“பயப்படவேண்டாம் ஸார். பீவர் இருக்கு. அதனால வாமிட்டிங். வந்து ஒரு அரைமணி நேரத்துல இருந்தே டயர்டாகிட்டா அஞ்சலி. அதான் உங்களுக்கு உடனே இன்பார்ம் பண்ணினோம்…” என்றார் பிரின்ஸிபால்.
“தேங்க் யூ மேம். என் பொண்ணை நான் கூட்டிட்டு போகலாமா?…”
“கிளாஸ் பத்தி கவலை வேண்டாம். அஞ்சலி சூட்டிகையான பொண்ணு. சொல்லி குடுத்தா உடனே புரிஞ்சுப்பா. அதனால டோன்ட் வொரி. நாங்க டெய்லி கிளாஸ் டீடெய்ல்ஸ உங்களுக்கு அப்டேட் பன்றோம்…” என்றதும் சரி என எழுந்து கொண்டான் இளம்பரிதி.
காய்ச்சலுடன் பிள்ளையால் நடக்க முடியுமோ என்று மகளை தூக்கிக்கொள்ள அவன் நினைக்க,
“ஐ கேன் மேனேஜ் டாடி…” என்றாள் அஞ்சலி.
“வெரி குட். இந்த கான்பிடன்ட் தான் வேணும் குழந்தைங்களுக்கு…” என பிரின்ஸிபால் பாராட்ட,
குழந்தையை பிரசவிக்கும் நேரம் கூட அத்தனை வலியையும் கண்களை மூடி சப்தமெழுப்பாமல் பெற்றுக்கொண்டாள்.
சுருங்கிய கண்ணோரத்திலிருந்து வெளிவரும் நீர் துளிகள் மட்டுமே அவளின் வலியை பிரதிபலித்தது.
“வைராக்கியத்துக்கு பிறந்தவடி நீ. வலிச்சா கத்தினா என்ன?…” என கலங்கிவிட்ட கண்களுடன் அவளை முறைத்த தருணம் இப்போதும் பசுமையாய் பரிதியின் நெஞ்சத்தில்.
“அஜிதாம்மா…” என்றவனின் ஓசையில்லா அழைப்பில் திறந்திருந்த ஜன்னல் வழியே சில்லென்று ஒரு தென்றல் பரிதியை அணைத்து தழுவி சென்றது.
“கூப்பிட்ட நிமிஷம் என் முன்னாடி வர. மெதுவா நட அஜிதா…” என்றவனின் கண்டிப்புகள் வழக்கம் போல மனைவியின் சிரிப்பிற்குள் மண்டியிட்டுவிடும்.
நினைக்கையில் சுகமாய் ஒரு வலியும், சுருக்கென்ற ஒரு ரணமும் அவனை கூறு போட்டது.
நினைவில் நெகிழ்ந்திருந்த நெஞ்சத்தின் உணர்வுகள் கண்ணில் பிரதிபலிக்க நீர் நிறைந்த விழியை காற்று கலைக்க கண்ணீர் சிதறியது.
“ஷிட்…” கண்ணீரை துடைத்துவிட்டு கண் சிமிட்டி விழித்து வழியில் கவனம் செலுத்தினான் பரிதி.
“கார் ஓட்டும் போது கண்ணுக்குள்ள பாதை தான் தெரியனும். அந்த பாதைல அம்மா, பொண்டாட்டி, பிள்ளையோட இன்னும் நூறு வயசு வாழனும்னு தோணனும். சும்மா எதையாவது நினைச்சுட்டு கவனம் சிதற கூடாது பரிதி…” என்பாள்.
காரை ஓரிடத்தில் நிறுத்திவிடலாமா என்று நினைத்தவனின் மனதிற்குள் புகுந்துவிட்டாள் போலும்.
“என்ன மேன், உன் செல்ப் கான்பிடென்ட் எங்க போச்சு?…” என கேட்பதை போலிருந்தது மகளின் கை தன் கை மேல் பட்டதும்.
“அஞ்சலிம்மா…” என திரும்பினான் மகள் புறம்.
“தண்ணி வேணும் டாடி…” என்ற பெண்ணிற்கு காரை நிறுத்திவிட்டு பாட்டிலை எடுத்து தந்தான்.
குடித்து முடிக்கும் வரை மகளின் முகத்தில் தான் கவனம் பரிதிக்கு. மீண்டும் நெற்றியில் கை வைத்து பார்க்க மெல்லிய சூடு தான்.
“டன் டாடி…” என்று பளிச்சென்று புன்னகைத்த குழந்தை போகலாம் என்பதை போல கையை காண்பித்தது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் கோர்ட் வளாகத்தினுள் அந்த கார் சென்று நிற்கவும் பரிதி சொல்லும் முன்,
“பரிதி லிசன். நாமளும் எவ்வளவோ முயற்சி பண்ணினோம். இது கொலை தான்னு நம்மால நிரூபிக்க முடியலை. உண்மையா நான் தான் தோத்துட்டேன்…” என்றவர் முகமே கசங்கிவிட்டிருந்தது.
“நிரூபிக்க முடியலை. ஆனா உண்மை இல்லைன்னு சொல்ல முடியாதே? நான் என்னோட முயற்சியை கைவிடமாட்டேன் லாயர் ஸார்…” பரிதி பேச்சில் அத்தனை திடம்.
திடம் என்பதையும் தாண்டிய ஒரு வெறி அவனின் கண்களில். கருவிழியை சுற்றியிருந்த வெண்பகுதியில் ரத்தம் பாய்ந்து, தாடை தசையெல்லாம் இறுக்கம் பெற்றது.
“பரிதி அமைதியா இருங்க. ப்ளீஸ்…” என கார்த்திகேயன் எழுந்துவந்து அவனின் கையை பிடித்துக்கொண்டார்.
“நான் உங்களுக்காக உங்க பொண்ணுக்காக தான் சொல்றேன் பரிதி. உங்களுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு…” என கூறியவர் சிறிது இடைவெளி விட்டு,
“இப்பவும் எனக்காக, என் பொண்ணுக்காக தான் இந்த கேஸ். வாழ்க்கையை தொலைச்சிட்டு நாயா பேயா அலையறோம். தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை வாங்கி தரலைன்னா நான்லாம் என்ன ஆம்பளை?…” பரிதி ஆக்ரோஷமாய் கேட்க,
“நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்டுட்டு பேசேன் பரிதி…” கார்த்திகேயன் எடுத்து சொல்ல முயன்றார்.
“தேங்க் யூ சோ மச் ஸார். நான் வேற லாயரை பார்த்துக்கறேன்…” என்றதும்,
“என்ன மேன் நீ? உட்கார்…” அவனின் தோளை பிடித்து அமர வைத்த கார்த்திகேயன் பெருமூச்சுடன்,
“ஓகே, லாஸ்ட் டைம் எங்கையோ கோட்டை விட்டுட்டோம். இந்தமுறை வேற ஆங்கிள்ல கேஸ் நடத்துவோம். உனக்காக மட்டுமில்லை, உன் பொண்ணுக்காகவும்…” என்றார்.
“ஓகே…” என மௌனமாக அவன் அமர்ந்திருக்க,
“அஞ்சலி எப்படி இருக்கா? அம்மாவுக்கு இப்போ ஹெல்த் பரவாயில்லையா?…” என்று கேட்கவும் மீண்டும் எழுந்துவிட்டான் பரிதி.
“இப்ப என்ன கேட்டுட்டேன்?…” அவர் ஆயாசமாய் பார்க்க,
“கார்ல அஞ்சலி இருக்கா. ஓகே நான் வரேன் ஸார். ஈவ்னிங் கால் பன்றேன்…”
“கார்லயா? ஸ்கூல் இருக்குமே?…”
“உங்களை பார்க்க வரும் வழில ஸ்கூல்ல இருந்து கால் வந்தது அஞ்சலிக்கு ஹெல்த் இஷ்யூன்னு. அதான் கூட்டிட்டு வந்துட்டேன்…” என சொல்லி அவன் கிளம்ப,
“ஓகே நானும் வரேன். பார்த்து கொஞ்சநாள் ஆகிடுச்சுல…” என உடன் நடந்தார் கார்த்திகேயன்.
காரை நெருங்கும்வரை கார்த்திகேயன் பரிதியுடன் பேசிக்கொண்டே வர சட்டென்று பரிதியின் கையை பிடித்து நிறுத்தியவர்,
“இந்த வழி போகலாம் பரிதி…” என்றார்.
அவர் சொல்லிய நொடி ஏன் என்று கேட்காமல் தாங்கள் சென்றுகொண்டிருந்த திசையில் பார்க்க நல்லதம்பி இவர்களை பார்த்தபடி நக்கல் சிரிப்புடன் நின்றிருந்தான்.
“குழந்தை இருக்கு பரிதி. நாம ஹியரிங்ல பார்த்துப்போம். முதல்ல இதை நான் அப்பீல் பன்றேன். கேஸ் சென்னையில நடத்த கேட்போம். அதுதான் நமக்கு சுலபம்…” கார்த்திகேயன் தான் பிடித்திருந்த பரிதியின் கையை விடவில்லை.
விட்டால் இங்கேயே இன்னொரு கொலை செய்துவிடும் அளவிற்கு அவனின் புஜங்கள் முறுக்கிக்கொண்டது.
“அஞ்சலியை பார்க்கவேண்டாமா பரிதி?…” ஒருவழியாய் அவனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார் அவர்.
“இப்படி ஓடி வரவைக்கறேங்களே?…” ஆற்றாமையுடன் பேசியவன் கதவை திறக்க மகள் கண்ணை மூடியபடி இருந்தாள்.
“தூங்கறா போல. எழுப்ப வேண்டாம். இன்னொரு நாள் மறக்காம வீட்டுக்கு கூட்டிட்டு வா….” என்று சொல்ல சரி என்றுவிட்டு குனிந்து தனது மொபைலை எடுத்தான் பரிதி.
“இனி இப்படி குழந்தையை கூட்டிட்டு வந்து கார்ல விட்டுட்டு வராத பரிதி. புரியும்ன்னு நினைக்கறேன்…” என கூற பரிதியின் எண்ணிற்கு அவன் தாயிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
கண்ணீர் வழிய துவங்க மகளின் அசைவில் அவனின் அணைப்பு இன்னும் வலு சேர்த்தது.
“ஒண்ணுமில்லைடா அஞ்சு. அப்பா இருக்கேன்ல. சரியாகிடும். சரியாகிடும்…” என அவளின் முதுகை வருடிவிட போன் பேசி முடித்த கார்த்திகேயன் மனதோ நொறுங்கி போனது இந்நிகழ்வில்.
“பரிதி…” என அவனின் தோளை தொட்டதுமே திரும்பி பார்த்தவன் விழிகள் இரண்டும் கண்ணீரை உகுத்துக்கொண்டிருக்க ‘என்ன செய்ய போறேன்?’ என்னும் விதமாய் அவனின் கைகள் அவரிடம் கேட்டது உள்ளங்கை குருதியுடன்.
வீடு வந்ததும் வாசலிலேயே நின்றிருந்த சுந்தரவல்லிக்கு மகனின் முகத்தை பார்த்ததுமே கலங்கி போனது.
கார்த்திகேயனின் மனைவியும் அங்கே வந்திருந்தார். வீடு அருகென்பதால் போனில் அழைத்து சொல்லவும் வந்துவிட்டார்.
மகளை அவளறைக்கு தூக்கி சென்று குளியலறையில் இறக்கிவிட்டவன் தலையை வருடினான்.
“குளிச்சிட்டு வா குட்டிம்மா. ஒண்ணுமில்லைடா…” பரிதி சொல்லவும்,
“நாங்க பார்த்துக்கறோம் பரிதி. நீ போய் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் போடு…” என்று சுந்தரவல்லி மகனை அனுப்பிவிட்டு பேத்தியை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்.
வெளியில் வந்தவனின் வெளிர்நிற உடையில் படிந்திருந்த அந்த திட்டுக்கள் இன்னுமே அவனை தளர செய்ய உயிரற்ற ஜீவனாய் அந்த புகைப்படத்தின் முன் வந்து நின்றான் இளம்பரிதி.