நிலா (The most Beautiful Love story) Episode No – 02
Post Views:556
நிலா பற்றிய அறிமுகம்
கடந்த Episodeஇன் இறுதிப்பகுதி…
பூனையை கிணற்றிலிருந்து காப்பாற்றி விட்ட சந்தோஷத்திலேயே குதித்துக்கொண்டிருந்தாள்…
இவ்வாறு மிருகங்கள் பறவைகள் மீது அன்பை அளவின்றி பொழியக்கூடியவள் தான் நிலா!!
இன்றைய Episode…
நிலாவினுடைய எந்த ஒரு ஆசையும் நிராசையாக ஆனதே இல்லை. அவளுடைய தாய் தகப்பன் அவளுடைய எல்லா ஆசைகளையும் தேடி தேடி நிறைவு செய்தார்கள்…
தற்போது Medical college இல் 3rd year படித்துக்கொண்டிருக்கிறாள்..
இவ்வளவு துடிப்பான 23 வயதை எட்டும் அழகிய பெண்ணாக நிலா இருந்தாலும்,
அவள் காதலை முற்றாக வெறுக்கிறாள்..
அவளுக்கு காதலையும் பிடிக்காது…
காதல் செய்பவர்களையும் பிடிக்காது…
கடந்த வருடம் நிகழ்ந்த சம்பவம், காதலில் ஒரு விதமான பயத்துடன் வைத்துக்கொண்டிருக்கிறது..
காதலை வெறுப்பதற்கான காரணம்
அவளுடன் சிறிய வயதில் இருந்து விஜய் எனும் பையன் ஒன்றாக படித்துக்கொண்டிருந்தான்… மிகவும் நெருங்கிய நண்பன்… அவளுடைய வீட்டிற்கும் அடிக்கடி வருவான்… அவளுடைய நிழல் போன்றவன்…
ஒரு நாள்,
இருவரும் college விட்டு ஒன்றாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.. அப்போது விஜய் நிலவை பார்த்து ” நிலா உனக்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று சொன்னான்..
அதற்கு நிலா ” சொல்லுடா என்ன சொல்லணும்?” என்று கேட்டாள்.. அவன் மிகவும் தயங்கினான்…
அப்போது நிலா “என்ன விஜய் ஏதோ என்ன love பண்ண போறேன் னு சொல்ல போற மாதிரி இவ்வளவு தயங்குற.. time எடுக்கமே சொல்லப்பா” என்று அவனை கலாய்த்துக்கொண்டு சிரித்தாள்..
அப்போது மறுபேச்சு பேசாமல் விஜய் விழாவின் கைகளை பிடித்துக்கொண்டு “yes நிலா நான் உண்மையாவே love பண்றேன்.. i love you ” என்று கூறிவிட்டான்…
கோபாமடைந்த நிலா கையை உதறி விட்டு
அவனது கன்னத்தில் அறைந்தாள்..
“என்ன பேசுற விஜய்.. சின்ன வயசுல இருந்து நாம Friends…
நீ இப்படி திடிர்னு love பண்றேன் ன்னு சொல்றது நல்லாவே இல்ல…உன்ன சின்ன வயசுல இருந்து என்னோட Friend மட்டும் இல்ல..
எனக்கு பாதுகாப்பான அண்ணா ன்னு தானே நான் செல்வன்.. ஆனா நீ இப்போ Love பன்றேன்னு சொல்றது கேட்கவே கூசுது.. அசிங்கமா இருக்கு…
இதுக்கு மேல நீ என்னோட பழகணும் ன்ன பழைய மாதிரி வா.. தயவு செய்து மறுபடியும் love பண்றேன் ன்னு சொல்லிட்டு வந்து நிக்காத..
செத்தாலும் உன் மேல அப்படியான ஒரு feelings வராது”
என்று நிலா விஜையை திட்டி விட்டு சென்று விட்டாள்…
மறுநாள்,
வழக்கமாக விஜயுடன் college செல்லும் நிலா…. காலையில் விஜய் மனம் திருந்தி வருவான் என்று காத்துக்கொண்டிருந்தாள்…
ஆனால் விஜய் வரவில்லை..
சரி தான் அவன் மீது கோபமாக பேசியதால் ஒருவேளை வராமல் இருக்கிறான்…
college இல் அவனை சந்தித்து பேசுவோம்…
அவனுக்கு எடுத்து புரிய வைப்போம்..
என்று நினைத்துக்கொண்டு தனியாக collegeக்கு சென்றாள்…
அங்கு சென்றதும் விஜயை தேடினாள்..
அவன் கண்ணில் படவில்லை..
அவனது நண்பர்களிடம் சென்று “hey விஜய
பார்த்திங்களா? எங்க விஜய்?” என்று கேட்டாள்..
அதற்கு அவர்கள் “எப்போ பார்த்தாலும் உன்னோட தானே சுத்துவான்… பேருக்கு தானே நாங்க Friends அவனுக்கு.. நாங்க அவன பார்க்க இல்ல ” என்று கூறிவிட்டார்கள்..
அவனை அங்குமிங்கும் தேடினாள்.. பின்னர் அவன் அன்று college க்கு வரவில்லை என்பதை உணர்ந்தாள்..
நிலாவுக்கு சரியான குழப்பம்….
மாலை college முடிந்ததும் விஜயின் வீட்டிற்கு சென்று பார்போம் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்…
அவ்வாறே மாலை நேரமும் ஆனது..
நிலா college முடிந்ததும்,
college வாசலிற்கு வந்த நிலா,
விஜய் college இன் அருகில் இருந்த கடை ஒன்றில் நின்று கொண்டிருப்பதை கண்டாள்..
விஜையும் நிலாவை கண்டான்.. நிலா “விஜய்” என்று அழைத்ததும் அவன் நிலாவை நோக்கி வந்தான்..
ஆனால் அவன் வழமை போன்று அல்லாமல்..
முகத்தில் மிகுந்த ஆவேசத்துடன் கையில் கத்தியுடன் வந்தான்…
அவனது கையில் கத்தி இருப்பதை கண்டு நிலா பதற்றத்துடன் திகைத்துப்போய் நின்றாள்..