நிலா, சிறு வயதில் இருந்து நல்ல புத்திசாலியாவும் சாதுர்யமாவும் இருக்கும் ஒரு பொண்ணு. சந்திரன் எனும் பெயர் ல ஒரு சகோதரன் மாத்திரம் இருக்கிறான். ஒரே அண்ணன் ஒரே தங்கச்சி ன்னு பேரும் ஆளுக்கு ஆள் ரொம்ப பாசம்..
அப்பா Bank ல வேலை செய்பவர்..
அம்மா வீட்டில் இருந்தபடி தையல் வேலை செய்பவள்..
நிலா எப்போதும் துரு துரு ன்னு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்க கூடியவள்.
மிருகங்கள், பறவைகளுடன் மிகுந்த அன்புடையவள்.
வீட்டிலேயே பூனைகள் வளர்கிறாள்.
அதற்கென தேவையான உணவு, தங்குமிடம் என அனைத்து தேவைகளையும் சரியாக நிறைவேற்றி வருகிறாள்.
அடிக்கடி வீதியில் திக்கற்று திரியும் நாய்கள், பூனைகள் போன்றவைக்கு உணவு வழங்குவாள்.
அத்தோடு வீட்டிலிருக்கும் பூனைகளுக்கும் வாசல் தேடி வரும் காகங்களுக்கும் உணவளிக்காமல் அவள் உணவுண்ண மாட்டாள்.
அவர்களது தோட்டத்தில் உள்ள பயிர்களை பார்வையிடுவதற்காக மாலை நேரம் நிலா தனியாக சென்றிருந்தாள்..
அங்கு குழந்தை தனமாய் மரம் செடி கொடிகளோடு பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்..
அப்போது அவளது தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் இருந்து “மியாவ் மியாவ்” என உரத்த சத்தம் கேட்டது..
முதலில் பயந்தாள், பின்னர் கிணற்றின் அருகில் சென்று கிணற்றினை எட்டி பார்த்தாள் நிலா..
ஒரு பெரிய பூனை ஓன்று கிணற்றில் விழுந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது..
இதனைக்கண்ட நிலா பக்கத்தில் இருந்த வாளி ஒன்றினை எடுத்து பூனையிடம்,
“ஐயோ பூஸ்.. பயப்படாத!! எப்படியும் நான் உன்ன காப்பாத்திடுவன்…. நீ வாளிக்குள்ள ஏறு..”
என்று கூறியபடியே கிணற்றினுள் வாளியை போட்டாள்…
அவள் பேசியது பூனைக்கு புரிந்ததோ என்னவோ!! பூனை வாளிக்குள் ஏறிக்கொண்டது..
ஆனால்,
பாவம் நிலாவால் அப்பூனையை தூக்க முடியவில்லை…
காரணம் அவளுக்கு கிணற்றில் நீர் அள்ளி கூட பழக்கம் இல்லை…
அப்போது எதிர்பாரத விதமாக மழையும் பொழிய ஆரம்பித்தது.
உதவிக்கு யாரவது இருப்பார்களா என பார்க்க “யாரவது இருக்கிங்களா” என்று நிறைய தடவை அழைத்துப்பார்த்தாள்…
ஆனால் அவளுக்கு அங்கு உதவ கூட யாரும் இல்லை..
பூனையை விட்டு வீடு வர கூட அவளுக்கு மனமில்லை!!
மழையும் மிக ஆவேசமாக பொழிந்தது.. இரவின் இருளும் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறது..
அவளுக்கு உடலெல்லாம் குளிரினால் நடுங்க ஆரம்பித்து…
மழையில் நனைந்தபடி வாளியை முடிந்தவரை நீரினுள் இருந்து கொஞ்சம் தூக்கி இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தாள்…
அப்போது வாளியை கட்டி இருந்த கயிறு அவளது கைகளை மிகவும் மோசமாக காயங்களை ஏற்படுத்தியது..
ஆனால், அவள் அதை ஒன்றையும் பொருட்படுத்தவில்லை..
உதவிக்கு யாரவது வருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள்…
அதேசமயம் தோட்டத்திற்கு சென்ற நிலாவை இரவாகியும் காணவில்லை என்று நிலாவின் அண்ணன் சந்திரன் தோட்டத்திற்கு நிலாவை தேடி வந்தான்…
மழை அதிகமாக இருந்ததுடன் இரவாகவும் இருந்ததால்
அவன் பார்வைக்கு நிலா எட்டவில்லை..
“நிலா நிலா நீ எங்க இருக்குற” என்று சந்திரன் மிகவும் சத்தமாக அழைத்தான்..
குரல் கேட்ட நிலா,
“அண்ணா நான் கிணற்று கிட்ட இருக்கிறேன்…
நீ எனக்கிட்ட வா..
இங்க பூனை ஒன்னு கிணத்துல மாட்டிகிட்டு வந்து காப்பாத்து” என்று சத்தமிட்டாள்…
உடனே சந்திரன் அவ்விடம் சென்று பூனையை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டான்…
பின்னர் நிலாவை வீட்டுக்கு அழைத்துச்சென்றான்.
நிலாவின் அம்மா வீட்டிற்கு வந்த நிலாவை துடைதுண்டால் துடைக்கும் நிலா
” அம்மா வலிக்குது” என்று கத்தினாள்..
அப்போது அவளது கைகளை பார்த்தாள்..
கைகள் முழுவதும் வாளியின் கயிறு அறுத்த மோசமான காயங்கள்…
“ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று திட்டவும் முடியாமல்..
அவள் செய்த காரியத்திற்கு பாராட்டவும் முடியாமல் நிலாவின் தாய் திண்டாடினாள்..
அதிக நேரம் மழையில் நனைத்திருந்ததால் நிலாவுக்கு காய்ச்சலும் ஏற்பட்டது..
ஆனால் நிலா இதன் வலிகளை விட தான் பூனையை காப்பாற்றி விட்ட சந்தோஷத்திலேயே குதித்துக்கொண்டிருந்தாள்…
கதை தொடரும் …