உறங்கிப் போனவள் மெல்ல திரும்பி படுக்க ரசனையாய் பார்த்திருந்தான்.
‘அந்தக் குட்டிப் பொண்ணு என் வாழ்க்கை முழுசும் வரப் போறான்னு தெரியவே இல்லை பாரு எனக்கு. ஏன் டி அன்னைக்கு அப்படி அழுத நீ ?’மெலிதாய் முனகிக் கொண்டான்.
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து அவளை மீண்டும் பார்த்த போது கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். அவளை நெருங்கக் கூட முடியவில்லை அன்று.
“யார் அந்தப் பொண்ணு ?,ஏன் இவ்வளவு சத்தம் அங்க ?”என தன்னோடு வந்திருந்தவரிடம் கேட்க
“அந்தப் பொண்ணோட தாத்தா இறந்து போயிட்டாங்களாம். அதான் இப்படி அழுவுது. பாவம் அது வரங்காட்டியும் உசுரு போயிருச்சாம் அதான் சின்னய்யா ” என்று உச்சுக் கொட்டினார் அவனோடு வந்தவர்.
“ஏய் கிங்கரா ! அழுதுகிட்டே இருந்தா உன் தாத்தா திரும்பி வந்திடுவாரா…எழுந்திரு மொதோ ஊருக்குப் போகணும்” என்ற சத்தத்தில் வேகமாய் எழுந்தவள் கீழே விழுந்திருந்தாள்.
“ப்ப்ச் ஆளைப்பாரு எலும்பி. ஒழுங்கா நிக்கத் தெரியாது” என்று அதற்கும் அந்தப் பெண்மணி திட்டினாரே தவிர அவளை தூக்கி விடவில்லை.
மெல்ல எழுந்து அமர்ந்தவள் , அழுகையை நிறுத்தவில்லை.
ஏற்கனவே ப்ரகாவின் பெரியப்பா , சித்தப்பாவை அறிந்திருந்தவன் அவர்கள் அங்கே நிற்கவும் ஊர்க்காரர்கள் என்ற மரியாதை நிமித்தத்தில் துக்கம் விசாரிக்க, அங்கே அழுது கொண்டிருந்தவளையும் கண்டான்.
“
ப்ம்ச், அழுகையை நிறுத்து கிங்கரா. போ போய் வண்டியில் ஏறு நாங்க ஆம்புலன்ஸ் ல வர்றோம்” என்று அவளது பெரியப்பா அதட்டி விட்டு, மகிழனிடம் விடை பெற்று நகர்ந்தனர்.
“
இதோ போறேன் பெரியப்பா!” சோர்ந்து பேசினாள்.
“
ஒரு நிமிஷம் நில்லுமா!” என்றவன் தண்ணீர் பாட்டிலை நீட்டி,” குடி. அழக் கூட தெம்பில்லாம ப்ம்ச் “என முனகிட,” எனக்கு வேண்டாம் “என்றாள்.
“
வாங்கிக்க பாப்பா. அழுவாத. எல்லாம் சரியாப் போயிரும்” என மகிழனோடு வந்தவர் அவனிடம் இருந்த பாட்டிலை வாங்கிக் கொடுக்கவும் , இரண்டு மிடறு குடித்தாள்.
“
டீ காஃபி குடிக்கிறியா…? எப்போ சாப்ட?” என்று அடுத்து கேட்டவனிடம்,” இல்ல எதுவும் வேணாம். திட்டுவாங்க நா போட்டா” என்றவள் நிமிரவே இல்லை.
“
என்ன படிக்கிற?” என கேட்டான். அவளின் படிப்பின் ஆர்வம் தான் அவனுக்குத் தெரியுமே …!
“
ப்ளஸ் டூ. அதுக்கப்புறம் போகல” என்றாள் சங்கடமாக
“
ஏன்…?”என்றவனிடம்,” தாத்தா தான் படிக்க வைக்கிறேன் னு சொன்னாங்க, இப்ப அவங்களும்” என்று மீண்டும் வெடித்து அழுதாள்.
மறுபடியும்,” ஏய் கிங்கரா ! வா வண்டி நிக்குது “என யாரோ கத்துவது கேட்க, அங்கிருந்து ஓடிப் போனாள்.
மகிழனுக்கு வருத்தமாய் இருந்தது அவளின் நிலை. இறுதிச் சடங்கில் மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டவனுக்கு அவளின் நிலையை கண்கொண்டு பார்க்க இயலவில்லை. அவளை ஆறுதல்படுத்தக் கூட தருணியைத் தவிர அங்கே யாரும் இல்லை. அவள் அழுகையைப் பார்த்துக் கொண்டு, அதற்கு மேலும் அங்கிருக்க முடியவில்லை அவனால். கிளம்ப எத்தனிக்கையில்,’ பிரேதத்தை எடுத்து விடலாம் நேரமாகி விட்டது’ என்று கூறவும் , அங்கேயே இருந்தாக வேண்டிய நிலை அவனுக்கு. வீதியின் முற்றத்திற்கு பெண்களோடு வந்தவளுக்கு அத்தனை அழுகை.
முகமே வீங்கி விட்டிருந்தது பெண்ணவளுக்கு. அடுத்த சில வாரத்திலேயே சென்னை கல்லூரி ஒன்றில் அவளுக்கு சீட் கிடைக்க வைத்து, அதற்கான பணத்தையும் அவனே கட்டினான். மூன்று வருடத்திற்கு உண்டானதையும் கட்டி விட, சற்று நிம்மதியாக படித்தாள். மற்ற செலவுகளுக்கு அவ்வபோது தருணியின் உதவிக் கிடைத்தது. ஆனால் பணம் கட்டியது இதுநாள் வரை தனது துறைத்தலைவர் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறாள் ப்ரகல்யா.
கொலுசொலி மெல்லக் கேட்டு அவன் எண்ணங்களை சிதறடிக்க , நினைவில் இருந்து வெளியே வந்தான் மகிழன்.
“
ஏன் எழுந்துட்ட ப்ருஹா?. தூங்கேன் நேரமிருக்கே!?” என்றவனிடம்,” ம்ஹூம் தூக்கம் வரலை” என்று எழுந்து கொண்டாள்.
அவளது தினசரி பழக்கம் அதனால் அதிகாலை விழிப்பு.
“
ஏங்க!” என்று அழைக்க,” மகிழன், மகிழ், ராஜா, இப்படி கூப்பிடு பார்க்கலாம் “என்று அவளை வம்பு செய்ய
ம்ம்ம் செய்யலாமே!, ஆனா அதுக்கு முன்னாடி நீ நிறைய வேலை செஞ்சாகணுமே?!” என்று பீடிகை போட்டான்.
“
எதுவாக இருந்தாலும் செஞ்சிடுவேன் “என்றாள் உற்சாகம் பீறிட
“
ஓஓஓ சூப்பர், அப்போ ரெடியா இரு. வேலை என்னன்னு சொல்றேன் “என்றவன் எழுந்து போய் விட,’ என்ன வேலையாக இருக்கும்?’ என யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
“
ப்ருஹா ரெடியா இருன்னு சொன்னேனே!” தூரத்தில் இருந்து மகிழனின் குரல் ஒலிக்க, வேகமாக குளியலறை புகுந்தாள் . அவளோடு சேர்ந்து அவனது சிரிப்பொலியும் உள்நுழைந்தது.
குளித்து முடித்து தயாராகி வெளியே வரவும் , வாசலில் சிலரின் பேச்சு சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
‘
யார் வந்திருக்கா இவ்வளவு சத்தம் ?’என்று யோசித்தபடி செல்ல அங்கே ஆட்கள் டெம்போவில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.
“
யார் வரப் போறா… ?சாமான் எல்லாம் வந்திறங்குது “என மெல்லிய குரலில் கேட்க
சிறிது நேரத்தில் எல்லாம் , சுமித்ராதேவி தன் குடும்பத்தினருடன் வந்திறங்கிவிட்டார்.
வெகு வருடங்களுக்கு பிறகு இங்கே வருகிறார்.
பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடியது. பொங்கி வந்த கண்ணீரை துடைத்தபடி மகிழனைப் பார்க்க , அவனோ முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். மனம் வலித்தது தான் அவருக்கு. ஆனால் என்ன செய்வது தன் வலியை விட அவன் வலி பெரியதாகிற்றே.
ப்ரகா முகம் மலர்ந்து வரவேற்றாள்.
“
வாங்கத்தை. தருணிக்கா வாங்க உள்ள வாங்க” என்று சந்தோஷிக்க, தருணியோ ஒரு ஒட்ட வைத்த சிரிப்புடன் நிறுத்திக் கொண்டாள்.
“
இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆடிட்டர் வந்திடுவார். லாயரையும் வரச்சொல்லி இருக்கேன். அதனால இங்கேயே இருங்க” என்றான் பொதுவாக.
“
தம்பி இதெல்லாம், ஏன் அவசர அவசரமா?” என சுமித்ரா தயங்கிட
“
அவசரமா இல்லை. அவசியமா செய்ய வேண்டியது “என்று முடித்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் எல்லாம் வக்கீலும் ,ஆடிட்டரும் வந்து விட்டனர்.
“
வாங்க சார் எல்லாம் ரெடி தானே…?!” என கேட்க அவரும் ஆமோதிப்பாய் தலையசைத்தார்.
அவனது தாத்தா எழுதி வைத்த கணக்கு வழக்கில் இருந்து, அதன் பிறகு இவன் தலையிட்டு செய்த தொழில்கள் லாபநட்ட கணக்குகள் எல்லாம் அங்கே காட்சிப்படுத்தப்பட , தருணிக்கும் ப்ரகாவிற்கும் எதுவும் புரியவில்லை.
“
இதுநாள் வரைக்கும் இருந்த எல்லா கணக்கும் இந்த நோட்டில் இருக்கும்மா நீங்களும் மாதாமாதம் பார்க்கிறது தான், இருந்தாலும் தம்பி எல்லார் முன்னாடியும் சொல்லிடலாம்னு சொன்னார் அதான் எடுத்துட்டு வந்தேன் “என்றார் ஆடிட்டர்.
வழக்கறிஞரும் தான் வந்த விஷயத்தை எடுத்துரைத்தார்.
“
சொத்துக்கள், வீடு எல்லாம் உங்க பையன் மகேந்திரன் பேரில் மாத்தி எழுத சொல்லி இருந்தார்மா, எல்லாம் மாத்தி எழுதி டாக்குமென்ட் ரெடி பண்ணி இருக்கேன். நீங்க பத்திர ஆபிஸ் வந்தா எல்லாம் முடிச்சுடலாம். “என்றார்.
“
எல்லாம்னா… தம்பி அப்போ உனக்குன்னு…” என்று நா தழுதழுக்க கேட்ட சுமித்ராவிற்கு அழுகை பீறிட்டது.
“
இது எல்லாம் எப்பவோ முடிவு செய்தது தான். இதை எல்லாம் வச்சுக்கிற உரிமை எனக்குக் கிடையாது. என்னை நீங்க வற்புறுத்தவும் முடியாது “என முடித்துக் கொண்டான்.
எத்தனை இறுக்கம் எத்தனை அழுத்தம். ‘அவனை இப்படி எல்லாம் மாற்றியது நான் தானே. என் தவறு தானே!’ குமைந்து போனார் சுமித்ரா.
“
அண்ணா எல்லாத்தையும் ரெண்டு பங்கா கூட போடுங்க , இப்படி மொத்தமா தரணுமா?, அப்போ என்னை நீங்க தம்பியா நினைக்கலை அப்படி தானே !?”மகேந்திரன் வருத்தமாக கேட்க, மகிழனிடம் அமைதி தான் குடி கொண்டிருந்தது.
“
மகேன் தம்பியை எதுவும் சொல்லாதே, அவருக்கு இது தான் சந்தோஷம்னா இதை செய்யட்டும் தடுக்காதே” என சுமித்ரா உறுதிபட சொல்ல, மகேன் அடுத்து பேசவில்லை.
தருணிக்கோ ,’இவன் என்ன பைத்தியமா?, இத்தனை சொத்துக்களையும் அநாமத்தாக எழுதி கொடுக்கிறானே ?’என தோன்றினாலும் மறுநிமிடம்’ இத்தனை வருடம் வீடு சொத்தை அனுபவித்திருக்கிறானே. எவ்வளவு சுருட்டினானோ யாருக்கும் தெரியும்?’ எனவும் நினைத்துக் கொண்டாள்.
சுமித்ராவோ வேகமாக ,”அப்பாவும் மாமாவும் உன்னை வீட்டை விட்டு போகக் கூடாதுனு சொல்லி இருக்காங்க. அதனால வீடு மட்டுமாவது உன் பேரில் இருக்கட்டும்” என அவனை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட, அவனோ ,”நான் வீட்டை விட்டுப் போறேன்னு சொல்லவே இல்லையே. இங்கேயே மாடியில் தான் இருக்கப் போறேன். ஆனா அதுக்கான வாடகைப்பணம் உங்க அக்கவுண்டிற்கு மாசா மாசம் வந்து விடும்” என்றான் ஒரே போடாக.
“
என்ன?!” என்று அதிர்வுற அவனோ இயல்பாக , “எஸ் நானும் ப்ருஹாவும் இங்கே தான் இருப்போம். அதுவும் என் குழந்தை பிறக்கும் வரை அவ்வளவு தான்.” என்றான்.
“
தம்பி எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தராதப்பா!” என்று சுமித்ரா கெஞ்ச, அவனிடத்தில் பேரமைதி. உள்ளமோ உலைக்கலனாக கொதித்துக் கொண்டிருந்தது.
“
அண்ணா அம்மா கெஞ்சுறாங்க” என்று மகேந்திரன் சங்கடமாக கேட்டு விட
“
என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காதீங்க ப்ளீஸ்” என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு மனைவியுடன் மேலே சென்று விட்டான்.
சுமித்ராவோ,” எல்லாம் என் தப்பு தான். நான் தான் அவனை இப்படி ஆக்கிட்டேன்” என்று கதறினார்.
இந்த சொத்துப் பரிமாற்றத்தில் மகிழ்ச்சி அடைந்தது தருணிகா மட்டுமே.
“
அம்மா விடுங்க, அண்ணா இங்க தானே இருக்கிறேன் னு சொல்லி இருக்காங்க அப்புறம் என்ன?” சமாதானம் செய்தான் மகேந்திரன்.
விஸ்வநாதன் வாயையேத் திறக்கவில்லை. மகிழனின் செயல் அவருக்கு பிரமிப்பை வரவழைத்திருந்தது.
எத்தனை இலகுவாக தூக்கிக் கொடுத்து விட்டான். வேறு யாராக இருந்தாலும் இப்படி செய்திருப்பார்களா என்றால் சந்தேகம் தான். ஏன் தானே இதனை செய்திருப்போமா என்பது சந்தேகம் தான் அவருக்கு.
இப்போதும் அவன் கொடுத்ததை ஏற்க மனமில்லை தான். ஆனால் அவனோ பெரியவர்களின் இறுதி ஆசை என வாயை அடைத்து விட்டான் மகிழன்.
சத்தமில்லாமல் துயில் கொண்டிருந்தான் மிகிரன். அறையினுள் போட்ட இரவு விளக்காய் பௌர்ணமி நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது.
வேலையாட்களை வைத்து பொருளெல்லாம் உள்ளே அடைத்து வைத்தாயிற்று. ப்ருஹா வந்து உதவி செய்வாள் என்று தருணி எதிர்பார்த்திருக்க அவளை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான் மகிழன்.
“
வர வர ரொம்ப தான் பவுசு காட்டுறா பெரிம்மா. இன்னைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைச்சேன். ஆனா அவ ஜோடி போட்டுட்டுக் கிளம்பிட்டா தெரியுமா…?”என்று பொருமியவள்,” இனிமே அவளுக்குக் கீழ தான் நாமன்னு நினைச்சு பயந்துட்டே இருந்தேன் பெரிம்மா. ஆனா மொத்த சொத்தையும் அந்த மகிழன் எழுதி தந்திடுவார்னு நினைக்கவே இல்லை” என்றாள் ஆச்சரியத்துடன்.
“
சில விஷயம் கேள்விப்பட்டேன்டி தருணி அது உண்மையான்னு தெரியல.” என்றார் அவர் பீடிகையுடன்.
“
என்ன பெரியம்மா?” என்று கேட்கவும்,” இதுநாள் வரையில் அந்த பையன் அந்த சொத்துக்களை அனுபவிச்சது இல்லையாமே. அங்க வேலை பார்க்கிறதுக்கு என்ன வருமானமோ அதைத் தான் வாங்கிப்பாராம் . நாகலெட்சுமி இருக்காளே அவ கிட்ட பேச்சுவாக்குல விஷயத்தை வாங்கிட்டேன். ” என்றார்.
“இருக்கும் பெரிம்மா.” என்றவள் வேறு கதை பேசத் துவங்கிட மகேந்திரன் உள்ளே நுழைந்தான்.
“தருணி ! அம்மா தனியா செஞ்சுட்டு இருக்காங்க. நீ என்ன பண்ற ?”என சற்று குரலை உயர்த்தி கேட்க
இதோப் பாரு தரு. உன்னை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்னு சொல்ல வரலை. பட் அங்கே நீ சூப்பர்வைஸிங் பண்ற மாதிரி நின்னா கூட போதும் அம்மா சந்தோஷப்படுவாங்க. அது மட்டுமில்லாமல் பெரிய குடும்பத்து மருமகள்னா இது எல்லாம் கவனிக்கணும் நீ புரியுதா ?!”மென்மையாகவே விளக்கினான்.
“
மகி ப்ளீஸ் ! நான் வந்தே நாலஞ்சு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள அதை செய் இதை செய்னு சொல்லாதீங்க. நான் இன்னும் இங்க செட்டாகல. அப்புறம் மறு வீட்டுக்குப் போக கேட்கணும் அதை அத்தை கிட்ட கேளுங்க” என்றாள் சலிப்பாக.
மகேந்திரன் அமைதியாக படுத்து விட்டவன்,” சரி கேட்கிறேன். அப்படியே பிரகல்யா அண்ணியையும் அழைச்சுட்டு போக அண்ணா கிட்ட கேட்கணும்” என்றான்.
“
அவளா?!, அவ எதுக்கு?” என பட்டென்று கேட்டு விட , மகேன் அதிருப்தியாக நெற்றியை சுருக்கினான்.
“
என்ன அப்படி பார்க்குறீங்க?” என கேட்டிட அவனோ மறுப்பாய் தலையசைத்து,” இது நான் பார்த்த தருணியான்னு யோசனையா இருக்கு தரு. ப்ரகா அண்ணிக்கு மேரேஜ் ஆகிடுச்சு னு தெரிஞ்சதில் இருந்து நீ இப்படி தான் பிஹேவ் பண்ணுற !”என்றான் மிகச் சரியாக.
*********
“அவன் சொத்தை எல்லாம் மகேந்திரன் பேர் ல மாத்திட்டானாம். இதுக்கு மேல அவன் இருக்கக் கூடாது என கர்ஜனையாக ஒலித்தது” ஒரு குரல்.