நிலா (The most Beautiful Love story) Episode No – 03
Post Views:361
நிலா பற்றிய அறிமுகம்
கடந்த Episodeஇன் இறுதிப்பகுதி…
விஜய் முகத்தில் மிகுந்த ஆவேசத்துடன் கையில் கத்தியுடன் நிலாவை நோக்கி வந்தான்..
அவனது கையில் கத்தி இருப்பதை கண்டு நிலா பதற்றத்துடன் திகைத்துப்போய் நின்றாள்..
இன்றைய Episode…
நிலவின் அருகில் வந்த விஜய், தனது சட்டை போக்கெட்டினுள் கையிட்டு ஒரு கடிதத்தை எடுத்து நிலவிடம் நீட்டினான்….
“என்ன விஜய் இது?” என்று நிலா கேட்டதும் “letter… படி அத ” என்று விஜய் பதிலளித்தான்…
விஜய் என்ன செய்கின்றான் என்பது புரியாத நிலா, விஜய் கொடுத்த letterரை கையில் வாங்கி படிக்க ஆரம்பித்தாள்…
(கடிதத்தில்…..)
“நிலா… அழகி.. இல்ல.. பேரழகி… உன்னோட அழகுக்கும் குணத்துக்கும் ஈடு போட எனக்கு தெரிஞ்சி யாரும் இல்ல… சின்ன வயசுல இருந்தே உன்ன பார்த்துட்டு இருக்குறேன்..
அப்போ இருந்து இப்போ வர உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்…. கிட்ட தட்ட நம்ம Friendship 14 years இருக்குமா?
அதில உன்ன 10 years ஆ நான் love பண்ணிட்டு இருக்கிறேன்…
8 வயசுல அறிமுகம் ஆனேன் உனக்கு… அப்போ இருந்தே உன்ன புடிக்கும் எனக்கு… காலப்போக்குல அது காதலா மாறிடுச்சு….
எத்தனையோ தடவ.. உன் கிட்ட நான் உன்ன லவ் பண்றேன் ன்னு சொல்ல tryபண்ணி இருக்குறேன்.. but, நீ என்ன friend க்கு மேல ஒரு அண்ணனா பார்க்குற னும் சொல்வ..
அப்படி சொல்றபோவெல்லம் உயிரே போனாலும் கவல இல்லன்னு தோணும்… நீ என்ன இப்போ ஒரு 4 or 5 years தான் அண்ணா ன்னு சொல்ற… ஆனா உன்னோட பழகினத்துல இருந்து உன்ன ரொம்ப புடிக்கும்… அது இப்போ love ஆ இருக்கு…
நான் love பண்ணது தப்பு தான்…. இருந்தாலும் என்னால என்ன மாத்திக்க தெரியல…
ஆனா உன்னோட மனசுல என்ன levelல நான் இருக்குறேன்னு நேத்து தெரிஞ்சிகிட்டேன்… night full ஆ think பண்ணி பார்த்தேன்…
நீ சொல்றது உண்மை தான்… அளவுக்கு அதிகமா friends ஆ இருந்துட்டு இப்போ love னு ஒரு relationship போக முடியாது… அது ரொம்ப கஷ்டம்….
உன்ன நான் வற்புறுத்த நினைக்க இல்ல… எனக்கு உன்னோட feelings புரிது நிலா… because i love you …….
போதும் நிலா.. இனி உன்ன இனி லவ் அப்படி இப்படியெல்லாம் தொல்லை பண்ண போறது இல்ல நிலா…
ஏன்….. ன்னா……….
நீ இந்த letter ர படிச்சி அடுத்த second நான் உயிரோட இருக்க போறது இல்ல….”
(கடிதம் முடிவடைந்தது…..)
நிலா கடைசி வரியை வாசித்ததும் “what ?” என்று சொல்லி விட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள்……
அதே நொடி விஜய் நிலாவை பார்த்து புன்னகைத்து விட்டு தான் கையில் வைத்திருந்த கத்தியினால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டான்!!..
அவன் நிலாவின் மிக அருகில் இருந்ததால் கழுத்தை அறுத்ததும் பீறிட்டுக்கொண்டு வந்த இரத்தம் நிலாவின் முகத்தில் படர்ந்தது!!
அவ்விடத்தில் நடந்த ஒவ்வொரு விடயத்தையும் ஜீரணிக்க முடியாமல் நிலா தடுமாறினாள்…..
விஜய் துடி துடித்துக்கொண்டு கீழே விழுந்தான்… உடனே நிலா கீழே உட்கார்ந்து விஜயின் தலையினை தன் மடியில் வைத்துக்கொண்டு “விஜய்… விஜய்… என்ன பண்ணிகிட்ட நீ…” என்று கதறி அழுதாள்..
அப்போது இரத்த வெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்து வரும் விஜய் ” I love you நிலா….” என்று சொன்னவாறே தன் உயிர் மாய்த்துக்கொண்டான்…
அவன் உயிரிழந்து விட்டான் என்பதை புரிந்து கொள்ளாத நிலா… “விஜய்… விஜய்.. கண்ண திற.. என்ன பாரு விஜய் …. விஜய்…” என்று கண்ணீர் வடித்தாள்..
இந்நேரம் college இல் இருந்து வெளியே வந்த medical student ஒருவர் ஓடி வந்து விஜயின் கையை பிடித்து நாடி துடிப்பை பார்த்து விட்டு
“நிலா… விஜய்… கண் திறக்க மாட்டான்..
because…….. விஜய் இறந்துட்டான்….” என்று கவலையுடன் கூறினாள்……
தன் கண்முன் நடப்பதை நம்ப முடியாமல் துடித்துக்கொண்டு நிலா “இல்ல… இல்ல…. அப்படி அவன் என்ன விட்டு போக மாட்டான்… நீ பொய் சொல்லாத” என்று சொல்லி அவளே விஜயின் கையில் நாடி துடிப்பை பார்த்தாள்…
நாடி… துடிப்பை நிறுத்திருந்தது….
“no.. no… ன்னு சொல்லிக்கொண்டே மெதுமாக விஜயை விட்டு தள்ளி சென்று தன்னுடைய கை உடை என உடல் முழுவதும் இரத்தத்தினால் நனைந்திருப்பதை கவனித்ததுடன் இரத்த ஆற்றலில் இறந்து கிடைக்கும் விஜயின் கோலத்தையும் பார்த்து விட்டு…
“விஜய்!!!!…………”
என்று முகத்தை மூடிக்கொண்டு சத்தமிட்டு அழுதபடியே அதே இடத்தில் நிலா மயக்கமடைந்து கீழே விழுந்தாள்…..