கண்களை சுருக்கி அவள் விழிக்கும் அழகை காண திகட்டவில்லை.
ப்ரகல்யாவின் விழிகளில் தெரிந்தது என்னவோ மகிழனின் புன்னகை முகம் தான். தன்னிச்சையாக அவள் கை அவன் முகத்தில் படர்ந்தது. நெற்றியில் மெல்ல வருடி கன்னத்தில் பதித்திருந்தாள் அவளது விரல்களை. மெல்ல மலர்த்திய விழிகளில் ரசனை தொக்கி நிற்க இதழ்களோ புன்னகையை சுமந்து இருந்தது.
“வதனிமா. இம்ப்ரஸ் பண்ற. காலையின் காதல் ஹப்பப்பா முடியல!!” என்று சிலிர்த்து உணர்ந்து சொல்ல, பட்டென சுயம் வந்தாள் ப்ரகல்யவதனி.
“நான்… நா… நான்…” என்றவள் எழ முற்பட ,”ம்ஹூம் டா பொண்ணே…! ரசிக்க விடு. இதை ஃபீல் பண்ண விடு” என்று அழுந்தப் பிடித்துக் கொண்டான்.
“தனிமையில் கரைஞ்ச என் வாழ்க்கை, ஏதோ ஒரு பிடிப்புக்குள் வந்த மாதிரி இருக்குடா ப்ருஹா. ஏதாவது சொல்லேன்” என்றான் உளமார.
“உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் பேசவா?” என்று முதன் முறையாக பேச விழைந்தாள்.
“பேசுடா… பட் ப்ரெஷ் ஆகிட்டு பேசுவோம்” என்று எழுந்து கொண்டவன், அவளையும் தூக்கி விட்டான்.
“இன்னிக்கு வயலுக்குப் போகல” என்று கேட்டுக் கொண்டே போர்வையை மடிக்க
“இல்லம்மா நேத்தே வேலை முடிஞ்சது. இன்றைக்கு ப்ருஹாவுக்குத் தான் என் நேரம் எல்லாம்” என்று குளியலறைக்குள் சென்று விட்டான்.
‘ப்ருஹா!’ அவனைப் போல ஒரு முறை சொல்லிப் பார்த்து சிரித்தாள். ஏனோ அவன் உரைக்கும் போது அவளது பெயரே அழகாய் இருப்பது போல தோன்றும். சில நாட்களாய் கேட்காத கிங்கரா என்ற அழைப்பும், ப்ருஹா மட்டும் சுற்றி வரும் இந்த நினைவும் அவ்வளவு ரம்மியமாக இருந்தது அவளுக்கு.
கண்ணாடியில் முகம் பார்த்தாள். காதலான அவன் பார்வையில் சிரிப்பு இன்னும் மறையாமல் இருந்தது அவள் முகத்தில்.
“அழகா இருக்க ப்ரகா!” என தன்னைத் தானே சொல்லிக் கொண்டாள். இன்னமும் அவளுக்கு சந்தேகம் தான்,’எப்படி இவ்வளவு சீக்கிரம் இவரோடு ஒட்டிக் கொண்டோம் என்று.? திடீர் திருமணம் ஆனா அப்படி தெரியவே இல்லை எனக்கு. ஏதோ ரொம்ப வருஷம் பார்த்து பேசி பழகி இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டது போல தோணுது’ என்று நினைத்துக் கொண்டாள்.
‘இவங்களை நாம எங்கேயோ மீட் பண்ணா மாதிரியே தோணுதுல்ல ப்ரகா. எங்கேயோ பார்த்திருக்கோம் . சின்னப்பிள்ளையில எதுவும் பார்த்திருப்போமா…? இருக்கும்.’என்று தனக்குத் தானே பேசியபடி வேலையை கவனிக்கச் சென்றாள்.
மாடிப்படிகளில் இறங்கி அந்த வாசலில் கோலமிட்டு செல்ல, மகேந்திரன் நடைபயிற்சி முடித்து விட்டு வீட்டினுள் நுழைந்திருந்தான். மணி ஆறை தொட்டு மீண்டது. தருணி இன்னும் எழுந்து வரவில்லை. சுமித்ரா தான் சமையல் அறைக்குள் நின்றிருந்தார்.
“தருணிக்கு ரூமிற்கு எடுத்துட்டுப் போறீயா மகேன்?” என்றதும் சுள்ளென கோபம் வந்து விட்டது அவனுக்கு.
“இதுதான் எனக்கு பிடிக்காது. ஏன் தூங்கி எழுந்து வந்து குடிக்க மாட்டாளா?, ரூம்ல தான் கொண்டு போய் கொடுக்கணுமா? புது பழக்கமா பழக்காதீங்கம்மா.”என்று தாயை கண்டித்தவன், தனக்கு கொடுத்த காபியை குடித்துவிட்டு வெளியே சென்றான்.
விழி விரித்து அவனை நோக்கியவள்,” வெளிய வச்சு என்ன பண்றீங்க?, அச்சோ உங்க தம்பி” என்று முனகியபடி அவன் பிடியில் இருந்து தப்பித்து ஓடி விட்டாள்.
“ஹேய் ப்ரூஸ்லி !”சட்டென வந்து விட்டது அவளது செல்லப்பெயர். ‘எவன் பார்த்தால் எனக்கென்ன?’ என்ற மனநிலையில் தான் மகிழன் இருந்தான்.
மகேந்திரனுக்கோ ஒரு பக்கம் சங்கடம், மறுபக்கம் சந்தோஷம் ,ஏக்கம் வேறு பீடித்துக் கொண்டது.
சட்டென இயல்பிற்கு வந்தவன்,” அண்ணனே காஃபி போட்டுத் தர்றாரு. உனக்கு கொண்டு போய் தர வலிக்குதாடா மகேன். நேத்து நைட்டே பீரியட் னு சொன்னா. பாவம்” என்று தன்னை கடிந்து கொண்டவன் தாயிடம் சென்றிருந்தான் மனைவிக்காக காஃபியை வாங்குவதற்காக.
சுமித்ரா சமையலறையில் நிற்க நாகலெட்சுமி அவருக்கு உதவிக் கொண்டிருந்தார்.
“ம்மா காஃபி வேணும்” என்றான் வாசற்படியில் நின்று.
“இப்ப தானே மகேன் குடிச்ச?” என்று சந்தேகமாய் கேட்க
“ம்ப்ச் எனக்கில்லை, தருணிக்கு” என்று சொல்லவும் சுமித்ரா வியப்புடன் பார்த்து விட்டு,” யாரோ இங்க வந்து குடிக்க சொன்னாங்க அவங்களை நீ பார்த்தியா நாகு ?”என்று கிண்டல் செய்ய நாகலெட்சுமி வாயை மூடி சிரித்தார்.
“
ம்மா…!” என்றவன்,”குடுங்களேன் ப்ளீஸ் !”என்றான்.
“
ஹ்ம்ம் அப்படி வா வழிக்கு. அவளுக்கு முடிஞ்சபோது உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வந்தா இல்லையா அப்போ உடம்புக்கு முடியாதப்ப நாமளும் செய்யணும் மகேன். ஒரு வேளை காஃபி தர்றதுல கொறைஞ்சு போயிட மாட்ட சரியா.?” என கண்டித்து விட்டு,”இது பார்லி கஞ்சி கொண்டு போய் குடு. உன்னை நம்பி உன் கோபத்தை நினைச்சு இதுவரைக்கும் காஃபி தராம இருப்பேன்னு நினைச்சியா?” என்றபடி கோப்பையை நீட்டினார்.
“
சாரிம்மா !”என்றவன் சென்று விட ,சுமித்ரா வேலையை கவனித்தார்.
“
ஏன் நாகு. ப்ரகா நல்லா சமைச்சுச்சா….? அங்கே எல்லாம் நல்லா தானே போகுது?” என மெதுவாய் கேட்க
“நல்லாவா… வதனி பாப்பா சூப்பரா சமைக்குதும்மா9 நேத்து கூட அவியலும், ரசமும் தந்து விட்டுச்சு. என்னம்மா இருந்தது தெரியுமா. பாத்திரமாவது கழுவித் தரேன் தம்பினு கேட்டேன். பாப்பா வேணாம்மின்னு சொல்லிடுச்சு. ரெண்டு பேருக்கு சமைக்கிறேன். வேலை கம்மி தான் கா நீங்க அத்தைக்கு ஹெல்ப் பண்ணுங்க. தருணி அக்காவுக்கு அவ்வளவா சமைக்க வராதுனு சொல்லுச்சு. சமையக்கட்டை சுத்தமா வச்சிருக்குதும்மா. “என்று சிலாகித்தார்.
“
அதுக்கு மகி என்ன சொன்னான் ?”என்று ஆர்வத்துடன் கேட்க
“
தம்பி பாப்பா சொல்ற மாதிரி செய்யிங்க. அவங்களை கிட்சன்ல ரொம்ப நேரம் நிற்க விடாதீங்க. பிபி இருக்குனு தம்பி சொல்லுச்சும்மா” என்றதும் சுமித்ராவின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
“
தம்பி வெளிய பாசத்தை காட்டலைன்னாலும் ,உங்க மேல உசுரா தான்மா இருக்கு” என்று சொல்ல
“
தெரியும் நாகு. மகிக்கு நான்னா உயிர் தான். ஆனா நானே அவன் உசுரை பிடுங்கி வெளியே போட்டுட்டேன்.”என்று வேதனையுடன் சுமித்ரா கூற
“
எல்லாம் சரியாப் போகும்மா. ஏன் கவலைப்படுறீங்க?” என சமாதானம் செய்தார் நாகலெட்சுமி.
*********
“
தரு எழுந்துக்கோ…!”என்று அவளை மகேன் எழுப்ப
“
ப்ளீஸ் மகேன் என்னால எழுந்துக்கவே முடியாது, ஐ கான்ட் வொர்க் என்னை விட்டுடுங்க” என கண்களை மூடிக் கெஞ்சினாள்.
“
அட கிறுக்குப் பொண்டாட்டி ,இந்த கஞ்சியை குடிச்சுட்டு தூங்கு இங்க யாரும் உனக்கு வேலை சொல்லலை” என்றான் முறைப்புடன்.
தருணி வெடுக்கென எழுந்தாள். ‘இதென்னடா உலக அதிசயமா இருக்கு?’ என முணுமுணுப்பாக சொல்ல
வேற ஏதாவது வேணுன்னா சொல்லு, எடுத்து தந்துட்டு கிளம்புறேன்.” என குளிக்க சென்றவனின் முதுகை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“
நெனைச்சா நல்லா பேசுறாரு , நெனைச்சா மூஞ்சியை உர்ருனு தூக்கி வச்சுக்கறாரு” என்று முனகியபடி காலியான கோப்பையை சமையலறைக்கு எடுத்துச் செல்ல, சுமித்ரா காதில் வாங்கி விட்டு என்னவென்று கேட்க நடந்ததை அப்படியே விவரித்து விட்டாள்.
சுமித்ரா அமைதியாக புன்னகைத்தபடி,” தருணி நீ ரொம்ப நல்லப் பொண்ணுடா. நீ ப்ரகாவை பார்த்துக்கிறதையும், அவளை யாரையும் திட்ட விடாம கூடவே வச்சுக்கிறதையும் பார்த்து தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான். உடனே தப்பா நினைச்சுடாதே, உன் குணமும் அன்பும் அவனுக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. அம்மா தங்கச்சியையே இவ்வளவு நல்லா பார்த்துக்கிற பொண்ணு கண்டிப்பா என் தம்பி தங்கச்சியையும் பார்த்துப்பான்னு சொல்லி ஓகே சொன்னான். நீ ப்ரகாவை அன்றைக்கு அப்படி ஒரு மாதிரி பேசவும் தான் உன்னை கண்டிச்சிருப்பான். அதே போல மகிழனை ஏதாவது சொன்னாலும் அவனுக்கு கோபம் வந்திடும் தருணிம்மா.”என்றார் பொறுமையாக.
“
அத்தை நானும் அவளை திட்டணும்னு நினைக்கலை. ப்ப்ச் உங்களுக்கு எப்படி சொல்றது லைக் ஃபார் எக்ஸாம்பிள் நாகலெட்சுமி உங்களுக்கு முதலாளியா வந்தா நீங்க எந்த மாதிரி ஃபீல் ஆவிங்களோ அதே போல தான் என் மனநிலையும் இருக்கு. நான் ப்ரகாவை எப்போதும் எனக்கு கீழேயே பார்த்துப் பழகிட்டேன். அதுக்காக மத்தவங்களை மாதிரி அவளை அடிமையா வச்சுக்க நான் நினைச்சதே இல்லை. ஆனா அதே சமயம் தங்கையாவோ, அக்காவாவோ என்னால ஏத்துக்க முடியாது. ஏத்துக்கிட்டதும் இல்லை. ஜஸ்ட் என் வீட்டில் ஒரு கெஸ்ட் அவ” என்றாள் இலகுவாக.
சுமித்ரா அதிர்ந்து பார்த்தவர்,” கெஸ்ட் அவ இல்லைம்மா நீயும், உங்க ஃபேமிலியும் தான் “என்று பட்டென சொல்லி விட்டார் சுமித்ரா.
“
அத்தை!” என்று அதிர்சியாக அழைக்தவளின் முகபாவனையை சட்டை செய்யாமல்… “நீங்க உன் குடும்பம் எல்லாம் வாழறது
எல்லாம் அவளோட அப்பா சொத்து “என்றார் சுள்ளென்று .
“
போய் கேளும்மா, உன் அப்பா அம்மா கிட்ட கேளு உங்க குடும்ப லட்சணம் தெரியும். அப்படி இருந்தும் உன்னை என் மகனுக்கு கட்டி வச்சதுக்கு காரணம் மகிழனும் அவன் வார்த்தையும் தான்.”
தருணி அதிர்ந்து பார்க்க அவளை கண்டு கொள்ளாமல் சென்றவர் சட்டென திரும்பி,” பழைய தருணியா இருந்தா உன் வாழ்க்கை நீ நினைச்சதை விட சிறப்பா இருக்கும் மா. இல்ல நான் மாறினது மாறியது தான்னு நினைச்சா விளைவுகள் விபரீதம் ஆகிடும்மா. “என எச்சரித்து விட்டுச் சென்றார்.
மகிழன் ப்ரகாவோடு வெளியே கிளம்பியிருந்தான். இருச்சக்கர வாகனத்தில் மனைவியோடு முதல் பயணம் மனமெல்லாம் மகிழ்ச்சியோடு தொடர, விதி அவர்களின் பின்னால் தொடர்ந்து வந்தது.