நிலா (The most Beautiful Love story) Episode No – 04
Post Views:202
கடந்த Episodeஇன் இறுதிப்பகுதி…
நிலா விஜயின் கையில் நாடி துடிப்பை பார்த்தாள்…
நாடி… துடிப்பை நிறுத்திருந்தது….
“no.. no…” என்று சொல்லிக்கொண்டே மெதுமாக விஜயை விட்டு தள்ளி சென்று தன்னுடைய கை உடை என உடல் முழுவதும் இரத்தத்தினால் நனைந்திருப்பதை கவனித்ததுடன் இரத்த ஆற்றலில் இறந்து கிடைக்கும் விஜயின் கோலத்தையும் பார்த்து விட்டு…
“விஜய்!!!!…………”
என்று முகத்தை மூடிக்கொண்டு சத்தமிட்டு அழுதபடியே அதே இடத்தில் நிலா மயக்கமடைந்து கீழே விழுந்தாள்…..
இன்றைய Episode…
நிலா மயக்கமுற்று விழுந்த இடத்தில் இருந்த ஒரு பெரிய கல் நிலாவின் தலையில் அடிபட்டு காயமடைந்து இரத்தம் ஓடியது…
இவை அனைத்துமே ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்தன… இதனை பார்த்த அருகில் இருந்த நிலா, விஜயின் நண்பர்கள் அனைவரும் உடனே நிலாவையும் விஜயையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்..
அங்கு அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்ததும் நிலாவிற்கு ஒரு புறம் சிகிச்சை ஆரம்பித்தனர்… விஜய்க்கும் மறுபுறம் சிகிச்சை ஆரம்பித்தனர்..
சில நிமிடங்கள் கழித்து வெளியில் வந்த வைத்தியர் ஒருவர்,
“நிலா விஜய் patients கூட வந்தவங்க யாரு?” என்று வெளியில் நின்றவர்களிடம் கேட்டார்…
அதற்கு அங்கிருந்த அவர்களின் நண்பர்கள் வைத்தியரின் அருகில் சென்று
“நாங்க தான் doctor அவங்க எப்படி இருக்காங்க? நிலா எப்படி இருக்கா? அவ ஓகே வா? விஜய காப்பாத்த ஏழும் தானே doctor … அவன் சாக இல்ல தானே…” என்று விஜய்க்கு உயிர் இருந்து விட கூடாதா? அவன் பிழைத்து விட கூடாதா? என ஏங்கிக்கொண்டிருந்த அவனது நண்பர்கள் கண்களில் கண்ணீருடன் கேட்டனர்…
அதற்கு,
“நிலாக்கு இப்போதைக்கு எதுவும் பெரிசா இல்ல.. தலைல கட்டு போட்டு இருக்கோம்… அவ ரொம்ப அதிர்ச்சியாகி மயக்கமானதுனால பல மணிநேரம் கழிச்சி தான் சுயநினைவுக்கு வருவா.. அதுவர நாங்க ICU ல நிலாவ treatment க்கு வச்சிக்கொள்றோம்… அதுக்கு அப்பறமா தான் நிலாக்கு வேற ஏதும் treatment கொடுக்க வேணுமா ன்னு எங்களால சொல்ல முடியும்” என்று டாக்டர் கூறியதோடு
“எங்கள மன்னிச்சிடுக்க விஜைய எங்களால காப்பாத்த முடியல” என்று கவலையுடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்…
உடைந்துபோன நண்பர்கள் கதறி அழுதனர்….
இக்காட்சியை வாய் வார்த்தைகளால் சொல்லி விட முடியாத அளவிற்கு பரிதாபமாக இருந்தது….
அதன் பின்,
அவசரசிகிச்சை பிரிவிலிருந்து நிலாவை ICU க்கும் விஜயை பிணவறைக்கும் மாற்றம் செய்தனர்…
நிலா விஜயின் நண்பர்களால் எவ்வாறு நிலா விஜயின் வீட்டாருக்கு அறிவிப்பது என்று தெரியாமல் தடுமாறினார்…
அவனது தாய் தந்தை இந்த இழப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்…. என்று புலம்பினார்கள்…
இருப்பினும் அறிவித்து தானே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திலால் மனதை தேர்த்திக்கொண்டு இரு வீட்டாருக்கும் அறிவித்தனர்…
அரை மணிநேரத்தில் இரு வீட்டாரும் துடிதுடித்துப்போய் வைத்தியசாலைக்கு அழுதுகொண்டே வந்தனர்…
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நிலா விஜயின் நண்பர்கள் கஷ்டப்பட்டனர்…
அப்போது அங்கு ஒரு தாதிப்பெண் வந்து “இறந்த விஜய்கிறவரோட parents வாங்க சில formalities இருக்கு… அத complete பண்ணிட்டு விஜயோட body ய கொண்டு போக ஏழும்” என்று கூறி விஜயின் பெற்றோரை அழைத்தாள்….
அழுதுகொண்டே அவர்கள் அதற்குரிய வேலைகளை செய்து கொண்டிருந்தனர்…
நிலாவின் பெற்றோர் மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும் நிலாவை பார்க்க அவளை அனுமதித்துள்ள ICU க்கு சென்றனர்…
இவ்வாறு பரபரப்பாக அனைவரும் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்,
திடீரென பிணவறை காவலாளி முகமெல்லாம் வியர்த்து பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார்…..