிருதுளா கல்லூரிக்கு வரவில்லை என்பதும் தெரியவில்லை, அது தன்னால் என்பதும் அவனுக்கு தெரியவில்லை.
மற்ற ஆசிரியர்களை போல அவளும் அதில் ஒருத்தி என்னும் மனப்பான்மை தான் அவனிடத்தில்.
———————————————
பிரகாஷ் சரஸ்வதியை எழுப்பி அமர வைத்திருந்தான். கழுத்து வரை போர்வை போர்த்தப்பட்டிருக்க கையெல்லாம் இன்னும் நடுங்கியது அவருக்கு.